வெற்றிவலவன் பதிவுகள்

மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு
Showing posts with label பதிலடி. Show all posts
Showing posts with label பதிலடி. Show all posts

Wednesday, 1 March 2023

திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதா?

        December 31, 2022 • Viduthalai

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

 வெள்ளைக்காரனா காரணம்

திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார். 

மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)

திராவிடர்

திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம். 

‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!

18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!

8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!

12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?

தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!

வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? (வானதி சீனிவாசன்)

ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே! 

பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள  திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க! 

திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?

திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?

-  ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

Posted by parthasarathy r at 23:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: திராவிடம், பதிலடி

Thursday, 10 March 2022

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?


'தினமலருக்கு'ப் பதிலடி!
  November 01, 2021 • Viduthalai

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?

கவிஞர் கலி. பூங்குன்றன்

தந்தை பெரியார், பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிடர் கழகம் - இவர்களின்மீது புழுதிவாரி இறைப்பது - பிம்பத்தை உடைப்பது எனும் ஒரு செயலில் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு இருப்பதாகவே தெரிகிறது!

தினமலர், தினமணி, துக்ளக்கோடு, தமிழ் இந்துவும் ஜோடி சேர்ந்திருக்கிறது போலும்!

வரட்டும் - ஒரு வகையில் நன்மைக்குத்தான் - இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கூட்டத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதற்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு அல்லவா - அந்த வகையில் நிரம்பவே வரவேற்கிறோம் - எதிர்பார்க்கிறோம்.

நேற்றைய (31.10.2021) 'தினமலர்' ஏட்டில் யாரோ எழுத்தாளராம் - அவர் பெயர் எஸ். ராமசுப்பிரமணிய னாம். கட்டுரையின் தலைப்பு "குலக்கல்வியும்  - தொழிற் கல்வியும்!" என்பதாகும். என்ன சொல்ல வருகிறார்கள்?

"கடந்த 1953 ஏப்ரல் 16இல் ராஜாஜி சென்னை மாகாணத் தின் முதல் மந்திரியாக இருந்தபோது ஒரு சீர்திருத்த முயற்சியை மேற்கொண்டார்.

அதன்படி மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை மாணவியர், பட்டியல் ஜாதியை சேர்ந்த மாணவர்களும் தினமும் மூன்று மணி நேரம் பள்ளிக்கு வந்தால் போதும்.

மற்ற நேரம், பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்க லாம் என்று ஒரு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

அதாவது, தச்சர் மகனுக்குத் தச்சுத் தொழில் நுட்பமும், தட்டார் மகனுக்கு நகை செய்யும் நுணுக் கமும், சிற்பக் கலைஞர் மகனுக்கு சிற்ப வேலைப் பாட்டு நேர்த்தியும், சமையல் கலைஞர் மகனுக்கு நளபாகமும் பிறவியிலேயே வாய்த்திருக்கும்.

அந்த பண்பு அவரவர் 'ஜீன்' எனப்படும் உடல் மூலக் கூறிலேயே உறைந்திருக்கும்! அந்தப் பண்புகளை தகப் பனார் கூடவே இருந்து மெருகேற்றினால் மேலும் மிளிரும்.

அந்த கோணத்தில், அந்த உயர்ந்த நோக்கத்தில் தான், சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்" என்று கூறுகிறது தினமலர்.

இது தொழிற் கல்வி திட்டம் தானாம். முதல்அமைச்சர் ராஜாஜி தொழிற் கல்வி என்பதற்குப் பதிலாக குலக்கல்வி என்று 'நா' குழறி சொல்லி விட்டாராம்.

உடம்பெல்லாம் மூளை என்று தம்பட்டம் அடிப் பார்களே  - ராஜாஜி பற்றி பார்ப்பனர்கள்! அப்படிப்பட்ட ராஜாஜிக்கா நா குழறி விட்டது? சரி. ஒரு முறைதான் நா. குழறியது - தவறைத் திருத்தி சொல்ல வேண்டியது தானே - அவரைத் தடுத்தது யாராம்....? உண்மை என்னவென்றால் அவர்கள் தொழிற்கல்வி என்று முக்காடு போட்டுக் கொண்டு வந்த திட்டத்தை - குலக் கல்வி என்ற ஒரே  ஒரு வார்த்தை மூலம், அவர்களின் முகமூடியைக் கிழித்து சுக்கல் நூறாக்கி விட்டார் தந்தை பெரியார். மக்களும் விழிப்புணர்வு பெற்றனர் என்பது தான்உண்மை.

சரி... தினமலர் கட்டுரையாளரின் கூற்றுக்கே வருவோம். தச்சர் மகனுக்கும், தட்டார் மகனுக்கும், சமையல்காரர் மகனுக்கும் அந்தத் திறன் தந்தை 'ஜீன்' வழி வருமாம். அதனால்தான் அத்தகைய கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தாராம்.

முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் காலடி எடுத்து வைக்கும் (அதுவும் இன்றைக்கு 68 ஆண்டு களுக்குமுன் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!) பிள்ளைகள் அரை நேரம் அதுவும் வெறும் மூன்று மணி நேரம் படிப்பு! மீதி நேரம் அப்பன் தொழில் என்றால் அந்தப் பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக் கல்வி நிலை எந்த அளவுக்கு இருக்கும்?

அந்த வயதிலேயே அப்பன் தொழிலைக் கற்று, நாலு காசைக் கையில் பார்த்து விட்டால், அவர்களின் மனநிலையும், நாட்டமும் எந்தப் பக்கம் சாயும்?

இது சாதாரண பொது அறிவு உடையவர்களுக்குக் கூடத் தெரிந்த சின்ன விஷயம் - இது மெத்தப் படித்த "தினமலர்" வகையறாக்களுக்குத் தெரியாமல் போயிற்று என்று சொல்ல மாட்டோம் - எப்படியாவது அவர் களின் குலகுருவான ராஜாஜியை விட்டுக் கொடுக்க முடியாதே - காப்பாற்றியாக வேண்டுமே - அந்தப் பூணூல் இனவுணர்வுதான் 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அவாளை ஆட்டிப் படைக்கிறது.

தச்சர் மகன், தட்டார் மகன், சமையற்காரர் மகன் என்று பட்டியல் போடும் பார்ப்பன எழுத்தாளர் புரோகிதர் மகன், கருமாதி மந்திரத்தையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே ஏன்?

கருமாதி பார்ப்பான் மகன் மட்டும் காலையில் மூன்று மணி நேரம் பள்ளியில் படிப்பு; பிற்பகலில் - அக்கிரகாரத்து மாமி, பாட்டி கூடப் படித்தவர்கள் ஆதலால், அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பார்ப்பனர் அல்லாதார் கல்வி வாய்ப்பை இந்தக் 'கண்ணி வெடி' மூலம் தகர்க்க வேண்டும் என்பது தானே ஆச்சாரியாரின் நோக்கம்.

அதுவும் போகட்டும்; அவர்கள் சொல்லும் தொழிற் கல்வியாகவே இருந்து தொலையட்டும் - அரை நேரம் பள்ளிப் படிப்பு என்பதோடு நிறுத்த வில்லையே! 6000 பள்ளி களை இழுத்து மூடினாரே ஆச்சாரியார் அதன் நோக்கம் என்ன?

1953இல் மட்டுமல்ல; 1937இல் ஆச்சாரியார் சென்னை மாநில முதல் அமைச்சராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியவர்தானே!

இவற்றை எல்லாம் அறியாத்தனத்தால் ஆச்சாரியார் செய்துவி டவில்லை. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம் - பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கோட்பாடு!

அதிலே ஆச்சாரியார் உறுதியாக இருந்த காரணத் தால்தான் அந்த வேலைகளை மிக சூட்சமமாக அவருக்கே உரித்தான நரித்தனத்தோடு செய்தார் என்பதுதான் உண்மை- உண்மையிலும் உண்மை!

'பிராமணர்' மற்றும் ஜாதிபற்றி ஆச்சாரியாரின் அழுத்தமான எண்ணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் 1953 குலக்கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அவர் மூளையில் உருவானது என்பதை எளிதில் உணர முடியும்.

Infact in one occasion Rajaji proudly said that he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan April (1) 1978 Gandhiji's crusade Against Casteism).

முதல்அமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக பெருமையாக நேசிக்கிறேன்" என்றவர்தானே.

முதல் அமைச்சராக ஆச்சாரியார் இருந்தபோது திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் என்ன பேசினார்?

"அவரவர் ஜாதித் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்து விட்டால் வேலை எங்கி ருந்து கிடைக்கும்?"

('தி இந்து' 30.6.1952)

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆச்சாரியார் குலக் கல்வி திட்ட அறிவிப்புக்கு முன்பே  இந்தக் குலக்கல்வி மனப்பான்மையோடு இருந்தார் என்பதுதான்!

ஜாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித்துதான் நம் முன்னோர்கள்  வர்ணாசிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்"

(கரூர் பசுபதிபாளையத்தில் ஆச்சாரியார் உரை 'சுதேசமித்திரன்' பக்கம் 1 - 29.1.1961)

ராஜாஜியின் இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால் தான் 1953இல் அவர் கொண்டு வந்தது ஜாதியின் அடிப்படையிலான  குலக் கல்வியே என்பது மிகப் பச்சையாகவே தெரியும் - புரியும்.

குலக் கல்வி திட்டத்தை எதிர்த்த தி.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வாரிசுகளை தங்கள் தொழிலான அரசியலிலே வைத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகிறார் 'தினமலர்' எழுத்தாளர்.

அரசியலில் ஈடுபடுவதும், பொதுத் தொண்டாற்று வதும் ஒரு தொழில் என்று சொல்லும் 'அதிமேதாவியை' இப்பொழுதுதான் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக சிலவற்றை நம்மால் கேட்க முடியும்.

இந்தியாவில் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகக் கருதப்படும் சரத்பவாரின் மூதாதையர் மண் பாண்டம் செய்தவர்கள். அவருடைய மூதாதையர் தொழிலைக் கற்று அதிலே ஈடுபட்டிருந்தால் சரத்பவார் மராட்டிய மாநில முதல் அமைச்சராக ஒன்றிய அமைச் சராக வந்திருக்க முடியுமா?

மும்பை வந்து தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் நுழைந்து ஒரு நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது. அவர் வாழையடி வாழையாக அரசியல் குடும்பத்தில் வந்தவர் கிடையாதே!

இசைஞானி இளையராஜாவின் பாட்டனார்  எஸ்டேட் கூலித்தொழிலாளி. சொந்த வீடு கிடையாது.

"குலத் தொழிலைப் பின்பற்றி இருந்தால் இன்று உலகம் போற்றும் இசைஞானியாக ஒளிர முடியுமா?

பச்சைத் தமிழர் காமராசர் அரசியலில் ஆச்சாரியாரை வீழ்த்தி அவதானித்திருக்க முடியுமா?

தி.க., தி.மு.க. காங்கிரசின்  வாரிசு அரசியல் பேசும் இவர்கள் பா.ஜ.க.வில்  கொத்துக் கொத்தாக குடும்ப வாரிசுகளாக ஜொலிக்கிறார்களே! அதைப்பற்றி மூச்சு விடாதது ஏன்? (தனிப் பட்டியல் காண்க).

ஓ, மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி - அதுதானே பார்த்தோம்!


Posted by parthasarathy r at 06:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குலக்கல்வி, தினமலர், பதிலடி

Friday, 6 March 2020

பிராமணன் என்பதில் பெருமை! - இராஜாஜி (மாலன்களின் “புளுகுப் புராணம்!)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

சன் தொலைக்காட்சி (திமுக) மூலம் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்து - திமுக தலைவர் கலைஞரால் “உதவிகள்” பெற்று - அதற்குப் பின் பல “அவதாரங்களை எடுத்தவர்” மாலன் என்ற நாராயணன்.

இப்பொழுது அவர் ‘துக்ளக்‘கின் ஆஸ் தான எழுத்தாளர் - பாரதீய ஜனதாவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர். இந்த வார ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020) “தலித் விரோத அரசா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தீட்டியுள்ளார். அதில் ராஜாஜி பற்றி பலபடப் பாராட்டியுள்ளார் - இதில் ஆச்சரி யப்படுவதற்கு ஏதுமில்லை. அது அவாளின் பூணூல் பாசம்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கே அந்தப் பிறவிக் குணம் போகவில்லை என்கிறபோது நாராயண மாலன்களுக்கும் அந்த உணர்ச்சி ஓங்கி நிற்பதில் ஆச்சரியம் இருக்க முடி யாது.

‘கேரவன்’ ஏட்டில் வெளிவந்த செய்தி தான் அது.

Infact, one occasion Rajaji proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (Caravan, April (1) 1978 - Gandhiji’s Crusade against Casteism).

முதல் அமைச்சர் என்கிற பதவியை விட பிராமணனாக இருப்பதில்தான் பெரு மையு றுவதாகப் புளகாங்கிதம் அடைந்தவர் ராஜாஜி.

தாழ்த்தப்பட்டவருக்காக சித்தூர் சென்று வாதாடியதாக ஒரு தகவலை விவரித்து எழுதியுள்ளார் தோழர் மாலன்.

அது எப்படியோ இருக்கட்டும்; தாழ்த் தப்பட்டவர் விடயத்தில் ராஜாஜி எப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்பதை அண்ணல் அம்பேத்கர் வாயிலாகவே கேட்டு விடுவோம்.

“நான் அந்தக் காலத்தில் எக்சிகியூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள் ளைக்கார வைசிராயுடன் பேசி விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து திறமை மிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து மேல்நாட்டுக்கு அனுப்பி கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள் ளும்படிச் செய்தேன்.

அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக்கட்டி விட்டார்.”(Report of  Backward Classes Commission, Vol. III page 75, para 2).

இதுதான் மாலன் மகத்துவமாக ராஜாஜி பற்றிக் கூறும் ராஜாஜியின் தலித் மீது கொண்ட ‘தகத்தகாய காதல்’

ராஜாஜியின் பார்ப்பனப் பற்று எத்தகை யது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட் டையும் கூற முடியும் - அதுவும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் எழுத்துக் களிலிருந்தே காட்ட முடியும்.

“தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப்பட்டது. இராஜகோபாலாச்சாரி யார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப் பட்டார்.

சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப்பட்டது. அவ்விருப்பத் தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அச்சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்டதும், தொடர்ந்த போருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வி யுற்றேன்.

இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதவில்லை. வேறு வழியாகவும் தெரி யப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற் கும் சித்தமாயிருக்கலாமென்று எண்ணி னேன்.

திருச்சியினின்றும் புறப்பட்ட படை யையன்றி, வேறு படைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அதை வேதாரண் யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச்சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே.சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தது இவ் வளவே!

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகைகள் ‘கலியாண சுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார், ஏமாற்றப்பட்டார், ஒரு பிராம ணரல்லாதார் தலைமை பூண்டு படை யைத் திரட்டிச் செல்லப் பிராமணன் கண் பார்க் குமோ’ என்று எழுதினர்.”

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு 1, பக்கம் 318-319).

பாவம் - மாலன் ரொம்பதான் ராஜாஜி யைத் தூக்கிச் சுமக்கப் பார்க்கிறார். ஆனால் உண்மையோ ஜன்னலுக்கு வெளியே

வேறு திசையில் பயணிக்கிறது.

******

மாலனின் அறியாமையா? அண்டப் புளுகா?

“இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அவர்களுக்குப் பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். தவிர, நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்”.

- இதுவும் அதே ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020, பக்கம் 23) திருவாளர் மாலன் எழுதியுள்ளார்.

இது உண்மையா? இந்திரா சஹானி வழக்கில் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மைதான்.

அந்த நேரத்தில், மத்திய ஆட்சியில் இருந்தவர் பி.வி.நரசிம்மராவ், சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சீத்தாராம்கேசரி. அவர்தான் முன்னெடுத் தார். அரசமைப்பு சட்டத்திருத்தம் 77இன் படிதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வழிச்செய்யப்பட்டது.(The constitution (Seventy - Seventh Amendment) Act 1995 - 17th June 1995. Amendment of Article 16 (4A))
“(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of th States are not adequately represented in the services under the State”

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீத்தாராம்கேசரி அவர்களின் துறையின் சார்பாக சட்டம் நிறை வேற்றப்பட்டதுதான் உண்மை.

1995இல் ஆட்சியில் இல்லாத வாஜ்பேயி, பிரதமராக இருந்த போதுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக எழுதுவது மாலனின் அறியாமையா - அண்டப் புளுகா?

- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

Posted by parthasarathy r at 23:36 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பதிலடி, மாலன், ராஜாஜி
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2026 (16)
    • ▼  August (12)
      • பாரதி விழா (மணியம்மை)
      • பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத...
      • விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ....
      • சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோ...
      • முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி செ...
      • நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி...
      • சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார...
      • கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி
      • சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ....
      • பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி
      • பனிக்கட்டி வழுக்குவது ஏன்? - மூலிகை மன்னன் செ.ர.பா...
      • உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் - செ.ர.பார...
    • ►  July (3)
    • ►  March (1)
  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • வண்ணார் வரலாறு
    ஒற்றைப் பத்தி -  January 31, 2021  • Viduthalai 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின...
  • சங்ககாலம் பொற்காலமா? - 2
      பிப்ரவரி 01-15 , 2014 உண்மை  இதழ் பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம் – பேராசிரியர் ந.வெற்றியழகன்   சிறப்பிழந்த சேரமன்னர்க...
  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!
    சென்னை  வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்ற...
  • இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -
     கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டு...
  • பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி
    ‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்பு...
  • இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
    சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அ...
  • நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை
      நான் பாரதியாரைச் சந்தித்தால்... கி.வீரமணி கட்டுரை ( பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981 ஆம் ஆண்டில், 'குமுதம்' ஏடு ஆசிரியர் க...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அசைவம்
  • அசோக வனம்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசிதழ்
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆண்
  • ஆண்டு விழா
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயசு
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலக்குவன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உண்மை இதழ்
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுக்கதை
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்தவம்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடிஅரசு
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குமுதம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குழந்தை
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாகு மகராசர்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சித்த மருத்துவம்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாலி
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாத்திகர் மாநாடு
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பல்லி
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பனிக்கட்டி
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பாரதி
  • பாரதியார்
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவம்
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புரட்டு
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மருத்துவர்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முதலைக் கண்ணீர்
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மூலிகை மன்னன்
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயவாடா
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.