Saturday 27 February 2021

கல்பாத்தி பார்ப்பனச் சேரிக்குள் நடக்க உரிமை போர்

மலையாளத்தை அடுத்த பாலக்காடு தாலுக்காவிலுள்ள "கல்பாத்தி" என்னுமோர் பாா்ப்பனச் சோியிருக்கிறது அதற்குள் பாா்ப்பனரல்லாயெவரும் போகக் கூடாதென்று ஐகோா்ட்டும் அதற்குமேலுள்ள பிாிவு கவுன்சில் மட்டும்போய் உத்தரவு பெற்றிருந்தாா்கள்.பாா்ப்பனரல்லாத டாக்டரும் வியாதியஸ்தரைக் காண வேண்டுமானால் குதிரைமேல் போய் வரவேண்டும்.அங்கு "இழிஞர்"என்னும் தீண்டபடாத சமூகத்தவரில் சிலர் சட்டசபையில் நான் கொண்டுபோன தீா்மானத்தின்படி சட்டமேற்பட்டிருப்பதை வாசித்தறிந்து மேற்படி பாா்ப்பனசோியில் "ஆலய உற்சவம்" நடந்த போது பிரவேசித்தாா்கள்.அவர்களை பாா்ப்பனர்கள் அடித்து துரத்தி மாஜிஸ்டிரேட் கோா்ட்டில் பிராது செய்தாா்கள்.விசாரித்து பிராது தள்ளிவிடப்பட்டது.பாா்ப்பனர் சென்னை ஐகோா்ட்டுக்கு அப்பீல் செய்தாாகள்.லோக்கல்போா்டு முனிசிபாலிடியால் பராமரித்துவரும் எல்லை,தெரு,பாதை முதலியவைகள் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றொரு உத்தரவும் பெற்றனர்.போர்ட் செயின்ட் ஜாா்ஜ் (2660 ஆம் நி:எல்.அண்ட்.எம்.கவர்மெண்ட் உத்தரவு (1924செப்டம்பர் மாதம் 25 ம் தேதி ): சட்டமாக்கி நம்மை நடமாடவைத்த வாழ வைத்த "திவான் பகதூா் இரட்டை மலை சீனிவாசன்" அவர்களை நினைவுகூா்வோம். நன்றியுடன் போற்றுவோம்.
குறிப்பு;ஆா்பாட்டம் போராட்டம் என்றொரு நிலையில் நில்லாமல் அரசால் ஆணையிட செய்தாா்....
- ராஜ போஸ் வேணு முகநூல் பதிவு, 27.2.17

Wednesday 24 February 2021

இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?



எத்தர்களை



Tuesday 23 February 2021

ஆதிக்கம் அழிக்கும் அணுசக்தி பெரியார்

- உண்மை இதழ், 16 -31 .12 .20



நான் யார்?-தந்தை பெரியார்

பெரியார் பணத்தாசை பிடித்தவரா?

பெரியார் பணத்தாசை பிடித்தவர், பணஞ்சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பவர் என்றெல்லாம் நாக்கு நரம்பில் உணர்ச்சி யில்லாதவர்களெல்லாம் கூறியதை நாம் கேட்டிருக்கிறோம். பெரியார் என்னும் பெரும் பண்பாளர் தாமே அதுபற்றிக் கூறுவதை இங்குக் காணலாம்.

எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்த போது என்னிடமிருந்த பணத்தை - சொத்தை யெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்து விட்டதால் இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமுமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. அது பொது நன்மைக்கானது என்று பார்த்து (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.
(விடுதலை, 18.08.1968)

தம் குடும்பச் சொத்தையும், தம்மை நம்பித் தமக்காகத், தம்மிடம் பிறர் கொடுத்தவற்றையும் பொதுவுக்கே ஆக்கிவைத்துப் பொதுநலம் விளைத்த அப்புனிதரை இச்சமுதாயம் என்றும் மறக்காது.

- ஒப்பற்ற சுய சிந்தனையாளர் பெரியார்

- நன்னன்

தந்தை பெரியாரின் தன்னிலை விளக்கம்

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல், மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கையையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.

(உயர்ந்த எண்ணங்கள் இறுதிப் பக்கம்)

Friday 19 February 2021

உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்"



"உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்" என்ற தலைப்பில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2009ல் வெளியிடப்பட்ட நூல்.
நா.நந்திவர்மன் என்பவரால் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அறக்கட்டளை சொற்பொழிவாக இன் நிறுவனத்தில் ஆற்றிய ஆய்வுரையாகும்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலக பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வுரையாற்றியுள்ளார்.
மாந்த இனத்தின் தோற்றத்தை அறிவியல் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
பக்கங்கள்-108
விலை- ரூ35/-
- எனது முகநூல் பதிவு, 20.2.18

பெரியார் சமூக நீதி விருது அறிவிப்பு & சமூக நீதிகாத்த வீராங்கனை

8.09.1994 சமூகநீதி பாதுகாப்புப் பேரவையின் சார்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை எனப் பாராட்டி பட்டம் கொடுத்தோம்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

அந்தப் பாராட்டு விழாவின் போது, தந்தை பெரியார் அவர்களது பெயரில் தமிழக அரசு சார்பில் சமூகநீதிக்காக உழைத்த ஒருவருக்கு பெரியார் விருது அளிக்கப்பட வேண்டுமென்று நமது இயக்கச் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை அங்கேயே ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் ஆண்டு, 1995 முதல் தமிழக அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்படும் என்று  அறிவித்தார்கள். நமது முதலமைச்சரின் இந்த முடிவினை செய்தி வாயிலாக அறிந்த சமூகநீதிக்காகப் பாடுபடும் வடபுலத் தலைவர்களில் சிலர் கூட என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெரிதும் பாராட்டினர். வெளிநாட்டுத் தமிழர்களும் தங்களது பெருமகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

“5 சவரன் பதக்கம் மற்றும் ஒரு பாராட்டு இதழுடன் கூடியது பெரியார் விருது என்பது அறிந்து பெரியார் தொண்டர்களும், சமூகநீதி விரும்பிகளும் மிகவும் மகிழ்வது திண்ணம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.10.20

செ.ர.பார்த்தசாரதி - கோ. குமாரி வாழ்க்கை ஒப்பந்த விழா







5.6.1994 சைதாபேட்டை சொர்ணாம்பிகை திருமணம் கூடத்தில் நுங்கம்பாக்கம் சி.ரங்கநாதன் _ செகதாம்பாள் ஆகியோரின் மகனும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளருமான செ.ர.பார்த்தசாரதிக்கும், சைதாபேட்டை த.கோவிந்தராசு முத்துலட்சுமி ஆயோரின் மகள் கோ.குமாரிக்கும் என் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-31.9.20

Thursday 18 February 2021

பிள்ளையார் உடைப்பு


நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல – பெரியார்

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது – கணபதி கடவுளல்ல!

கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள – மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் – தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங்கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை – செம்பை- மண்ணை – அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் – சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக்களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல்லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.’

( 7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை )


நீதிபதி தீர்ப்பு!

  மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதிப் பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம்.

மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4 - நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.

பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி “இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3- - மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்தால் கடவுளை உடைத்ததாக ஆகாது.

நூல்: பெரியார் களஞ்சியம்

தொகுதி - 2 (பக்கம் 265-268)

- உண்மை இதழ்,  ஆகஸ்ட்- 16- செப்டம்பர் 15.20

Wednesday 17 February 2021

இனத் தேவை!

எல்லோருமே 'ஓமோ எரடக்சு' என்ற விலங்கின் வழித்தோன்றலே. ஒரு குழு பண்பாட்டின் அடிப்படையில் ஓர் இடத்தில் நிலைகொண்டு வாழ்ந்து வரும்போது; வேறு ஒரு குழு வெருப்பின் அடிப்படையிலோ அல்லது வேறுபாட்டின் அடிப்படையில் தன்னை ஒரு உயர்ந்த இனமாக கருதிக்கொண்டோ மற்ற நிலை குழுவின் மீது தனது பண்பாட்டை திணிக்க நினைக்கும் போதும், இடத்தை தனதாக்க எத்தனிக்கும் போதும் ; ஊறு செய்ய நினைக்கும் குழுவை எதிர்கொள்ள தாமும் இனம் என்ற போர்வையை கையாள வேண்டியுள்ளது.

Monday 15 February 2021

"பார்ப்பான்பால் படியாதீர் - பார்ப்பான் சொல் கேளாதீர்!”


மின்சாரம்

 10.2.2021 அன்று இரவு ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப்போர் அனல் பறந்தது. தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம், இந்திக்கு இடம் உண்டு; ஆனால் தமிழுக்கு இடம் இல்லை என்ற பிரச்சினை ஆரம்பித்தது.

சமஸ்கிருதத்துக்கு இடம் அளித்திருப்பது நியாயமே என்ற பக்கத்தில் நின்று பேசிய வர்கள் சொன்னது என்ன?

'சமஸ்கிருதம் மூத்த மொழி. அதைக் கற்பிப்பதால் உங்களுக்கு என்ன சங்கடம்? இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்லாம் கூட மாநில மொழிகள் கற்பிக்கப்படுவதில்லை, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. அதே நிலைதான் தமிழ்நாட்டிலும் - உண்மை இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வீண் சர்ச்சை?'

'கேந்திரிய வித்யாலயாவிலும் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று எந்தப் பெற் றோரும் கோரிக்கை வைக்க வில்லையே' என்ற சப்பைக் கட்டு ஒரு பக்கம்.

இப்படியெல்லாம் பேசியவர்கள் பார்ப் பனர்களாகத்தான் இருப்பார்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? சாட்சாத் அவாளே தான்.

இந்தப் பார்ப்பனர்களின் தகவல்களை யும், கருத்துக்களையும் சந்தித்த எதிர் அணியினர் மணிமணியாக வரலாற்றுப் பார்வையோடும், நடைமுறை உண்மை களோடும் எடுத்து வைத்த விவாதங்கள் வெகுசிறப்பு! வெகுசிறப்பு!

சமஸ்கிருதத் திணிப்பு என்பதில் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஒரு மேலாதிக்க மொழி. தமிழை பல மொழிகளாக்கிக் கூறு போட்ட மொழி. ஜாதி, சனாதனம், சமயம் என்ற பெயரால் ஆதிக்கம் செலுத்தும் மொழி - தெய்வ மொழி என்று ஏற்றிப் போற்றப்படும் மொழி.

இந்து மதத்தைப் பரப்பும் நோக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் அதிலிருந்துதான் பிரசவம் ஆனது.

இந்தியாவிலேயே வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும், சமஸ்கிருதத்துக்காக இந்திய மத்திய பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ. 643 கோடி - மற்ற அய்ந்து செம்மொழிகளுக்கும் சேர்ந்து ஒதுக்கப் பட்ட தொகை வெறும் ரூ. 26 கோடி - அதா வது அனைத்து மொழிகளையும் சேர்த் தால்கூட, சமஸ்கிருதத்திற்கு 25 மடங்கு அதிகம்.

தமிழை கேந்திரிய வித்யாலயாவில் கற்பிக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோர் கேட்டனர் என்று எதிர் தரப்பினர் எழுப்பிய வினாவிற்கு - கேந்திரிய வித்யாலயாவில் சமஸ்கிருதத்தைச் சொல்லி கொடுக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் வரிசை யாக நின்றனர்? என்ற பதிலடி.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததையெல்லாம் சுட்டிக்காட்டி சுட்டெரித்தனர்.

இவர்களுக்கு தமிழ் என்றாலே “இனந் தெரியாத” வெறுப்பு! தமிழை நீஷப்பாஷை என்று சொன்னவர் காஞ்சி பெரிய சங் கராச்சாரி ஆயிற்றே. (பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால் தீட்டுப்பட்டு விடுமாம்)

நிமிடத்துக்கு நிமிடம் விவாதம் சூடே றியது - பெரியவாள் எங்கே சொன்னார் - அதெல்லாம் கட்டுக்கதை என்று சமாளித் தனர்.

விரிவாகப் பதில் அளிக்க வாய்ப்பு இல்லை - நேரம் இல்லை - ஆனாலும் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆதாரத்திற்கு வெளியே செல்ல வேண் டிய அவசியமில்லை. தமிழை நீஷப்பாஷை என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சாஸ்திரியின் முக்கிய ஆலோ சகராக இருந்த - நூறு ஆண்டுகள் வாழ்ந்து சிறிது காலத்திற்கு முன் மறைந்த அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

இதோ அக்னி ஹோத்ரம் பேசுகிறார்.

கும்பகோணம் மடம் (காஞ்சி மடத்துக்கு அதுதான் உண்மைப் பெயர்) சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர் கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்ப கோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டி ருந்தது.

அந்த நாளுக்கான மாலை நேர பூஜை களுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட மடி அதாவது ஆச்சாரம் போய்விடும். மறு படியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்... குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசிப் பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில், நாட்டுக் கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகா பெரிய வரைப் பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்த தால், அருணாசலத்திடம் சொன்னேன்... இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரி யவரை பார்க்க முடியாது, நாளை வாயேன் என்றேன்.

இல்லை சாமி இப்பவே அவரைப் பார்க் கணும் - என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத் தார்.

போனேன். கேட்டார். சொன்னேன். இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரைப் பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை... பார்த்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும், நோக்கு தான் தெரியுமே... தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும்... பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மவுனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...

என என்னோடு சமஸ்கிருத சம் பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மவுனத் தில் இருக்கார். நாளைக்கு வாயேன்... என்றேன்.

அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளை வரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்- என தாய்மொழியாம் தமிழில் மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

(ஆதாரம்: “இந்து மதம் எங்கே போகிறது?” - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், பக்கம் 95 - 97)

சொல்லியிருப்பவர், சாட்சியாக இருந்த வர், சாதாரணமானவர் அல்லர் - இந்து மத சாஸ்திரங்களைக் கரைத்துக்குடித்தவர் - சங்கராச்சாரியாருக்கே ஆலோசனை கூறும் இடத்தில் இருந்தவர்.

பூஜை வேளையில் தமிழ்ப் பேசினால், தீட்டாகிவிடும் - மறுபடியும் ஸ்நானம் செய்தாக வேண்டுமாம். இவர்களைத் தெரிந்து கொள்க!

ஆட்சி மொழி காவலர் கீ.இராமலிங் கனார் காஞ்சிபுரத்தில் அதிகாரியாக இருந்த போது சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேச வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில், கீ.இராமலி ங்கனார் தமிழில் பேச, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தில் பேசிட அதனை மடத்து மேலாளர் தமிழில் மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறார். உரையாடல் முடிந்த நிலையில் சங்கராச்சாரியாருக்குத் தமிழில் பேச வராதா என்று மடத்தின் மேலாளரிடம் கீ.இராமலிங்கனார் கேட்ட போது ‘பெரிய வாள் பூஜை வேளையில் நீஷப்பாஷையை பேச மாட்டார்’ என்று பதில் அளித்தார்.

(‘உண்மை’, 15.12.1980 - கீ.இராமலிங் கனாருடன் கவிஞர் கலி.பூங்குன்றன் பேட்டி)

தமிழ் .. வழிபாட்டு மொழி என்பது பற்றி ‘துக்ளக்‘ இதழில் ‘சோ’ ராமசாமி தலையங் கமாக என்ன எழுதினார் தெரியுமா?

தலையங்கத்தின் தலைப்பு - “மொழி ஆர்வமா? மத துவேஷமா?” என்பதாகும்.

“நாயன்மார்களும் - ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை சமஸ் கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது. தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும் புனிதம் இருக்காது” (‘துக்ளக்‘: 18.11.1998) என்று ‘சோ’ எழுதிடவில்லையா?

எந்த கிறுக்குப் பிடித்த பார்ப்பானை எடுத்துக் கொண்டாலும் தமிழ் மீது துவேஷம் என்ற நஞ்சைக் கக்கத்தான் செய்வார்கள்.

சமஸ்கிருதம் என்றால் தெய்வ மொழி என்று பீற்றிக் கொள்வார்கள்.

நடராஜப் பெருமான் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது உடுக்கிலிருந்து ‘ஹய வரடு - ஹல்” முதலிய பதினான்கு வேறு வேறான சப்தங்கள் வெளி வந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக் கினார்!! என்று சங்கராச்சாரியார் கூறுகிறார். (“கல்கி’ 25.6.1972)

கடுகு அளவேனும் மொழி அறிவு - மொழி விஞ்ஞானம் அறிந்தவர்கள் இந்தக் கூற்றை  ஏற்பார்களா? அதே சிதம்பரம் நட ராஜன் கோயிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமி என்ற முதியவர் திருவாசகப் பாடலைப் பாடினார் என்பதற்காக கோவில் அர்ச்சகத் தீட்சிதப் பார்ப்பனர்கள், அவரை அடித்து உதைக்கவில்லையா? கை எலும்பில் முறிவு ஏற்படவில்லையா?

பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அவர்களின் மொழி உணர்வு மூலம் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே!

பார்ப்பனர்கள் எப்படி இருந்தாலும் எங்கிருந்தாலும் பார்ப்பனர்கள் தான். அவர்களின் பச்சைப் பம்மாத்தில் மயங்கிட வேண்டாம்.

பார்ப்பான் பால்படியாதீர்

பார்ப்பான் சொல் கேளாதீர்!

என்று புரட்சிக் கவிஞர் பாடியதை மனதில் கொள்க!

Saturday 13 February 2021

ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை




ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்


- குடந்தை கருணா
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.
4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
1.   குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
2.   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.      தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில்,   OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
-விடுதலை,14.5.15
உங்கள் பார்வைக்கு
தமிழக அரசின் ஆணை



கிரீமி அடுக்கை விலக்குதல்ஆணை

Exclusion of creamy layer

Secretariat, Chennai - 9

BACKWARD CLASSES MOST BACKWARD CLASSES AND MINORITIES

WELFARE DEPARTMENT

Lettor No.4938/BCC/2011 dt.20.07.2011

From

Thiru G. Santhanam, IAS., Secretary to Goverment.

To All District Collectors. (w.e)

Sir.

Sub:

Reservation - Reservation for Other Backward Classes in Civil posts and services under the Government of India - Exclusion of creamy layer from the benefit of Other Backward Classes reservation - clarifications issued - Reiterated,

1. GO. Ms. No. 12, Backward Classes and Most Backward Classes Welfare Department, dated 28.3.1994. 2. Government Letter No. 627/BCC97-33, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department, dated 24.4.2000

3. Government Letter No. 10829/BCC/2004-2, Backward Classes, Most Backward Ciasses and Minorities Welfare Department, dated 10.11.2004

4. From the General Secretary, All India Federation of Other Backward Classes Employees Welfare Association, representation dated 23.06.2011 addressed to the Chairman, National Commission for Backward Classes.

I am directed to invite attention to the Government of India, Ministry of Personnel, Public Grievances and Pensions O.M. No. 36012/22/93. Est(SCT) dated 08.09.1993 communicated in the Government Order 1 cited wherein the Government of India have informed that sons and daughters of the persons falling under the following categories will be considered as creamy layer by virtue of the posts held by their parents subject to certain exemptions specified therein

a) Holding Constitutional posts.

b) Parents, both of whom are directly recruited class 1 Group A Officers.
c) Parents, either of whom is directly recruited class I/Group A officer. d) parents, both of whom are directly recruited class 1 / Group A officers, but one of them dies or suffers permanent Incapacitation.

e) parents, elther of whom is a directly recruited class 1 / Group A officer and such parent dies or suffors permanent incapacitation and before such death or such incapacitation has had the benefit of employment in any International organization like UN, IMF, World Bank etc., for a period of not less than 5 years

parents, both of whom are directly recruited class 1 / Group A officer and both of them die or suffer permanent incapacitation and before such death or such Incapacitation of the both either of them has had the benefit of employment in any International Organization like UN, IMF, World Bank etc., for a period of not less than 5 years.

9) parents, both of whom are directly recruited class II / Group B officers of central and State Services

h) parents of whom only the husband is a directly recruited class / Group B

officer and he gets into class 1/ Group A at the age of 40 or earlier. parents, both of them are directly recruited class I/ Group B officers and one of them dies or suffers permanent incapacitation and either of them has had the benefit of employment in any International Organization like UN, IMF,

World Bank etc., for a period of not less than 5 years parents of whom the husband is a Class 1 / Group A officer (direct recruit or pre-forty promoted) and the wife is a directly recruited class II / Group B Officer and the wife dies or suffer permanent incapacitation,

A) parents of whom wife is a Class 1 / Group A officer (direct recruit or pre-forty promoted) and the husband is a directly recruited class 11 / Group B officer and the husband dies or suffers permanent incapacitation

The Government of India have also Informed that the creamy layer status in respect of others will be determined by applying the income Wealth Test specified against category VI of the Schedule contained therein. The Government of India have clarified by means of an explanation provided under category VI that income from salaries or agricultural land shall not be clubbed.
2) in this connection, I wish to draw your attention to the reference cited wherein the Government have informed while issuing Other Backward Class Certificates, the income from malaries should not be taken into account for the purpose of calculation of annual income for exclusion of creamy layer. Similarly. the agricultural income also should not be included for the above purpose. 3) in the instructions foued by Government of India, Ministry of Personnel

Public Grievances and Pensions in that Letter No. 36033/5/2004-Estar dated

14.10.2004 which was communicated in the reference and has boen clarified,

among other things that will applying the income / Wealth Test to determind

creamy layer status of any candidate as given in Category IV of the Schedule to

the O.M. dated 00.00.199a, Income from salaries and income from the agricultural

land shall not be taken into account. Copies of reference and ched are

enclosed herewith for Information,

49 It has been brought to the notice of the Government that despite the clear Instructions issued in respect of exclusion of creamy layer, there has been difficulty in obtaining Other Backward Classes Certificates from the authorities concede on the ground that the annual salary of their parents exceeds Hra. 4,50.000 and Other Backward Classes Certificates were denied to their sons and daughters. Iit has aloo been informed to Government that in view of the attitude of the officials, many eligible Other Backward CMOs candidates are not able to avall the reservation benefit intended to them in Central Services and Educational Institutions under the control of Government of India.

5) in the connection, I wish to Inform you that the Government reiterate the Instructions already issued in respect of calculating the Annual Income for exclusion of Creamy layer in their orders 1" and cited. I am therefore to request you to issue suitable guidelines to the Tahsildars, who are the Other Backward Classes Certificate issuing authorities to issue Other Backward Classes Certificates to the eligible person without taking into account of income from salaries and income from agriculture and and to avoid any complaints in the matter.

Yours faithfully,

Pindrarhely

for Secretary to Goverment.

To The Member Secretary.

National Commission for Backward Classes,

Trikoot - 1. Bhi Cama Place,

New Delhi 110060

The Director of Backward Classes Wortare, Chennai-6. The Commissioner of Most Backward Classes and Denotified Communities, Chennai-5.

The Commissioner of Minorities Welfare, Chennai-5 The Principal Commissioner & Commissioner of Revenue Administration, Chennai-5.

Copy to :

Thiru. G. Kannanity, General Secretary

All India Federation of Other Backward Classes Employee's Welfare Association, No. 130, Broadway, Chennai 108.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கிரீமி அடுக்கை விலக்குதல்ஆணை

தலைமைச் செயலகம், சென்னை - 9

 பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர்கள்


 நல்வாழ்வுத் துறை


 கடிதம் எண் 4938 / பி.சி.சி / 2011 நாள் : 20.07.2011


 அனுப்புனர்


 திரு ஜி.சந்தானம், அய்.ஏ.எஸ்., அரசு செயலாளர்.


 அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்.  (w.e)


 அய்யா.


 பொருள்:


 இடஒதுக்கீடு - இந்திய அரசின் கீழ் சிவில் பதவிகள் மற்றும் சேவைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு - பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டின் பயனிலிருந்து கிரீமி அடுக்கை விலக்குதல் - வழங்கப்பட்ட விளக்கங்கள் - மீண்டும் வலியுறுத்தல்,


 1. GO.  MS எண் 12, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நாளிட்ட 28.3.1994.  2. 24.4.2000 நாளிட்ட அரசு கடிதம் எண் 627 / பி.சி.சி 97-33, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை


 3. அரசு கடிதம் எண் 10829 / பி.சி.சி / 2004-2, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 10.11.2004 தேதியிட்டது


 4. பிற பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத்தின் அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரிடமிருந்து, 23.06.2011 நாளிட்ட பிரதிநிதி, பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவரிடம் உரையாற்றினார்.


 இந்திய அரசு, பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஆகியவற்றின் கவனத்தை அழைக்குமாறு நான் வழிநடத்தப்படுகிறேன்.  O.M.எண் 36012/22/93.  EST (SCT) 08.09.1993 நாளிட்ட இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, 
மேற்கோள் காட்டப்பட்டதில், பின்வரும் பிரிவுகளின் கீழ் வரும் நபர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் கிரீமி லேயராக கருதப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலக்குகளுக்கு உட்பட்டு அவர்களின் பெற்றோர் வகிக்கும் பதவிகளின் காரணமாக கிரீமி லேயராக கருதப்படுவார்கள் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலக்குகளுக்கு


 அ) அரசியலமைப்பு பதவிகளை வகித்தல்.


 b) பெற்றோர், இருவரும் நேரடியாக வகுப்பு 1 குழு A அதிகாரிகளை நியமிக்கிறார்கள்.

 c) பெற்றோர், அவர்களில் ஒருவர் நேரடியாக வகுப்பு I / குழு A அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.  d) பெற்றோர்கள், இருவரும் நேரடியாக வகுப்பு 1 / குழு A அதிகாரிகளை நியமிக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார்.


 e) பெற்றோர்கள், அவர்களில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு 1 / குழு A அதிகாரி மற்றும் அத்தகைய பெற்றோர் இறந்துவிடுவார்கள் அல்லது நிரந்தர இயலாமையால் அவதிப்படுகிறார்கள், அத்தகைய மரணத்திற்கு முன் அல்லது அத்தகைய இயலாமை ஐ.நா., சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் வேலைவாய்ப்பின் பலனைப் பெற்றுள்ளது.  ., 5 வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு


 பெற்றோர், இருவரும் நேரடியாக வகுப்பு 1 / குழு A அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள், அவர்கள் இருவரும் இறந்துவிடுகிறார்கள் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார்கள், அத்தகைய மரணத்திற்கு முன் அல்லது அவர்கள் இருவரின் அத்தகைய இயலாமை ஐ.நா., சர்வதேச நாணய நிதியம் போன்ற எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் வேலைவாய்ப்பின் பலனைப் பெற்றுள்ளது.  , உலக வங்கி போன்றவை, 5 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு.


 9) பெற்றோர்கள், இருவரும் நேரடியாக மத்திய மற்றும் மாநில சேவைகளின் இரண்டாம் வகுப்பு / குழு பி அதிகாரிகளை நியமிக்கிறார்கள்


 h) கணவர் மட்டுமே நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு / குழு B பெற்றோர்


 அதிகாரி மற்றும் அவர் 40 அல்லது அதற்கு முந்தைய வயதில் வகுப்பு 1 / குழு A இல் சேருகிறார்.  பெற்றோர்களே, அவர்கள் இருவரும் நேரடியாக வகுப்பு I / குரூப் பி அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள், அவர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார், அவர்களில் இருவருக்கும் ஐ.நா., சர்வதேச நாணய நிதியம், போன்ற எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


 உலக வங்கி முதலியன, 5 வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு, கணவர் ஒரு வகுப்பு 1 / குழு A அதிகாரி (நேரடி ஆட்சேர்ப்பு அல்லது நாற்பதுக்கு முன் பதவி உயர்வு) மற்றும் மனைவி நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு II / குழு B அதிகாரி மற்றும்  மனைவி இறந்துவிடுகிறார் அல்லது நிரந்தர இயலாமையால் பாதிக்கப்படுகிறார்,


 அ) மனைவி ஒரு வகுப்பு 1 / குழு A அதிகாரி (நேரடி ஆட்சேர்ப்பு அல்லது நாற்பதுக்கு முன் பதவி உயர்வு) மற்றும் கணவர் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வகுப்பு 11 / குழு B அதிகாரி மற்றும் கணவர் இறந்துவிட்டார் அல்லது நிரந்தர இயலாமையால் அவதிப்படுகிறார்


 அதில் உள்ள அட்டவணையின் ஆறாம் வகைக்கு எதிராக குறிப்பிடப்பட்ட வருமான செல்வச் சோதனையைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு கிரீமி லேயரின் நிலை தீர்மானிக்கப்படும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.  ஆறாம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விளக்கத்தின் மூலம் இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது, சம்பளம் அல்லது விவசாய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் இணைக்கப்படாது.

 2) இதுதொடர்பாக, பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை வழங்கும்போது அரசாங்கம் தெரிவித்துள்ள குறிப்புக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், கிரீமியைத் தவிர்ப்பதற்காக வருடாந்திர வருமானத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக மலேரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.  அடுக்கு.  இதேபோல்.  விவசாய வருமானமும் மேற்கண்ட நோக்கத்திற்காக சேர்க்கப்படக்கூடாது.  
3) இந்திய அரசு, பணியாளர் அமைச்சின் அறிவுறுத்தல்களில்


 அந்த கடித எண் 36033/5/2004-E star நாளிட்ட பொது குறைகளும் ஓய்வூதியங்களும்


 14.10.2004 இது குறிப்பில் தொடர்பு கொள்ளப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,


 தீர்மானிக்க வருமானம் / செல்வ சோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தும் பிற விஷயங்களில்


 எந்தவொரு வேட்பாளரின் கிரீமி லேயர் நிலை அட்டவணை IV இல் கொடுக்கப்பட்டுள்ளது


 ஓ.எம்.  தேதியிட்ட 00.00.199 அ, சம்பளத்திலிருந்து வருமானம் மற்றும் விவசாயத்தின் வருமானம்


 நிலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  குறிப்பு மற்றும் செட் நகல்கள்


 தகவலுக்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளது,


 [49] கிரீமி லேயரை விலக்குவது தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை அதிகாரிகளிடமிருந்து பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் பெற்றோரின் வருடாந்திர சம்பளத்தை விட அதிகமாக உள்ளது என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  எச்ஆர்ஏ.  4,50.000 மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்கள் அவர்களின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு மறுக்கப்பட்டன.  அதிகாரிகளின் அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, தகுதிவாய்ந்த பிற பிற்படுத்தப்பட்ட சி.எம்.ஓ வேட்பாளர்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்கள் விரும்பும் இட ஒதுக்கீடு நன்மைகளைப் பெற முடியாது என்று ஐ.ஐ.டி அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


 5) தொடர்பில், கிரீம் லேயரை அவர்களின் உத்தரவுகளில் 1 விலக்குவதற்கான வருடாந்திர வருமானத்தை கணக்கிடுவது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிமுறைகளை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எனவே பொருத்தமான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்  தகுதிவாய்ந்த நபருக்கு பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை வழங்குவதற்கான பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களை வழங்கும் தாசில்தார்கள், சம்பளம் மற்றும் விவசாயத்தின் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இந்த விஷயத்தில் எந்தவொரு புகாரையும் தவிர்க்க வேண்டும்.


 தங்கள் உண்மையுள்ள,


 பிந்த்ரேலி


 நிர்வாக செயலாளருக்கு.


 உறுப்பினர் செயலாளருக்கு.


 பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்,


 திரிகூட் - 1. பீ காமா இடம்,


 புது தில்லி 110060


 பின்தங்கிய வகுப்புகளின் இயக்குநர் வோர்டேர், சென்னை -6.  பெரும்பாலான பின்தங்கிய வகுப்புகள் மற்றும் குறிக்கப்பட்ட சமூகங்களின் ஆணையர், சென்னை -5.


 சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர், சென்னை -5 முதன்மை ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை -5.


 இதற்கு நகலெடுக்கவும்:


 திரு.  ஜி.கருணாநிதி, பொதுச் செயலாளர்


 அகில இந்திய பிற பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஊழியர் நலச் சங்கம், எண் 130, பிராட்வே, சென்னை 108.