கிருத்துவர்கள் சிந்தனைக்கு!
"ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம், செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது"என்று (ரோமர் 5:12)ல் இருக்கிறது.
இயேசு இறந்தார் என்று (மத்தேயு: 27:50), (15:37 மாற்கு), (லூக்கா:24:46) (யோவான் 19:30) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. அப்படியாகின் முன்னால் கூறப்பட்டபடி, இயேசுவும் பாலம் செய்ததால்தான் இறந்தார் என்று தெரியவருகிறது.
போப், கிருஸ்தவர்கள் ஆகியவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இறந்து கொண்டும் இருக்கிறார்கள் ஆகையால் கிருஸ்தவர்களும் பாவம் செய்தவர்கள் என்று தெளிவாகிறது.
"தான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா’ என்றார். ஆகையால், அந்தச் சீசன் மரிப்பதில்லையென்கிற பேச்சு, சகோதரிகளுக்குள்ளே பரம்பிற்று. ஆனா லும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்னவென்று சொன்னார்". என்று (யோவான்:21:22,23 )ல் இருக்கிறது.
இயேசுவின் இரண்டாம் வருகை சமீபத்தில் இருக்கிறது" என்றுதான் கூறுகின்றனர். அப்படியானால் இயேசு மறுமுறை இன்னும் வரவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியாயின் ‘சீசன்’ இன்றளவும் உயிருடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதனை யாராவது, காண்பிக்க தயாரா?
(எசேக்கியல்: 18:4,20) மற்றும் (ரோமர்: 6:23) ல்
''பாவத்தின் சம்பளம் மரணம்,. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று, தேவன் கூறியுள்ளார் என்றும் (யோவான் : 5 : 29) "பிரேத குழியிலிருந்து நன்மை செய்பவர்களை ஜீவனை அடையும் படியும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும் படியும், எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்" என்றும் (மத்தேயு: 25: 32, 33, 34 41, 46)ல் "பாவம் செய்தவர்கள் பிசாசிற்காகவும், அவன் தூதர்களுக்காகவும், ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவார்கள். நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவர்" என்றும் இருக்கிறது.
எசேக்கியல், ரோமர் இரு வரும் பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும் என்று கூறுகின்றனர். ஆனால் யோவானும், மத்தேயுவும் “ஆத்துமா சாகாது” என்றும், “பாவம் செய்த ஆத்துமா நித்திய ஆக்கினையை அடையும், நன்மை செய்த ஆத்துமா நித்திய ஜீவனை அடையும்” என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் எப்படிப்பட் முரண்பாடு!
(யோவான்:8:51) ல் “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே. உங்களுக்குச் சொல்கிறேன். என்றார்’ என்று இருக்கிறது.
யோவான்: 8:51 ல் இயேசு வார்த்தையைக் கைக்கொண்டால் மரணத்தை காண்பதில்லை’ என்று இயேசு கூறுவதாக கூறி விட்டு, 5:29 ல்
"மரணமே கிடையாது, ஆத்மாவிற்கு ஆக்கினை தான் உண்டு" என்று கூறுகிறார்.
யோவானே இப்படி முன்னுக்கு பின் முரண்பாடாக கூறுகிறார். எசேக்கியல். ரோமர், யோவான், மத்தேயு ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஆத்துமாவை பற்றி கூறுகின்றனர் காரணம் என்ன. வென்று புரிகிறதா? காரணம். இதுதான் ஆத்துமா என்பது ஒன்று தனியாக இல்லை. அதனால் அதை மறைப்பதற்காக ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மட்டும் பொய்யை சொல்லி வைத்துள்ளனர். ஆகையால் கிருஸ்தவர்களும், மற்றவர்களும் கோபப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!.
குறிப்பு
: இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த புதிய ஏற்பாட்டிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
- ர. பார்த்தசாரதி சென்னை-34
- உண்மை இதழ், பக்கம்-31
No comments:
Post a Comment