Showing posts with label உத்திரமேரூர் கல்வெட்டு. Show all posts
Showing posts with label உத்திரமேரூர் கல்வெட்டு. Show all posts

Monday, 27 May 2024

உண்மையில் உத்தரமேரூர் கல்வெட்டு உரைப்பது என்ன?


ஜனநாயம் தழைத்தோங்குகிறதாம். தகுதி, தகுதி யின்மை போன்ற தகவல்கள் முழுமையாக உத்தர மேரூர் கல்வெட்டில் பளிச்சிடுகிறதாம். அவர்கள் வாயாலோ, கையாலோ ‘தகுதி’ என்ற ஒரு சொல்லைக் கையாண்டால், அதன் அடியில் ஒரு சூழ்ச்சிப் பொறி சூதாக இருக்கிறது என்று பொருள்.
உத்தரமேரூர் கல்வெட்டு கூறும் அந்தத் தகுதிதான் என்ன?

குடவோலை முறையில் கிராம சபைக்குத் தேர்ந் தெடுக்கப்படுவோரின அந்தத் தகுதி தான் என்ன?
“கிராமசபை உறுப்பினராக ஒருவன் 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். 70 வயதுக்குள் இருக்க வேண்டும். கால்வேலிக்குக் குறையாத நிலம் இருக்க வேண்டும். வேத மந்திரங்களையும், உப நிஷத்துக் களையும் தெரிந்திருக்க வேண்டும் அல்லது ஒரு வேதமும் ஒரு வேத பாஷ்யமும் தெரிந்திருக்க வேண்டும்” (ஆர்.சத்தியநாதய்யர் ‘இந்திய வரலாறு’).

-

 பதிலடிப் பக்கம் : 2024லும் வேதத்திற்கு வக்காலத்தா? ‘தினமணி’க்குப் பதிலடி என்ற கட்டுரையின் ஒரு பகுதி 

-மின்சாரம்

-விடுதலை நாளேடு, 18.05.24