Saturday 31 December 2016

தந்தை பெரியார் அன்றே சொன்னார்!


யாரோ சில பிராமணர்கள், பெரியார் ராமசாமி நாயக்கர், இந்த நாட்டில் வாழவே கூடாது என்று கூறி வருகிறார். இவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள் என்று ஒருவர் இங்கு சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை _- திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல- _ திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம் _ திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம், விரும்புவ தெல்லாம் _ நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இது பிராமணர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டும் என்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது.அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை.அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும், பிராமணர்களுக்கும் நமக்கும் பிரதான பேதம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அனுசரிக்கின்ற சில பழக்க வழக்கங் களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். இது, அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பிரமாதமான காரியம் இல்லை.

நமக்கும், அவர்களுக்கும் என்ன பேதம்? இப்போது அவர்களும், நாமும் ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கின் றோம்.ஒரு தெருவிலே நடக்கின்றோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கி றோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்துவிட்டது. இந்த நிலைமையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக் கொருவர் சமமாகவும், சகோதர  உரிமை யுடனும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனவே, முயற்சியில் பலாத் காரம் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.

எப்போதுமே காலம் ஒன்றுபோல் இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறு மைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகின்றது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆதலால், அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக்கொள்வது இருவருக்கும் நலம். அதை நண்பர் சிறீனிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது, பிராமணர்களும் காலதேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது. சென்னை ராயப்பேட்டை பார்ப்பனர்களின் அமைப்பான லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் -_ -தந்தை பெரியார் 5.1.1953

புல்லேந்தியவர்கள், வாளேந்தினால்- வாளேந்தியவர்கள் என்ன ஏந்து வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! விரல் உரல் ஆனால், உரல் என்னவாகும்? அப்புறம் உங்கள் கதி என்னவாகும்? என்பதையும் நினைத்துப் பாருங்கள். அனுதினமும், பார்ப்பனர் தாம் திராவிடர்களுக்குத் தொல்லை கொடுத்து வருவது என்பதை எல்லா மக்களும் உணர்ந்து கொள்ள வேண் டும். பார்ப்பனர்கள் வாழை இலைகள்! திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலைமீது மோதினாலும் வாழை இலைதான் அழிந்துவிடும். அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர் கள்மீது மோதினால் அவர்கள்தான் அழி வார்கள். திராவிடர்கள் பார்ப்பனர் களை மோத ஆரம்பித்தார்களோ- _ அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந் நாட்டில் இருக்காது. இதைப் பார்ப் பனர்கள்உணரவேண்டும். பார்ப்பனத் தோழர்களே! எங்களை முட்டாள் களென்று கூறி உங்களைப் புத்திசாலி கள் என்று பெருமையடித்துக் கொள் ளாதீர்கள்.ஆணவப்பட்டு அழிந்து போகாதீர்கள். புத்திசாலிகளானால், புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொள்ளுங்கள்.

_ -தந்தை பெரியார்: 1948இல்

-விடுதலை ஞா.ம.,5.7.14

Wednesday 21 December 2016

வருங்கால வைப்பு நிதிப் பலன்கள் 60 வயதுக்கு மேல் கூடுதல் ஓய்வூதியம்

புதுடில்லி, ஜூன் 23  வருங்கால வைப்பு நிதிப் பலன்களை 60 வயதுக்குப் பிறகு பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியத்தில் 8.16 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது.

அதேபோல், 59 வயதுக்குப் பிறகு வைப்பு நிதி பலன்களைப் பெற விருப்பம் தெரிவிப்பவர் களுக்கு ஓய்வூதியம் 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களில் இணைய விரும்புபவர்கள், சம் பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்காக விண்ணப்பிக்க வேண் டும் என்று இபிஎஃப்ஓ அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 58 வயது பூர்த்தி யடைந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரு கிறது. அந்தப் பலன்களை ஓரிரு ஆண்டுகள் கழித்துப் பெற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு மட் டுமே புதிய சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது.

-விடுதலை,23.6.16

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*

🌺 *பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
 
    *பட்டா :*

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை  அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா :*

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல் :*

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்*

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம் :*

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம் :*

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார் :*

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.

ஷரத்து= பிரிவு.

இலாகா = துறை.

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

*வில்லங்க சான்று*

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின்  விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)

*தாய்பத்திரம்*
(Parent deed)

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்*
( possessory right)

நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி =  வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை*
(Lease)

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
                 🍁🙏🌺🍁

Friday 9 December 2016

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 15 ஜாதிகள் சேர்ப்பு

புதுடில்லி, டிச.9 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிதாக 28 ஜாதிகளை சேர்த்து  திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி) பரிந்துரை செய்திருந்தது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை யில் குறிப்பிடப்பட்ட 28 ஜாதிகளில் 15 புதிய ஜாதிகளை மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதில், பீகாரின் கதேரி/இடாபரோஷ், ஜார்கண்ட்டின் ஜோரா, காஷ்மீரின் லபனா ஆகிய 3 ஜாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற 9 ஜாதிகள் ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளின் உட்பிரிவுகளாகும். மீதியுள்ள 3 ஜாதிகள் திருத்தத்தின்மூலமாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போதுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று பலனடைவார்கள். அத்துடன் மத்திய அரசு நலத்திட்டங்களின் பலன்களையும் பெற முடியும்.
-விடுதலை,9.12.16

Sunday 27 November 2016

ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்


- குடந்தை கருணா
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.
4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
1.   குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
2.   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.      தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில்,   OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
-விடுதலை,14.5.15

Wednesday 9 November 2016

நாங்கள் ஒன்றும் ‘தகுதி’ குறைந்து விடவில்லை!


“ஊர் ஊருக்கு ஒரு வாகனத்தை அனுப்பி எல்லா பிற்படுத்தப்பட்டவனையும், தாழ்த்தப் பட்டவனையும் அள்ளிப் போட்டு அவர்களை எல்லாம் டாக்டர் ஆக்கி விடவில்லை. படித்துதான் வந்தார்கள். ராசராசன் காலத்தில் இருந்து எங்களை ஏய்த்து , தாங்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு போட்டியாக நாங்களும் படித்துதான் வந்தோம்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 0.25
தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிற சலுகை மதிப்பெண்கள் : 3.9
(புள்ளி விவரம் ஆண்டு 2012)
இந்த மதிப்பெண் வித்தியாத்தில் எந்த கம்பவுண்டரும் டாக்டர் ஆகி விட முடியாது.
ஆயிரம் ஆண்டு வித்தியாசத்தை நேர் படுத்த இந்த 3.9 மதிப்பெண்கள் தான் சலுகை. கோட்டாவில சீட்டு வாங்கி டாக்டர் ஆகிறான்.
தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்.
எத்துணை எளிதாய் ஒரு வரியை சொல்லி விட முடிகிறது.’’
முடிந்தால் ஒடுக்கப்பட்ட மக்களைத் தூக்கிவிடுங்கள் -_ முதுகெலும்பை முறிக்காதீர்கள் - பார்ப்பனீயம் பார்ப்பனரல்லாதாரிடமும்  நோயாகத் தொற்றிக் கொண்டதே!
முக நூலில் இருந்து: சாந்தி நாராயணன்
-விடுதலை ஞா.ம.,6.2.16

சென்னை மாகாணம் ஆட்சி: ஒரு பார்வை


சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயலசீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரெஞ்சு (கிஸீரீறீஷீ-திக்ஷீமீஸீநீலீ) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட்டு நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது.
1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம் 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது . இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935 ன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (Anglo-French) எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெறும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடனம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்துத் தேர்ந்தெடுகப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது. 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
சென்னை மாகாணம்
1    ஏ. சுப்பராயலு    17 டிசம்பர், 1920, 11 ஜூலை, 1921        நீதிக்கட்சி    முதல் மந்திரி
2    பனகல் ராஜா    11 ஜூலை, 1921,  3 டிசம்பர், 1926        நீதிக்கட்சி    முதல் மந்திரி
3    பி. சுப்பராயன்    4 டிசம்பர், 1926, 27 அக்டோபர், 1930        சுயேச்சை    முதல் மந்திரி
4    பி. முனுசுவாமி நாயுடு    27 அக்டோபர், 1930, 4நவம்பர், 1932        நீதிக்கட்சி    முதல் மந்திரி
5    ராமகிருஷ்ண ரங்காராவ்    5 நவம்பர், 1932, 4 ஏப்ரல், 1936        நீதிக்கட்சி    முதல் மந்திரி
6    பி. டி. இராஜன்    4 ஏப்ரல், 1936, 24, ஆகஸ்டு, 1936        நீதிக்கட்சி    முதல் மந்திரி
7    ராமகிருஷ்ண ரங்காராவ்    24 ஆகஸ்டு, 1936, 1 ஏப்ரல், 1937        நீதிக்கட்சி    முதல் மந்திரி
8    கூர்மா வெங்கட
ரெட்டி நாயுடு     1 ஏப்ரல், 1937, 14 ஜூலை, 1937        நீதிக்கட்சி    பிரதம மந்திரி
9    சி. இராஜகோபாலாச்சாரி    14 ஜூலை, 1937, 29 அக்டோபர், 1939        காங்கிரஸ்    பிரதம மந்திரி
10    த. பிரகாசம்    30 ஏப்ரல், 1946, 23 மார்ச்சு, 1947        காங்கிரஸ்    பிரதம மந்திரி
11    ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார்     23 மார்ச்சு, 1947, 6 ஏப்ரல், 1949        காங்கிரஸ்    பிரதம மந்திரி
12    பூ. ச. குமாரசுவாமி
ராஜா    6 ஏப்ரல், 1949, 26 ஜனவரி, 1950        காங்கிரஸ்    பிரதம மந்திரி
சென்னை மாநிலம்
சென்னை மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய ‘விடுதலை’க்குப் பிறகு 1947-ல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.
சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாற்றியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ந் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.
1    பி. எஸ்.
குமாரசுவாமிராஜா    26 ஜனவரி, 1950, 9 ஏப்ரல், 1952        இந்திய தேசிய காங்கிரஸ்
2    சி. இராஜகோபாலாச்சாரி    10 ஏப்ரல், 1952, 13 ஏப்ரல், 1954        இந்திய தேசிய காங்கிரஸ்
3    கு. காமராஜ்    13 ஏப்ரல், 1954, 31 மார்ச்சு, 1957        இந்திய தேசிய காங்கிரஸ்
4    கு. காமராஜ்    13 ஏப்ரல், 1957, 1 மார்ச்சு, 1962        இந்திய தேசிய காங்கிரஸ்
5    கு. காமராஜ்    15 மார்ச்சு, 1962, 2 அக்டோபர், 1963        இந்திய தேசிய காங்கிரஸ்
6    எம். பக்தவத்சலம்    2 அக்டோபர், 1963, 6 மார்ச்சு, 1967        இந்திய தேசிய காங்கிரஸ்
7    சி. என். அண்ணாத்துரை    6 மார்ச்சு, 1967, ஆகஸ்டு, 1968        தி.மு.க.
தமிழ்நாடு
சென்னை மாகாணம் - 14 ஜனவரி 1967 அன்று தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர்மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் 356 பிரிவில் குறிப்பிட்டுள்ள ஒரு தகவலின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 1976-ல் திமுக ஆட்சி  ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுநர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுநர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை ஏற்படும்.
தமிழ்நாடு
1    சி. என். அண்ணாத்துரை     ஆகஸ்டு, 1968, 3 பிப்ரவரி, 1969         தி.மு.க.
2    இரா. நெடுஞ்செழியன்
(தற்காலிக முதல்வர்)     3 பிப்ரவரி, 1969, 10 பிப்ரவரி, 1969        தி.மு.க.
3    மு. கருணாநிதி    10 பிப்ரவரி, 1969, 4 ஜனவரி, 1971        தி.மு.க.
4    மு. கருணாநிதி    15 மார்ச்சு, 1971, 31 ஜனவரி, 1976        தி.மு.க.
குடியரசுத் தலைவராட்சி     31 ஜனவரி, 1976, 30 ஜூன், 1977      
5    எம். ஜி. இராமச்சந்திரன்    30 ஜூன், 1977, 17 பிப்ரவரி, 1980        அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    17 பிப்ரவரி, 19809 ஜூன், 1980      
6    எம். ஜி. இராமச்சந்திரன்    9 ஜூன், 1980, 15 நவம்பர், 1984        அ.இ.அ.தி.மு.க.
7    எம். ஜி. இராமச்சந்திரன்    10 பிப்ரவரி, 1985, 24 டிசம்பர், 1987        அ.இ.அ.தி.மு.க.
8    இரா. நெடுஞ்செழியன்
(தற்காலிக முதல்வர்)    24 டிசம்பர், 1987, 7 ஜனவரி, 1988        அ.இ.அ.தி.மு.க.
9    ஜானகி இராமச்சந்திரன்    7 ஜனவரி, 1988, 30 ஜனவரி, 1988        அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    30 ஜனவரி, 1988, 27 ஜனவரி, 1989      
10    மு. கருணாநிதி    27 ஜனவரி, 1989, 30 ஜனவரி, 1991        தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி    30 ஜனவரி, 1991, 24 ஜூன், 1991      
11    ஜெ. ஜெயலலிதா    24 ஜூன், 1991, 12 மே, 1996        அ.இ.அ.தி.மு.க.
12    மு. கருணாநிதி    13 மே, 1996, 13 மே, 2001        தி.மு.க.
11    ஜெ. ஜெயலலிதா     14 மே, 2001, 21 செப்டம்பர், 2001        அ.இ.அ.தி.மு.க.
12    ஓ. பன்னீர்செல்வம்    21 செப்டம்பர், 2001, 1 மார்ச்சு, 2002        அ.இ.அ.தி.மு.க.
13    ஜெ. ஜெயலலிதா    2 மார்ச்சு, 2002, 12 மே, 2006        அ.இ.அ.தி.மு.க.
14    மு. கருணாநிதி    13 மே, 2006, 15 மே, 2011        தி.மு.க.
15    ஜெ. ஜெயலலிதா    16 மே, 2011, 27 செப்டம்பர், 2014         அ.இ.அ.தி.மு.க.
16    ஓ. பன்னீர்செல்வம்    28 செப்டம்பர், 2014, மே 23, 2015        அ.இ.அ.தி.மு.க.
17    ஜெ. ஜெயலலிதா    மே 23, 2015,        அ.இ.அ.தி.மு.க.
-விடுதலை ஞா.ம.,6.2.16

Sunday 6 November 2016

சான்றிதழ்கள் தவறினால்....


கல்விச் சான்றிதழ்கள் காணாமல் போனால், அவற்றை மீண்டும் பெறுவதற் கான வழிமுறைகளை விளக்குகிறார், சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிகல் துறைத் தலைவரான பேராசிரியர் டாக்டர் காமராஜ்.
* சான்றிதழ்கள் காணாமல் போன எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அச்சான்றி தழ்கள் கிடைக்காவிட்டால், அந்த காவல் நிலையத்தில் இருந்து `நான் ட்ரேசபிள் சான்றிதழை (non traceable certificate) வாங்க வேண்டும். அதேபோல தாங்கள் படித்த பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் காணாமல் போன சான்றிதழ் களை பெறும் வழிமுறை அறிவிப்பு பகுதியில் இருக்கும் அஃபிடவிட் (affidavit) சான்றிதழ்களை வாங்கும் வழிமுறை படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அந்த படிவத்தில் எந்த சூழ்நிலையில், என்ன காரணத்தால் தன் சான்றிதழ் காணாமல் போனது மற்றும் அந்த சான்றிதழ் தொடர்பான கேள்விகளைப் பூர்த்திசெய்து, படித்த கல்லூரி முதல்வர் அல்லது நோட்டரி பப்ளிக் (வழக்கறிஞர்) ஒருவரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். தொலைந்துபோன சான்றிதழ் தொடர்பாக பிரபலமான தினசரி நாளி தழில் அறிவிப்பை வெளியிட்டு, அந்த ஒரிஜினல் நியூஸ் பேப்பருடன், தொலைந்துபோன சான்றிதழின் நகலை சேர்த்து, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து காணாமல் போன சான்றிதழ் தொடர்பான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு காணாமல் போன சான்றிதழை புதிதாக பெறுவதற்கான  தொகையை கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன் (controller of examination), பல்கலைக் கழக பெயருக்கு `டி.டி எடுத்து, விண்ணப்ப படிவத்தை சேர்த்து அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய 15 நாட்கள் கழித்து பல்கலைக்கழகத்தில் இருந்து நம் வீட்டுக்கே புதிய சான்றிதழ் அல்லது சான்றிதழ் தொடர்பான அறிவிப்புகள் வரும்.
* கல்லூரியில் படித்துக் கொண்டிருக் கும் மாணவர்கள் தங்கள் துறைத் தலைவரிடம் இதுகுறித்த புகாரைத் தெரிவிக்கலாம். மேலும், ஒவ்வொரு கல்லூரியிலுமே செயல்படும் தேர்வு கட்டுப்பாட்டு மய்யத்தின் வாயிலாக காணாமல் போன சான்றிதழ் தொடர் பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
* ஒவ்வொரு பல்கலைக்கழக இணையதளத்திலுமே படித்து முடித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் காணாமல் போன கல்விச் சான்றிதழ் களை திரும்ப பெறும் வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பார்த்து இந்தப் பிரச்சினை சார்ந்த உதவி தேவைப்படும் மாணவர்கள் பயன்பெறலாம்.
* பள்ளிச் சான்றிதழ்கள் தொலைந்து போக நேர்ந்தால், உடனடியாக நீங்கள் படித்த பள்ளியைத் தொடர்புகொண்டு, அதற்கான வழிகாட்டுதலை பெற முடியும்
-விடுதலை ஞா.ம.,18.6.16

Thursday 3 November 2016

பள்ளி சான்றிதழில் ஜாதி, மதம் கட்டாயமில்லை

- பள்ளிகளுக்கு சுற்றறிக்கை: நீதிபதிகள் உத்தரவு

சென்னை, ஜூன் 16
 பள்ளி களில் ஜாதி, மதம் பெயரை கேட்டு மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது. மேலும், ஏற் கெனவே உள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் அது குறித்த சுற்ற றிக்கையை  அனைத்துப் பள் ளிகளுக்கும் அனுப்பவேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத் தில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக கல்வித்துறை கடந்த 1973 ஆம் ஆண்டு ஒன்று 2000 ஆம் ஆண்டு மற் றொன்று என இரண்டு அர சாணைகளை வெளியிட்டது. இதில் மாணவர்களை கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் போது ஜாதி, மதத்தை கட் டாயப்படுத்தக்கூடாது.
பள்ளிகளில் மாற்று சான் றிதழ். பள்ளி சான்றிதழ் வழங் கும் போது ஜாதி, மதம் பெயரை விருப்பபட்டவர்கள் கொடுக்கலாம். ஜாதி, மதம் என்பதை  குறிப்பிட வேண் டும் என்று பள்ளி நிர்வாகம் மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது என்று அரசா ணையில் தெளிவாக கூறப்பட் டுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பள்ளி நிர்வாகங்கள் அமல்படுத்துவது இல்லை.
எனவே, இந்த அரசா ணையை அமல்படுத்த  பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்ப, அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். பெற் றோர்களிடம் சரியான விழிப் புணர்வு இதுகுறித்து ஏற்படுத் தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரை ஞர், அரசாணையை அமல் படுத்த எல்லா பள்ளிகளுக்கும் உத்தரவிடுகிறோம். என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், உடனடியாக  அரசு அனைத்து பள்ளிகளுக்கும் புதிய சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும். அதில் அரசாணையை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்தவேண் டும் என்று குறிப்பிட வேண் டும் என்று உத்தரவிட்டனர்.
-விடுதலை,16.6.16

Monday 10 October 2016

பாரதிப் பாடல் புரட்டு


10.02.1929 - குடிஅரசிலிருந்து...
பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணம்
பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரசு பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண்ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி  ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொரு வரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது.
அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்ம வர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியை காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத் தின் பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால் இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.
அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில்  உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது.
இது யாவ ருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்தி பதிக்கப்பட்டிருக் கின்றதாம். இம்மாதிரி யாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டி யதாகவே இருக்கின்றன.
இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப் படுகின்றது.
நிற்க; இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப் பட்ட பொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர் களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக் கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரிய மல்ல என்றாலும் நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக் கிறார்கள் என்பதற்கும் முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.
-விடுதலை,30.7.16

‘‘முற்றிலும் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கிராமம்’’

திராவிடர் கழகக் கொள்கையை ஏற்ற பெரியார் கிராமமான திருவிளையாட்டத்திற்கு
‘‘முற்றிலும் தீண்டாமை  ஒழிக்கப்பட்ட கிராமம்’’ என்ற அரசு விருது!

சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஆ.சவுரி ராசனை நினைவு கூர்வோம்!
நாகை, ஜூலை 27 “தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராம மாக”திருவிளையாட்டம்,தமி ழக அரசால் அறிவிக்கப்பட்டி ருக்கிறது. அதன்படி 2013-2014 ஆம் ஆண்டிற்கான விருதையும், பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தையும் மாவட்ட ஆட்சியர் திருவிளையாட்டம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கி பாராட்டியுள்ளார்.

இது தந்தைபெரியார் கொள்கையை வரித்துக் கொண்ட பெரியார் கிராமம் என்று பெயர் பெற்ற, புகழ் பெற்ற கிராமம் ஆகும்.

எந்த வித ஜாதி சச்சரவு களுக்கும் இடம் தராமல் அனைத்து தரப்பினரும் சகோ தரத்துவத்துடன் பழகும் கிரா மமாக, பொதுச் சுடுகாடு, பொதுக் கிணறு, கோயில் என எந்தப் பாகுபாடுமின்றி எல்லோரும் புழங்கும் கிராம மாக திருவிளையாட்டம் இருந்து வருகிறது.

சுமார் முக்கால் நூற்றாண் டுக்கும் மேலாக, தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக விளங்கும் இந்த ஊர், நாகை மாவட்டத்தில் (பழைய தஞ்சை மாவட்டம்) தந்தை பெரியார் அவர்களின் பாடிவீடான மயிலாடுதுறைக்கு அருகிலே உள்ளது.

இதற்குமுன் 1996-1997 ஆம் ஆண்டிலும் தீண் டாமை கடைப்பிடிக்காதகிரா மமாக இந்தக் கிராமம் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
இந்தக் கிராமம் இப்படிச் சிறப்பாக காட்சி தருவதற்கு  மூலகாரணமாக இருந்தவர்  தந்தை பெரியாரின் தொண்ட ராக, அணுக்க சீடராக விளங் கிய திருவிளையாட்டம் ஆ.சவுரிராஜன் (பிள்ளை) அவர்கள்.  திராவிடர் கழகத்தின் தீவிர  உறுப்பினராக, மயிலாடு துறை வட்ட திராவிடர்கழக தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அந்த சீலரின் சிறப்பான தொண்டு.
திருவிளையாட்டம் ஊராட் சித் தலைவராக தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றிய திரு.ஆ.சவுரிராஜன் அவர் கள். சுமார் அறுபதுஆண்டு களுக்கு முன்னரே திருவிளை யாட்டத்தில் மய்யப்பகுதியில், ஜாதி இந்துக்கள் என்று சொல் லப்பட்டவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்த, பெரும் வருமானம் ஈட்டித்தந்த, தனக் குச் சொந்தமான பழத்தோப்பை அழித்து அங்கே  வீடுகள் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை குடியமர்த்தியவர் .

ஜாதிக்கு ஒரு சுடுகாடு எனும் நிலை இன்றைக் கும் முழுமையாக நீங்கிய பாடில்லை. ஆனால்அனைத்து ஜாதி மக்களும் ஒரே சுடு காட்டைப் பயன்படுத்தும் வழக்கத்தை அந்தக்காலத் திலேயே துணிந்து செயல் படுத்தி சாதித்துக் காட்டியவர். ஜாதிப்பாகுபாடு இல்லாமல் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் தனது வீட்டை ஆரம்பப் பாடசாலையாகமாற் றினார். பின்னாளில்தனக்கு சொந்தமான மற்றொரு இடத் தில் புதிய உயர்நிலைப் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார். தற்போது அப்பள்ளி மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் அவரது கல்விப் பணியைப் பாராட்டி அவரிடம் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வும் உண்டு.
1940 ஆம் ஆண்டின் பிற் பகுதியில் மயிலாடுதுறையில் சில ஆண்டுகள் வசித்தார். அவரோடு பழகிய பெரியார் தொண்டர்கள் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் மறந்தும் பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளுக்கு செல்ல மாட்டார் என்றும் தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணமே செய்து வைத்தார் என்றும் கூறுவர்.

ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர்
1957 இல் ஜாதி ஒழிப்பிற் காக தந்தை பெரியார்அவர் கள் நடத்திய சட்ட எரிப் புப்போராட்டத்தில்திரு விளையாட்டத்தை உள்ளடக் கிய செம்பனார்கோவில் பகு தியிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கலந்து கொண்டு தானும் சிறை சென்றார்.

ஊராட்சி மன்றத்தேர்த லில் இப்போதுநடைபெறும் அரசியல் சித்து விளையாட்டு கள் அப்போதும் நடப்ப துண்டு. பிரபல அரசியல் கட்சிகளெல்லாம் தேர்தல் நேரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களை கடத்திமறை விடத்தில் இருத்தும் பட்சத்தில் அந்தப் பகுதியில் அப்படி கடத்தப்படாத,கிட்டேநெருங் கக்கூட முடியாத இரண்டு தலைவர்கள் உண்டென்று சொன்னால்,ஒருவர்திருவிளை யாட்டம்ஊராட்சிமன்றத் தலைவர்ஆ.சவுரி ராஜன் மற்றொருவர்திரு விளையாட்டத்தைஅடுத்த பரசலூர்ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.பி.கோதண்ட பாணி. அதற்குக்காரணம் அவர்கள் தங்கள் இயக்கத் திற்கும், கொள்கைக்கும் கட் டுப்பட்டவர்கள் என்பதே.  இருவருமேதிராவிடர்கழகத் தொண்டர்கள், பொறுப்பாளர் கள் ஆயிற்றே!

நினைவு மண்டபத்தைத் திறந்தார் தமிழர் தலைவர்

திரு.ஆ.சவுரிராஜன் அவர்கள் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் பிறந்து, தன் வாழ்நாளில் பெரும் தொண்டாற்றி, தனது 81 ஆம் வயதில் 18.3.1973 அன்று  இயற்கை எய்தினார். அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு  18.3.1974 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் அன்றையப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவிளையாட்டத்தில் அவரது நினைவு மண்டபத்தை திறந்து வைத்து அவரது பெரும் பணியைப் பாராட்டி சிறப்புரையாற்றினார்.

தந்தை பெரியாரைஅவ் வூருக்கு அழைத்து சவுரிராசனை அய்யாவுக்கு அருகில் அமர்த்தி ஊர்வலம் நடத்தினர் அவ்வூர் மக்கள்.

ஒப்பற்றப் பணி 


திருவிளையாட்டம் போன்ற கிராமங்கள் இன்ற ளவும் ஜாதிப் பாகுபாடின்றி தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக ஒளிர்விட்டுக் கொண்டிருப்பது  திராவிடர் இயக்கத்தின் தன் னிகரில்லா தொண்டு, அய்யா சவுரிராஜன் போன்ற பெரியார் தொண்டர்களின் ஒப்பற்றப் பணி  ஆகியவற்றின் விளைச் சல் அல்லவா?

தகவல்:
விடுதலை செய்தியாளர் கி.தளபதிராஜ்
-விடுதலை,27.7.16

நாளந்தா பல்கலைக் கழகம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு


புதுடில்லி, ஜூலை 16 யுனெஸ்கோ எனப்படும் அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக புராதன குழு கூட்டம் இஸ்தான்புல் நகரில் கூடியது.
சீனா, ஈரான், மைக்ரோநேசியா ஆகிய நாடுகளில் உள்ள பாரம்பரிய தளங்களோடு, இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகமும் உலகின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டது.
இது தொடர்பாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளந்தா பல்கலைக் கழகம் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் பழமையான தளமாகும். நாளந்தா அமைப்பானது 800 ஆண்டுகளுக்கு மேலாக அறிவை போதித்து வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மய்யப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. நாளந்தா பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக் கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197 இல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற் றாக அழிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறி ஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள் ளார்கள். கவுதம புத்தர் இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்களும் வழங் கப்பட்டிருந்தன.
-விடுதலை,16.7.16

Monday 5 September 2016

“பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’கடந்து வந்த பாதை

கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றோம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்  160
அய்யா அவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. பொதுக் காரியத்தில் குறிக்கோளில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த கவலையும், பொறுப்புணர்ச்சியுமே அதற்கு மூலகாரணம் ஆகும்.
அப்படி அவர்கள் சல்லடைபோட்டு சலித்துப் புடைத்துப் பார்த்ததில் முழு நியாயம் உள்ளது என்பதற்கு, அவர் கைப்பட எழுதி, பிறகு அவர்கள் அய்யாவுக்கு “துரோகி’களாகி-விட்ட பல பெயர்களை அடித்து மாற்றி எழுதியுள்ள குறிப்பே அதற்கு தக்க சான்றாகும். (இப்போது அதனை வெளியிடுவது நனி நாகரிகம் ஆகாது.)
அன்னை மணியம்மையார் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்திற்கு “ஒரு ஏற்பாடு ஆகத்தான் -_ திருமணம்’’  செய்தார்கள். அப்போதே அய்யா அவர்கள் தாம் எழுதிய “விளக்கம்’’ என்ற அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
“திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே தவிர, மற்றபடி அது இயக்கத்தின் பாதுகாப்புக் கருதி செய்யப்பட்ட ஒரு ஏற்பாடே ஆகும்’’ என்று தெளிவாக எழுதினார்கள்.
1952இல் உருவாக்கப்பட்டது
ஆனால், அரசியல் உணர்வுகளால் உந்தப்பட்ட நிலையில், 1949இல் அதையே ஒரு சாக்காகவும், வாய்ப்பாகவும் கருதி, இயக்கத்திலிருந்து அண்ணா போன்றவர்கள் வெளியேறி தனிக் கழகம் கண்டனர்!
அப்படி வெளியேறிவர்களேகூட, தனிப்பட்ட உரையாடலிலும், பிறகு ஒரு பெரிய மாநாட்டு நிகழ்ச்சியிலும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.
அதனால்தான் 1952இல் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரால் அய்யா அவர்கள், அதற்குரிய சமுதாயக் குறிக்கோள்கள், சட்டதிட்டங்கள், விதிமுறைகளோடு அதனைப் பதிவு செய்தார்கள்.
வெறும் சுயமரியாதை என்றால், அதன் பேரில்கூட பிறகு எதிர்காலத்தில் சிலர் குழப்பக்கூடும் என்பதால், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் இருப்பதற்காகவே “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’’ என்ற பெயரில் பதிவு செய்தார்கள். அதை நடத்தியும் வந்தார்கள்.
நிறுவனத் தலைவர் அய்யா அவர்கள்தான் ஆயுள் தலைவர், அன்னை மணியம்மையார் தான் ஆயுள் செயலாளர். அதேபோல் நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வகிக்க மேலும் 3 நிர்வாக முழு ஆயுள் உறுப்பினர்-களையும் மற்றும் சில நிர்வாகக் குழு உறுப்பினர்களையும் போட்டு நடத்தினார்.
அண்ணா கட்சியைவிட்டு 1949இல் பிரியும்போது, 5 லட்ச ரூபாய் இருக்கிறதே என்று சிலர் கூறியபோது, அது அய்யாவிடமே இருக்கட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்!
வருமானவரி என்ற ஆயுதம்!
அதை அய்யா பெருக்கிய நிலையில் 1963 வாக்கில் நிறுவனத்தின் சொத்துக்கள் ரூபாய் 15 லட்சம் பெருகியுள்ளது என்று வேலூர் போன்ற பற்பல ஊர்களில் பொதுக்-கூட்டங்களில் பேசும்போது கூறியுள்ளார். (ஆதாரம்: “எனது தொண்டு’’,  ‘கழகமும் துரோகமும்)
அய்யா அவர்களுடைய காலத்தில் திராவிடர் கழகத்திலிருந்து 1963இல் வெளியேறிய விடுதலை முன்னாள் ஆசிரியர் திரு. எஸ்.குருசாமி அவர்களும், மத்திய கமிட்டி முன்னாள் தலைவர் வழக்குரைஞர் திரு.தி.பொ.வேதாச்சலம் அவர்களும் (இவர்கள் பெரியார் டிரஸ்ட்டாகிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து, அய்யா அவர்களின் நம்பிக்கையை இழந்த காரணத்-தால், அவர்கள் வெளியேறுவதற்கு சில காலம் முன்னரே, அப்பதவிகளை ராஜினாமா செய்யும்படி கேட்டு, விலக்கும் அவசியம் ஏற்படுத்தாத வண்ணம் தந்தை பெரியார் அவர்கள் எழுதி வாங்கி விட்டார்கள்.) அதேபோல் வேறு சிலரிடம் அரசியல் கட்சிக்குத் தாவிய நிலையிலும், எழுதி வாங்கி, தன்னுடைய முழு நம்பிக்கைக்குரியவர்களை மட்டும் போட்டு, சாதி, மதம், சொந்த பந்தம் பார்க்காமல், லட்சிய நோக்கோடு நடத்தி வந்தார்கள்.
வருமானவரி துறையினருக்கே மனு எழுதியும், நேரில் பேசியும், பெரியார் வருமானவரி ஏதும் செலுத்துவதில்லை; கணக்கில் காட்டாத பணம் ஏராளம் வைத்துள்ளார் என்பதுபோல எழுதியும், கூறியும் விட்டனர்.
அப்போது முதல், வருமான வரித்துறை (அது ஒரு பெரிதும் மேல்ஜாதி ஆதிக்கத்துறை என்பதால்) அதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி  எப்படியெல்லாம் “வருமானவரி’’ என்ற ஆயுதத்தினை ஏவிட முடியுமோ அப்படிச் செய்தார்கள்.
பெரியார் கணக்குகள் வைத்திருந்த முறை
ஒரு வரலாற்றினை உருவாக்கி, தானே ஒரு தனி வரலாறு ஆகும் தகுதி படைத்த மிகவும் புரட்சிகரமான சிந்தனைகளின் ஊற்றான தந்தை பெரியார் அவர்கள், நிதியைப் பொறுத்தவரை அவர், ஒரு தனி நிர்வாக அமைப்பு, தனி தணிக்கையாளர் (கிuபீவீtஷீக்ஷீ) என்று வைக்காது, வங்கிகளில் கணக்குகள், அடிக்கட்டைகளில் அவரே எழுதிய குறிப்பு, அவரது டைரியில் அவருக்கு விளங்கும் வகையில் குறிப்புகள் பதிவு _ இப்படித்தான் எழுதி வைத்திருந்தார்கள்.
திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் பிரிந்தபோதுகூட, தந்தை பெரியார் அவர்களைத் தாக்கி அறிக்கை விட்டபோது, அவரே எல்லாக் கணக்குகளையும் வைத்துக்கொள்ளுபவர் என்றே குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த தந்தை பெரியார், “நான்தான் உருவாக்கினேன். நான் மற்ற யாருக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை’’ என்கிற முறையில்கூட பல நேரங்களில் பதில் அளித்தார்கள்.
அவர்கள் அதோடு, வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஸ்டேட்மெண்ட் தாக்கல் செய்ததில், “என்னுடைய இயக்கச் சொத்துக்-கள் எனது சொந்த சொத்தினையும் சேர்த்துப் பெருக்கி நன்கொடைகளைப் பெற்று வளர்த்த சொத்துக்கள். நான் யாரையும் எளிதில் நம்பாதவன்; என் கூட இருக்கிறவர்களில்கூட பலருக்கு சபலபுத்தி இருக்கக்கூடும் என்றும் கருதுபவன். எனவே, நானேதான் நிதியைப் பொறுத்த-வரை, கையாளுபவன், கணக்கு வைப்பவனா-கவும் இருப்பேன். என்னிடம் ஒளிவு மறைவு ஏதும் கிடையாது என்பதால் எல்லாம் வங்கி கணக்குகளாக, மில்களில் போடப்-பட்ட தொகை, பெறப்பட்ட வட்டி _ இவைகளாகவே இருக்கின்றன’’ என்றே பதில் அளித்தார்.
இந்நிலையில் முறையான கணக்குகள் தேவை என்று வருமானவரித் துறையினர் கேட்டதற்கு இல்லை என்ற உண்மை பதிலையேதான் அவர்கள் பெற முடிந்தது _ அய்யா அவர்களிடமிருந்து.
இதை ஒரு வாய்ப்பாக ஆக்கிக் கொண்டு, தந்தை பெரியார் பெயருக்கு ஒரு வருமானவரி ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை வரி; அவரது நிறுவனமான பெரியார் சுயமரியாதைப் பிரச்சர நிறுவனத்திற்கும் (இரட்டிப்பாக) அதே தொகை வரி, போடப்பட்டு வந்தது. கேட்டால், ஒன்று சட்டத்தில் நிற்காவிட்டாலும், மற்றொன்று மூலம் இலாகாவிற்கு வருமானம் _ பிடிப்பு _ இரண்டும் வரக்கூடும் என்ற வாதம் வருமானவரித் துறையினரால் எடுத்து வைக்கப்பட்டது!
தந்தை பெரியாரே எழுதியது...
தந்தை பெரியார் அவர்கள் 14.01-.1970இல் திருச்சியிலிருந்து “உண்மை’’ என்ற மாதம் ஒரு முறை ஏட்டினை துவக்கியபோது, அதன் முதல் இதழில் அவரே எழுதிய தலையங்கத்தில்கூட குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன். வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்-கிறேன். அரசாங்கத்தால் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும், அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தில் உள்ள “மேல் ஜாதி’’ மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்-களாலோ, எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான, தன்மையாக ரூ. 15,00,000 பதினைந்து லட்ச ரூபாய்க்கு மேல் (கடந்த காலத்திற்கு என்று இன்கம்டாக்ஸ் வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன், நிகழ்காலத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு போல் இன்கம்டாக்ஸ் போடப்பட்டது’’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் அன்னை மணியம்மையார் தலைமை காலத்தில், இந்த வருமானவரி பாக்கி அளவு, 17 லட்சத்திலிருந்து (1976 நவம்பரில்) 57 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. (வருமானவரி, வட்டி, அபராத வட்டி எல்லாமே சேர்த்து இத்தொகை ஆகும்)
1978இல் (மார்ச்) அம்மா அவர்கள் மறைந்து, என்னை செயலாளராக்கிய பிறகு இந்த வருமானவரி பாக்கி சுமார் 80 லட்சமாக உயர்த்தப்பட்ட கொடுமைக்கு ஆளானோம்! (கூடுதல் ஆண்டுகள் அதனால் மேலும் தொகை பெருக்கம்)
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் “எமர்ஜென்சி’’யை முழுமையாகப் பயன்படுத்தி, இலாகாவின் பார்ப்பன மேல் அதிகாரிகள் “சாமி ஆடி’’ பழிவாங்கும் தன்மையில் தம் இஷ்டம்போல் ஆட்டம் போட்டனர்.
சொத்துக்கள் மீது அட்டாச்செண்ட் (Attachment), டிரஸ்ட் சொத்துக்களிலிருந்து வரும் வாடகை வருமானத்தை முடக்கியும், வங்கி கணக்குகளில் உள்ள தொகைகள் பறிப்பு _ முடக்கம் இவ்வளவும் பெரியார் திடலிலேயே பகிரங்கமாக அட்டாச்மெண்ட் நோட்டீஸ் ஓட்டல் வேலை _ இவ்வளவும் நடந்தன.
டிரஸ்டை எதிர்த்து வழக்கு!
அதை எதிர்த்து மீண்ட நிலையில் அம்மா மறைந்து, நான் பொறுப்பேற்ற பிறகு கழகத்தினை விட்டு விலக்கப்பட்ட மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், டிரஸ்டினை எதிர்த்து வழக்குப் போட்டனர். (திருவாரூர் கே.தங்கராசு, டி.எம்.சண்முகம், சிதம்பரம் கு.கிருட்டினசாமி).
அரசே தலையிட்டு, வருமானங்களை எல்லாம் பெறுபவர் (Official Receiver) போட வேண்டும் என்றும், அரசே, இந்த அறக்கட்டளையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.
அன்று திராவிடர் கழகம் கலைஞர் கருணாநிதிக்கு (தி.மு.க.வுக்கு) ஆதரவாக இருக்கிறது என்ற நினைப்பில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், அம்மாவால் விலக்கப்பட்டவர்களுக்கு முதலில் திரை மறைவிலும், பிறகு வெளிப்படையாகவும் ஆதரவு தந்து இம்மாதிரி செயல்களுக்கு வழக்குரைஞர் உதவி _ உபயம்கூட செய்தார்.
நான் பொறுப்பேற்று ஒரு வாரம்கூட ஆகாதநிலையில், உயர்நீதிமன்ற வழக்கு (O.S.No.1978), அதோடுகூட ஒரு சில மாதங்களில் வருமான வரித்துறை மேல்-முறையீட்டு (Income Tax Appellate Tribunal) மன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.
நமக்குக் கிடைத்த இரண்டு முக்கிய வெற்றிகள்!
இதற்கு முதலில் வருமானவரித் துறை அதிகாரி, அதற்கடுத்து மேல் அதிகாரி, அதற்கடுத்த நிலையில் (Income Tax Assistant Commissioner) இப்படி பலரும் பழைய பாக்கியை உறுதி செய்து விட்ட நிலையில்தான், மூன்றாவது கட்டமாக இந்த அப்பீல், (Income Tax Appellate Tribunal)-ல் செய்யப்பட்டது.
அங்கு இரண்டு “மேல் ஜாதி’’ எனப்படும் நீதிபதிகள் விசாரித்தனர். ஆனால், மேல் ஜாதி உணர்வுக்கு ஆட்படாமல், அப்பெருமக்கள் நல்ல தீர்ப்பு 1978இல் வழங்கினர்.
1. ரூ.80 லட்சம் வருமானவரி போட்டது செல்லாது என்ற நமது வாதம் தீர்ப்பில் ஏற்கப்பட்டது.
2. பெரியாருடையது “அறக்கட்டளைதான்’’ என்று வருமான வரித்துறையினர் ஏற்றுக் கெள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவை இரண்டும் மிக முக்கிய வெற்றிகளாகும்.
அதன் பிறகு கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் (With retrospective effect) இதை அறக்கட்டளையாக (Public Charitable Trust) வருமானவரித்துறை அங்கீகரித்த ஆணைகளையும் பெற்றோம்.
கணக்குகள் முறையாக அளிக்கப்பட்டு வருகின்றன
அம்மா அவர்களின் தலைமைக் காலத்திலிருந்தே (1974 முதல்) கணக்குகள் முறையாக எழுதப்பட்டு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்-பட்டு வருகின்றன.
தனி தணிக்கையாளர்கள் (Auditors) தணிக்கை செய்து, இலாகாவுக்கு தாக்கல் செய்கிறார்கள்.
அறக்கட்டளையின் நிர்வாகக் கூட்டங்கள், முறையே சட்டப்படி எப்படி நடைபெற வேண்டுமோ அப்படி நடைபெற்று, அதற்குரிய ஆவணங்கள் (Records) செம்மையாக வைக்கப்-பட்டு நிர்வாகம் சரியானபடி நடைபெற்று வருகின்றது!
இயக்கத்தில் இருப்பவர்களில் சபலங்-களுக்கும், துரோக சிந்தனைக்கும், தன்முனைப்பு, சுயநலம் இவற்றிற்கு ஆளாகும் சிலர் துரோகிகளாக மாறும்போது, அவர்களது வழமை, இந்த அறக்கட்டளை மீது சேற்றை வாரி இறைக்கும் ‘திருப்பணியைச்’ செய்து-விட்டுப் போவதுதான்.
அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியேறியோ, அல்லது வெளியேற்றப்பட்டோ செல்லுபவர்கள், இதில் ஈடுபட்டு தரும் தொல்லைகளையும், பொது ஸ்தாபனமாக இது உள்ளபடியால் சந்திக்கவேண்டியே உள்ளது.
முதலில் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கு ஆதாரமில்லை என்று தள்ளப்பட்டு, நாம் அங்கேயும் வெற்றி பெற்றோம் _ நியாய அடிப்படையில்.
பெரியார் - மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் உருவாக்கப்பட்டது.
நமது பெரியார் அறக்கட்டளையின் இந்த சங்கடங்கள், வரித் தொல்லைகளையெல்லாம் பார்த்து மனம்புழுங்கி, வேதனைப்பட்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அவருக்கென இருந்த தனித்த சொத்துக்கள், அய்யா அவர்கள் அம்மா அவர்களின் தனி பராமரிப்புச் செலவுக்கென ஒதுக்கி வைத்த சொத்துக்களை (அய்யா அவர்களின் சொந்த பூர்வீக வருமானம் மூலம் கிடைத்த சொத்து) பொதுவுக்கு என ஆக்கி, பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தினை புதிதாக 1974லேயே தலைமை ஏற்று  அன்னை மணியம்மையார் உருவாக்கிவிட்டார்! (பழைய பெரியார் டிரஸ்டுக்கும், வருமானவரித் துறைக்கும் பிரச்சினை இருந்தமையால், தனியே புது டிரஸ்ட் ஏற்பாடு செய்வதே சரியானதாகும் என்று சட்ட அறிஞர்கள், வழக்குரைஞர்கள் ஆலோசனைகளுக்கு ஏற்பவே அம்மா இதனை தனியே ஒரு அறக்கட்டளையாக, துவக்கம் முதல் வருமானவரித்துறை ஒப்புதலுடனேயே துவக்கினார்கள்) அவர்களது முழு நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் உரியவர்களை போட்டு நடத்தினார்கள்.
எரிச்சல்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்!
இந்த அறக்கட்டளையில் தன்னை அம்மா போடவில்லை என்ற எரிச்சல் காரணமாக, சந்தர்ப்பம் பார்த்து வந்த தன்முனைப்பாளரான திரு.நாகரசம்பட்டி சம்பந்தம், டிரஸ்ட் வளருவதையும் புதிய அமைப்புகள் தோற்றுவிக்கப்-பட்டு, அதற்குப் பல புதியவர்கள், பெரியவர்கள் நிர்வாகம் ஏற்பதையும்கூட பொறுக்காமல் அவசியம் ஏற்பட்டபோது இதற்கு எதிரான சில “கீழறுப்பு’’ வேலைகளை நடத்தினார்.
உடனே எச்சரிக்கையாகி அவரை வெளியேற்றினோம். அவருடன் அவருடைய அத்தையான திருமதி விசாலாட்சி அம்மாளும் வெளியேற்றப்பட்டார் _ அவரது குரலாக அந்த அம்மையார் ஒலித்ததால்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம்!
பெரியார் அறக்கட்டளை மற்றும் அன்னை மணியம்மையார் பெயரில் உள்ள அறக்கட்டளை ஆகியவற்றை சட்டதிட்டப்படி ஆயுள் தலைவர், ஆயுள் செயலர், ஆயுள் உறுப்பினர் என்ற தகுதிகள் நிர்வாகக் குழுவில் உண்டு. இரண்டு அறக்கட்டளைகளுக்கும் தனித்தனியே பொதுக் குழுக்களும் உண்டு.
அது பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கமாகிய அறக்கட்டளை யானபடியால் அச்சட்டத்திற்கு 1975இல் கலைஞர் தலைமையில் இயங்கிய தி.மு.க. அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து, சட்டவிதிகளை மாற்றம் செய்தது.
அதன்படி ஆயுள் உறுப்பினராக எந்த சங்கத்திலும் இருக்க முடியாது என்று அச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
பொதுவாக அறக்கட்டளை சட்டத்தின்  (Trust Act) கீழ் ஒரு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டால், அதில் ஆயுள் பூராவும், தலைவர், செயலாளர், உறுப்பினர் இருக்க வழிவகை உண்டு.
அதுவே இச்சட்டத்தின் சங்கப்பதிவு (Societies Act) கீழ் பதிவு செய்தால் ஏன் இந்த பேதம் என்று கேட்டும், 1975ஆம் ஆண்டு சட்டம் வந்தது. ஆனால், அது அமுலுக்கு வந்தது. பின்னோக்கிச் செல்ல முடியாத சட்டத்திருத்தம் என்பதால் 1979 முதல்தான் அமுலுக்கு வந்தது என்பதையும் எடுத்துக்காட்டி நாம் உயர்நீதிமன்றத்தில் அச்சட்டத்தை எதிர்த்து தமிழக அரசின் மீது வழக்குப் போட்டோம். அதனை விசாரித்த நீதிபதி திரு.நயினார் சுந்தரம் அவர்கள் அரசு சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து நமது வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
அதன் பேரில் முதல் பெஞ்சிற்கு உயர் நீதிமன்றத்தில் நாம் அப்பில் செய்தோம். தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஆனந்த், நீதிபதி ஜஸ்டிஸ் ராஜீ ஆகியவர்கள் அமர்வு முன் 1990இல் அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்தது!
தி.மு.க. அரசு அளித்த விதிவிலக்கு!
1990இல் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஏற்கனவே இந்த டிரஸ்ட் அனுபவித்த சங்கடங்கள், தூண்டிவிடப்பட்டு நடைபெற்ற வழக்குகள் இவைகளையெல்லாம் உணர்ந்த நிலையில், “ரிட்’’ அப்பீல் தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடத்தாமல் இந்த இரு டிரஸ்ட்டுகளுக்கு _ அதனுடைய சிறப்பான நடத்தைகளை தெரிந்து, விலக்கப்பட்ட திருவாளர்கள் சம்பந்தம், விசாலாட்சி அம்மையார் கொடுத்த மனுக்களையும் ஆய்வு செய்து, அவை வெறும் “அக்கப்போர்’’ என்பதை உணர்ந்தே,  தமிழக அரசு (கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசு) மற்ற கட்சிகள், இயக்கங்களுக்கு விதிவிலக்கு உள்ளதால் இதற்கும் தருவதுதான் நியாயமானது என்பதால், அந்த சட்டத்தின் 54ஆவது விதிப்படி, இந்த இரு டிரஸ்ட் அமைப்புக்களுக்கு (G.O. மூலம்) முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. (G.O. M/s No.751 dated 31.12.1990, Commercial Taxes and religious Endowments Department)
அதை நீதிமன்றத்தில் முதல் பெஞ்ச் முன்னால் கூறி, இந்த அரசு ஆணையின் (G.O.) காரணமாக “ரிட்’’ அப்பீல் வழக்கினை வாபஸ் பெற்றோம்.
அதற்குப் பிறகு 1997இல் இயக்கக் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கழகத்தி-லிருந்து நீக்கிவைக்கப்பட்ட திரு.பாலகுரு என்பவரும் அவருடைய கோஷ்டியினரும் அவர்களுக்கு மறைமுகமாக தொடர்ந்து உதவிவந்த வழக்குரைஞர் திரு.துரைசாமியும் நமது டிரஸ்ட்டுகளின் மீது வழக்கினை மற்றொரு ரூபத்தில் “ரிட்’’ ஆக, சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டனர். அதை விசாரித்து தீர்ப்புக் கூறிய, நீதிபதி பத்மநாபன், இவர்களது வாதங்கள் ஏற்கக் கூடியவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ததோடு, அவ்வழக்கை அவர்களே, அதற்கு முந்தைய நீதிபதி கனகராஜ் அளித்த அனுமதியையும் கூட ரத்து செய்து தீர்ப்புக் கூறினார்.
இது 1996 _ 97இல் நடைபெற்று தீர்ப்பு வெளிவந்துள்ளது.
தொல்லைகள் வந்தாலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்கின்றன!
இந்த வழக்குகள் தொல்லை ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், நமது இரு அறக்கட்டளைகளின் சார்பில் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற அமைப்புகள் மிகவும் நல்ல வளர்ச்சி பெற்று, சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், திருச்சியில் பெரியார் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி, நாகம்மை ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, பெரியார் நடுநிலைப் பள்ளி, நாகம்மை குழந்தைகள் இல்லம் மட்டுமே இருந்தன.
இப்போது அவைகளையும் உள்ளடக்கி 44 நிறுவனங்கள் (5 மருத்துவமனைகள் உட்பட) நடைபெற்று வருகின்றன.
பெண்களுக்கான தொழில் படிப்பு, அமைப்புகள், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்ய அமைப்பு உட்பட எல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன.
இவற்றிற்கு ஒரு சில அமைப்புகளுக்கு மட்டுமே அரசு உதவி உண்டு. மற்றவை முழுக்க முழுக்க அறக்கட்டளை நிதி, நன்கொடைகள் இவைகள் மூலமே நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து இந்த அறக்கட்டளைகளின் கணக்குகள், வரவு _ செலவுகளை ஆய்ந்த நிலையில் மத்திய அரசின் வருமான வரித்துறை-யிடமிருந்து 80நி வரிவிலக்கினை பெற்றுள்-ளோம்.
நிறுவனங்கள் பெருகியது மட்டுமல்ல, வருமானம் தராத சொத்துக்களை சுமையாக வைத்துக்கொண்டிராமல், அவைகளை விற்று அதன்மூலம் வந்த வருவாயானது புதிய கட்டிடங்கள், புதிய இடங்கள், புதிய சொத்துக்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து 26.12.1996 அன்று சென்னையில் நடந்த திராவிடர் கழக மாநில மாநாட்டில்  எனது உரையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை இப்போது நினைவூட்ட விரும்புகிறேன்.
“இங்கே நான் ஒரு சிறிய பத்திரிகை குறிப்பு வைத்திருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளை சம்பந்தமானது அது. சகோதரர் நெடுமாறன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அருமை சகோதரர் ஜெகவீர-பாண்டியன் அவர்கள் இங்கே இருக்கின்றார். அவர்களுக்கெல்லாம் இந்த வரலாறு மிக நன்றாகத் தெரிந்ததே. பெருமைக்குரிய இந்திராகாந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள்,
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பற்றி அந்த அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் என்கிற முறையிலே, ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றார். அதிலே அவர் ஒரு விளக்கம் சொல்லுகின்றார்.
தேனாம்பேட்டையில் உள்ள கட்டடங்களை வாடகைக்கு விடுவதிலும், நிலத்தை கண்காட்சிகள் நடத்த வாடகைக்கு விடுவதிலும் அறக்கட்டளைக்கு வருமானம் வருகிறது. இதன்மூலம் வருடத்துக்கு 5 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இந்த வருமானம் அறக்கட்டளையின் நோக்கத்தை நிறைவேற்றப் போதுமானதாக இல்லை.
அறக்கட்டளை வருமானத்தைப் பெருக்க அரங்கம் கட்டமுடிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 78 லட்சத்தில் காமராஜர் பெயரில் அரங்கம் கட்டப்பட்டது. இதற்காக 3 வங்கிகளில் இருந்து 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. அரங்கம் மூலம் அறக்கட்டளைக்கு வருமானம் வந்தாலும் வாங்கிய கடனுக்கு வட்டியும், அபராத வட்டியும் உயர்ந்து, வட்டி மட்டும் ரூ.86 லட்சத்து 35 ஆயிரம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அறக்கட்டளையை நிர்வகிக்க முடியவில்லை என்று சொல்லுகின்றார்.
இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சரவையிலே நிதியமைச்சராக இருந்தவர், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள், மத்திய அமைச்சரவையிலே செல்வாக்கு உள்ளவர்கள். இவ்வளவு சிறப்பானவர்கள் இந்த அறக்கட்டளையிலே இருந்தும் முடியவில்லை என்கின்றனர்.
ஆனால், இன்று நமது ஆண்டு வருவாய் 47 இலட்ச ரூபாய். (1996)
அய்யா காலத்திலே 15 லட்ச ரூபாய் சொத்துக்களை விட்டுவிட்டுப் போனார். அப்பொழுது இந்த அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பிறகு        அம்மா அவர்களுடைய காலத்திலே இந்த அறக்கட்டளைக்கு வருமானம் 2 லட்சம் ரூபாய்.
நண்பர்களே, எங்களுடைய இயக்கம் திறந்த புத்தகம்தான். இப்பொழுது பெரியார் அறக்கட்டளைக்கு ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாயாக வருமானம் உயர்ந்திருக்கின்றது.’’
திறந்த புத்தகமாகவே நமது அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. இதில் பொறுப்பு வகிப்போர் சுயநலமற்ற பொதுநல உணர்ச்சியோடு செயல்படுவோர்களாகவே உள்ளனர்.
கட்டிய பணத்தைத் திரும்பப் பெற்றோம்!
வருமான வரித்துறையினர் ஏற்கனவே நமது வாடகைகளை 1976 அட்டாச் செய்து, எடுத்துக் கொண்ட தொகைகள், மற்றும் வரி பாக்கிக்காக முடக்கி வரவு வைத்துக்கொண்ட தொகைகளைத் திருப்பித் தரவேண்டும் என்பதற்காக _ 1978 டிரிபியூனல் தீர்ப்பின் அடிப்படையில் _ தொடர்ந்து முயற்சிகளை நாம் மேற்கொண்டு, பெரும்பகுதி தொகைகளை வட்டியுடன் திரும்பவும் நமது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெற்றது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
அத்தொகைகள் வட்டியுடன் பெறப்பட்டு, புதுடெல்லி பெரியார் மய்யம் கட்டுமான செலவுக்கு துவக்க நிதியாகவே  வைக்கப்பட்டன. இத்தொகை மாத்திரம் ரூபாய் 7,57,640 ஆகும்.
இன்னமும் எங்களுக்குத் தொல்லைகளும், அரசியல் கண்ணோட்டத் தொந்தரவுகளும் இல்லாமல் இல்லை!
-உண்மை இதழ்,16-31.8.16