Wednesday 24 October 2018

பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி மதங்களைக் குறிப்பிட வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா?

சென்னை உயர் நீதிமன்றம்

தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன்கௌல் 
நீதிபதி ஆர். மகாதேவன்
நீதிப் பேராணை மனு கீ.றி. 18488-2016
15.6.2016

ஜி.பாலகிருஷ்ணன்     மனுதாரர்
தமிழ்நாடு அரசு அதன் சார்பாக 
அரசுச் செயலாளர் உயர் கல்வித்துறை
தலைமைச் செயலகம் சென்னை - 600009 மற்றும் ஒருவர்

எதிர் மனுதாரர்கள்

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: எஸ். சத்யசந்திரன்

எதிர் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்: டி.என்.ராஜகோபால் அரசு வழக்கறிஞர் (கல்வி)

நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப்பட்டது செலவுத் தொகை இல்லை.

கோரிக்கை: இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 226இன்படி செயலுறுத்தும் நீதிப் பேராணை தாக்கலாகி,

(அ) மேல் நிலைக் கல்வித் துறையோ, பள்ளிக் கல்வித் துறையோ, அரசாணை எண் நி.ளி. விஷி 205 நாள்: 31.7.2000 கல்வித்துறை (சி2) ஐ முழு அளவில் அமல் செய்து இத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்துப் பள்ளிகளும் பெற்றோரிடமிருந்தோ அவர்களது பிள்ளைகளிடமிருந்தோ கல்வி நிலையங்களில் சேரும்போது ஜாதி, மதத்தைக் கூறுமாறு வற்புறுத்தக் கூடாது என்று பணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஜாதி, மதம் எனும் இடத்தில் எந்த ஜாதியும், மதமும் கிடையாது என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

(ஆ) மேலே சொன்ன வகையில் பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் எநதச் சாதியும் மதமும் இல்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இது மனுதாரர் கோரிய 5.5.2016 தேதி முதல் நீதிமன்றம் வரையறுத்துக் கூறும் நாளிலிருந்து பின்பற்றப்பட வேண்டும் என ஆணை வழங்கக் கோரப்பட்டிருக்கிறது.

தீர்ப்புரை

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கௌல்

சாதி, மத பேதமற்ற சமுதாயம் அமைப்போம் எனும் உயரிய எண்ணத்துடன் தமிழ்நாடு மாநில அரசு பின்வரும் அரசாணையை 31.7.2000 அன்று பிறப்பித்திருக்கிறது. அது பின்வருமாறு:

தமிழ்நாடு அரசு சுருக்கக் குறிப்பு

ஆரம்பக் கல்வி - பள்ளிச் சான்றிதழில் ஜாதி, 
மதத் தகவல்களைக் குறிப்பிடாமல்
தவிர்க்கும் உரிமையை வழங்குதல் 
- ஆணை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை (சி2)

அரசாணை எண் 205     நாள்: 31.7.2000
படிக்க: அரசாணை எண் 120 கல்வித்துறை நாள் : 2.7.1973

ஆணை:

மேலே படிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் பணிக்கப்பட்டதாவது: இடைநிலைக் கல்விச் சான்றிதழிலும், பள்ளி மாற்றுச் சான்றிதழிலும் ஜாதி, மதம், பற்றிக்குறிப்பிட விரும்பாதோர் அவ்வாறு ஜாதி இல்லை. மதமும் இல்லை என்று குறித்துக் கொள்ளலாம் அல்லது அந்தப் பகுதியை நிரப்பாமல் விடலாம். பள்ளிக் கல்வி இயக்குனராலும், ஆரம்பக் கல்வி இயக்குனராலும் இது முழு அளவில் பின்பற்றப்படுவதில்லை என்று அரசுக்குத் தெரிய வந்தது. எதிர்வரும் நாட்களில் அரசாணைப்படி இதனை முழுமையாகப் பின்பற்றுமாறு சம்மந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போதோ வேறு சூழ்நிலைகளிலோ, மாணவர்களின் பெற்றோர் ஜாதி, மதம் பற்றித் தெரிவிக்க மறுப்பு தெரிவித்தால், அவர்களால் அதைக் கூற இயலாமல் போனால் அதுபற்றி அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை.

/ஆளுநரின் ஆணைப்படி/
(ஒப்பம்) எம்.ஏ. கௌரிசங்கர்
அரசுச் செயலாளர்

பெறுநர்:

இயக்குநர், ஆரம்பக் கல்வி இயக்ககம்
சென்னை-6
இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம்
சென்னை-6

2. இந்நிலையில் மனுதாரர் சமர்ப்பிப்பதாவது: அரசாணை சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.,

3. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நாங்கள் ஏற்கிறோம். எனவே எதிர் மனுதாரர் இந்த அரசாணையினை மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் விரிவான வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வகையில் பள்ளிச் சான்றிதழ் களில் ஜாதி, மதம் பற்றிப் பதிவு செய்ய விரும்பாதோர் அதைக் குறிப்பிடும்படி வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

4. ஆனால் அதே சமயத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் இது கட்டாய நடைமுறையாகப் பின் பற்றப்பட வேண்டும் என்று ஆணையிட எங்களால் இயலாது; ஏனெனில் சிலர் அதைக் குறிப் பிட ஆர்வம் காட்டலாம். அரசாணையைக் கவனத்தில் கொண்டு பார்த்து ஒருவர் ஜாதி மதப் பெயரைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்களிக்கப்படலாம். அதே நேரத்தில் இதனைக் கட்டாயப் படுத்தமுடியாது.

5. இவ்வகையில் நீதிப் பேராணை மனுவில் தீர்வு காணப் படுகிறது. செலவுத் தொகை இல்லை.
மொழியாக்கம்:

திருவேங்கடம் அரங்கநாதன்

நன்றி: சட்டக்கதிர், செப்டம்பர் 2017

- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17

Tuesday 23 October 2018

மதிப்பு எதற்கு? பொருளுக்கா! உழைப்பிற்கா1

பொருள்கள் விலை மலிவாகவும், விலை மிகையாகவும் இருப்பதற்கு முதன்மைக் காரணம் உழைப்பே!
பொருளுக்கு விலைகிடையாது; உழைப்பிற்கு தான் விலை(மதிப்பு)!
ஒரு பொருள் மிகையாகவும் எளிதாகவும் கிடைத்தால் எவ்வளவுதான் முதன்மை தேவையாக இருந்தாலும் அப் பொருள் விலை மலிவாகத்தான் கிடைக்கும்.
ஆனால் குறைவாகவும் அரிதில் கிடைக்க கூடியதும் ஆன பொருள்கள் முதன்மை தேவைக்கு பயன்படாவிட்டாலும் விலை கூடுதலாக இருக்கும்.

ஒரு பொருள் மூலப் பொருளாக இருந்தால் மதிப்பு(விலை) குறைவு. அதே பொருளை உழைப்பை செலுத்தி அதாவது இரும்பை குண்டூசி யாக மாற்றி விற்றால் கூடுதல் விலை கிடைக்கும். இதை மதிப்பு கூட்டு பொருள் என்பர்.

அலுமினியம் கண்டுபிடிக்கப் பட்டபோது தங்கத்திற்கு மேலாக கருதப்பட்டது. அதில் முடி(கிரீடம்) சூடிக்கொண்ட காலமும் உண்டு!

உப்பு கண்டுபிடிக்கப் பட்டபொழுது விலை கூடுதலாக இருந்தது. வேலை ஆட்களுக்கு கூலியாக உப்பு வழங்கினர். சம்பளம் என்ற பெயர் இதனால் தான் வந்தது. அளம் என்றால் உப்பு என்று பொருள்.

இதேபோல் தான் ஆங்கிலத்தில் சாலரி என்ற சொல் சால்ட் என்ற பெயரிலிருந்து வந்தது.

பொருளுக்கு மதிப்பல்ல; உழைப்பிற்கு தான் மதிப்பு!

- நான்(22.10.18)

Saturday 13 October 2018

பார்ப்பனரைப்பற்றிய பழமொழிகள்



1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644 அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் (Rev. Herman Jensen)  என்பவர் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Educational Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந் நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:-

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால், தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசுதானம்

2884: ஆனைமேலிருக்கிற அரசன் சோற்றைவிட பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறுமேல்

2902: பசு சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.

2904: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது.

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18