Showing posts with label இராமன். Show all posts
Showing posts with label இராமன். Show all posts

Friday, 31 July 2026

இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு! -செ.ர.பார்த்தசாரதி

 இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!

- செ.ர.பார்த்தசாரதி



"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வர வேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டி வந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.

உவமைக் கவிஞர் சுரதா கூட தமது ‘சுரதா' இதழிலே ஒரு முறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்' என்று எழுதியிருந்தார்.

ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.

சீதை இராவணனை இலை குடிலுக்குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.

இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:

"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்

வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.


(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)

கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமிப் புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக்குள் அமரவைத்து பேசியதாக தான் கூறுகிறது.

வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழிபெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்

துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)

சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!

ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டை பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படி செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை எழுதி, நடந்ததாக பொய் சொல்லி, அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.

- உண்மை இதழ், 01.11.1986

- விடுதலை நாளேடு, பக்கம்-7



Wednesday, 30 October 2024

இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன? - பார்ப்பானே கடவுள் என கூறும் ஆதாரங்கள்!



இராமன் -இராமராஜ்ஜியம் என்றால் என்ன?


- கவிஞர் கலி.பூங்குன்றன்

(தமிழர் தலைவர் உரையைத் தழுவியது இக்கட்டுரை )


"இராமாயணம் -இராமன் இராமராஜ்ஜியம்" எனும் தலைப்பிலே 23, 27.3.2018 அன்று இருநாள்களிலும் மாலை நேரத்தில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.

குறுகிய கால அறிவிப்பு எனினும் மக்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டனர்.

இரண்டாவது சொற்பொழிவில் "பிராமணர்கள்" கடவுளுக்கு மேலே எப்படி தூக்கி நிறுத்தப்படுகிறார்கள்? இராமன் - இராமராஜ்ஜியம் என்ற சொல்லாடல்கள் உச்சத்தில் இருக்கும் காலக்கட்டம் இது ; இவற்றின் மீதான காதல் அல்லது உச்சக்கட்ட மதிப்பு என்பதெல்லாம் மக்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சியின் வெளிப் பாடல்ல; மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கைங்கர்யம் இது. இராமராஜ்ஜியம் அமைப்போம் என்று கூறி அதிகார பலத்தால் ஆட்டம் போடுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து இராம ராஜ்ஜிய ரத ஊர்வலம் புறப்பட்டு பல
மாநிலங்களின் வழியாக செல்லும் திட்டத்தோடு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அவர்கள் காலடி வைத்த போது, ஈரோட்டுப் பூகம்பம் வெடித்து, பேரச்சத்தை ஊட்டியது.

இராமராஜ்ஜியம் என்றால் வருணாசிரம ராஜ்ஜியம், சூத்திரன் சம்பூகன் தலையை வெட்டிய ராஜ்ஜியம்தானே!

இந்த அடிவேரின் இரகசியத்தை உணர்ந்ததால் அல்லவா திராவிடர் கழகத் தலைவர் ஓர் அறிவிப்பினைக் கொடுத்தார்.

"இராமராஜ்ஜியம்" என்றால் பார்ப்பனர் களின் ராஜ்ஜியம் தான் என்பதற்குப் பல ஆதாரங்களை அடுக்கிக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்கள்.

அந்த உரையைத் தழுவி இந்தக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது.

வேதம் என்ன கூறுகிறது?

தெய்வாதீனம் ஜகத் சர்வம்,
மந்த்ரா தீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணா தீனம்
தஸ்மதத் பிரம்மணம் பிரபு ஜெயத என்பது ரிக் வேதம்.

(62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர்களே நமது கடவுள் - அவனைத் தொழ வேண்டும்.

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்திற் பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகியிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்.

(மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100)

பிராமணன் பிறப்பானது தருமத்தின் அழிவில்லாத உருவமாயிருக்கிறது. தருமம் விளங்கும் பொருட்டு உற்பவித்த அந்தப் பிராமணனின் ஞாநத்திலே மோக்ஷத்திற் குரியவனாகிறான். (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 98)
.........

கிருஷ்ண அவதாரக் கற்பிதம்

"புத்தர்பிரான்" அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப் பட்டது. காம விளையாட்டுக்களை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே 'கிருஷ்ண லீலா' கதையின் நோக்கம். புத்தர் கொள்கையின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக்கட்டப்பட்டது."
('என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தொகுதி -4, பக்கம் 210)

மகா பாகவதம் செப்புவது என்ன?

ஸ்ரீவேத வியாசர் அருளிச் செய்த ஸ்ரீமஹா பாகவதம் (திருவனந்தபுரம் பாகவத சிரேஷ்டரான வேணுகோபாலாச்சாரியார் அவர்களால் ஸம்ஸ்க்ருத காவ்யத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. (எண்பத்தாறாவது அத்தியாயம், தசம ஸ்கந்தம், பக்கம் 351-352)

"ஸ்ரீகிருஷ்ணன் எதிரே தோன்றிய தபசியான நீ ஒரு பெண் கணங்களை விசேஷமாய்ப் பூஜிக்காமல் மாதவனை மாத்திரம் விசேஷமாய்ப் பூஜித்தபடியால் அந்தப் பகவான் அம்மறையோனை நோக்கி இந்த ரிஷிகள் எந்த ஜலத்தைத் தொடுகிறார்களோ, அதுவே புண்ணிய தீர்த்தமாகும் படிச் செய்யத் தக்கின மகிமையுடையவர்கள், சகல தேவர்களுடைய சொரூபம் யான்.

என்னுடைய சொரூபம் வேதம், அந்த வேதங்களுடைய சொரூபம் மறையோர். அவர்களுக்கு மிஞ்சினவர்கள் உலகி லில்லை. அவர்கள் சாமானிய மானிடர் களென்றெண்ணி அவர்களை பழித்து என்னைப் பூஜித்ததனால் ஒரு பயனையு மடைய மாட்டார்கள். அந்த வேதியரை பூஜிக்கிறவன்தான் ஞானி அவனே எனக்கு மிகவும் இஷ்டனென்று ஸ்ரீபகவனால் ஆக்கியாபிக்கப்பட்டு அந்தச் சுவாமியின் எதிரில்தானே அந்த ரிஷிகளை அநேக விதமாய்ப் பூஜித்து உபசரித்து சந்தோஷப் படுத்தினார்.
........

பிராமணன் திரி மூர்த்திகளிலும் உயர்ந்தவன் என்று நிரூபிக்க இன்னும் இரண்டொரு உதாரணங்களை வேண்டுமானாலும் சொல்லுகிறேன். அதாவது, ஸ்ரீவைகுந்த வாசனாகிய நீலமேக சாமள வர்ணனாகிய ஸ்ரீசாட்சாத் கிருஷ்ண பரமாத்துமாவை, பிரம்ம புத்திரனாகிய நாரதர் தரிசிக்க வந்தபோது, அச்சமயம் பரமாத்துமா பூசையறையில் இருந்து வெளியே வந்தார். வெகு நேரம் வரையில் பரமாத்துமாவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நாரத பகவான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்துமாவைப் பார்த்து இவ்வுலகத்தின் கண்ணுள்ள அனந்தகோடி மக்களும் தங்களைப் பூசித்துவரும் போது, தாங்கள் இவ்வளவு நேரமாய் யாரைப் பூசை செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்ட உடனே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்துமா, பூசையறையில் முன்னால் விடப்பட்ட திரைச் சீலையை நீக்கிவிட்டு, அங்கு அவரால் பூஜிக்கப்பட்ட விக்கிரகத்தைத் திறந்து காட்டினார். அதைப் பார்த்தவுடன், நாரதபகவான் அப்படியே ஆச்சரியப்பட்டுப் பிரம்மித்துப் போனார். ஏனென்றால் அஃது ஒரு பிரமஷ்வரூபமாகிய பிராமணனுடைய விக்கிரகமே அன்றி, வேறல்ல. ஆதலால் அப்படிப்பட்ட கண்ணனாலேயே பூசிக்கப்பட்டு வரும், பிராமணாளுடைய மகத்துவத்தை வேதங்கள் கூட வரை யறுத்துக் கூறமுடியாது என்றால், மற்றவர்களால் அவர்களுக்குக் குணதோஷம் கூறமுடியுமா? இதுகிடக்க, இன்னொரு சம்பவத்தையும் சொல்லுகிறேன் கேளும். ஒரு சமயம், வாயுபுத்திரனாகிய ஹனுமான், ஒரு பிராமணச் சிறுவனாக உருவந்தாங்கி, ஸ்ரீராமபிரான் முன் தோன்றிய போது ஸ்ரீராமர் அவரைக் கண்ட மாத்திரத்தில், அவர் காலில் நெடுஞ்சாரியாய் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டுள்ளார். இதைக் கண்ட இராம தூதனாகிய ஹனுமான், இராமமூர்த்தியைப் பார்த்துச் சொல்லுகின்றார், நான் உண்மையான பிராமணன் அல்ல; நாட்டினில் வாழும் குரங்கு வம்சத்தைச் சார்ந்தவன். ஆகையால் என் காலில் விழுவது முறையல்ல என்று சொல்லவும், அதற்கு இராமர் பதிலுத்தாரமாக என்ன சொன்னார் என்றால், நான் பிராமணாளைக் கண்ட மாத்திரத்தில் உடனே அவர்களைக் கைகூப்பி வணங்குவது என் கடமையாகும். ஆகையால் உண்மையான பிராமணனாய் இருந்தாலென்ன, அல்லது போலிப் பிராமணனாய் இருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான். அதைப் பற்றி ஒன்றும் தோஷமில்லை என்று சொல்லியிருக்கிறார்.

(சிங்கப்பூர் அறிஞர் அ.சி.சுப்பய்யா அவர்களின் 'சுந்தரமூர்த்தி நாயனார்' கிரிமினல் கேஸ்)

கம்ப இராமாயணம்

வால்மீகி தனது இராமாயணத்தில் இராமனை சாதாரண மனிதனாகப் படைத்திருக்க, கம்பனோ மிகப் பெரிய அளவில் உயர்த்திப் பிடித்தான்; கடவுளுக்கு மேல் பார்ப்பனர்கள் என்றும் கூச்சமின்றிப் பாடி சென்று இருக்கிறான்.

கரிய மாலினும் கண்ணுத லானினும்
உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதமோ ரைந்தினும் மெய்யினும்
பெரிய ரந்தணர் பேணுதி யுள்ளத்தால்

அதாவது, திருமால், சிவன், நான்முகன், அய்ம்பூதம், வாய்மை ஆகியவர்களைக் காட்டிலும் அந்தணர்கள் பெருமையுடையவர்கள்; ஆகையால் அவர்களை உள்ளன் போடு வழிபடுவாயாக என்றும்,

2 அந்த ணாளர் முனியவு மாங்கவர்

சிந்தை யாலருள் செய்யவுந் தேவரில்

நொந்து ளாரையும் நொய்துயர்ந் தாரையும்

" மைந்த எண்ண வரம்புமுண் டாங்கொலோ

அதாவது அந்தணர்கள் கோபத்தால் அழிந்தவர்களையும், அந்தணர்கள் அருளினால் செல்வாக்குப் பெற்றுயர்ந்தவர்களையும் கணக்கிட முடியாது என்றும்,

3 அனைய ராதலின் அனையஇவ்வெய்யதீ
வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
புனையுஞ் சென்னியை வாய்ப்புகழ்ந் தேத்துதி
இனிய கூறிநின் றேயின செய்தியால்

அதாவது, அந்தணர்கள் இத்தனையு முடையவராக இருத்தலினால், தீவினை செய்யாது உயர்ந்தவர்களாகிய அவ்வந்தணர் பாதங்களில் உன் தலை படும்படியாக வணங்கி, அவர்களைப் புகழ்ந்து அவர்களிடம் இனிய சொற்களைக் கூறி அவர்களிடும் கட்டளைப்படி நடப்பாய் என்றும்,

4. ஆவ தற்கும் அழிவதற் கும்மவர்

ஏவ நிற்கும் விதியுமென் றாலினி

யாவ தெப்பொருள் இம்மையு மம்மையுந்

தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே

ஒருவன் செல்வம் அடைவதற்கும்
அழிவதற்கும் காரணமான விதியும் அந்தணர்களின் கட்டளைப் படியேதான் நடக்கும்; ஆகையால் இப்பிறப்பிற்கும், மறுபிறப்பிற்கும் (அவர்களை விடுத்தால்) வேறு பயன் ஏது? எனவே, அந்தணர்களை வணங்குதல் தேவர் களை வணங்குதல் போலச் சிறந்ததாகும் என்று கூறி அந்தணர் (பார்ப்பனர்) பெருமையை இவ்வாறு கூறுகிறார். போதுமா? இன்னும் வேண்டுமா?

(குடிஅரசு - கட்டுரை - 12.02.1944)

                                                   ...............

சங்கராச்சாரியார் பார்வையில்

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் 'தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் "அருந் தொண்டாற்றிய அந்தணர்கள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நூலை வெளியிட்டு நூலோர் வழிவந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்

சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப்

பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி

செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான்

நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட

போதும் கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு.

அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த

காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட

அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்

(நக்கீரன் 5.112002) இப்பொழுது சொல்லுங்கள் -

இந்து மதம் என்றால், இராமன் என்றால், அதன்

பொருள் என்ன?


பிராமணாள் நமது கடவுள் - இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 - விடுதலை ஞாயிறு மலர், 31.3.2018

Wednesday, 1 November 2023

இராமன் கட்டிய பாலம் எங்கே?


மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- செ.ர.பார்த்தசாரதி, 02.11.2012, முகநூல் பதிவு.(எனது)

Friday, 2 November 2018

இராமன் கட்டிய பாலம் எங்கே?

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- நான் (செ.ர.பார்த்தசாரதி) 2.11.2012ல் முகநூலில் பதிவிட்டது.