Showing posts with label கிருத்துவம். Show all posts
Showing posts with label கிருத்துவம். Show all posts

Friday, 22 May 2020

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்



"இயேசு என்றொரு மனிதர் இருந்தார் " என்ற தலைப்பில் சேவியர் என்பவர் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன்.

இன் நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

கிருத்தவர்களின் வேத நூலான 'புதிய ஏற்பாடு' என்ற நூலை படிப்பவர்களுக்கு இயேசுவின் கதை தெளிவில்லாமல் இருப்பதை அறிவார்கள். இயேசுவின் கதையை மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்கள் எழுதியதாக புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் ஒருத்தவருக்கு ஒருத்தர் முரண்பாடாக கூறியுள்ளனர்.

இந் நூலில் முறையாக தொகுத்து தெளிவாக படிக்கும் வகையில் எழுதியுள்ளார். யோவான் தான் இயேசுவை கடவுளாக காண்பிக்கும் வகையில் சிறப்பித்து எழுதியுள்ளதாக கூறியுள்ளார். 

- எனது முக நூல் பக்கம்,12.4.20

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்



"யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்" என்ற எஸ். செண்பகப் பெருமாள் அவர்கள் எழுதிய நூலை இன்று படித்து முடித்தேன். இது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.

குலதெய்வ வழிபாடாக தொடங்கிய யூதமதம் பரிணாம வளர்ச்சி பெற்று பெருந் தெய்வ வழிபாடாக மாறியது குறித்து விளக்கிக் கூறுகிறது இந்நூல். யூதர்கள் சமாரியர்கள் என இரு பிரிவாக பிரிந்தது குறித்தும், பைபிள் படி இயேசு யூதர்கள் இடத்தில் பிறந்து யூதர்களுக்கான வழிகாட்டியாக அறியப்பட்டார் என்றும், பிறகு வந்த பவுல் இயேசுவை கிறிஸ்துவாக மாற்றி அனைத்து தரப்பு மக்களுக்கான கடவுளாக மாற்றும் வகையில் பைபிளை மாற்றினார், என புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு ஆகியவற்றிலிருந்து ஏராளமான ஆதாரங்களை எடுத்து விளக்கிக் கூறியுள்ளார். 
- எனது முகநூல் பக்கம், 10.4.20

பாரபாஸ் - நோபல் பரிசு பெற்ற நாவல்



இயேசுவை கடவுளாக நம்பலாமா நம்பக்கூடாதா என்பதை நடுவாகவைத்து இயேசுவிற்கு பதிலாக சிலுவை தண்டணையிலிருந்து தப்பித்ததாக சொல்லப்படும் பாரபாஸ் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கும்வகையில் 1950ல் 'பேர் லாகர் குவிஸ்ட்' எனும் தெற்கு சுவிடனை சேர்ந்த எழுத்தாளரால் எழுதப்பட்ட 'பாரபாஸ்' என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை இன்று படித்து முடித்தேன்.

கர்ப்னையாக சொல்லப்பட்ட செய்திகளை (அற்புதங்கள்) நம்பி வெறித்தனமாக பரப்பப்பட்ட மதம் கிருத்தவ மதம் என்பதை நேரடியாக சொல்லாமல் கதையாக சொல்கிறார் நாவலாசிரியர்!
- எனது முகநூல் பக்கம், 7.4.20