Showing posts with label படக்கதை. Show all posts
Showing posts with label படக்கதை. Show all posts

Tuesday, 12 May 2020

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படக் கதை


தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படக் கதையாக விளக்கும் நூல். படங்கள் செம்மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த இ.வி.சிங்கன் அவர்கள் இவிஎஸ் பப்ளிஷர்ஸ் என்ற வெளியீட்டாளர் மூலம் சிங்கப்பூரிலிருந்து வெளியிட்டுள்ளார்.

இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நூல் ஆகும்
பக்கங்கள் - 32 பெரிய அளவு நூல்

இந்த நூலை பார்த்து படிக்க வேண்டுமென்றால் கவலைப்பட வேண்டாம் தியாகராயர் நகரிலிருக்கும் எஸ் எஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள பெரியார் ஈ வே ராமசாமி என்ற படக்கதை நூலை வாங்கி படித்துக் கொள்ளலாம். ஏனென்றால் சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட இந்த படக்கதையை மாதிரியாக வைத்து தான் இந்த பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

தொலைபேசி :9444280158



தந்தை பெரியாரின் வாழ்க்கை சிறுவர்களுக்காக படக்கதை


தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக படக்கதை மூலம் சிறப்பாக வரைந்து மனதில் பதியும்படி பெரியார் ஈ.வெ.இராமசாமி என்ற பெயரில் எஸ் எஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது. குழந்தை இலக்கிய மாமணி முனைவர் சு. சௌந்தர்ராஜன் அவர்கள் கதை உரையாடல் எழுதியுள்ளார் படங்களை தக்சின் என்பவர் வரைந்துள்ளார்.
விலை ரூ35.00
முதல் சுயமரியாதை மாநாடு 1929இல் நடைபெற்றது; ஆனால் இதில் 1927 என எழுதப்பட்டுள்ளது. எழுத்துப் பிழையாக கூட இருக்கலாம் என நினைக்கையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சிங்கன் என்பவர் வெளியிட்ட பெரியார் ஈ.வெ.ரா என்ற படக்கதையை மாதிரியாக கொண்டு வரைந்து வெளியிடப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதிலும் தவறாக 1927 என்று தான் உள்ளது.