Thursday 22 October 2020

சாதியும் வர்ணமும்

செட்டியார், முதலியார் என்பது வெறும் சாதிப் பெயர்கள் தான். ஆனால் பிராமணன், சூத்திரன் என்பது வர்ணப் பெயர்கள். பிராமணன் என்று ஒருவனை குறிப்பிட்டால் மற்றவன் சொல்லாமலே சூத்திரனாகிறான்.
சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (வேசி மகன்) என்று மனுஸ்மிருதி (மனு தர்மம்) அத்யாயம் 8,சுலோகம்-415 கூறுகிறது. சூத்திரன் பிரம்மாவின் காலில் பிறந்தவன் என்று மனுஸ்மிருதி (அத்யாயம் 1,சுலோகம்-87 ) யும் ரிக் வேதம், புருஷ சுக்தமும், யஜுர் (அத்யாயம் 31,சுலோகம்-11 ) வேதமும் கூறுகிறது..
 வேதப்படி பிராமணன் என்று எழுதி, வேதப்படி எங்களை இழிவு படுத்த 
எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது!
--செ.ர.பார்த்தசாரதி
- 22.10.2012, முகநூல் பதிவு