Saturday 11 June 2016

பார்ப்பனியத்தினுடைய விளைவு

What congress and Gandhi Ji
have done to the Untouchables
The cardinal principles of this philosophy of the Brahmins were six
(1) graded inequality, between the different classes;
(2) complete disarmament of the Shudras And the Untouchables;
(3) complete prohibition of  the education of the Shudras and the Untouchables;
(4)  ban on the Shudras and the  Untouchables occupying places of power and authority;
(5) ban on the Shudras and the Untouchables acquiring property
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம்:
1. பல்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை மூட்டுவது.
2. சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் வலுப் பெறாமல் பார்த்துக்கொள்வது.
3. கல்வி என்பது சூத்திரர்களுக்கு எள்ளளவும் கிடைக்கக் கூடாது என்று.
4. சூத்திரர்களின் சொத்துக்களை அபகரிப்பது.
5. சூத்திரர்கள் எந்த ஒரு பொருளையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
6. பெண்களின் உரிமைகளை நசுக்குதல்
மேற்கண்ட 6 கொள்கைகளும் பார்ப்பனியத்தின் உயிர் மூச்சாகும்.
தாழ்த்தப்பட்ட தோழர்களில்கூட மட்டத்திலே உயர்ந்தவர்கள் என்கிறார்கள். அதற்கும் கீழே இன்னொரு ஜாதி; பிரித்து பிரித்து நாம் எல்லாம் ஒன்று சேரக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள். அத்துணை பேரையும் ஒன்று சேர வைத்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
உலகத்திலேயே படிப்பை கொடுக்கக்கூடாது என்கிற ஒரே மதம் இந்து மதம் என்கிற சனாதன மதமாகும்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், எல்லோரும் படித்திருக்க முடியுமா?
பார்ப்பனியத்தினுடைய விளைவு நம் நாட்டில் எவ்வளவு மோசமாக மக்களை மனிதத் தன்மையற்று நடத்தியது என்று சொல்கின்ற நேரத்தில், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லிய அந்த ஆதாரத்தை நான் எடுத்துச் சொல் கிறேன். சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது.

He was a sacred person. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P. C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning on the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass, ready to wash his feet and take the sacred liquid to their parents who would not take their food without having a sip of it first. He was entitled to first fruits.
In Malabar, where the Sambandham form of marriage prevails, the servile classes, such as the Nairs, regard it an honour to have their females kept as mistresses by the Brahmins.


இதன் தமிழாக்கம்:

பிரபல வேதியல் அறிஞர் சர். பி.சி ராய் பார்ப்பனியக் கொடு மைகள் பற்றி தனது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருப்பதாவது,  சிறுவயதில் நான் பார்ப்பனியத்தால் கடுமையாக பாதிக்கப்பட் டேன். நாங்கள் வரிசையாக தண்ணீர் குடிக்க ஆசிரியர்களால் நிறுத்தப்படுவோம். யாராவது ஒரு பார்ப்பனர் வந்து அவன் காலைக் கழுவிய பிறகு அந்த தண்ணீர் அனைவருக்கும் குடிக்க வழங்கப்படும். மேலும் எனது பெற்றோர்கள் யாராவது ஒரு பார்ப் பனர் வந்து எச்சில் படுத்திய பிறகு தான் அவர்களும் உண்பார்கள் எனக்கு தருவார்கள் என்றும், கடையில் ஆசையுடன் ஒரு பழம் வாங்கினால் அதை யாராவது ஒரு பார்ப்பனர் சிறிது கடித்து சுவைத்தபிறகே என்னை சாப்பிட அனுமதிப்பார்கள் என்று கூறியுள்ளார்.  இதைவிடக் கொடுமை என்னவென்றால் கேரளா வில் (மலபார் பகுதி) நாயர் குடும்பத்தினர் புதிதாக திருமணமான தனது மனைவியிடம் ஒரு நம்பூதிரி பார்ப்பனர் உடலுறவு கொண்ட பிறகு தான் தாலிகட்டிய ஆண்மகன் தனது மனைவி யுடன் கூடவேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது.

இவையெல்லாம் இன்றைக்கு இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மதம், சனாதன தர்மம் இவைகளில் கை வைக்கக்கூடாது என்கிறார்களே, அது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு இந்துத்துவ ஆட்சி வந்தால், பழைய சனாதனம், வைதீக முறைகள் திருப்பப்பட்டால், இவை நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதை அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
-டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார் அதில் ஒரு பகுதி.
-விடுதலை,3.5.16

Wednesday 8 June 2016

கடவுளுக்கு என்ன காது செவிடா? ஏன் ஒலிபெருக்கி சத்தம்?


உயர்நீதிமன்றம் தொடுக்கும் வினா!

சென்னை, மார்ச் 29
_ சென் னையைச் சேர்ந்த  குமார வேலு, சென்னை உயர்நீதி மன்றத்தில்  தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிக அளவு கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியைப் பயன் படுத்துவது அதிகரித்து வருகிறது.  அதன்படி, வழி பாட்டுத் தலங்கள்,  திரு மண மண்டபங்கள் மற் றும் பொது நிகழ்வுகளில் அதிக சத்தம் தரும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். இதனால் அதிகாலை மற் றும் நள்ளிரவு நேரங்களி லும்கூட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, இந்த வழக்கில் ஏற்கெனவே உச்சநீதிமன் றம் வகுத்த விதிமுறைகளை முறையாக பின்பற்ற தமி ழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.
இந்த மனு  தலைமை  நீதிபதி கவுல், நீதிபதி சுந்த ரேஷ் ஆகியோர் அடங்கிய முதல்  டிவிஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு வுக்கு தமிழக உள்துறை செயலாளர்,  தமிழக டிஜிபி, சென்னை காவல் துறை ஆணையர் ஆகி யோர் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத் தனர்.
அதன்படி, இந்த வழக்கு நேற்று (28.3.2016) மீண்டும் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத் தீர்ப் பின்படி கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை கோயில் களில் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன் படுத்தினால் டிஜிபி நட வடிக்கை எடுக்கலாம். மனு தாரர் மனுவில் குறிப்பிட்ட 44 இடங்களில் உள்ள இத்தகைய ஒலி பெருக்கி உள்ள இடத்தை டிஜிபி பார்வையிட்டு உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறியிருந் தால் நடவடிக்கை எடுக் கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
குறிப்பு: கோவில்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியைப் பயன்படுத்தினால், தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
மேலும் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அதிக ஒலி வைத்து கடவுளை வழிபட வேண்டும்  என்று கடவுள் கருத்து கூற வில்லை. எனவே, இதில் டிஜிபி உரிய நடவடிக்கை எடுத்து  விட்டு அறிக் கையை நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 28 ஆம் தேதி தாக்கல் செய்ய  வேண்டும் என்று டிஜி பிக்கு உத்தரவிடுகிறோம் என்றனர்.
விடுதலை,29.3.16

Sunday 5 June 2016

இரவு-பகல் என மாறி மாறி வேலை பார்ப்பவர்களுக்கு


மூளை பாதிப்பு, மூட்டுகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு
டெக்ஸாஸ், ஜூன் 5, இரவு மற்றும் பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படை யில் பணிபுரிபவர்களுக்கு மார டைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாதம் போன்ற நோய் அச்சுறுத் தல் உள்ளதாக அமெ ரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய் வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கால் சென்டர்களிலும், அய்.டி. நிறுவனங்களில் பணி புரியும் இளைய தலைமுறையினர் மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புபவர்கள் அதி காலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ இல்லம் திரும்புகின்றனர்.
பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது. சரியான தூக்க மின்மை, நேரத்திற்கு சாப்பி டாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடு வதனால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகிவிடுகிறது.
இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல் பருமன், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகிவிடு கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் ஆய்வில் கூறியுள்ளதாவது:
இரவு மற்றும் பகல் என 24 மணி நேர சுழற்சியில் நமது உடல் உறுப்புகளின் இயக்கங் களைக் கட்டுப்படுத்தும் “உயிரி யல் கடிகாரம்‘ நம் உடலில் செயல்பட்டுவருகிறது.
இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அவை மேற்கொண்டு வருகிறது.
எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல் பாடுகளுக்கு இந்த “கடிகாரம்‘ மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவர்கள் தூங்காமல் முழித்து இருப்பதற்காக டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்கு கிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக் கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது.
இதனால், 24 மணி நேர இயற்கையான சுழற்சி தடைபடு வதுடன் உடலியக்க செயல் பாடுகளும் பாதிப்படைகிறது.
அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படு கிறது. தூக்கத்தை கட்டுப்படுத்த வும் மற்றும் தூக்கத்தை வரவ ழைக்கவும் உதவும் மெலடோ னின் சுரப்பு குறைய ஆரம்பிக் கிறது. இதனால் உடல் பாதிக்கப் படுகிறது.
மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத் தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்ற வற்றுக்கு முக்கிய காரணமா கின்றன.
இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக் கப்பட்டு தீவிர ரத்த அடைப் புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப் பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படை யில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டு மின்றி, உணர்விழத்தல், மூட்டு களின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாக உள்ளதாக அந்த சோதனையில் தெரியவந்துள் ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அர ணாக விளங்கி, நரம்பு மண்ட லங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.
ஆனால், வயதான பெண் களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ள டக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல் கலையின் இந்த ஆய்வு முடிவுகள் “எண்டோகிரினாலஜி’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-விடுதலை,5.6.16

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வந்தது எப்படி?



1909ஆம் ஆண்டு மார்ச் மாதம்...
சென்னைப் பல்கலைக் கழகப் பேரவையின் (செனட்) சிறப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. அக்குழுவி ன் ஒருங்கிணைப்பாளரான பி.ஆர். சுந்தரம் அய்யர், ஒரு தீர்மானத்தை முன் மொழிகின்றார். கல்லூரி இடைநிலை வகுப்பில் (மிஸீtமீக்ஷீனீமீபீவீணீtமீ சிஷீuக்ஷீsமீ) தமிழ் ஒரு பாடமாக இருக்க வேண்டியதில்லை என்பதும், அதற்காக ஒரு தேர்வை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய தில்லை என்பதும்தான் அத்தீர்மானம் மாறாக, சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், அத்தீர்மானத்தின் பிற்பகுதி.
அவையில் சில எதிர்ப்புகள் எழு கின்றன. ஆதரித்துப் பேச எழுகின்றார் ஜி.நாகோஜிராவ். “இந்நாட்டின் இலக் கியம், தத்துவம், சமயம் அனைத்தும் சமற்கிருத மொழியோடுதான் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, வட்டார மொழிகளை விட்டு விட்டு, சமற்கிருத மொழிக்கே ஊக்கம் தரப்பட வேண்டும்’’ என்கிறார் ராவ்.
சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக அன்று இருந்த மார்க்ஹன்டர், இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன் நிதானம் தேவை என்கிறார். டி. ராமகிருஷ்ண பிள்ளை செத்த மொழி யான வட மொழிக்கு ஏன் ஊக்கம் தர வேண்டும்? தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் கட்டாயம் பாடமாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.
இறுதியில் தீர்மானம் வாக்கெடுப் பிற்கு வீடப்படுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்ததால், சுந்தரம் அய்யர் முன்மொழிந்த தமிழுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படு கின்றது.
நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியபின்தான். நிலைமை மாறு கின்றது. அக்கட்சியின் சார்பில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட இராம ராயநிங்கர், வைஸ்ராயிடம் ஒரு மனு அளிக்கின்றார். “சமற்கிருதத்தோடு பல் வேறு சமூக, சமய முரண்களைக் கொண்டிருப்பதால், பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் திராவிட மொழிகளே முதன்மை யானவை, வடமொழி அன்று’’ எனக் குறிப்பிட்டு, மீண்டும் தமிழ்ப்பாடம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 1924 பிப்ரவரியில், சென்னை, பச்சையப் பன் கல்லூரியில், தமிழ்க் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்,  அன்றைய அமைச்சர், டி.என். சிவஞானம் பிள்ளை தமிழ்ப் பாடத்தின் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றார்.
இறுதியில், 1926ஆம் ஆண்டு இடை நிலை வகுப்பிற்கு மீண்டும் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு வரப்படுகின்றது.
திராவிடம், தமிழுக்கு எதிரானது என்ற பொய்யும், புனைவும் கட்டவிழ்த்து விடப்படும். இத்தருணத்தில், மேற் காணும் செய்தி ஒரு பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. அய்யரும், ராவும் அழிக்க முயன்ற தமிழை, திரா விட இயக்கம்தான் மீட்டெடுத்துள்ளது என்னும் உண்மை புலனாகின்றது.
(சான்று: ஜிலீமீ விணீபீக்ஷீணீs விணீவீறீ ஜிலீமீ பிவீஸீபீu முதலான ஆங்கில நாளேடுகள் வெளி யிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், கே. நம்பி ஆரூரன் எழுதியுள்ள ஜிணீனீவீறீ ஸிமீஸீணீவீssணீஸீநீமீ ணீஸீபீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ ழிணீtவீஷீஸீணீறீவீsனீ மற்றும் முனைவர் அ. இராமசாமி எழுதியுள்ள “அண்ணாவின் மொழிக் கொள்கை’’ ஆகிய நூல்கள்)
-விடுதலை