Friday 22 May 2020

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்



"யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற எஸ். செண்பகப் பெருமாள் அவர்கள் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன். இது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

குலதெய்வ வழிபாடாக தொடங்கிய யூதமதம் பரிணாம வளர்ச்சி பெற்று பெருந் தெய்வ வழிபாடாக மாறியது குறித்து விளக்கிக் கூறுகிறது இந்நூல். யூதர்கள் சமாரியர்கள் என இரு பிரிவாக பிரிந்தது குறித்தும், பைபிள் படி இயேசு யூதர்கள் இடத்தில் பிறந்து யூதர்களுக்கான வழிகாட்டியாக அறியப்பட்டார் என்றும், பிறகு வந்த பவுல் இயேசுவை கிறிஸ்துவாக மாற்றி அனைத்து தரப்பு மக்களுக்கான கடவுளாக மாற்றும் வகையில் பைபிளை மாற்றினார், என புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு ஆகியவற்றிலிருந்து ஏராளமான ஆதாரங்களை எடுத்து விளக்கிக் கூறியுள்ளார். 
- எனது முகநூல் பக்கம், 10.4.20

No comments:

Post a Comment