Wednesday 21 June 2017

பார்ப்பனர் இழிசொல்லா?

பூரணச்சந்திரன் கேள்வி-பதில்கள்

கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?

கதிரேசன், சென்னை

இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.

இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும்,  யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்”  என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம்.

-1.3.2012

Sunday 4 June 2017

சிறந்த கல்லூரிகள் தமிழ் நாட்டில் தான்!

" இந்தி படிக்காததால் முன்னேறவில்லை "
எனக் கூறும் கும்பல்களின்
கவனத்திற்காக ......
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின் படி ,,,,,,,
1) முதல் 100 சிறந்த கல்லூரிகளில் - 37
கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.
2) பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும்
மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில்
இருபத்தோ வெறும் மூன்றுதான் ( 3 ).
3) இதேபோல இந்தி பெல்ட்
மாநிலங்களான ......
மத்தியப்பிரதேசம் - 0
உத்தரப்பிரதேசம் - 0
பிகார் - 0
ராஜஸ்தான் - 0
போன்றவற்றிலிருந்து ஒன்று கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
4) முதல் 100 சிறந்த பொறியியல்
கல்லூரிகளில் ,,,,,,
தமிழ் நாடு - 22
உத்தரப்பிரதேசம் - 6
குஜராத் - 5
மத்தியப்பிரதேசம் - 3
ராஜஸ்தான் - 3
பிகார் - 1
5) முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் ,,,,,,
தமிழ் நாடு - 24
உத்தரப்பிரதேசம் - 7
ராஜஸ்தான் - 4
குஜராத் - 2
மத்தியப்பிரதேசம் - 0
பிகார் - 0
இந்தியை புறக்கணித்து,
தாய் மொழி தமிழுக்கும்
ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் ,,,,,,,,
இன்று,
" தமிழ்நாடு "
கல்வி,
மருத்துவம்,
சமூக நலன்,
போன்ற பலவற்றில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐடி, சாஃப்ட்வேர், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் நல்ல வேலைவாய்ப்பு பெற காரணமாக உள்ளது.
அதேநேரத்தில்,
இந்தியை நம்பி,
ஆங்கிலத்தை ஒதுக்கிய
வடமாநிலங்கள் பலவும் நவீன தொழில்நுட்பத்திலும், சாஃட்வேர் போன்ற வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கியுள்ளனர்!
இந்தியை மட்டுமே நம்பிய வட மாநில மக்கள் ......
இந்தி பேசாத,
தென் மாநிலங்களுக்கு
கூலி வேலைக்கு அதிகம் பேர் வந்து பிழைக்கின்றார்கள்.
இந்தியின் அவசியம் தேவைப்பட்டால் இரண்டு மாதாங்களில் கற்கலாம், பானிபூரிக்காரன் தமிழ் கற்றதுப் போல ......
[ குறிப்பு ] :
இந்தி மொழிதான் தேசிய மொழி என்பதே தவறான தகவல். தேசிய மொழி என்ற அந்தஸ்து எந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை ...!!!
--- இந்தியை, ஆரியரை ஒழிப்போம் இந்தியாவை முன்னேற்றுவோம்
-முகநூல்-தமிழ் இராஜேந்திரன்