Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Wednesday, 5 August 2026

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள்

கி.வா.ஜெகன்நாதன் அவர்கள் எழுதிய 'தமிழ் பழமொழிகள்' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

1. அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் -38

2. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?-39

3. அக்கிரகாரத்து நாய் அபிமானத்திற்கு செத்தது-40

4. அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?- 41

5. அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல - 42

6.அச்சி வீடு தீ பிடித்தால் பட்டர் முண்டு தோளில் 162

7. அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும் -204

8. அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும். (வடமன் - பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்)-206

9. அழுகின பழம் அய்யருக்கு -1392 

10. ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்கிறேன், என்னை ஆற்றுக்கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு -1745

11. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு -1761

12. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்காருக்கு மூன்று கொம்பு-1816

13 ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?- 2072

14 ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம் (பஞ்சநதம் திருவையாறு) 2105

15 ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு (பார்ப்பானுக்கு) அதுவும் இல்லை - 2122 

16 ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்- 2133

17 ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல - 2143

18 ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? -2611

19 ஆற்றுக்குப் போன ஆசார பாப்பாத்தி, துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம் -2615.

20 ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணூல் - 2667

21 ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலி (முதலை)யை விடு -2684.

22 ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கள் - 2703.

23 அய்யர் என்பவர் துய்யர் ஆவர்-5806.

124 அய்யர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை - 5807

25 அய்யர் தின்னும் பருப்பு அய்ந்து குடி கெடுக்கும் -5808.

26 அய்யர் பாதி, அரண்மனை பாதி (புதுக்கோட்டை மில்)-5809

27 அய்யர் வரும் வரை அமாவாசை  காத்திருக்குமா? -5810

28 காசிக்குப் போயும் மூடத்தவசி காலில் விழுகிறதா? - 7744

29 கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம் - 8371

30 உழவுக்கும் அக்கினி ஹோத்திர(த்திற்கும் வெகு தூரம். - 4288 

31 ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? -4646

32 எல்லோரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச் சரிந்து விழுந்தார் - 5264

33 அய்யங்கார் அம்மானையில் சறுக்கினார் 5791

34 அய்யங்காரும் தத்துக் கொடுத்தார்- 5792

35 அய்யர் இடம் கொடுத்தாலும்; அடியாள்கள் இடம் கொடார்கள் 5803.

36 அய்யங்காரை கெடுத்தவள் அய்யங்காரிச்சி; தாதச்சியை கெடுத்தவன் தாதன்- 5794

37 அய்யர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான் 5804,

38 அய்யர் உருள; அம்மை திரள 5805

39 உணவை தின்பான் திவசப் பிராமணன்; சூத் துக்கு நிற்பான் வீர முஷ்டி. -4027

40 உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல 4108.

41 செக்கானிடம் சிக்கிய மாடும்; பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்பட மாட்டார்கள் - 11208

42 செத்தவன் இருக்க சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்-11316

43 செத்துப் போன பசுவைக் கெட்டுப்போன பார்ப்பானுக்கு தாரை வார்த்த கதை- 11350 

44 செத்துப் போன பார்ப்பானுக்கு செட்டிப் பெண்ணைக் கொடுத்தானாம் - 11353

 45 தட்சணை இல்லாவிட்டால் (குறைத்தால்) அப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம். (மலையாளப் பார்ப்பான் கூற்று)-11828

46 தில்லை அந்தணர் கூடுவது எப்போது; ஓடுவது எப்போது - 12804

47 தென் திசை பார்ப்பான் வடதிசைக்கு ஏகின், நடை திருந்திப் பார்ப்பான் ஆவான். (கபிலர் அகவல்) - 13166

தகவல்:

செ.ர.பார்த்தசாரதி

(தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்)

- விடுதலை ஞாயிறு மலர்




Saturday, 13 October 2018

பார்ப்பனரைப்பற்றிய பழமொழிகள்



1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644 அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் (Rev. Herman Jensen)  என்பவர் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Educational Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந் நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:-

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால், தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசுதானம்

2884: ஆனைமேலிருக்கிற அரசன் சோற்றைவிட பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறுமேல்

2902: பசு சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.

2904: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது.

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18