பாரதி விழா
(மணியம்மை)என் அருமை திராவிட மக்களே நீங்கள் இம்மாதம் நடந்த பாரதி விழாவில் சிலர் கலந்து கொண்டீர்கள், சிலர் நீங்களே விழாக் கொண்டாட்டத்தை நடத்தினீர்கள்.
உங்களுக்கு பாரதி திராவிடரா! ஆரியரா என்பது தெரியவில்லை. பாரதி ஆரியப் பற்று உள்ளவரா திராவிடப் பற்று உள்ளவரா என்பதும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி,சமணர் கழுவேற்ற பட்ட உற்சவம் ஆகியவை போல் பாரதி விழாவும் கொண்டாடினீர்கள்.
பராதியின் திராவிடப் பற்றும், ஒப்ப நோக்கமும் கீழ்வரும் அவரது பாட்டு களில் காணப்படும் குறிப்புகளில் இருந்து உணர்ந்து பாருங்கள்.
பிறகும், "அப்படித்தான் செய்வோம் நீ யார் கேட்பது"
என்றால் உங்ககளுக்கு வேறு யார் தான் மான உணர்ச்சி அளிக்க முடியும். பராதியின் உள் நிலைமை தெரிய அவரது பாடல்களை சற்று கூர்ந்து பாருங்கள்.
பாரதியின் நாட்டுப்பற்று
"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"
பாதியின் இனப்பற்று
"முன்னையிலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்" "ஆரிய ராணியின் வில்" "ஆரிய ராணியின் சொல்" "ஆரிய தேவியின் தேர்"
பாரதியின் நாடு
''"வானாறு பேரிமய வெற்புமுதல் பெண்குமரி
ஈறாகும் ஆரியநா டென்றே அறி."
பாதியின் மகிழ்ச்சி
'ஆரியராட்சி பேராளர்நயன்ரோ'
பாரதியாரின் நாட்டுப் பெருமை
"ஆதிமறை தோன்றிய னாரிய நாடே"
பாரதியின் கடவுள் (இந்திரனை தேவர்கள் வேண்டுவது போலவே) துதி (கிருஷ்ணன்)
"ஆரியர் தம் தர்ம நிலை ஆதரிப்பான்"
"ஆரியர் பாழாகா தருமறையின்
உண்மை தந்த சீரியர்’’
"எங்களாரிய பூமியேனும் பயிர் மங்களம் பெற"
"ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே"
"ஆரிய! நீயும் நின் அறம் மறந்தாயோ?"
"வெஞ்செயலரக்கரை வீட்டிடு வோனே"
"ஆரியர் கோனே"
பாரதியாரின் மொழிப்பற்று (ஆங்கிலம் பற்றி )
"ஆரியர் க்கிங்கருவருப்பாவதை"
பாரதி தமிழ்ப்பற்று
"ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு . .......
இலக்கணஞ் செய்து கொடுத்தான்"
"ஆன்ற மொழிகளிலுன்னே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"
பாரதியாரின் ஆசை
"ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள்"
என்றெல்லாம் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள் பற்று ஆகிய வாவன பாரதி பாடல் நினைப்போர்களே பராதியாரின் B பாகத்தை நன்றாய் சுவையுங்கள்.
தமிழருக்கு மானமிருந்தான் தமிழ் நாடும், தமிழ் மொழியும் இவ்விழிமை யில் இருக்குமா? இங்கும் ஆரியர் ஆதிக்கம் இன்னவர் நிலையில் இருக்குமா?
- குடியரசு, 13.9.1914, புரட்டாசி
.png)