Saturday 27 February 2021

கல்பாத்தி பார்ப்பனச் சேரிக்குள் நடக்க உரிமை போர்

மலையாளத்தை அடுத்த பாலக்காடு தாலுக்காவிலுள்ள "கல்பாத்தி" என்னுமோர் பாா்ப்பனச் சோியிருக்கிறது அதற்குள் பாா்ப்பனரல்லாயெவரும் போகக் கூடாதென்று ஐகோா்ட்டும் அதற்குமேலுள்ள பிாிவு கவுன்சில் மட்டும்போய் உத்தரவு பெற்றிருந்தாா்கள்.பாா்ப்பனரல்லாத டாக்டரும் வியாதியஸ்தரைக் காண வேண்டுமானால் குதிரைமேல் போய் வரவேண்டும்.அங்கு "இழிஞர்"என்னும் தீண்டபடாத சமூகத்தவரில் சிலர் சட்டசபையில் நான் கொண்டுபோன தீா்மானத்தின்படி சட்டமேற்பட்டிருப்பதை வாசித்தறிந்து மேற்படி பாா்ப்பனசோியில் "ஆலய உற்சவம்" நடந்த போது பிரவேசித்தாா்கள்.அவர்களை பாா்ப்பனர்கள் அடித்து துரத்தி மாஜிஸ்டிரேட் கோா்ட்டில் பிராது செய்தாா்கள்.விசாரித்து பிராது தள்ளிவிடப்பட்டது.பாா்ப்பனர் சென்னை ஐகோா்ட்டுக்கு அப்பீல் செய்தாாகள்.லோக்கல்போா்டு முனிசிபாலிடியால் பராமரித்துவரும் எல்லை,தெரு,பாதை முதலியவைகள் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றொரு உத்தரவும் பெற்றனர்.போர்ட் செயின்ட் ஜாா்ஜ் (2660 ஆம் நி:எல்.அண்ட்.எம்.கவர்மெண்ட் உத்தரவு (1924செப்டம்பர் மாதம் 25 ம் தேதி ): சட்டமாக்கி நம்மை நடமாடவைத்த வாழ வைத்த "திவான் பகதூா் இரட்டை மலை சீனிவாசன்" அவர்களை நினைவுகூா்வோம். நன்றியுடன் போற்றுவோம்.
குறிப்பு;ஆா்பாட்டம் போராட்டம் என்றொரு நிலையில் நில்லாமல் அரசால் ஆணையிட செய்தாா்....
- ராஜ போஸ் வேணு முகநூல் பதிவு, 27.2.17

No comments:

Post a Comment