Friday, 7 August 2026

சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி


சைவமா?-அசைவமா?


மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி                                    

"சைவ உணவு மட்டும் தான் நலன் பயக்கும் உணவு" என்று தவறான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இறைச்சிகளில் தான் நமது உடல் எளிதாக செரிமானம் செய்து கொள்ளக் கூடிய முறையில் சத்துக்கள் உள்ளன.


எப்படி பென்றால், உயிரினங்கள் உண்டவுணவை கடினப்பட்டு செரிமானம் செய்து தனது உடலில் சேர்த்து வைக்கின்றன. அதை நாம் எளிதாக உண்டு விடுகிறோம்.


எளிதான முறையில் உள்ளதால் நமது உடல் செரிமானம் செய்து சேர்த்து வைத்துக் கொள்கிறது. நாம் மிகுதியாக சாப்பிடுவதால் மிகுதியாக சேர்த்து வைத்துக் கொள்கிறது, இதனால் நோய் வருகிறது.


ஆகையால் சரியான அளவில் உணவை உண்டால் நலமாக இருக்கலாம்.


சிலர் கடவுள் மனிதனை சைவ விலங்காகதான் படைத்தான், அதனால்தான் விலங்குகளுக்கு உள்ள குத்திக் கிழிக்கும் வளைந்த பற்களை மனிதனுக்கு கொடுக்க வில்லை என்கின்றனர்.


ஒருசிலர் 'மனிதன் 'சைவ' விலங்கு', அதனால் தான் இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு உள்ளது போல் வளைந்த குத்திக் கிழிக்கும் பற்கள் இல்லை. 'மனித இனத்தை சேர்ந்த குரங்கும் சைவ உணவையே உண்கிறது' என்று கூறுகின்றனர்.

[குத்திக் கிழிக்கும் பற்கள் உள்ள தாவர உண்ணியான நீர்யாணை]


கடவுள் பெயரால் சொல்லப்படும் காரணம் முழுக்க முழுக்க பொய்யே!


இப்பொழுதுதான் கட வுள்களுக்கு கெல்லாம் "சைவ வேடம்’ போடப்படுகிறது.


வேதங்களில் கடவுள்களுக்கு உயிரினங்களை வெட்டிப் படைப்பதை தான் முக்கியத் தொழிலாக சொல்லப்படுகிறது. வேதப் படி பார்ப்பனர்கள் அனைவரும் ஆடு, மாடு, கோழி, குதிரை என்று அனைத்தையும் வெட்டித்தான் உண்டிருக்கின்றனர்.


கவுதம புத்தரின் கொள்கை பரவுதல் காரணமாக தாக்குபிடிக்க முடியாமல் இடையில் பார்ப்பனர்கள் 'சைவ' வேடம் போட ஆரம்பித்துவிட்டனர்.


மனிதன் சைவ விலங்கா?


உயிரினங்களுக்கு அதனதன் பழக்கவழக்கங்களுக்கு உறுப்புகள் உள்ளன' என்பது உண்மைதான்.


அந்த அடிப்படையில்தான் பற்களும் அமைந்துள்ளன.


பற்கள் குத்திக்கிழிக கூடிய முறையில் இல்லாததால், இறைச்சிகளை சீரணிக்க முடியாமலா இருக்கிறான் மனிதன்.


அனைத்தையும் சீரணிக்கக் கூடிய வகையிலேதானே மனிதன் உள்ளான்.


விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவன் தோன்றுவதற்கு அடிப்படையான உயிரினங்கள் இறைச்சியை குத்திக் கிழித்து உண்ணும் உயிரினங்களாகத்தான் உள்ளன.


“எந்த ஒரு உறுப்பையும், எந்த ஒரு விலங்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அந்த உறுப்பு காலப்போக்கில் வளர்ச்சி குன்றி பிறகு மறைந்து கூட போய்விடும்" இது அறிவியல் உண்மை


"மனிதனுக்கு குத்திக்கிழிக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டதால், மனிதனின் பற்களும் வடிவ மாற்றம் பெற்றுவிட்டன” என்பதுதான் உண்மை.


சைவ உணவால் கொழுப்பு சேராதா?


கொழுப்பு பொருள்கள் உடலில் மிகுதியாகச் சேர்வதால் உடலில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது 'மாரடைப்பு' நோய்’ ஆகும். இந் நோய்தான் பெரிய அளவில் அச்சுறுத்துகிறது.


'சைவம்' என்று சொல்லப்படும் பால், வெண்ணெய், நெய், எள், நிலக்கடலை, தேங்காய் மற்றும் பலவகை பருப்புகளில் கொழுப்பு நிறைந்துள்ளது. சில வகை காய்கறிகளில் மட்டுமே கொழுப்பு குறைவாக உள்ளது.


ஆகையால் 'சைவ உணவு சாப்பிட்டால் மட்டும் கொழுப்பு இதயக் குழாய்களை அடைக்காது' என்று சொல்வது தவறானதாகும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும்!


அதோடு, ‘புல்'லை மட்டுமே தின்னும் செம்மறி ஆட்டின் உடலில் எப்படி கொழுப்பு சேர்கிறது!

அதற்கும் சில அடிப்படைக் காரணம் உள்ளன.


60 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை கொழுப்பு சத்துக்கள். உடலில் உள்ள பல சுரப்பிகளின் மூலமாக குடலிலும் கல்லீரலிலும் தயாரிக்கப்படுகிறது. மீதிதான் உணவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொழுப்புச் சத்தை சாப்பிட்டால்தான் உடலில் கொழுப்பு சேரும் என்பதல்ல; எதைச் சாப்பிட்டாலும் உடலே கொழுப்பை உண்டாக்கிக் கொள்ளும் என்பதுதான் உண்மை.


அதனால்தான் புல்லை மட்டுமே தின்னும் ஆடும், மாடும் கொழுகொழுவென கொழுப்புடன் இருக்கின்றன.



கொழுப்பால் உடல் பாதிக்குமா?


கொழுப்பால் உடல் பாதிப்படையாது. கொழுப்பு உடலுக்கு தேவையே! அளவை மீறும் போது தான் கோளாறு வருகிறது.


கொழுப்பின் வகைகள்


கொழுப்பில் நான்கு வகை உண்டு. இதில் முக்கியமானது (1) குறைந்த அடர்த்தி கொழுப்பு, (2) மிகு அடர்த்தி கொழுப்பு என்பவையாகும்.


இதில் குறைந்த அடர்த்தி கொழுப்பு மற்ற கொழுப்பு சத்துக்களை உடல் முழுக்க எடுத்துச் சென்று அணுத் திசுக்களுக்கு ஊட்டுகின்றன. திசுக்களுக்குள் சென்ற குறைந்த அடர்த்தி கொழுப்பை மிகு அடர்த்தி கொழுப்பு ஈர்த்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று சிதைவடைய வைக்கிறது.


ஆனால், இரத்தத்தில் குறைவு அடர்த்தி கொழுப்பு 160 மி.லி. கிரா முக்கு மேல் இருந்தாலும் 'மிகு அடர்த்தி கொழுப்' பின் அளவு 35 மி.லி. கிராமுக்கு குறைவாக இருந்தாலும் திசுக்களிலேயே குறை அடர்த்தி கொழுப்புகள் தங்கி; இரத்த நாளங்களில் படிந்து அடைக்க ஆரம்பித்துவிடும்.


மிகு அடர்த்தி கொழுப்பைப்பற்றிய கவலையே தேவையில்லை. அது கல்லீரலில் சிதைவடைந்துவிடும். 


 இரண்டு வகை கொழுப்புமே உடலுக்குத் தேவை தான், ‘அளவு சரியாக இருக்க வேண்டும்’

என்பதுதான் முக்கியம். 


இறைச்சி வகைகளில் மிகுதியாக, குறைவு அடர்த்தி கொழுப்புகளே உள்ளன. ஆகையால் இறைச்சியை அளவோடு சாப்பிட வேண்டும்.


மற்ற இறைச்சி வகைகளை விட கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. 


ஆகையால் கோழி இறைச்சியை மற்ற இறைச்சியைவிட தாராளமாகச் சாப்பிடலாம்.


உற்சாகமூட்டும் கோழி!

அதோடு கோழி இறைச்சியில் 'டைரோசின்' என்ற அமினோ அமிலம் இருப்பதால் மூளையில் டோபா மைன், நாராஃபிறெய்ரைன் என்ற வேதிப் பொருள்களின் அளவை மிகுதியாக்கும். இவை மனதிற்கு உற்சாகத்தையும் செயல்பாட்டில் வேகத்தையும் அளிக்கிறது. 


அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி முடிவு, ''டைரோசின் உடலுக்கு சக்தி தந்து பதற்றமான நிலைமைகளை சமாளிக்கும் திறனை தருகிறது" என்று கூறுகிறது.


புற்றுநோயைத் தடுக்கும் மீன்


மீன் உணவில் மிகுதியாக அடர்த்தி மிகுந்த கொழுப்பே இருக்கிறது. அடர்த்தி மிகுந்த கொழுப்பு: அடர்த்தி குறைந்த கொழுப்பை கரைக்கும்; இதனால், மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது. ஆதலால் மீனை மிகுதியாக உண்ணலாம்.


மீன் உணவு கொழுப்பை கரைப்பதோடு அல்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.


நிலத்திலுள்ள உணவு பொருள்களில் 'அயோடின்' சந்து மிகமிகக் குறைந்த அளவே உள்ளது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களில் 'அயோடின்' சத்து நிறைந்துள்ளது. ஆகையால் மீன் உணவை உண்பதால், அயோடின் குறைவால் ஏற்படும் 'தைராய்டு அழற்சி. நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.


மூளை வளர்ச்சிக்கு மீன்


'ஸ்பெயின் நாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள், மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது' என்கின்றனர். ஆகையால் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மீன் கொடுத்துப் பழக்க வேண்டும். குறைந்தது வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். 


கருவுற்ற தாய்மார்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் மீன் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


உற்சாகமூட்டும் புரதம்


தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 'கார்போ அய்ட்ரேட்' நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில், அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு மாறாக புரதம் நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில் அவர்களுக்கு உற்சாக மேற்பட்டது; என்றும் சத்துணவு ஆராய்ச்சியாளர் 'போலி ஸ்ப்ரிங்' என்பவர் கூறுகிறார்.


'கார்போ அய்ட்ரேட்' எனப்படும் மந்தமாக்குகிற மாவுச்சத்து பொருள் தாவர வகை உணவுகளில் தான் நிறைந்துள்ளது.


ஆனால், உற்சாகமூட்ட கூடிய புரதப் பொருள் இறைச்சி வகைகளிலே தான் நிறைந்து உள்ளது.


இறைச்சியில் இரும்பு

இறைச்சியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இறைச்சியை புறக்கணித்தால் இரும்பு சத்து குறைவு ஏற்படும். உடலில் இரும்பு சத்து மிகுதியாக தினமும் 85 கிராம் இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


இறைச்சியை முழுமையாகத் தவிர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை. தீமையே மிகும்!


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 3, 12.4.1998




No comments:

Post a Comment