Thursday 3 November 2016

பள்ளி சான்றிதழில் ஜாதி, மதம் கட்டாயமில்லை

- பள்ளிகளுக்கு சுற்றறிக்கை: நீதிபதிகள் உத்தரவு

சென்னை, ஜூன் 16
 பள்ளி களில் ஜாதி, மதம் பெயரை கேட்டு மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது. மேலும், ஏற் கெனவே உள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் அது குறித்த சுற்ற றிக்கையை  அனைத்துப் பள் ளிகளுக்கும் அனுப்பவேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத் தில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக கல்வித்துறை கடந்த 1973 ஆம் ஆண்டு ஒன்று 2000 ஆம் ஆண்டு மற் றொன்று என இரண்டு அர சாணைகளை வெளியிட்டது. இதில் மாணவர்களை கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் போது ஜாதி, மதத்தை கட் டாயப்படுத்தக்கூடாது.
பள்ளிகளில் மாற்று சான் றிதழ். பள்ளி சான்றிதழ் வழங் கும் போது ஜாதி, மதம் பெயரை விருப்பபட்டவர்கள் கொடுக்கலாம். ஜாதி, மதம் என்பதை  குறிப்பிட வேண் டும் என்று பள்ளி நிர்வாகம் மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது என்று அரசா ணையில் தெளிவாக கூறப்பட் டுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள பள்ளி நிர்வாகங்கள் அமல்படுத்துவது இல்லை.
எனவே, இந்த அரசா ணையை அமல்படுத்த  பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்ப, அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். பெற் றோர்களிடம் சரியான விழிப் புணர்வு இதுகுறித்து ஏற்படுத் தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் விசா ரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரை ஞர், அரசாணையை அமல் படுத்த எல்லா பள்ளிகளுக்கும் உத்தரவிடுகிறோம். என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், உடனடியாக  அரசு அனைத்து பள்ளிகளுக்கும் புதிய சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும். அதில் அரசாணையை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்தவேண் டும் என்று குறிப்பிட வேண் டும் என்று உத்தரவிட்டனர்.
-விடுதலை,16.6.16

No comments:

Post a Comment