Showing posts with label வருமான சான்றிதழ். Show all posts
Showing posts with label வருமான சான்றிதழ். Show all posts

Sunday, 8 August 2021

பள்ளிகள் மூலம் ஜாதி, வருமான சான்றுகள் - அமைச்சர் தகவல்


சென்னை,ஆக.7- பள்ளி,  கல்லூரிகளில் சேரும் மாணவர் களுக்கு ஜாதிவரு மானச் சான்றுகளை பள்ளிகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித் துள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சென்னை மாவட் டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்வருவாய்பேரிடர் மேலாண்மைத் துறைஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் 5.8.2021 அன்று நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3  மாவட்டங்களில் பட்டாவழங்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றனஅதை ஒழுங்குபடுத்த வேண்டும்விரைவாக பட்டாவழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்ஆற்றின் கரையோரம் வசிப் போருக்கு உரிய இடவசதி செய்து கொடுத்த பின்னர்தான் ஆக்கிர மிப்புகள் அகற்றப்படும்அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டு வரு கின்றன.

ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தால்பாதிக்கப்படுவோர் உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர்இதுபோன்ற சிக்கல்களை தடுக்க ஆக்கிரமிப்பை அகற்றிய அடுத்த நாளே,நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறதுஇவர்களுக்கு தேவையான ஜாதிவருவாய்சான்றுகளை விண்ணப்பித்த ஒருசில நாட்களில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் தர வாய்ப்புஉள்ளதா எனவும் ஆராயு மாறு முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிசென்னை ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.