Sunday 30 September 2018

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மூன்றாமிடம்!


தானியங்கு மாற்று உரை இல்லை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மூன்றாமிடம்!

தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006இ-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக் கப்பட்டது. பல தனியார் பள்ளிகள் இந்தச் சட் டத்தை அமல்படுத்தப் படவில்லை, இந்தச் சட் டத்தை அமல்படுத்துவதி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனி யார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட் டது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண் டில் (2015-_16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.
ஆகையால் அந்த பள்ளிகளை காப்பாற்றும் வகையில் அப்பள்ளி களுக்கு ஆதரவாக தமிழ் நாடு அரசு புது ஆணை ஒன்றை வெளியிட்டுள் ளது. இந்த புதிய தமிழ் கற்றல் ஆணையி னால் சி.பி.எஸ்.இ., சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் உள் ளிட்ட தனியார் பள்ளி களை மேலும் 10 ஆண்டு களுக்கு தமிழை புறக்கணிக்க வழிவகுத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித் யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகி யவற்றிற்கு விளக்களித்து ஆணைவெளியிட்டுள்ளது. ஏன் தமிழ்நாட்டில் உள்ள இந்த பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்கக் கூடாதா? எந்த மாநிலத் தவரானாலும் தமிழ் நாட்டிற்குள் வந்துவிட் டால் அவரை தமிழ்நாட் டில் அமலிலுள்ள சட் டங்கள் தானே கட்டுப் படுத்தும்?

அது ஒருபுறமிருக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பள்ளி விளம்பர பலகைகளில் தமிழ் மூன்றாமிடத்திலுள் ளது. தமிழ்நாட்டு அரசு ஆணைப்படி விளம்பர பலகைகளில் தமிழ் முத லாவதாகவும் மற்ற மொழி களைவிட பெரியதாகவும் இருக்கவேண்டும்.

பாடதிட்டம் மட்டும் தான் மய்ய அரசுடையது. மற்ற அனுமதியெள்ளாம் (கட்டிட அனுமதி உள் பட) தமிழ்நாட்டு அரசி டமிருந்து தான் பெற வேண்டும். ஆகையால் தமிழ்நாடு அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள பள்ளி விளம்பர பலகைகளில் தமிழை முத லாவதாக எழுத நட வடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை, சூளைமேடு, கில் நகர் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள பள்ளி விளம்பர பலகையில் தமிழ் மூன்றாமிடத்தி லுள்ள படம் இது.

- விடுதலை நாளேடு, 30.9. 2014
- நான் அனுப்பிய செய்தி (செ.ர.பார்த்தசாரதி)

Tuesday 4 September 2018

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன பொருள்!

ஒழிக்கும் வழி!

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால், அவர்களைக் கொன்று ஒழிப்பது என்பது அல்ல. சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசுத் தொல்லை ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்து விடுவார்கள்.

(பெரியார், விடுதலை - 13.10.1953)