Sunday 16 December 2018

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்!

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm] ‪+91 94426 43238‬: அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

இந்த தகவலை முடிந்த வரை பிறருக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி

- கட்செவியில் வந்தது...

Friday 14 December 2018

பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர்

பார்ப்பனர்களின் மூன்று பிரிவினர் தான் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போர்.இவர்கள் ஆரிய வர்த்தத்தில் உள்ளோர். ஆரிய  வர்த்தத்திற்கு தெற்கே உள்ளவர்கள்(தென் இந்தியா) சூத்திர்கள் என சாஸ்திரங்(புராணங்கள்&மனுஸ்மிருதி)களும் நீதி மன்ற தீர்ப்பும் கூறுகிறது. சத்திரியர் என்றால் தமிழில் அரசர் என்று பொருள். அதனால் சாஸ்திரத்தால் சூத்திரர் எனப்பட்ட அரச வழியினர் என சொல்லிக்கொள்வோர் நாங்களும் சத்திரியர் என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களையும் சூத்திரர் பட்டியலில் சேர்த்து தான், அவர்களுக்கும் திருமணத்தின் போது தான் பூனூல் மாட்டுகிறான் பார்ப்பான்.
- 14.12.17ல் நான் முகநூலில் பதிவிட்டது

Tuesday 6 November 2018

“பெரியாரை வடுகர் என்போர் கயவர்”

“பெரியாரை வடுகர் என்போர் கயவர்” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்!

சிறந்த கவிஞரும், பேச்சாளரும், ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தமிழ் இன மொழி பண்பாட்டு மேன்மையை மீட்டெடுப்பதற்காகத் தம்வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர். கவிதை சொற்பொழிவு  ஆய்வு என மூன்று துறைகளிலும் பொற்பதக்கங்களையும், பொற்கிழிகளையும் பரிசாக பெற்றவர்.

சித்தன்ன வாயல் நூலுக்காக கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெற்றவர். 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் ராசபாளையம் பெரியார் மையத்தின் ‘பெரியாரியல் சிந்தனையாளர்’ என்ற விருது, தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின்  ‘தமிழ் தேச புகழொளி’ விருது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  ‘ஆதவன் அயோத்திதாசர்’ உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

உலக தமிழ் மொழி மெய்யியல், பண்பாட்டு ஆய்வு நிறுவனம் எனும் ஆய்வு மையத்தை நிறுவி தமிழாய்வுப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியராகவும், ஓய்வு பெற்றதற்கு பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்...

பெரியாரின் சமகால தேவை என்னவென்று நினைக்கிறீர்கள்?

முதுகளத்தூர் சாதி கலவரம் நடைபெற்ற போது, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டியுங்கள் என்று காமராஜரிடம் நேராக கூறியவர் பெரியார். அவர் அளித்த ஊக்கம் தான் அந்த குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க காரணம். விளைவுகளை கண்டு அஞ்சாத மனத்துணிவு பெரியாரிடம் இருந்தது.

ஒரு காலத்தில் ஒரு இடத்தில் மட்டுமே நடைபெற்ற முதுகளத்தூர் கலவரம் போன்ற கலவரங்கள் இன்று தமிழகத்தில் பரவலாக நடைபெறுகிறது. கலப்பு மணத்திற்கான தடை ஆதிக்க கொலைகளாக, சாதிய கொலைகளாக விரிவடைந்து கொண்டே போகின்றன. இதை கண்டிக்கக் கூடிய துணிவு மிக்க தலைவர்கள் இன்றைக்கு இல்லாதது பெரியாரின் தேவையை நமக்கு வற்புறுத்துவதாக உள்ளது. 

பெரியார் ‘வடுகர்’ என வைக்கப்படும் வாதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அது கயமை. கியூபா புரட்சியில் அர்ஜெண்டைனாவை சேர்ந்த சேகுவாரேவை யாரும் கியூபாவை சேர்ந்தவன் இல்லை என புறக்கணிக்கவில்லை. தந்தை பெரியாரே, “உலகத்தில் உள்ள மற்ற மக்களை போல தமிழர்களும் அறிவும் மானமும் உள்ள மக்களாக மாற வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த பணியை செய்வதற்கு வேறொருவர் வராததால் நான் அதை என் தோள் மேலே போட்டுக்கொண்டு அதே பணியாக உள்ளேன்” என்றார். அப்படி, இந்த இனத்தை மானமும், அறிவும் உள்ள இனமாக மாற்ற முடிந்த ஒரு மனிதனை சாதியால் பார்ப்பதோ, மொழியால் பார்ப்பதோ கயமையின் வடிவம். கயமையின் அடையாளம்.

இப்படிப்பட்ட ஒரு போக்கு, வைணவத்திலும் நடந்தது. 12 ஆழ்வார்களில் நடுநாயகமாக விளங்கக்கூடிய நம்மாழ்வாரின் பாடல்களை இரண்டு காரணங்களால் ஏற்க மறுத்தார்கள், சாதியால் தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டிருந்தவர்கள். ஒன்று, நம்மாழ்வார் பிறப்பினால் சூத்திரன் என்பது. இரண்டாவது அவர் பாடியது தமிழ் என்பது. தமிழில் பாடி இருக்கிறான் என்பதால்  அவன் பாடல்களை ஏற்கக்கூடாது என்றும், அவன் பிறப்பால் சூத்திரன் எனவே அவனது பாடல்களை ஏற்கக்கூடாது என்ற வாதத்தை முன்வைத்த போது, அதற்கு எதிர்வினைகள் எப்படி நடந்தன என்பது, இங்கே பொருத்தி பார்க்கக்கூடிய ஒன்று.

திருமாலின் உருவத்தை பொன்னினால் செய்ததால் இது உயர்ந்தது என்றும், மரத்தினால் செய்தது, கல்லினால் செய்தது, மண்ணினால் செய்தது என்ற காரணங்களைக்காட்டி இவை எல்லாம் தாழ்ந்தது என்று சொல்வது போல, ஆழ்வார்களுக்கு இடையே சாதி வேறுபாடு பார்ப்பதும் அப்படிதான். “நம்மாழ்வாரை பிறப்பினால் சூத்திரன் என்று சொல்வது பிறந்த தாயின் கற்பை பரிசோதிப்பது போல” என்று மணவாள மாமுனிகள் ‘ஆச்சார்ய இருதயத்தில்’ உரை எழுதுவார். இந்த விடை இங்கும் பொருந்தும்.

இந்திய சமூகத்தின் பிரத்யேக பிரச்சனையாக பார்க்கப்படக் கூடிய சாதியை ஒழித்துவிட முடியுமா? சாதியத்தின் சுவடே இல்லாத காலம் ஒன்று இருந்ததா? குறிப்பாக தமிழக வரலாற்றில்...

ஆமாம். சாதியின் சுவடே இல்லாத காலம் ஒன்று இருந்தது. சங்க கால புலவர்களின் பெயர்களை பார்த்தால், அரசர்களும் இருக்கிறார்கள் பாணர்களும் இருக்கிறார்கள். பாணர்கள் இன்றைய நிலையில் பறையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவு. அரசனின் அந்தபுரத்திற்குச் சென்று, அவனது பள்ளியறைக்குச் சென்று அவனுடைய துயிலை எழுப்பவும், அவனை தூங்கச் செய்யவும் உரிமை பெற்றவர்கள் பாணர்கள் . அப்படிப்பட்ட பாணர்கள் தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள். அன்றைக்கு இந்த நிலை நீடித்திருந்தால் பாணர் குலத்தில் பிறந்த பாணர்களின் பெயரால் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என நூல்கள் வந்திருக்காது. 

அண்மையில் ஒரு நூலை படித்தேன். இலங்கை போராட்டக்குழு பெண் போராளி ஒருவர் எழுதிய நூலில், “பெரியாரோ, அம்பேத்கரோ மற்றவர்கள் சாதிக்க முடியாததை யாழ்ப்பாணத்தில் புலிகள் சாதித்திருக்கிறார்கள். சாதி என்பதன் சுவடுகளே இல்லாத சூழல் அங்கு நிலவியது” என்று பதிவு செய்துள்ளார்கள். அந்த விடையையே இக்கேள்விக்கும் விடையாக அளிக்கிறேன்.

இலக்கியங்களின் அடிப்படையில் தமிழர் வரலாற்று தொன்மை எவ்வளவு காலம் செல்லும், தமிழின் வரலாறு திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவதாக நினைக்கிறீர்களா?

ஆமாம். திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பது தான் உண்மை. சாலமனின் பாடல்களே சங்க அக இலக்கியத்தின் தாக்கத்தால் வந்தவை என்று ஆப்ரஹாம் மரிய செல்வம் என்ற பாதிரியார் வாடிகன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டின் வழியே நிறுவியிருக்கிறார். சாலமனின் காலம் கிமு 10ம் நூற்றாண்டு. அந்த காலத்திலேயே எங்கோயுள்ள தமிழோடு நேரடியாக தொடர்பில்லாத மன்னன் தமிழ் இலக்கியங்களை பின்பற்றி பாடல் பாடியிருக்கிறான் என்றால், தமிழ் இலக்கியங்களின் தொன்மை எவ்வளவு காலம் பிந்தையது என்பது நமக்கு புலனாகும். அப்படிப்பட்ட பெருமைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடிய அகழ்வாய்வுகளைக் கூட தடை செய்யக்கூடிய நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழின் வரலாறு ஒன்று இருட்டடிக்கப்படுகிறது, அல்லது திணிக்கப்படுகிறது. இந்த நிலையிலிருந்து நாம் தமிழரின் வரலாற்றையும் மீட்டெடுக்க வேண்டும்.

இந்துத்துவ எழுச்சியைப் போலவே இன்று தமிழ் தேசிய எழுச்சியில் இந்துத்துவ சாயல் உள்ளதாக தோன்றுகிறதே...

அப்படி இருந்தால் அது தமிழ் தேசிய எழுச்சியாக இருக்காது.

நீங்கள் தீவிரமாக செயலாற்றி வரும் புலமான ‘ஆசிவகம்’ குறித்தும், அந்த தத்துவம் பிற தத்துவங்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?

என்னுடைய ஆய்வுப் பயணத்தில் ‘ஆசிவகம்’ என்பது ஒரு கட்டம். ஓரளவு அதை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக நான் நம்புகிறேன். சங்க கால தமிழர் சமயமாக இருந்தது ஆசிவகம். அதனை உருவாக்கியவர் இன்று  ‘அய்யனார்’ என்று வணங்கப்படும் மாபெரும் மேதை. அய்யனார் மூவர், ஒருவரல்ல. இவர்கள் மூவருமே சங்க புலவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

அறிவுக் கலைக்களஞ்சியம் என்று கருதத்தக்கதாக ‘ஆசிவகம்’ விளங்கியதை அமெரிக்காவை சேர்ந்த இந்தியவியல் அறிஞர் ஹென்ரிக் ஜிம்மர் (Heinrich Robert Zimmer) தனது ‘இந்திய தத்துவவியல்’ (Philosophies of India) என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆசிவகம் என்பது அடிப்படையில் அணுக்கொள்கையையும், அறிவியல் பூர்வமான தர்க்கவியல் கொள்கையையும், உலக நியதி என்று சொல்லக்கூடிய ஊழியலையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் அறிவுப் பள்ளி.

மக்களை துன்பங்களில் இருந்தும், அதுவும் போர்க்கால சமூக அமைப்பில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து ஆசிவகம் ஆறுதல் தந்தது. துன்பங்களில் இருந்து அவர்களை விடுதலை பெறச் செய்தது. அந்த வகையில் ஆசிவகம் மக்களின் செல்வாக்கிற்கு உரிய சமயமாக மாறியது. ‘துறைமுகத்தில் இருந்து வலைவீசி மீன்களை வாரிக் குவிக்கும் வலையனைப் போல, மக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டானே’ என புத்தரே பொறாமைப்படும் வகையில் ஆசிவகத்தின் செல்வாக்கு இந்தியா முழுமையிலும் பரவியது.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் ஆசிவகர்களுக்கு உரிய கோவில்களாக இருந்தவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படி ஆசிவகர்களுக்கு உரிய கோவில்களாக இருந்து சைவ கோவில்களாக, வைணவக் கோவில்களாக மாறிய அடையாளங்களை ஒவ்வொரு கோவில்களிலும் காணலாம். எந்தவொரு கோவிலில் சிங்கம் ஒன்று யானையின் பிடறியில் அதனை அடித்துக் கொல்வது போன்று சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளதோ, எந்த கோவிலில் கஜலட்சுமிக்கு தனி கோவில் இருக்கிறதோ அப்படி இருக்கக்கூடிய அத்தனை கோவில்களும் ஆசிவர்களுக்கு உரியவையாக இருந்தவை தான்.

தஞ்சை பெரிய கோவிலைக் கூட ராஜராஜன், ஆசிவகர்களிடம் இருந்து கடுமையான வன்முறையின் வாயிலாக, அதை கைப்பற்றி தான் அந்த கோவிலை கட்டினான் என்பது, ராஜராஜன் கோவிலினுள் சிற்பமாகவும், ராஜராஜன் கருவறையிலே வரைந்துள்ள  ஓவியமாகவும் அந்த வரலாறு பதியப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.

எனவே, ஆசிவகம் தமிழரின் சமயமாக, சாதியற்ற, கடவுள் வழிபாடற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்கக்கூடிய சமயமாக விளங்கியது. அதனுடைய அடையாளமாக இன்றைக்கும் தமிழ் மக்களில் பெரும்பான்மையான சமூகத்தவருக்கு அய்யனார் குல தெய்வமாக உள்ளதை வைத்து நாம் உறுதி செய்யலாம். ஆசிவகம் என்பது, தமிழர்களின் வாழ்வியலில் இன்றும் தொடர்ந்துக் கொண்டுள்ளது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.

ஆசிவகத்தின் வரலாறு மறைக்கப்பட்டது ஏன் என நீங்கள் கருதுகிறீர்கள்?

ஆசிவகம் கடுமையான பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கியிருந்தது. கடவுளை மறுத்தது. கடவுளை மறுத்ததால் பக்தி இயக்கத்தின் பரவலுக்கு ஆசிவகம் ஒரு பெரும் தடையாக இருந்தது. மக்களின் மிக தொன்மையான வழிபாட்டு முறைகளான கொற்றவை வழிபாடு மற்றும் முருகர் வழிபாட்டு முறைகளுக்கு ஆசிவகம் மிக சவாலாக இருந்தால், கொற்றவை, முருகரை வழிபட்டுவந்தவர்கள் ஆசிவகத்தை, ஆசிவக துறவிகளை, அதனை பின்பற்றும் மக்களை எதிரிகளாக கருதினர்.

இன்று நடைபெறும் சூரசம்ஹாரம் கூட ஆசிவகத்தை முருக வழிபாட்டினர் வீழ்த்தி அழித்ததன் ஒரு அடையாளமாக கருதும் வாய்ப்பு உண்டு. சங்க இலக்கியத்தில் முருகனை பற்றி குறிப்பிடும் போது, ‘‘படியோர்த் தேய்த்த பல்புகழ் தடக்கை நெடுவேள்” என அகநானூறு என குறிப்பிடுகிறது. முருக வழிபாட்டினர் ஆசிவக துறவிகளை எப்படி அழித்துக் கொன்றனர் என்பதற்கான சான்றாக இந்த பாடல் நமக்கு கிடைக்கிறது.

முருகனுக்கு உரிய அடையாளங்களாக கூறப்படுபவை அய்யனாரிடம் இருந்து பெறப்பட்டவை தான். திருச்செந்தூர் கோவிலினுள் நுழையும் போதே திருநிலையை நாம் காணலாம். அய்யனார் கோவிலில் இருந்த சிலைகளை அகற்றிவிட்டு அங்கு சிவனின் குறியீடையும், முருகனின் சிலையையும், கொற்றவை சிலையையும் வைப்பது ஒரு மரபாக இருந்திருக்கிறது. அதன் எச்சத்தை, பிள்ளையார் சிலையை திருடிக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்ற இன்றைய நடைமுறையிலும் நாம் காணலாம்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பழைய கோவில்கள் ஆசிவகத்துடன் தொடர்புடையவை, ஆதிநாதருக்கு உரியவையாக இருந்தவை. இப்படி பல நிலைகளில் ஆசிவக சமயத்தின் அடையாளங்கள் எல்லாம் மாற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன.

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை என்ன?

எந்தவொரு இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கடந்த கால வரலாறு என்பது இன்றியமையாதது. இறந்தகால வரலாறு இல்லாத எந்தவொரு இனத்திற்கும் எதிர்காலம் இல்லை. எனவே தமிழினத்தின் எதிர்கால எழுச்சிக்கு அதன் கடந்த கால வரலாறு இன்றியமையாதது. கிரேக்கத்தின் எழுச்சிக்கு கவிஞர்கள் பாடிய போது அதன் பழைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துதான் கிரேக்கத்தில் புதிய எழுச்சியை உருவாக்கினார்கள் என்பதை உலகம் அறியும். அதேபோல தமிழின் எழுச்சிக்கு, தமிழனின் எழுச்சிக்கு இன்றைய காலக்கட்டத்தில் கடந்தகால வரலாறு மிக மிக அடிப்படையானது.

உலகிற்கு அறிவைக் கொடுத்த இனம் தமிழினம். உலக மொழிகளுக்கு எழுத்தைக் கொடுத்த மொழி தமிழ் மொழி. எனவே அத்தகைய பாரம்பரியம் கொண்ட நாம் நமது கடந்த காலத்தை மறந்துவிட்டால், அல்லது புறக்கணித்தால் நமக்கென ஒரு எதிர்காலம் இருக்கப்போவதில்லை. எனவே நாம் விரும்பக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க, தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது மானமும், அறிவும் உள்ள ஒவ்வொரு தமிழனின் கடமை.

நேர்காணல் : கோ பிரின்ஸ்
நாள் : 05-11-2016

( கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். நியூஸ்7 தமிழ் பொறுப்பாகாது )

Fi

COPYRIGHT © 2016 NEWS7 Cts Tamil
  #மீள்பதிவு

Friday 2 November 2018

இராமன் கட்டிய பாலம் எங்கே?

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- நான் (செ.ர.பார்த்தசாரதி) 2.11.2012ல் முகநூலில் பதிவிட்டது.

Thursday 1 November 2018

பசும்பொன்_முத்துராமலிங்கம்_சிறையில்_அடைக்கப்பட்டது_ஏன்?


"மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார்.

அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.

உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோபர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

-அசுரன்
#தேவர்ஜெயந்தி

- கட்செவி வழியாக(சுரேசு. என்)