Wednesday 22 January 2020

சமூக நீதிக்கான கி.வீரமணி’ விருது பெற்றவர்கள் பட்டியல்



'சமூக நீதிக்கான கி.வீரமணி’ விருது பெற்றவர்கள் பட்டியல்:

1) வி.பி.சிங் - முன்னாள் பிரதமர் - இந்தியா 1996

2) சீதாராம் கேசரி - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இந்தியா - 1997

3) சந்திரஜித் - முன்னாள் மத்திய அமைச்சர் இந்தியா - 1998

4) மாயாவதி - முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் - இந்தியா - 2000

5) எஸ்.டி. மூர்த்தி - பெரியார் பெருந்தொண்டர் - சிங்கப்பூர் - 2002

6) ஜி.கே. மூப்பனார் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் - இந்தியா - 2003

7) பி.எஸ்.ஏ.சாமி - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆந்திரப் பிரதேசம் - இந்தியா - 2005

8) வீரா.முனுசாமி - மியான்மர் - யாங்கூன் - 2006

9) டாக்டர் கலைஞர் - தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் - தமிழ்நாடு - இந்தியா - 2008

10) பேரா.ரவிவர்மகுமார் - அட்வகேட் ஜெனரல் கர்நாடகா - இந்தியா - 2009

11) செல்வபெருமாள் - சமூகத் தொண்டர் - குவைத் - 2010

12) கோ.கருணாநிதி - பொதுச் செயலாளர் (ALL INDIA OBC) 2011

13) கலைச்செல்வம் - தலைவர் - பெரியார் சமூக சேவை மன்றம் - சிங்கப்பூர் - 2011

14) அனுமந்த்ராவ் எம்.பி - அமைப்பாளர் பிற்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் அமைப்பு    - இந்தியா- 2012

15) ஜகன் சி.புஜ்பால் - மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் - மகாராட்டிரா இந்தியா - 2013

16) பேராசிரியர் தானேஸ்வர் சாகு -  ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் - இந்தியா - 2014

17) நிதிஷ் குமார் - பீகார் முதல் அமைச்சர் - இந்தியா - 2015

18) மைக்கேல் செல்வநாயகம் - விடுதலை லண்டன் கிராய்டன் மாநகராட்சி துணைமேயர்  - 2016

19) பி.எஸ். கிருஷ்ணன் - முன்னாள் அய்.ஏ.எஸ். - இந்தியா - 2017

20) உல்ரிக் நிக்லஸ் - ஜெர்மனி நாட்டின் பேராசிரியர் - 2018

- விடுதலை ஞாயிறு மலர் 30 11 19

தந்தை பெரியாரது கொள்கைச் சீடர் டாக்டர் கி.வீரமணிக்கு சூட்டப்பட்ட புகழ் மாலைகளில் சில....


2) 1950 - ”இளம் பேச்சாளி” பொது மக்கள் பாராட்டு

3) 1960 - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதார   முதுகலைப் பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார்

4) 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி” என்று தந்தை பெரியார் பாராட்டு

5) 10-04-1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் “இனமானப் போராளி” பட்டம் அளிக்கப்பட்டது

6) 26-02-1996 - தந்தை பெரியார் “சமூக நீதி விருது” தமிழக அரசு  (ஜெ. ஜெயலலிதா) வழங்கியது

7)  23-04-2000 - புதுடில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் “பாரத் ஜோதி” விருது வழங்கியது.

8) 2000 - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் பாராட்டி கனடா நாட்டின் பன்னாட்டு வளர்ச்சி நிறுவனம்(CIDA - AWARDS OF      EXECELLENCE)  வழங்கியது

9) 18-01-2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், “ஆக்சுபோர்டு தமிழ் விருது” வழங்கி பாராட்டியது

10) 26-01-2003 - மியான்மரில் “பேரளிவாளர் விருது” வழங்கியது

11) 04-04-2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் “கவுரவ       டாக்டர் பட்டம்” வழங்கியது

12) 2007 - பெரியார்” திரைப்படத்தை எடுத்து, தேசிய விருது

13) 31-03-2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை “2008”ஆம் ஆண்டுக்கான “கலைஞர் விருதினை” வழங்கியது

14) 26-09-2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு    விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கப்பட்டது

15) மலேசிய திராவிடர் கழகம் “கருத்துக்கனல்” என்ற பட்டத்தை   வழங்கியது

16) 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்   சென்னையில் “பெரியார் ஒளி” விருது

17)  2010 - கோவை கே.ஜி. அறக் கட்டளை சார்பில் “ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது”       வழங்கப்பட்டது

18) 24-07-2011 - ஆந்திர மாநிலத்தில் ”ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது” வழங்கப்பட்டது

19) 06-03-2012 - சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை    ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது

20) 2019 - அமெரிக்க தலைநகர் வாசிங்டனில்    பன்னாட்டு மனிதநேய மாநாட்டில் மனிதநேய ”வாழ் நாள்      சாதனையாளர் விருது” வழங்கியது

தொகுப்பு : நூலகர் கி. கோவிந்தன்

-  விடுதலை ஞாயிறு மலர் 30 11 19

Tuesday 21 January 2020

‘சிறீ லால்பகதூர் சாஸ்திரி பெயர்க்காரணம் என்ன?

நினைவிருக்கிறதா?

நேரு மறைவிற்குப் பிறகு பிரத மரான லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு நாள் இன்று (1966).

இவர் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாஸ்திரிபற்றி உடம்பெல் லாம் மூளை என்று பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் ராஜாஜி என்ன சொன் னார் தெரியுமா?

‘‘சிறீ லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் ‘சாஸ்திரி' என்ற பட்டப் பெயர் அவருடைய ஜாதியைக் குறிக்கும் சொல் லாகவோ, குடும்பப் பெயராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதையும், காசி வித்யா பீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதாக அவரால் பெறப்பட்ட படிப்புப் பட்டமே! என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்ய வேண்டியது அவசிய மாகிறது.

அவர் சாதாரண லால்பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யா பீட சாஸ்திரி ஆவார். திரு.சாஸ்திரி என்று குறிப்பிடுவதும், திரு.பி.ஏ., திரு.எம்.ஏ., என்று குறிப்பிடுவது போன்றதாகவே ஆகும். மற்றும் லால்பகதூர் என்பதில் உள்ள பகதூர்  என்பதும் ஒரு பட்டமோ அல்லது தகுதி காட்டும் கவுரவமோ அல்ல. அது அவரது சொந்தப் பெயரே ஆகும்'' என்று சி.ஆர். என்று கையொப்பம் இட்டு எழுதினார் (‘சுயராஜ்யா', 1.2.1964) என்றால், இதன் பொருள் என்ன?

லால்பகதூர் சாஸ்திரி பூணூல் போட்ட நம்பளவாள் இல்லை. நம்பளவாள் என்று ஏமாந்துவிடாதீர்கள் என்று ஜாடை காட்டுவதுதானே!

கவர்னர் ஜெனரலாக இருந்த பார்ப்பனருக்கே இந்தப் புத்தி என்றால், மற்ற பார்ப்பனர்களைப்பற்றிக் கேட்கவா வேண்டும்?

- விடுதலை நாளேடு 11 1 20

Tuesday 7 January 2020

அறிவு நாணயமற்ற அக்கிரகார அம்பி ( மலம் என்றது எதை?)

இதோ ஆதாரம்:

தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்)

ஒரு சமயம் இவர் தஞ்சையில் ஒரு வாலிபர் சங்கத்தில் தலைமை தாங்கினார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமா யணத்தைக் குறை கூறுவது தவறு என் றும், கலையுணர்ச்சிக் காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றும் கூறினார். அதற்கு இவர் கூறிய பதில்:

"நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான்.அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக் கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?" என்றார்.

ஆதாரம்: சாமி. சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர்' -  பக்.162

கம்பராமாயணத்தைப்பற்றி பெரியார் சொன்னதை  திருக்குறளுக்குச் சொன்னதாக மோசடி செய்யும் பார்ப்பனரைத் தெரிந்து கொள்வீர்!

"தமிழகத்தில் திராவிட நாத்திக வாதத்தை ஒழிக்கப் பிறந்தது 'துக்ளக்', அந்தத் திராவிட நாத்திக வாதத்தின் மிச்சம் இருக்கும் வரை 'துக்ளக்'கின் தேவையும் இருக்கிறது. தமிழகத்தில் பெரியாரை எதிர்த்தால் அது பெரிய விஷயம் என்று நினைத்த காலத்தில் மிகத் துணிச்சலாகப் பெரியாரை விமர்சனம் செய்ய முடியும் என்று காட்டியவர் சோ. 'திருக்குறளை மலம் என்று சொன்னவரை தந்தை பெரியார் என்று எப்படி அழைக் கிறீர்கள்' என்று துணிச்சலாகக் கேள்வி கேட்டவர் சோ" ('துக்ளக்' 1.1.2020)

இவ்வாறு பேசியிருப்பவர் - 'சோ'வின் வீட்டிலிருந்து 'துக்ளக்'கைக் கபளீகரம் செய்து கொண்டுள்ள எஸ். குருமூர்த்தி அய்யர்தான்.

திராவிட நாத்திக வாதத்தின் மிச்சம் இருக்கும் வரை 'துக்ளக்' இருக்குமாம்.

1971இல் நடந்தது மறந்து போய் விட்டதா? சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர் வலத்தில்  ராமன் செருப்பாலடிக்கப் பட்டார்; ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கிற திமுக வுக்கா ஓட்டு என்று இதே 'துக்ளக்' சிறப்பிதழை எல் லாம் வெளியிட்டு பக்கம் பக்கமாக எழுதியதே - தமிழ்நாட்டு மக்கள் என்ன பதிலடி கொடுத்தார்கள்?

ஆமாம், 'ராமனை செருப்பாலடித்த' தி.க. ஆத ரிக்கும் திமுகவுக்குதான் ஒட்டு' என்று மொத்தடி கொடுக்கவில்லையா?

1967 தேர்தலில் 138 இடங்களை மட்டும் பிடித்த  திமுக 'துக்ளக்' கும்பல் பிரச்சாரம் செய்த ராமனை செருப் பாலடித்த தி.க. ஆதரித்த திமுகவுக்கு 1971இல் கிடைத்த இடங்கள் 183 என்பது 'சோ' கும்பலுக்கு மறந்து போய் விட்டதா!

அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு "இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது" என்று ஒப்புக் கொண்டு  இவாளின் மூதறிஞர் ராஜாஜி கையொப்பமிட்டு 'கல்கி'யில் (4.4.1971) எழுதி சரணாகதி அடைய வில்லையா?

ஆத்திகம் தோற்று நாத்திகம்  வென்றது என்பதை ஆச்சாரியாரே ஒப்புக் கொண்ட பிறகு இந்த நண்டு சிண்டு குருமூர்த்திகள் எம்மாத்திரம்!

1971ஆம் ஆண்டுக்குக்கூட  போக வேண்டாம். எட்டு மாதங்களுக்கு முன் திருவாளர் குருமூர்த்தி அய் யர்வாள் ஆசிரியராக வந்து விட்ட நிலையில், 'துக்ளக்' ஒப்புக் கொண்டு சரணா கதி அடைந்தது தெரியுமா?

கேள்வி: மனிதர்களைப் படைத்த கடவுளாலேயே மனிதர்களின் தேவை களை நிறைவேற்ற முடியாதபோது, ஒரு எம்.பி.யால் எப்படி நிறைவேற்ற முடியும் என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறி யுள்ளது நியாயமா?

பதில்: நியாயமோ இல்லையோ அவர் கூறியது உண்மை ('துக்ளக்' 10.4.2019 பக்கம் 27).

இதன் மூலம் குரு மூர்த்தி அய்யர் என்ன சொல்ல வருகிறார்? கடவுளால் மனிதர் களின் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்று ஒப்புக் கொண்ட இந்த சிகாமணி தான் திராவிட நாத்தி கத்தைப் பற்றிச் சற்றும் வெட்கமில் லாமல் நாக்கைச் சுழற்றுகிறார்!

இன்னொரு பித்தலாட்டத்தை பிசிறு இல்லாமல் அரங்கேற்றியுள்ளார் இந்த அக்கிரகார அம்பி.

திருக்குறளை மலம் என்று சொன் னார் பெரியார் என்றும் பேசியுள்ளார்.

பலமுறை எழுதியாயிற்று. சவால் என்றும் கூறியாயிற்று.திருக்குறளை மலம் என்று எங்கே சொன்னார் பெரியார்? என்று  பல முறை 'விடுதலை' கேள்வி எழுப்பினாலும் நாணயமான முறையில் பதில் சொல்ல வக்கற்ற இந்த அறிவு நாணயமற்ற ஆசாமி மறுபடியும் திருப்பித் திருப்பி கோயபல்ஸ் பாணியில் பொய்யை அவிழ்த்துக் கொட்டி வருகிறார்.

தந்தை பெரியார் உண்மையிலே சொன்னது திருக்குறளையல்ல - கம்ப இராமணத்தைப்பற்றி தஞ்சையில் கூறியது ('தமிழர் தலைவர்' பக்கம் 162) என்று ஆதாரத்துடன் எடுத்துக் கூறிய பிறகும், குடுமி குருமூர்த்திகள் 'மூடனும் மூர்க்கனும் கொண்டது விடான்' என்ற பழமொழிக்கு ஏற்ப வாந்தி எடுப்பதை 'துக்ளக்' இதழை வாங்கும் தமிழர்கள் புரிந்து கொள் வார்களாக!

- மின்சாரம்

- விடுதலை நாளேடு 31 12 19