Showing posts with label செங்கை. Show all posts
Showing posts with label செங்கை. Show all posts

Friday, 14 October 2022

பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (276)

செப்டம்பர் 1-15,2021

முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் விழா

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி....




செங்கல்பட்டு சின்னம்மன் கோயில் தெரு பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் மணமக்கள் பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று 9.2.1997 அன்று நடத்திவைத்தேன். மணமக்கள் இருவரும் முழுமையான சுயமரியாதைத் திருமண முறையில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியைக் கூறச் செய்து, வந்திருந்தவரின் கைத்தட்டலுக்குமிடையே நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.