Showing posts with label யுனெஸ்கோ. Show all posts
Showing posts with label யுனெஸ்கோ. Show all posts

Sunday, 30 April 2023

பெரியாருக்கு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கவேயில்லையாம் - அது பொய்யான தகவலாம்!

பெரியாருக்கு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கவேயில்லையாம் - அது பொய்யான தகவலாம்!

விக்கிப்பீடியாவிலிருந்து தகவலை நீக்கிய பார்ப்பன சதி!

பார்ப்பனப் பித்தலாட்டத்தைப் பாரீர்!
-------------------------------------------------------

ஈ.வெ.ராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கியதாக திராவிட ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பி, அதை விக்கிப்பீடியாவில் சேர்த்து வைத்திருந்தார்கள். ஈ.வெ.ரா. பற்றிய கட்டுரை semi-protected என்ற வகையைச் சேர்ந்தது. நேரடியாக யார் வேண்டுமானாலும் திருத்திவிட முடியாதது. விக்கிப்பீடியா அங்கீகரித்த பதிப்பாசிரியர்கள்தான் திருத்த முடியும்.

1998 வரையிலான யுனெஸ்கோ விருதுகள் பட்டியலில் ஈ.வெ.ரா. பெயர் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நான் திருத்தம் கோரியிருந்தேன். விக்கிபீடியா அதை ஏற்று அந்தப் பொய்யான தகவலை நீக்கி உள்ளது. திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் என்று அந்த செய்தியில் வெளியாகியுள்ளது.

பார்ப்பனர்களைப் பிறவிக் குற்றவாளிகள் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
இப்படி ஒரு பார்ப்பன சதி ஆரவாரம் இல்லாமல் நடந்திருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பிறகும் அக்கிரகாரத்தின் அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்திலும் அய்யா அக்னி திராவகத்தை ஊற்றி அலறச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒன்று போதாதா?

பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை இருட்டடிக்க எந்த எல்லைக்கும் சென்று பார்ப்பனர்கள் கீழிறக்க வேலையில் ஈடுபடுவார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கையிலிருந்து அப்பட்டமான இந்துத்துவா கொள்ளியைக் கையில் பிடித்து அலைந்துகொண்டிருக்கும் ஓர் இணைய தளம்தான்  tmnews24 . com. தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பார்ப்பனர் ஒருவர் இந்தியாவிலிருந்து இயக்கும் வேலையைச் செய்துகொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பின்னணியில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற பார்ப்பனர் இந்த நச்சு வேலையைச் செய்திருக்கிறான்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை அய்.நா.வின் யுனெஸ்கோ நிறுவனமே அளித்த ஒரு விருதை இவர்கள் பொய்யென்று சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்?

யுனெஸ்கோ மன்றம் என்ற அய்.நா.வின் அதிகார பூர்வமான கிளைதான் அவ்விழாவை நடத்தியது.
சென்னை ராஜாஜி மண்டபத்தில் 27.6.1970 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சர் திரிகுண சென்தான் அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் தந்தை பெரியாருக்கு விருது வழங்கினார் என்பது உலகறிந்த தகவலாகும்.

‘‘Periyar, the Prophet of the New Age;
The Socrates of South East Asia;
Father of the Social Reform Movement;
And Arch Enemy of Ignorance,
Superstitions, Meaningless Customs and Base Manners”

‘‘புது உலக தீர்க்கதரிசி, 
தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், 
சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, 
அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’' என்ற வாசகங்களும் அந்த விருதில் பொறிக்கப்பட்டு இருந்தன.

அந்த விருதினை பெற்றுக்கொண்ட தந்தை பெரியார், அய்.நா. மன்றத்தின் மற்ற மற்ற வாசகங்களைவிட  ‘‘அறியாமைக்கு, மூடநம்பிக்கைக்கு அர்த்தமற்ற சம்பிரதாயத்திற்கு நான் கடும் எதிரி என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம்‘’ என்று ஏற்புரையும் வழங்கினார்.

இவை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரபல ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன.
இவை எல்லாம் பொய்யென்று ஒரு பார்ப்பான் சொன்னதாகவும், அதனை விக்கிப்பீடியா ஏற்றுக்கொண்டு, பெரியாருக்கு விருது வழங்கப்பட்ட தகவலை நீக்கியதாகவும் ஒரு தகவலை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் ஒரு பார்ப்பான்.

இந்தப் பித்தலாட்டத்தை செய்ததோடு அல்லாமல் ‘திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்‘ என்றும் குறிப்பிடுகிறார் என்றால், இவர்களின் திமிரின் அளவு எத்தனை டிகிரிக்குச் சென்று இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. ஆட்சி அதிகாரம் தங்கள் கூட்டத்திடம் உள்ளது எனும் குருட்டுத் தைரியத்தில் எதையும் செய்யலாம் என்று கருதுகிறார்கள் போலும்; இவர்கள் மின் கம்பியில் கை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவோம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும். Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும். அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

The United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) eventually gave an award to Periyar, and the Union Education Minister Triguna Sen, in Madras (Chennai), on June 27, 1970. The citation hailed Periyar as ‘‘the Prophet of the New Age, the Socrates of South East Asia, Father of Social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners’’ என்று வெளிவந்துள்ளது.

பார்ப்பனர்கள் நினைத்தால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் ஆசாமிகளை எல்லாம் ஜெகத்குரு என்பார்கள். கொலைக் குற்றத்தில் ஜெயிலுக்குப் போன பேர்வழியென்றாலும் ஜெகத்குரு என்பதில் மாற்றுக் குறையாமல் கூவுவார்கள்.

அதேநேரத்தில், தமிழினத்தின் பாதுகாவலரை - கட்சிக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியார் என்று போற்றப்படும் சகாப்தத் தலைவரைப்பற்றி உண்மைக்கு மாறாக எழுதுகிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனக் கும்பலை நம் மக்கள் அடையாளம் காணவேண்டாமா?

ஜெகந்நாத் ஸ்ரீனிவாசன் என்ற பேர்வழியின் முயற்சிக்கு விக்கிப்பீடியா ஆட்பட்டது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் விக்கிப்பீடியாவின் காதைத் திருகி உண்மையை நிலைநாட்டுவோம் என்பது உறுதி!

கி.வீரமணி,
தலைவர், 
திராவிடர் கழகம்

30.4.2019  
சென்னை

Wednesday, 1 March 2023

யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது யாரால்?

          • Viduthalai

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றத்தின் விருது வழங்கப்படவில்லை என்ற வடிகட்டிய பொய்யை வாரிக் கொட்டியிருக்கிறார் அம்மையார். (வானதி சீனிவாசன்)

யுனெஸ்கோ விருது

1970-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்த கல்வி ஆண்டில்,  சென்னையில் யுனெஸ்கோ மன்றம் (Unesco Mandram) தந்தை பெரியார் உள்ளிட்ட பலரையும் அழைத்துப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்ததே! அந்த அமைப்பு யுனெஸ்கோவால் உல கெங்கும் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ மன்றங்களுள் ஒன்றல்லவா? அந்த விழாவில் பங்கேற்று விருது வழங்கியவர் அன்றைய ஒன்றிய அமைச் சரும், கல்வியாளரும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் திரிகுணசென் அல்லவா? உடன் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் பேராசிரியர் ஷேர் சிங் யார்? இவர்கள் திராவிட இயக்கத்தவரா? 

அன்றைய முதலமைச்சர் கலைஞர், சட்டப் பேரவைத் தலைவர் சி.பி.சிற்றரசு ஆகியோரைக் கூட, அவர்கள் அந்தப் பொறுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங் கேற்றிருந்தாலும் திராவிட இயக்கத் தவர் என்று சொல்லி விடலாம். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் பங்கேற் றிருக்கிறாரே! அரசு விழா அல்லாத ஒன்றிலா ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்? யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? உலகம் முழுவதும் யுனெஸ்கோ கிளப் என்று உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறதே யுனெஸ்கோ நிறுவனம், அதை மறுக்கப் போகிறார்களா?

பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது, விருது வழங்கிய ஒளிப்படம், பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக இருக்கின்றன. அவ் வளவு ஏன்? விருது வழங்கப்பட்டபோது உடனிருந்த பலரும் கூட உயிருடன் இருக்கும் இந்த நிலையிலேயே 50 ஆண்டுகளுக்கு முன், இதே சென்னையில் நடந்த வரலாற்றையே மறுத்துப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டம், திராவிட இயக்கத்தைப் பார்த்து கட்டுக்கதை என்று கூறுவதா?

விருதுகளால் அளக்கப்பட முடிந்த ஆளுமையா தந்தை பெரியார்?

சிந்திக்கட்டும்

திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்வதன் மூலம் அது உண்மையாகாவிட்டாலும், மக்கள் மனதில் ஒரு சந்தேகத்தையாவது விதைத்துவிடுங்கள் என்று விவாதக் களத்திற்குச் செல்கையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையை இங்கேயும் பின்பற்றிப் பார்க்கலாம் என்று நினைக் கிறாரா அம்மையார் வானதி?

கொஞ்சமேனும் கூர்மையாகப் பேசுவார் என்று பார்த்தால், அழி வழக்குகளைத் தூக்கி வந்து கொண்டிருக் கிறார் வழக்குரைஞர், பாவம்! 

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்