Saturday 18 July 2020

''புத்தரின் புனித வாக்கு''



''புத்தரின் புனித வாக்கு'' என்கின்ற இந்த நூலை பழைய ஆவணங்களிலிருந்து ''பால் காரஸ்'' என்பவர் தொகுத்துள்ளார். ஜப்பானிலுள்ள கமகூரா புத்த மடத்தின் புத்த பிட்சு 'ரெட் ரெவரன்ட் ஷாக்கு சோய'னால் இது 1894ல் வெளியிடப்பட்டது. இன் நூலில் விளக்கப் படங்களை 'ஒ.கோபெட்ஸ்கி' என்பவர் வரைந்துள்ளார். கிறித்தவர்களுக்கு ''பைபிள்'' போலவும், இஸ்லாமியர்களுக்கு ''குரான்'' போலவும் சீக்கியர்களுக்கு ''கிரந்தம்'' போலவும் இன் நூல் புத்த மத்த்திற்கு புனித நூலாக்க் கருதப்படுகிறது. பல நாடுகளில் அனைத்து பிரிவு புத்த ஆலயங்களிலும் இன் நூல் வைக்கப்பட்டு புனித நூலாக கருதப்படுகின்றது. ஜப்பான் மற்றும் இலங்கையில் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. இன்நூல் பைபிள்,குரானை போலவே அத்தியாயம்.சுலோகம் என்ற முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை உள்ளடக்கியது இன் நூல். தமிழில் மு.கி. சந்தானம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இந்தியாவில் இந் நூலை இந்திய அரசு ''தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்'' மூலம் பல மொழிகளில் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு -2000, விலை ரூ.75.00, தமிழ் நாட்டில் கிடைக்குமிடம் - ப்ப்ளிகேஷன்ஸ் டிவிஷன், இராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை-600090.(8வது அத்தியாயத்திலிருந்து புத்தரை மொட்டைத் தலையராக அறிமுகப்படுத்துகின்றனர், ஆனால் படம் வரைந்தவரோ புத்தரை ''கிராப்பு'' தலையராகவே வரைந்துள்ளார். அதோடு புத்தரை ''இயேசு''வின் சாயலாகவே வரைந்துள்ளார் ) புத்தரை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள இந்நூலை வாங்கி படியுங்கள். அரசு வெளியீடாக இருப்பதால் விலையும் குறைவு தான்.
- 18.07.14, முகநூல் பக்கத்தில்

Friday 3 July 2020

வைக்கம் போராட்டம் ஏன்?


28.6.14 மாலை மலர் நாளேட்டில், தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தை பற்றி கூறும்போது, 'ஆலைய நுழைவு போராட்டம்' என்று எழுதியுள்ளது; தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் உண்மையில் ஆலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் நடக்க உரிமை கோரிய போராட்டமாகும். அதை பற்றிய பட விளக்கமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது..
- 30.6.20, எனது முக நூல் பதிவு


ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்.அந்தந்த நாட்டின் வெப்பநிலைக்கேற்ப வாயையும்,நாக்கையும் பயன்படுத்தும் நிலையில் ஒலிப்பு மாறும். அதோடு பக்க எழுத்துக்கு ஏற்பவும் ஒலிப்பு மாறும்.[மஞ்ச(ஜ)ள்,அஞ்சா(ஜா) நெஞ்ச(ஜ)ன்,அஞ்ச(ஜ)ல்] ஒவ்வொரு ஒலிப்புக்கும் எழுத்து கொடுத்துக்கொண்டே சென்றால் கற்றல் எளிதாக இருக்காது. ஜ,ஸ,ஷ,ஹ,க்ஷ போன்றவை சமஸ்கிருத எழுத்துகள் அல்ல. சமஸ்கிருதத்திற்கு எழுத்தே கிடையாது. மேற் கண்டவை தமிழில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள்(கிரந்த) அவை.
- செ.ர .பார்த்தசாரதி, 3.7.2016

Thursday 2 July 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்




"தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்"
என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் எழுத்துக்களும் சொற்பொழிவுகளும் அடங்கிய நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டது.

இந்நூலை தொகுத்தவர் புலவர் பா. வீரமணி.
பதிப்பாசிரியர் தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி.
தந்தை பெரியாரின் பேச்சுகளை கருத்துக்களை கால வரிசைப்படி கொடுத்துள்ளனர்.
2019ல் இந்நூல் வெளியிடப்பட்டது.
மூன்று தொகுதிகளும் சேர்த்து ரூ 750/-
- 24.6.20

சூரிய மறைப்பும் மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கமும்

https://www.facebook.com/parthasarathy.ranganathan.739/videos/2117308968414359/