Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Saturday, 4 January 2025

பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னாரா பெரியார்!

நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான். 

  "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். 

நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன். 

இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்".

- இசை இன்பன் அவர்களின் 05.01.2023 முகநூல் பதிவு

Thursday, 23 November 2023

சூத்திரன் வணங்க வேண்டிய தெய்வம் எது?


சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையிலே 230 ஆண்டுகளுக்கு முன் குருபாததாசர் என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும் சூத்திரர்களுக்கான அடிமைத்தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தெய்வம் கணவன் என்றும் சூத்திரர்களுக்கு (தாழ்ந்தவர்) தெய்வம் பார்ப்பனர் (மறையோர்) என்றும் 8வது பாடலில் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் 10வது பாடலில் மிலேச்சருக்கு (இழிந்தவர்)ஒழுக்கம் இல்லை; புலயருக்கு (கீழ் மக்கள்) இரக்கமில்லை. என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட படைப்புகளுக்கு காரணம் ஆரிய பார்ப்பன கலாச்சார உள்நுழைவே ஆகும். அதாவது சனாதன கோட்பாடே ஆகும்.
இப்படிப்பட்ட கலாச்சாரத்தை அழித்து ஒழிக்க புறப்பட்டதே திராவிட இயக்கமாகும்.