Wednesday, 19 August 2026

இயேசுவின் விண்ணேற்றம் - செ.ர.பார்த்தசாரதி

 இயேசுவின் விண்ணேற்றம்


- செ.ர.பார்த்தசாரதி


ஏசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பின் கல்லறையில் வைக்கப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் பிறகு 40 ஆம் நாள் விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.


கடைசியாக விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இடம் இப்பொழுது முகமதியரிடம் இருக்கிறது. விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் நாளின் போது (இரண்டு நாள்கள்) மட்டும் கிறித்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் முஸ்லீம்களின் மசூதியாக இருக்கிறது.


'ஏசு சிலுவையில் அறையப்படவுமில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை. சிலுவையில் அறையப்படுவது போல் ஒரு தோற்றத்தை கடவுள் (அல்லா) ஏற்படுத்தினார் என திருக்குர்ஆனில் உள்ளது.(திருக்குர்ஆன் அன்-நிஸா (An-Nisa) 4ஆவது அத்தியாயத்தின் 157-வது வசனம்) 


முஸ்லீம்கள் (அகமதியா பிரிவு) ‘இயேசு யூதர்களிடமிருந்து தப்பித்து இமய மலைப் பகுதியில் வந்து வாழ்ந்து பிறகு இயற்கையாக மரணமுற்றார்’ என்றும் அவருடைய சமாதி காஷ்மீரில் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.


குர்ஆனுக்கு முந்தைய 'தவ்ராத்' வேதத்தில், ‘இயேசுவின் சமாதி, முகமது நபியின் சமாதியின் அருகில் வைக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதாக ‘அல்ஹதீஸ்' என்ற முஸ்லீம்களின் வேத நூலில் உள்ளது. (திர்மிதீ,வசனம் 3,617)


ஆகையினால்தான் இன்றளவும் முகமது நபியின் சமாதியின் அருகில் எதுவும் வைக்கப்படாத காலியான சமாதி ஒன்று இருப்பதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர்.


'இயேசு உயிர்த்தெழுந்து 40ஆம் நாள் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது உண்மையாயின் 'தவ்ராத்'தில் சொல்லப்பட்ட வசனம் பொய்யாகிவிடுகிறது.காலியாக உள்ள சமாதி . அடைக்கப்படாமலே 'தவ்ராத்' வேதம் பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும்.


முஸ்லீம்கள் சொல்வதுபோல் காஷ்மீரில் அவர் இருப்பினும், 'தவ்ராத்' வசனம் பொய்யாகிவிடுகிறது.


இவையெல்லாம் போகட்டும், ‘விவிலியம்' (பைபிள்) என்ன சொல்கிறது என பார்ப்போம்.


'பதினோரு சீடர்களும் இயேசு குறித் திருந்த கலிலேயாவிலே உள்ள ஒரு மலையில் இயேசுவை சந்தித்தனர். அங்கிருந்து அவர் மறைந்தார்" என மத்தேயு கூறுகிறார். (28:16)


மாற்குவும் ‘கலிலேயாவில் பதினொரு வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இயேசு வந்து அவர்களுடன் பேசிவிட்டு பரலோகம் சென்றார் என்றும் கூறுகிறார். (16:7,14,19)


ஆனால் லூக்காவோ 'எருசலேம் அருகிலுள்ள பெத்தானியாவில் சீடர்களை ஆசீர்வதித்துவிட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்' என்று கூறு கின்றார். (24:50,51)


யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையில் சீடர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயேசு வந்து, அவர்களை அழைத்து, பேசிக்கொண்டே சென்றார் (யோவா: 21)


அப்போஸ்தலரோ, ‘எருசலேமுக்கு பக்கத்தில் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு அவரை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது' என்கிறார். அப்போஸ்தலர் (1: 1,9,12)


இந்த அப்போஸ்தலர் (1: 3) மட்டும் தான் ‘இயேசு உயிர்த்தெழுந்து 40 ஆம் நாள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்’ என்று கூறுகிறார். மற்றவர்கள் நாள் கணக்கைச் சொல்லவில்லை.


பக்கம் -13


மத்தேயுவும், அப்போஸ்தலரும் கலிலேயாவில் உள்ள மலையில், இயேசு பரமேறிச் சென்றதாக கூறுகின்றனர்.


ஆனால் யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையிலிருந்து பரமேறிச் சென்றதாக கூறுகிறார்.


இதைவிட அதிசயம் என்னவென்றால் பழைய பாலஸ்தீன தேசத்தில், ஒரு கோடியில் கலிலேயோ இருக்கிறது. இதன் எதிர் கோடியில் எருசலேம் இருக்கிறது. இதன் அருகிலுள்ள பெத்தானியா விலிருந்து இயேசு பரமேறிச் சென்றதாக லூக்கா சொல்கிறார்.


ஏதோ பக்கத்து ஊர்களை சொன்னாலும் பரவாயில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறுகின்றனர்.


இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவர் அருகில் இரு கள்ளர்களையும் அறைந்திருந்தனராம். அவர்களில் ஒருவன் இயேசுவை திட்டினானாம், மற்றவன் வாழ்த்தினானாம்.. வாழ்த்தியவனைப் பார்த்து "இன்றே நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய்' என்று சொன்னாராம்.


இந்த வசனப்படி 'இயேசு 40ஆம் நாள் மேலே சென்றார்' என்பது பொய் யாகிறது. இயேசுவை அறையப்பட்ட அன்றே மேலுலகம் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது.


இதிலிருந்து பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றதனால், இயேசு பரமேறிச் சென்றதாகச்   சொல்லப்படுவது எல்லாம் பொய்யான கட்டுக்கதை என்பதை அறியலாம்.


- உண்மை இதழ், 15.09.1987, 
பக்கம்-13,14











No comments:

Post a Comment