Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Friday, 19 February 2021

பெரியார் சமூக நீதி விருது அறிவிப்பு & சமூக நீதிகாத்த வீராங்கனை

8.09.1994 சமூகநீதி பாதுகாப்புப் பேரவையின் சார்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில் அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை எனப் பாராட்டி பட்டம் கொடுத்தோம்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

அந்தப் பாராட்டு விழாவின் போது, தந்தை பெரியார் அவர்களது பெயரில் தமிழக அரசு சார்பில் சமூகநீதிக்காக உழைத்த ஒருவருக்கு பெரியார் விருது அளிக்கப்பட வேண்டுமென்று நமது இயக்கச் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை அங்கேயே ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் ஆண்டு, 1995 முதல் தமிழக அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்படும் என்று  அறிவித்தார்கள். நமது முதலமைச்சரின் இந்த முடிவினை செய்தி வாயிலாக அறிந்த சமூகநீதிக்காகப் பாடுபடும் வடபுலத் தலைவர்களில் சிலர் கூட என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெரிதும் பாராட்டினர். வெளிநாட்டுத் தமிழர்களும் தங்களது பெருமகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

“5 சவரன் பதக்கம் மற்றும் ஒரு பாராட்டு இதழுடன் கூடியது பெரியார் விருது என்பது அறிந்து பெரியார் தொண்டர்களும், சமூகநீதி விரும்பிகளும் மிகவும் மகிழ்வது திண்ணம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 16-31.10.20