Showing posts with label சீர்காழி கோவிந்தராசன். Show all posts
Showing posts with label சீர்காழி கோவிந்தராசன். Show all posts

Friday, 4 December 2020

டாக்டர் சீர்காழி கோவிந்தராசன் மறைவு

தமிழினத்தின் தன்னிகரற்ற இசை மாமன்னராக விளங்கிய, உலகின் அனைத்துப் பகுதியிலும் தமிழிசையினைப் பரப்பி, தமிழினத்தின் ஒளிமுத்தாய் விளங்கிய நம் அருமை சகோதரர் டாக்டர் சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் 23.03.1988 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி நமக்குப் பேரிடியான செய்தியாகக் கிடைத்தது. 24.03.1988 அன்று காலை ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். ‘சீர்காழி’ அவர்கள் தமிழர்களின் கல்வி வாழ்வுக்கு அடித்தளமான தண்ணார் தமிழ் வளர்க்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்பு அதே இசைக் கல்லூரிக்கு முதல்வராகும் அளவிற்கு டாக்டர் பட்டம் பெற்ற மாபெரும் இசை மேதை!

தந்தை பெரியார் அவர்களிடமும், அவர்தம் இயக்கத்திடமும் பரிவும் _ பாசமும் கொண்டவர். பண்பின் உறைவிடம் _ நயத்தக்க நாகரிகம் கொண்ட செம்மல்.

நான் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். இவரது செல்வன் இன்னிசை இளவரசர் டாக்டர் சிவ.சிதம்பரம் அவர்களுக்கு ஆறுதல் கூறித் திரும்பினேன். தமிழ்நாட்டு மக்களிடம் தமிழன் பணத்தால் வியாபாரம் செய்யும் ஒரு பத்திரிகை  ஒரு தமிழ் இசைக் கலைஞனை சீர்காழி அவர்களை, இப்படி பச்சைப் பார்ப்பன வெறியோடு அவமானப்படுத்தியது. இதற்குப் பெயர்தான் பார்ப்பன புத்தி!

இதையும் சுட்டிக்காட்டி ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தேன். அதே வேளையில் கருநாடக இசைப் பார்ப்பனர் டாக்டர் இராமநாதன் இறப்புச் செய்தியை மட்டும் மிகப் பெரிதாக ‘இந்து’ பத்திரிகை வெளியிட்டது என்பதைப் பாருங்கள். இரண்டையும் தனித்தனியாக 24.03.1988 இந்து நாளேட்டிலிருந்து தனியாக போட்டிருந்தது. பாருங்கள்! இந்து ஏட்டின் பார்ப்பன புத்தி! என்று வன்மையாகக் கண்டித்து எழுதினேன்.

24-3-1988 விடுதலையில் இந்து ஏட்டின் பார்ப்பன புத்தியை வெளிப்படுத்திய செய்திி 

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

- உண்மை இதழ், ஜூலை,16-31.19