Showing posts with label அனைத்து சாதியினரும் அர்ச்சகர். Show all posts
Showing posts with label அனைத்து சாதியினரும் அர்ச்சகர். Show all posts

Wednesday, 5 February 2020

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சிக்கலும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சிக்கலும்

8.10.69 இல் பெரியார் அறிக்கை

 ‘காலம் வீணாகிப் போய்க் கொண்டிருக்கிறதுஅய்ப்பசி  மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கிற இழிவு நீக்கம் கிளர்ச்சி துவக்கப்படும்அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’ என்று தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார்.

போராட்டக்களங்களில் மக்களை ஈடுபடுத்துவதற்கு தந்தை பெரியார் கையாண்ட அணுகு முறைகளில் இதுவும்ஒன்றுஇப் போராட்டத்திற்கு ‘கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி’ எனப் பெயரிட்டார். 2000/க்கு மேற்பட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

1970 சனவரி 26 ஆம் நாள் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி நடை பெறும் என பெரியார் நாள் குறித்தார். 16.11.69 இல் திருச்சி ‘பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக மைய நிர்வாகக் கமிட்டி கூட்டத்தில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியத்தை பெரியார் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து 17.1.70 இல் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில்,

அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும்புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும்அதற்குரியப் பயிற்சிகளை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லைஅப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்ச்சி பெற்று அர்ச்சகராக இருக்கவும்அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறதுஇந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அதன்படிஅர்ச்சகப் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல் தகுதியொன்றினால் கணக்கிடப்படக்கூடிய நாள் வந்து விடுமானால் ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்லுவோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்லுவதற்குத் தடையில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாகிவிடும்ஆகவே இந்த நன்னிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகின்றது என்ற உறுதிமொழி யினை ஏற்று பெரியார் அவர்கள் தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சி யினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி ஒத்தி வைக்கப்படுதல்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கிளர்ச்சியின் தத்துவத்தை நல்ல வண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் 26.1.70 அன்று நடை பெற இருந்த கிளர்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை வெளியிட்டார் .

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் 1970/க்கான சட்டத் திருத்தம் 1971இல் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டதுஇதன் நோக்கம் இரண்டு.

முதலாவதுபரம்பரைப் பரம்பரையாக அர்ச்சகராக இருந்துவரும் பார்ப்பனக் குடும்பங்களின் வாரிசு முறை மாற வேண்டும்இரண்டாவதுகோயில் வழிபாட்டு முறைகள்சடங்குகள் பழக்க வழக்கங்கள் இவைகளில் பயிற்சிப் பெற்று சான்றிதழ் வாங்கியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அர்ச்சகராகலாம்.

இதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் 12 ரிட் மனுக்களை உச்ச வழக்காடு மன்றத்தில் தாக்கல் செய்தனர்.  இவர்களுக்கு ஆதரவாக பல்கிவாலாபராசரண் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் வாதாடினர்பல்கிவாலாவை வாதாட வைத்ததில் இராசகோபாலாச்சாரிக்கு முக்கியப் பங்குண்டுஐந்து நீதிபதிகள் கொண்ட ‘பென்ச்’ பாலேகர் தலைமையில் அமைக்கப்பட்டதுஇவருடைய தந்தையார் மராத்திய அர்ச்சகப் பார்ப்பனர் என்று திராவிடர் கழகப் பொதுச்செயலர் வீரமணி அவர் கள் கூறியுள்ளார்.

தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லும் – நீதிபதிகள்

நீதிபதி பாலேகர் அளித்தத் தீர்ப்பில் ‘தமிழ் நாடு அரசு நிறை வேற்றிய சட்டம் செல்லுபடியாகும்அர்ச்சகர்களை டிரஸ்டிகள் நிய மிக்கும் செயல் மதக் காரியம் அல்ல என்றும் அது மதச் சார்பற்ற காரியமே என்றும் தீர்ப்பளித்துள்ளதுஇதன் காரணமாக 12 ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டனஎனினும் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என்னும் நிலை இன்றளவில் வந்த பாடில்லைஇதற்கு காரணம் என்ன?

கடவுளை மறுத்தகோவிலே கூடாது என்ற பெரியார்இதற்காகப் போராடக் காரணம்  என்ன?
நான் அடித்த சாதிப்பாம்பு என்னிடம் அடி வாங்கிகடைசியில் கோயில் கருவறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளதுஅங்கு இருந்தும் மனித உரிமை அடிப்படையில் அதனை விரட்ட வேண்டும்’ என்று தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார்இதுதானே தந்தை பெரியாரின் போராட்டக் காரணமாக இருந்ததுஇத்தீர்ப்பு வெளியானபோது இராச கோபாலாச்சாரி ‘கல்கி’ ஏட்டில்,

அர்ச்சகர்கள் போட்ட ‘ரிட்’ விண்ணப்பங்களை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவிட்டார்கள் என்று சுருக்கமான செய்திகளை பத்திரிக்கைகளில் வாசகர்கள் படித்திருக்கலாம்பரம்பரை பாத்தியதைப் பற்றிச் சுப்ரீம் கோர்ட்டாருடைய அபிப்ராயம் இது என்ற அளவில் இந்தச் செய்தி சரியானதேஆனால் ‘இந்து’ பத்திரிக்கை (15.3.72) 10 ஆம் பக்கத்திலும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (16.3.72) 10 ஆம் பக்கத்திலும் சுப்ரீம் கோர்ட்டா ருடைய முழுத் தீர்ப்பும் வெளியாகியிருக்கிறதுஇதைப் படித்தால்தான் சுப்ரீம் கோர்ட்டார் தீர்மானத்தின் முக்கியமான விசயங்களை அறிய முடியும்எந்தக் கோயிலிலும் சம்பிரதாயத்திற்கு விரோதமாக அர்ச்சனையோவேறு பூi சடங்கோ செய்வதற்கு இடமில்லைஅப்படிச் செய்யும்படித் தமிழ்நாட்டு சர்க்கார் ஏதாவது விதிகள் ஏற்படுத்தியிருந்தால் அவை செல்லாது என்று தெளிவாகச் சுப்ரீம் கோர்ட்டார் தீர்மானித்து இருக்கிறார்கள்அந்தந்தக் கோயில் சம்பிரதாயத்துக்கு எவ்விதத்திலும் மாறுதல் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கச் சர்க்காருக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டார் தீர்ப்பில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்” என்று எழுதியதுதான் இன்றுவரை நடந்துள்ளது.

கோயில்களில் பொதுமக்கள் கடுமையான கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்பூiஜகளை எல்லோரும் செய்ய முடியாது’ என்பதையும் அதற்கான தகுதியும் திறமையும் உடையவர்கள் மட்டுமே பூiஜகளைச் செய்ய முடியும் என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றும் காஞ்சி சங்கராச்சாரிஅர்ச்சகர் நியமனம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கென உள்ள ஆகமத்தின்படிதான் வழிபாடுபூசை நடத்தப்பட வேண்டும்அதிலும் குறிப்பிட்ட பிரிவினர்தான் (வகுப்பினரி லிருந்துதான் அர்ச்சகர் இருக்க வேண்டுமென இன்றும் வற்புறுத்தப் படுகின்றது.

பார்ப்பனர்கள் வலியுறுத்தும் ஆகமம் தான் என்ன?

ஆகமங்கள் வேறுவேதங்கள் வேறுஆகமங்கள் வேதகாலத்திற்கு முற்பட்டவைகோயில் வழிபாட்டு முறைகள்சடங்குகள் சம்பிரதாயங் கள் ஆகியவைகளை உள்ளடக்கியதற்குப் பெயர்தான் ஆகமங்கள்வேதங்களை முழுமையாகக் கற்ற காஞ்சி சங்கராச்சாரிகூட பூசை நடத்த முடியாதுஎனவே ஆகமம் வேறுவேதம் வேறு என்று நீதிபதி மகராசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அர்ச்சகராவதற்குரிய தகுதிகள் குறித்து சென்னை உயர் வழக்காடு மன்றம் ‘சுந்தரம்பாள் Vs யோகவனக் குருக்கள்’ என்ற வழக்கின் தீர்ப்பில் `சோமபானத்தை ஆண்களுடன் பகிர்ந்து குடிக்க முடியாத அளவுக்குபெண்ணின் உடம்பில் நரம்பு மண்டல அமைப்புப் பூஞ்சை யாக இருக்கின்ற காரணத்தால் வேத காலத்தில் பெண்களுக்குத் தகுதி யின்மையை விதித்தது வேதம்’ என்று கூறியுள்ளனர்மேலும் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்பதும் தெளிவாகின்றதுஇதுவரையில் பெண்கள் இயற்கையாக உடல்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகத்தான் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லிவருவது எவ்வளவு பித்தலாட்டம் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.

ஆலயத்தில் அர்ச்சகராவதற்கு உள்ள தகுதியில் 1..பார்ப்பனராகவும் 2. வேதங்கள் முழுமையாகக் கற்றவராகவும் 3. பெருமிதமும் விரும்பத் தக்க பண்புடைய வராகவும் 4. சிற்றின்ப நடவடிக்கைகளை விலக்கிய வராகவும் 5. நேர்மையும் தர்ம சிந்தை உடையவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதுபார்ப்பன அர்ச்சகர்கள் நடை முறையில் அதைப் பின்பற்றுகின்றார்களாவஞ்சகத்தோடும் சூழ்ச்சி யோடும் பணம் பண்ணும் எண்ணத்தோடும் மட்டுமே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

1960-62 இல் சர்சி.பிஇராமசாமி அய்யர் தலைமையில் மைய அரசு அமைத்த இந்து அறநிலைய கமிசன்தனது அறிக்கையில்பார்ப்பன அர்ச்சகர்கள் எவ்வளவு தற்குறிகளாகவும் ஒன்றும் தெரியாதவர்களா கவும் இருக்கிறார்கள் என்பதை இந்தியா முழுவதையும் சுற்றிவந்து பலரிடம் சாட்சியம் பெற்று தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி யுள் ளார்கள்ஆகம விதிகளிலே சொல்லப்பட்டிருக்கின்ற அந்தத் தோற்றம்அந்தக் குணம் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற எந்தப் பார்ப்பன அர்ச்சகருக்கும் இல்லை என்பதை நீதிபதி மகராசன் குழுவும் தனது அறிக்கையில் கூறியுள்ளதுமேலும் அர்ச்சகர் நியமனத்தில் பாரம்பரிய உரிமையைக் கோர முடியாது என உச்ச வழக்காடு மன்றம் ஒப்புக் கொண்டுவிட்டதுஇதுவே ஆகமத்திற்கு எதிரானதுதானேஇது குறித்துதந்தை பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கம் வருமாறு:

கர்ப்பக்கிரகம் என்ற கருவரைக்குள் மற்றவர்கள் சென்றால்சாமி தீட்டாகிவிடும்பிறகு கடவுளுக்குச் சம்புரோட்சணம் செய்து சுத்தப் படுத்த வேண்டும் என்று அலறும் சனாதனப் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்இது எல்லாக் கோயில்களுக்கும் வழிபாடு நடத்தப் பெறும் அத்தனை விக்கிரகங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டாமாஇன்று அப்படி இருக்கிறதாகாசியில் உள்ள விசுவநாதர் ஆலயத்தில்/புண்ணியம் பெறுவதற்கும் செய்த பாவங்களைப் போக்குவதற்கும் சனா தனிகள் தேர்ந்தெடுக்கும் இடம் காசிதானேஉள்ள நடைமுறை என்னஎவர் வேண்டுமானாலும் அந்தச் சிலையான கல் இருக்கும் இடம் வரைப் போய்விட்டு வில்வத்தையோ மற்றும் பூக்களையோ போட்டுப் பூசை செய்துவிட்டு தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் திரும்புகின்றனரேமனிதர் கள் மட்டுமல்ல பசுமாடு கூட அங்கு கொண்டு வரப்படுகிற்து (நாமே நேரில் அதனைக் கண்டோம்அங்குள்ள கடவுள் மட்டும் ஏன் தீட்டாகி விடுவதில்லை?

காசி மட்டுமல்லவடநாட்டு மிக முக்கிய கோயில்களான பிரசித்திப் பெற்ற பண்டரிபுரம் - பூரி ஜெகந்நாதம் கோயில்களிலும் சிலை இருக்கும் வரை எவரும் சென்று தொட்டுக் கும்பிட்டு வணங்கலாமேஅங்கு மட்டும் ஏன் சாமி தீட்டாகி விடுவதில்லைவடநாட்டுக் கோயில்களை விட்டுவிடுவோம்இங்குள்ள கோயில்களில் கர்ப்பக்கிரகத்திற்கு முன் பல சின்ன கடவுள்கள் உள்ளனவேஅந்த விக்கிரகங்களைத் தொடவும் தொட்டுப் பூ வைக்கவுமான காரியங்கள் செய்கின்றனரேஅவைகள் ஏன் தீட்டாகி விடுவதில்லை?

குளக்கரையிலும் மரத்தடிகளிலும் பிளாட்பாரங்களிலும் நடை பாதைகளிலும் திடீர் திடீர் என்று கடவுள் சிலைகள் தோன்றி கோயில் களாக மாறுகின்றனவே அவைகளை மனிதர்கள் மட்டும் வணங்க வில்லைபல நேரங்களில் அவை மீது செய்யப்பட்ட பாலாபிசேகம் தேனாபிசேகம் சுவை கண்ட நாய்களும் சென்று நக்குகின்றனவேஅவை எப்படித் தீட்டாகாமல் இருக்கின்றனஅவைகளுக்கெல்லாம் தினசரி சம்புரோட்சனம் நடத்தப்படுகின்றனவாபுனிதத்தன்மை இழந்துவிட்ட வெறும் கற்கள் என்று எந்தப் பார்ப்பானும் பக்தனும் கூறுவதில்லையே ஏன்மதக் கோட்பாடு என்றால் அதற்குச் சீர்மை (Uniformity) வேண்டாமாஎத்தனையோ இடங்களில் மரத்தடிஊர் முச்சந்திகளில் லிங்கங்கள் இருக்கின்றனவேஅவைகளை நாய்களும் மற்ற நாலுகால்பிராணிகளும் எவ்வளவு அசிங்கப்படுத்தி நடந்து கொள்ளமுடியுமோ அவ்வளவு செய்கின்றனவேஅதுபற்றிப் பார்ப் பனரோபக்தரோ இதுவரை எடுத்தத் தடுப்பு நடவடிக்கைதான் என்னபெரிய கோயில் என்றால் அவ்வளவும் பார்ப்பான் கொழுப்பதற்கும் அவனது சாதி ஆணவம் நிலை நாட்டப்படுவதற்கும்தானே?’ (‘விடுதலை’ தலையங்கம் 14.3.72)
எனவே அர்ச்சகர் நியமனம் குறித்து தமிழக அரசு இயற்றிய 1970 ஆம் ஆண்டைய சட்டம் செல்லுபடிக்கூடியதாகும்எனவே இதை செயல் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகம விதிகளுக்கு மாறாகக் கட்டப்பட்ட கோயில்கள் பற்றி மகராசன் குழு அறிக்கை

பெரியார் திடலில் 2.11.1991 இல் ‘அர்ச்சர்கர் பிரச்சனையும் வேத ஆகமக் கல்லூரியும்’ என்ற தலைப்பில் நீதிபதி பிவேணுகோபால் அவர்கள் ஆற்றிய உரை;

சென்னை தியாகராசர் நகரில் உள்ள சிவா விஷ்ணு கோயில் மற்றும் அடையாறு பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோயில் இவைகள் எல்லாம் ஆகம விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டிருக்கின்ற கோயில் என்பதை சொல்லியிருக்கிறார்கள்இன்னமும் ஆகம விதி களுக்குப் புறம்பாகவே தமிழ்நாட்டில் பல கோயில்களில் பூசைகள் நடை பெற்றுக்கொண்டு வருகின்றனஅது மாத்திரமல்லதிருப்பதி கோயி லிலே ஏர்கண்டிஷன் போடுகின்றான்இவைகள் எல்லாம் ஆகம விதி களுக்குப் புறம்பானதாகத்தான் செய்யப்பட்டிருக்கிறது.

பழனி கோயிலிலே ஆரம்பத்தில் பண்டாரங்கள்தான் பூசை செய்து கொண்டு வந்தார்கள்பின்னாளில்தான் பார்ப்பனர் வந்து பூசை செய்தார்கள்அதற்குரிய ஆதாரம் இருக்கின்றது.

அரியலூர் கலியபெருமாள் கோயிலில் வன்னியர்கள்தான் பூசை செய்து கொண்டுவந்திருக்கிறார்கள் என்று பல மேற்கோள்களை மகராசன் அறிக்கையிலே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்’ என்று ஆணித் தரமாக எடுத்துரைத்தார்.

மேலும் அரசியல் சட்டம் இதற்காகத் திருத்தப்பட வேண்டுமாஎன்பது பற்றியும் நீதிபதி வேணுகோபால் அவர்கள் தமது பேச்சினில், ‘அரசியல் சட்டம் ஏன் திருத்தப்பட வேண்டும் என்பதை மகராசன் அவர் கள் எதற்காக சொன்னார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்இதை தெளிவாக விளக்க வேண்டுமானால்சிவன் கோவிலிலே சைவர்கள் பூசை செய்ய வேண்டும்விஷ்ணு கோவிலிலே வைணவர்கள்தான் பூசை செய்ய வேண்டும்இது தமிழ் நாட்டிலே பழக்கமாக (ஊரளவடிஅபாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது.

மகராசன் சொன்னார்: ‘சிவன் கோயிலிலே வைணவரைப் போட்டு விஷ்ணு கோயிலிலே சைவரைப் போட்டால் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளுவார்களேஎனவே இங்கே அரசியல் சட்டத்Ý திருத்தம் ஏற்பட வேண்டிய ஒரு அவசியம் மாதிரி இருக்கிறதேஎனவே அரசியல் சட்டத்தைத் திருத்தினால் ஒரு பாதுகாப்பாக இருக்குமேபொருத்தமாக இருக்குமே என்று சொன்னார்இங்கே மகராசன் சொன்னது அவரு டைய தனிப்பட்ட அபிப்ராயம்வல்லுநர் குழுவினுடைய அபிப்பராயம் அல்லஅல்லது நீதிமன்ற தீர்ப்பினுடைய அபிப்பராயம் அல்லசுப்ரீம் கோர்ட்டிலேயேகூட கால மாறுதல்களுக்கு ஏற்ப தீர்ப்பை மாற்று கின்றார்கள்.

ஆனால் அரசியல் சட்டத்திலே பாரம்பரியமாக எப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப் படுகின்றார்களோ அதற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கின்றதுஅந்த செக்ஷனை சர்க்கார் அமென்ட் மென்ட் பண்ணவில்லைஅதாவது வைணவர் கோயிலிலே வைணவர் களும் சிவன் கோயிலிலே சைவர்களும்தான் இருக்க வேண்டும் என்று இருக்கின்றதுஇப்படி இருப்பதை மாற்றினால் அரசியல் சட்டம் திருத்தப் பட வேண்டும் என்று தனது அபிப்ராயமாக சொன்னார்எனவே அரசியல் சட்டத்தைத் திருத்தினால்தான் இதை செய்ய முடியும் என்று பத்திரிக்கைகள் சொல்வதுஇதைப் பற்றி சரியாகப் படிக்காமல்சரியாக தெரிந்துகொள்ளாமல் சொல்லுகின்ற ஒரு மனக்குழப்பம்’ என்று ஆதாரங்களை எடுத்துக்காட்டினார்.

(அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமை /ஏன்என்னும் நூலிலிருந்து).

 (இதழ்க் குறிப்பு : ஏடு/ 8)


அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையா?

தீர்ப்பு வந்தபின்தான் குழப்பம் கூடியுள்ள்ளது

தீர்ப்பு வந்தால் தெளிவு வரும் என்பார்கள். ஆனால், தீர்ப்பு வந்தபின்தான் குழப்பம் கூடியுள்ள்ளது!  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் ஆணையையும், சட்டத்தையும் எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 16.12.2015 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி, இனிமேல் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்புள்ளதா என்று கேட்டால், தேர்ந்த வழக்கறிஞராலும் விடை சொல்ல முடியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது,அட்டவணைச் சாதியினரின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட  இளையபெருமாள் ஆணையம், 1969 ஆம் ஆண்டு,  சமூகநீதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்தது. 

சாதி  இழிவை ஒழித்திட, தாழ்த்தப்பட்ட மக்களோடு 26.01.1970இல் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தந்தை பெரியார் அறிவித்திருந்தார். 

இச்சூழலில், அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை 02.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார். 1971 சனவரியில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அது சட்டமாகியது. எனினும், சேஷம்மாள், எத்திராஜ் ஜீயர் உள்ளிட்ட 12 பேர் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக, அது முடங்கிப் போயிற்று.

எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சர் ஆன பிறகு, இது தொடர்பாக ஆராய்வதற்கு, 24.09.1979 அன்று, நீதிபதி மகாராசன் தலைமையிலான 12 பேர் குழுவை அமைத்தார். அக்குழு, 1982இல் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. சாதி அடிப்படையில் உச்சநீதி மன்றம் எத்தடையும் விதிக்கவில்லை என்றும், ஆகமப் பயிற்சி அர்ச்சகர்களுக்குக் கண்டிப்பான தேவை என்றும் அது பரிந்துரைத்தது. அதன்படியே ஆகமப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இன்று அந்தப் பள்ளிகளில் பயின்று ஆகமத் தேர்ச்சி பெற்ற 206 பேர் அர்ச்சகர் ஆவதற்குக் காத்துள்ளனர்.

இதற்கிடையில், 2002 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஆதித்யன் என்பவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து நடந்த வழக்கு அது. நம்பூதிரிப் பார்ப்பனர் அல்லாத ஒருவரை அக்கோயிலின் அர்ச்சகராக நியமித்தது செல்லாது என்று தொடுக்கப்பட்ட அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதி அடிப்படையில் மட்டுமே ஒருவரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பது இந்திய அராசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதி மன்றம் கூறிவிட்டது.

கேரள நீதிமன்றத் தீர்ப்பு, மகராசன் குழு அறிக்கை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் அரசு ஆனையை 23.05.2006 அன்று, கலைஞர் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. பிறகு அதனையே 2006 ஜூலையில் சட்டமாகவும் ஆக்கியது.அதனை எதிர்த்து,2006 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட வழக்கில்தான், உச்சநீதி மன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செஇதிருப்பதின் மூலம், அச்சட்டம் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஆகமப் பயிற்சி பெற்றோர் மட்டுமே என்று கூறாமல், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இங்கேதான் குழப்பம் தொடங்குகிறது. ஆகமப்படி என்றால், ஒரு குறிப்ப்பிட்ட சாதியினர் மட்டும்தானே அர்ச்சகர் ஆகா முடியும், மீண்டும் 1971 ஆம் ஆண்டு திரும்பிவிட்டதே என்று பலரும் கவலை கொள்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என்று தலைவர்கள் சிலர் அறிக்கை விட்டுள்ளனர்.

இத்தீர்ப்புக்   கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆகமங்கள் சாதி அடிப்படையில்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. ஆகமங்களைப் பற்றிப் படித்துள்ள என் போன்றோர் மட்டுமின்றி, ஆகமங்களையே படித்துள்ள சத்தியவேல் முருகனார் போன்றோரும் இவ்வாறே கூறுகின்றனர். 

ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்களே அன்றி வேறில்லை. கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குடமுழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம்பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு,  வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு.

சிவாகமங்கள் மொத்தம் 28, வைணவ ஆகமங்கள் (சம்ஹிதைகள்)இரண்டு, சாக்த தந்திரம் ஒன்று, கௌமாரத் தந்திரம் ஒன்று என 32 ஆகமங்கள் உள்ளன என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் சிவாகமங்கள் ஒன்பதும், வைணவ ஆகமங்கள் இரண்டும்தான் உள்ளன. அவற்றுள்ளும், காமிய ஆகமம்தான் 90 சதவீதக் கோயில்களில் பின்பற்றப்படுகின்றது. அடுத்துக் காரணாகமம் பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், தில்லைக் கோயிலில் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது. அவ்வளவுதான். வைணவக் கோயில்களில் (தென்கலை), பாஞ்சரத்னம், வைகானசம் ஆகிய இரு சம்ஹிதைகளும் வழக்கில் உள்ளன. 

இவற்றில் எந்த ஒன்றும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கவில்லை.

தடுத்தாலும், ஆகமங்கள் அப்படி ஒன்றும் மீறப்படாதவை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 36000 கோயில்களில், 2000க்கும் குறைவான கோயில்களில் மட்டுமே, ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று, தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனும், வழக்கரிஞார் ராமமூர்த்தியும், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டனர். 

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு எல்லா இந்துக் கோயில்களும் திறந்து வைக்கப்படுகின்றனவே, அதே எந்த ஆகமத்தின் கீழ் என்பதற்கு யாரேனும் விடை சொல்வார்களா? ஜனவரி ஒன்றாம் தேதிக்கும், இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

உருவ வழிபாட்டை ஏற்காத, நெருப்பை வணங்குகிற ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரி போன்றவர்கள்), கோயில் கொடிக்கம்பம் தாண்டி வரக்கூடாது என்று காரண ஆகமம் கூறுகிறதே, அது நடைமுறையில் உள்ளதா?

எனவே, இந்த நீதிமன்ற ஆணையைப் பயன்படுத்தி, அனைத்துச் சாதியினரையும் அரசு உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். அதுவே சமூக நீதி. அய்யா பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்கான  நேரம் இதுவே !.

அரசு நீதியை நிலைநாட்டத் தவறுமேயானால், சமூகநீதி கோரி ஒரு சமூகப் போரை அறவழியில் நாம் அனைவரும் தொடங்க வேண்டும். சட்ட வழியிலான போர் முடிந்துவிட்டது. சமூகப் போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது! 

சுப.வீரபாண்டியன்

விசைபலகையில் விரல்களோடு…

-திண்ணை தோழன்