Showing posts with label அறக்கட்டளை. Show all posts
Showing posts with label அறக்கட்டளை. Show all posts

Friday, 8 October 2021

'கடவுள்' பெயரில் அறக்கட்டளை, தனி நபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


சென்னை,அக்.7- 'கடவுள் பெயரில்தனியார் அறக் கட்டளைதனி நபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாதுஎனசென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு டன் அறிவு றுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்தவெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட் டம்திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில்வைகாசி மாத பிரம்மோற்சவ விழாஇரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. 'எதிர்கா லங்களில் உற்சவங்களை நடத்தஜீயர்கள்உள்ளூர் காரர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண் டும்எனகூறியிருந்தார்.

இம்மனுநீதிபதிகள் ஆர்.மகாதேவன்ஆதிகேச வலு அடங்கிய சிறப்பு அமர்வில், 6.10.2021 அன்று விசாரணைக்கு வந்ததுதமிழ்நாடு அரசு தரப்பில்சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்நவ., 10 முதல், 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 'கரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப் படவில்லைஇதில்கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லைநிகழ்ச்சிக்காகபல சபாக் கள் சார்பில்பணம் வசூ லிக்கப்படுகிறதுஎன தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'கடவுள் பெயரில்தனி நபர்கள்தனியார் அறக்கட்டளைகள் நன் கொடை வசூலிக்கக் கூடாதுஎனநீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித் தனர்உடனேதொலை வில் இருந்து வரும் பக் தர்களுக்கு அன்னதானம் வழங்கநன்கொடை வசூலிப்பதாகமனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட் டதுஅதற்கு நீதிபதிகள், 'பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம்சட்ட விரோத அம்சங்கள் ஏதே னும் சுட்டிக் காட்டப்பட் டால்நீதிமன்றம் தலை யிடும்என தெரிவித்தனர்.