Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, 18 May 2023

கொடுமைகள் திருத்தப்பட்ட வரலாறு

*உங்களுக்கு தெரியுமா?*

*தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை.

*சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது* என்று அவர் நடத்திய *மஞ்சரி* பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

*1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும்,சத்திரங்களிலும்தான் பல  பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.சேர்த்துக்கொண்ட சில பள்ளிகளும் அவர்களை தனி வரிசையில் உட்காரவைத்தன.

*சூத்திரர் மற்றும் பஞ்சமர்களின் நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது*என்பதால் வைக்கம் வீதிகளில் அவர்கள் நடக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.

*சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்* என்று சட்டம் இருந்தது.

*பிராமணர்கள் எந்த குற்றமிழைத்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடாது* என்று சட்டமிருந்தது.

*பெண்களை தேவதாசிகளாக கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும்* என்று சட்டமிருந்தது.

*நான்கு வருண கோட்பாட்டை கொண்டதுதான் இந்தியா.பிராமணர்களே பிறப்பால் உயர்ந்தவர்கள்.மற்ற வருணத்தார் பிராமணர்களை தெய்வமாக வணங்கி நடக்கவேண்டும்* என்று கோல்வால்கர் எழுதினார்.

*திருமணம் என்றால் என்ன என்று தெரியாத சிறுமிகளுக்கும் திருமணம் நடந்தது.பச்சிளம் வயதில் கணவனை இழந்த சிறுமிகளுக்கு மொட்டையடித்து முக்காடு போட்டு வீட்டின் மூலையில் முடக்கி வைத்தனர்*.

*சேரன்மாதேவியில் ஒரு குருகுலப் பள்ளி இருந்தது.அங்கு பிராமண மாணவர்களுக்கு செம்புக்குடத்திலும் சூத்திர மாணவர்களுக்கு மண் குடத்திலும் குடி தண்ணீர் வைக்கப்பட்டது.அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் மகனும் அந்த குருகுலத்தில் படித்தான். மண் குடத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்
தாகத்திற்காக  பிராமண மாணவர்களுக்கு வைத்திருந்த செப்பு குடத்திலிருந்த தண்ணீரை குடித்துவிட்டான்.
அதற்காக அவன் தண்டிக்கப்பட்டு,படிப்பும் பாதியில் நின்றுபோனது.

*சுதந்திரம் பெற்ற பின்பும் ரயில்வே கேண்டின்களில் பிராமணரகளுக்கு தனி அறை இருந்தது.

*1937-ல் நீடாமங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பந்தியில் சரிசமமாக சாப்பிட உட்கார்ந்த தாழ்த்தப்பட வகுப்பினரை மரத்தில் கட்டிவைத்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தினார்கள்*

*இதெல்லாம் எதற்கு?* என்று கேட்கிறீர்களா?

*இப்போது அந்த பழைய கொடுமைகளும்,
அநீதியும் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்*

இந்த  கொடுமைகளை ஒழித்து  நமக்கு  உரிமைகளை பெற்றுத்  தந்த  தலைவர்  தான் 
*தந்தைபெரியார்*
- கட்செவி பதிவிலிருந்து..

Sunday, 16 April 2023

பார்ப்பனர்களால் திருடப்பட்ட பழனி மலைக்கோயில்

 

வரலாறு : பார்ப்பனர்களால் திருடப்பட்ட பழனி மலைக்கோயில்

2022 கட்டுரைகள் மே 16-31 2022

பழனி முருகன் கோயில் தமிழர்களிடமிருந்து பார்ப்பனர்கள் கைக்கு மாறியது எப்படி?
பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண உருவச் சிலை சித்தர் போகர் என்பவரால் செய்யப்பட்டது. அவருடைய மரபில் வந்த புலிப்பாணி மற்றும் இதர தமிழ் ஜாதிகளைச் சார்ந்தோர் அக்கோயிலில் பூசை செய்து வந்தனர். முக்கியமாக அவர்கள் சைவ பண்டார இனத்தவர்களாக இருந்தனர்.
15ஆம் நூற்றாண்டு காலத்தில் திருமலை நாயக்கருடைய தளவாய் ராமப்பா அய்யன் மற்றும் நாயக்கர் படைப்பிரிவு வடுகப் பள்ளர்கள் பழனிக்கு வந்தனர். ராமப்பா அய்யன் ஒரு பார்ப்பனன், புலிப்பாணி பாத்திர உடையாரிடமிருந்து தீர்த்தப் பிரசாதம் வாங்கக் கூடாது என்று நினைத்தான். அதனால் அவனும் பாளையக்காரருக்கு வேலை பார்க்கும் வடுகப் பள்ளர்களும் சேர்ந்து கோயில் பூசை உரிமையைப் புலிப்பாணியிடமிருந்து பிடுங்கி, சாலிவாகன சகாப்தம் 1366, கலியுக சகாப்தம் 4578க்கு மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 16ஆம் தேதி திங்கள் கிழமையன்று அய்ந்து பார்ப்பனர்களுக்குக் கொடுத்தனர்.
1. கொடுமுடி சரஸ்வதி அய்யன்
2. மருதூர் தம்பா அய்யன்
3. நாட்டாரய்யன் கோயில் சுப்பய்யன்
4. கரூர் முத்தய்யன்
5. கடம்பர் கோயில் அகிலாண்டய்யன்
ஆகிய அய்ந்து பார்ப்பனர்களையும் வரவைத்து கொடுமுடி சரஸ்வதி அய்யனைக் குருக்களாகவும், மற்ற நால்வரையும் பூசைப் பரிசாரக நம்பிகளாகவும் நியமித்தான்.

ஆசை காட்டலும் அச்சுறுத்தலும்:
முருகனுக்கு அபிஷேகமாகி நம்பிமார்களுக்கு வரப்பட்ட நிர்மாலய சொர்ண புஷ்பங்களில் கால் பங்கைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும், சில்லறைப் பூஜை உரிமைகளும் புலிப்பாணி பாத்திர உடையாருக்குத் தரப்பட்டன. மற்ற பண்டாரங்கள் இருபத்து நான்கு பேருக்கும் சில்லறைப் பணிவிடை வேலைகள் செய்யும் உரிமைகள் தரப்பட்டன.
புலிப்பாணி பாத்திர உடையார் முன்னிலையில் நம்பிமார்கள், பண்டாரங்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களிடமிருந்து இந்த உடன்பாட்டை ஒப்புக் கொள்வதாக கட்டாய உறுதிமொழிகள் பெறப்பட்டன. இந்த உடன்பாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் காசியில் கங்கைக் கரையில் கோடி சிவலிங்கங்களைப் பிரதிஷ்டைய பண்ணியதற்குரிய பூஜாபலன்களைப் பெறுவார்கள் என்று ஆசை காட்டப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிப்பார்கள் என்று அச்சுறுத்தப்பட்டது.

அன்று தமிழிலேயே அர்ச்சனை
பார்ப்பனப் பூசாரிகளை நேர்மையற்ற முறையில் ராமப்பய்யன் என்ற பார்ப்பனத் தளவாய் நியமிக்கும் வரையிலும் நவபாஷாணத்தாலான முருகன் உருவச் சிலையைச் செய்த போகர் என்பவரின் வாரிசுகள்தாம் பழனி கோயிலில் பூசை செய்து வந்தனர். இவர்கள் தமிழ் மொழியில்தான் பூசை செய்து வந்தனர். தமிழ் மொழியில் பூசை செய்து வந்த கடைசிப் பூசாரி புலிப்பாணி பாத்திர உடையார் என்பவர் ஆவார்.
கொடுமுடி சரஸ்வதி அய்யன் என்பவன்தான் முதன்முதலில் சமஸ்கிருத மொழியில் பூசை செய்த பார்ப்பனப் பூசாரி ஆவான். ராமப்பய்யன் என்ற பார்ப்பானுக்குத் திருமலை நாயக்கர் அதிகாரம் நிறைந்த தளவாய் பதவியைக் கொடுத்திருந்ததால் அந்தப் பார்ப்பன வெறியன் தன்னுடைய பார்ப்பன இனத்திற்கு தன் அதிகாரத்தைக் கொண்டு செய்யக் கூடியவற்றையெல்லாம் நேர்மையற்ற முறையில் செய்தான்.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திய கதையாக ஆயிற்று. இது போலவேதான் தமிழ்நாட்டுப் பெருங் கோயில்கள் அனைத்திலும் பார்ப்பன ஆதிக்கம் புகுந்தது; சமஸ்கிருதம் நுழைந்தது. நம்மவரால் (பார்ப்பனர் அல்லாத தமிழர்களால்) கட்டப்பட்ட கோயில்களில் நம்மவரால் செய்யப்பட்ட கடவுள் சிலைகளுக்கு நம்மவரால்தான் பூசை செய்யப்பட வேண்டும். நம் மொழியான தமிழ் மொழியில் தான் அர்ச்சனை செய்யப்பட வேண்டும்.
சான்று: இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்த செப்புப் பட்டயத்தின் நகல் பழனி முருகன் கோயிலில் வெளியிட்டுள்ள, “பழனித் தல வரலாறும் திருக்கோயில் வழிபாடும்’’ என்ற புத்தகத்தின் 1964ஆம் ஆண்டுப் பதிப்பில் 73, 74, 75ஆம் பக்கங்களில் இருக்கிறது.
நாயக்கர்களுக்கு வேலை பார்த்த வடுகப் பள்ளர்களுக்கு நிலங்கள் கொடுத்தவர் திருமலை நாயக்கர். அந்த நன்றிக்காக 400 ஆண்டுகளாக நாயக்கர் கட்டிய மதுரை தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் இழுத்து நாயக்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
(தகவல்: திருவாரூர் கிருட்டினமூர்த்தி)