Monday 23 July 2018

தகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா?

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை!

புள்ளி விவரங்களுடன்  திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது


புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக் கல்லூரி யில் சேர்வதற்குத் தகுதி வேண்டும்; அதற் காகத்தான் நீட் தேர்வு என்று சொல் லுகிறார்கள்; அதேநேரத்தில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய் கொடுத்து சேர்கிறார்களே, அப்பொழுது மட்டும் தகுதி திறமை பாதிக்கப்படாதா என்ற கேள்விக்கு என்ன பதில்? தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (16.7.2018) புள்ளி விவரங்களுடன் வெளி யிட்ட தகவல்கள் இதோ:
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப் பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலமாக நடைபெற்று வந்தது-.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதன் பின்னர், அதன்படியே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியபாடங்களில்போதுமானமதிப் பெண்களைப் பெறாத மாணவர்கள் மருத் துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2017ஆம் ஆண்டில் நீட் தேர்வெழுதிய மாணவர்களில் மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 400 பேர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில்10-க்கும்குறைவானமதிப் பெண்களைபெற்றுள்ளனர். 110மாண வர்கள்மதிப்பெண்களையேபெறாதவர் களாகவும், தவறான விடைகளால் எதிர் மதிப்பெண்களைப் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையோர் தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாடங்களில் பூச்சியம் மதிப் பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு தகுதியில்லாமலேயேஅனுமதி அளிக்கப் பட்டதுஎப்படி?என்கிற கேள்வி தற் பொழுது எழுந்துள்ளது. நீட் தேர் வில் பாடங்களின் அடிப்படையில் மதிப் பெண்கள் பெறுவது குறித்து அக்கறை காட்டப்படவில்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாடவாரியாக குறைந்த பட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று முதல் அறிவிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆய்வுத்தகவல்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி,
2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வின்படி, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட  1,990 மாணவர்கள் பாட வாரியாகப் பெற்ற மதிப்பெண்களை ஆராய்ந்தபோது, 720 பேர் 150-க்கும் குறைவாக  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10-க்கும் குறைவான மதிப்பெண்களை, இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது இரண்டு பாடங்களிலும் பூச்சியம் மதிப் பெண்கள் பெற்றவர்களாக  530 பேர் உள் ளனர். வசதியான மாணவர்கள் மதிப்பெண் களைப் பற்றிய கவலையின்றி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அனுமதியைப் பெறுகிறார்கள். இதுபோன்று 530 பேரில் 507 மாணவர்கள்  தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான விடுதி, உணவு, நூலகம் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கான கட்டணங்களில்லாமல், கல்விக்கட்டணம் மட்டும் ரூ17 லட்சம் ஓராண்டில் பெறப் படுகிறது. மதிப்பெண்களைப்பற்றி கவலையின்றி வசதிபடைத்த மாணவர்கள் மருத்துவக்கல்விக்கான இடங்களை விலை கொடுத்து வாங்கிட முடிகிறது. நீட் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில் என்று கூறப்பட்டாலும், அதற்கு எதிராகவே இது போன்ற நிலைகள் உள்ளன.
தனியார்வசமுள்ளஅக்கல்லூரிகளில்சரி பகுதி நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களாக உள்ளன. மருத்துவக் கல்விக்கான இறுதி ஆண்டுக்கான தேர்வை அவர்களே நடத்திக்கொள்கிறார்கள். இறுதியாண்டு  தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்துகொண்டு பணியாற்றிட முடி கிறது.
அதிர்ச்சிகர பட்டியல்

கீழ்க்கண்ட மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவக்கல்வியில் சேர அனுமதி வழங்கப்பட்டது
இயற்பியலில்  -2, வேதியியலில்  -4, உயிரியலில் 139 மதிப்பெண் பெற்றவர்கள் 5.3 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் -2, வேதியியலில் 0, உயிரியலில் 131 மதிப்பெண் பெற்றவர்கள் 5.4 லட்சத்தையும் தாண்டி தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 9, வேதியியலில்  -2, உயிரியலில் 113 மதிப்பெண் பெற்றவர்கள் 5.8 லட்சத் தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 5, வேதியியலில் 0, உயிரியலில் 110 மதிப்பெண் பெற்றவர்கள் 6 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 3, வேதியியலில் 10, உயிரியலில் 118 மதிப்பெண் பெற்றவர்கள் 6.2 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள், இயற்பியலில் 54, வேதியியலில் 40, உயிரியலில் 15 மதிப்பெண் பெற்றவர்கள் 6.3 லட்சத்தையும் தாண்டி  தரவரிசையில் இடம் பெற்றவர்கள் ஆகியோருக்கு மருத்துவக் கல்வியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2010இல் நீட் அறிமுகம்

நீட் தேர்வு குறித்து 2010ஆம் ஆண்டு டிசம்பரில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு அரசிதழில் முதல்முறையாக வெளியிட்டது. மருத்துவம் (எம்பிபிஎஸ்) பயிலுவதற்கான மாணவர் சேர்க் கையில் நீட் தேர்வின் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்ச மதிப்பெண்களாக 50 விழுக் காடு பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் (அல்லது இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 40 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்) என்று கூறப்பட்டது.
2012இல் பாடவாரியாக இல்லாமல் மொத்த விழுக்காடு தகுதிக்கு நிர்ணயம்

இந்திய மருத்துவக்கவுன்சில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில்  வெளியிட்ட அறிவிப்பில், பாடவாரியாக 50 விழுக்காடு, இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு 40 விழுக்காடு என்பதை மொத்த மதிப்பெண்களில் பெறுகின்ற 50 விழுக்காடு மற்றும் 40 விழுக்காடாக மாற்றியது. பாடவாரியாக குறைந்த பட்ச மதிப்பெண் என்பதையும் நீக்கிவிட்டது.
2013இல் நீட் தேர்வு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் 18.7.2013 அன்று அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விக்ரம்ஜித் சென், அனில் ஆர்.தவே ஆகிய இரண்டு நீதி பதிகள் இடம்பெற்றனர். அனில் ஆர்.தவே தவிர இரண்டு நீதிபதிகளும் நீட் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டநிலையில் பெரும்பான்மை நீதிபதி களின் கருத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகப் பிறப் பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நீட் தேர்வு செல்லாமல் இருந்தது. நீட் தேர்-வு அரசமைப்புச்சட்டத்துக்கு விரோமானது என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
2016இல் கட்டாயம் என தீர்ப்பளித்த நீதிபதி அனில் ஆர்.தாவே

2013ஆம் ஆண்டில் மூவர் கொண்ட அமர்வில் இடம்பெற்று நீட் தேர்வை ஆதரித்து எழுதியவரான நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையில்,  2016ஆம் ஆண்டில் நீட் தேர்வு குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான அய்வர் கொண்ட அமர்வு நீட் தேர்வைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டது.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய நீதிபதி அனில் ஆர்.தவே கூறும்போது, மருத்துவ மாணவர் சேர்க் கையில் தனியார் கல்லூரிகள் கொள்ளை லாபம் பெறுகின்றன'' என்று குற்றம் சாற்றியிருந்தார்.
தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வுத் தகவல்
நீட் தேர்வைக் கட்டாயமாக்கியபின்னர் தற்பொழுது தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி, நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள், பூச்சியம் மற்றும் எதிர்மதிப்பெண்கள் பெற்று பூச்சியத்துக்கும் கீழ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
எம்சிஅய் ஆட்சி மன்றக் குழு மேனாள் தலைவர் கே.கே.தல்வார்

2012 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன் சில் ஆட்சிமன்றக் குழுத்தலைவராக இருந்தவரான கே.கே.தல்வார் கூறியதாவது:
முதலில் நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. பின்னர் கட்டாயம் என்பதால் ஏற்கவேண்டிய நிலைக்கு உள்ளாயின. ஓராண்டுக்கு மேலாகியும்  நீட் தேர்வில் விழுக்காட்டின்படி மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருக்கும்நிலையில், பாடவாரியாக குறைந்த பட்ச மதிப்பெண்கள் பெற்றிட வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில்  விதிகளில்  தேவையான திருத்தங்களைச் செய்வதை எதுவும் தடுத்திட முடியாது என்றார்.
தகுதிநிலைகள் நீர்த்துப்போகச் செய்வதைத் தடுத்திட, தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் செய்யாமல் இருப்பது குறித்து கேட்கும்போது, தற்போதைய முறையின்படி, 2017ஆம் ஆண்டில் 60ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு 6.5 லட்சம் மாணவர்கள் தகுதி பெறுகிறார்கள். சரிபாதி இடங்கள் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை சார்ந்து உள்ளன. தகுதியான மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் கல்லூரிகளில் சேர்வதில்லை. 2017ஆம் ஆண்டில் 6 லட்சம் பேர் மருத்துவக்கல்வி சேர்க்கையில் 380 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றனர். 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள்  4 லட்சம் தொடங்கி 5 லட்சம் வரை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நீட் தேர்வும், தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மேலும், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கூடாது என்பதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையும் தொடர்ச்சியாக பின்பற்று வந்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில், சிபிஎஸ்இ நடத்துகின்ற நீட்தேர்வின்படி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வை கட்டாயமாக்கியது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இரு சட்ட வரைவுகளை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியது. மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட அச்சட்ட வரைவுகள் முதலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பப்படவே இல்லை என்கிற தகவல் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி வெளியுலகுக்கு தெரிய வந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னால், தமிழக அரசுக்கு அச்சட்டவரைவுகள் காரணமேதும் கூறப் படாமலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக (with held) தமிழக அரசுக்கு தகவல் வந்தததாக சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்தார்.
ஒரே தேர்வு என்று கூறப்பட்ட தேர்வான நீட் தேர்வில் கேள்வித்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறானதாக இருந்தன. இந்த ஆண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196  மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட வேண்டும். தரவரிசை பட்டியல் அதன் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவானது.
நீட் உயிரிழப்புகள்

நீட் தேர்வால் மாணவர்கள் அரியலூர் குழுமூர் அனிதா, பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபசிறீ ஆகிய மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களில் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிவகங்கை சிங்கம்புணரி கண்ணன் ஆகியோரும் உயிரிழந்தார்கள்.
தொடரும் போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் வரை போராட்டம் ஓயாது என்று சமூகநீதிக்கான போராளிகள் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு, 17.7.18

சென்னையில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபே‌சி எண்கள்

# :
==================================
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!
********************************************
#Chennai Police Stations Contact No:
==============================
C1. Flower Bazaar 044-23452464/465
C2. Elephant Gate 044-23452467/468
C3. Seven Wells 044-23452471/472
C4 Govt.Hospital 044-23452473
B2 Esplanade 044-23452458/459
B4 High Court 044-23452462
B5. Harbour 044-23452500/501
B1. North Beach 044-23452457/457
B3. Fort 044-23452460/461
N3. Muthialpet 044-23452514/515
C5 Kothavalchavadi 044-23452474/474
Port Marine B 6 Port Marine 044-23452502
H 1. Washermenpet 044-23452481/481
H 3. Tondiarpet 044-23452485/486
H 4. Korukkupet 044-23452488/489
H6 R.K. Nagar 044-23452493/494
H2 Stanley Hospital 044-25281347
H8. Thiruvottiyur 044-23452496/497
H7. Peripheral Hospital 044-23452495
H5. New Washermenpet 044-23452490/491
N1. Royapuram 044-23452504/505
N2. Kasimedu 044-23452511/510
N4. Fishing Harbour 044-23452517/518
M1 Madhavaram 044-23452783
M2 Milk Colony 044–2555085
M3 Puzhal 044-26590989
M4 Redhills 044-26418296
M5 Ennore 044–25750237
M6 Manali 044-23452788
M7 Manali New Town 044–25931299
M8 Sathangadu 044-23452790
P1. Pulianthope 044-23452520/521
P2. Otteri 044-23452524/525
P4. Basin Bridge 044-26670948
P5 MKB Nagar 044-23452531/532
P6. Kodungaiyur 044-25546241
P3 Vyasarpadi 044-23452527/526
K1.Sembium 044-23452710/711
K5.Peravallur 044-23452727/728
K9.Thiru .Vi.Ka. Nagar 044-23452736/737
K3. Aminjikarai 044-23452716/717
K4. Anna Nagar 044-23452719/720
K8. Arumbakkam 044-23452733
V3. J.J. Nagar 044-23452748/749
V5. Thirumangalam 044-23452753/754
V7 Nolambur 9940596447
K10. Koyambedu 044-23452739
T4 Maduravoyal 044-23452766
CMBT 9677099958
V1. Villivakkam 044-23452744/745
V4. Rajamangalam 044-23452750/751
V6. Kolathur 044-23452758
T1 Ambattur 044-23452797
T2 Ambattur Estate 044-23452798
T3 Korattur 044-23452799
T6 Avadi 044-26554750
T7 Tank Factory 044-23452771
T10 Thirumullaivoyal 044 - 23452772
T 11 Thirunindravur 044 - 26390293
T 8 Muthapudupet 044 -26841795
T 9 Pattabiram 044 - 26851632
T12 Poonamallee 044-26272082
T16 Nasaratpet 044-26271414
T5 Thiruverkadu 044-26800091
T15 SRMC 044-23452767
T14 Mangadu 044-26791102
T13 Kunrathur 044-24780039
K 6 TP Chathiram 044-23452729/730
G3 Kilpauk 044-23452699/700
G7 Chetpet 044-23452686
G6 KMC Hospital 044-23452709
G1 Vepery 044-23452690/691
G2 Periamet 044-23452696/6 97
K2 Ayanavaram 044-23452714/715
K7 ICF 044-23452731/732
G4 Mental Hospital
G5 Secretariat Colony 044-23452704/706
D1.Triplicane 044-23452655/656
D8. K.G. Hospital 044-23452672
D2. Annasalai 044-23452661/662
D4. Zam Bazaar 044-23452665/666
D6. Anna Square 044-23452667/668
F1. Chintadaripet 044-23452673/674
F2. Egmore 044-23452677/678
F7. Maternity Hospital 044-23452689
F3 Nungambakkam 044-23452680/681
F4 Thousand Lights 044-23452684/683
R5 Choolaimedu 044-23452742/743
E1. Mylapore 044-23452562
E5. Foreshore Estate 044-23452575
D5. Marina 044-23452558/559
E4. Abiramapuram 044-23452571/572
J2 Kotturpuram 044-23452595/596
E2 Royapettah 044-23452567/565
D3 Ice House 044-23452556/555
E-6 Govt. Royapettah
Hosp
044-23452576
S1 St. Thomas Mount 044-23452763
S4 Nandampakkam 044-23452765
S9 Palavanthangal 044-22241950
S2 Airport 044-22564284
S3 Meenambakkam 044-22561261
S5 Pallavaram 044-22640880
S6 Sankar Nagar 044-22484094
S11 Tambaram 044-23452769
S13 Chrompet 044-23452770
S 15 Selaiyur 044 - 22396003
S12 Chitlapakkam 044 - 22232005
S14 Peerkankaranai 044 - 22398018
S7 Madipakkam 044 - 23452774
S 8 Adambakkam 044 - 23452777
S 10 Pallikaranai 044 - 23452775
J2. Adyar 044-23452583/584
J5. Sastri Nagar 044-23452598/599
J1. Saidapet 044-23452577/578
R6 Kumaran Nagar 044-23452629/628
J3. Guindy 044-23452590/591
J7. Velachery 044-23452605/606
J6. Thiruvanmiyur 044-23452602/603
J13 Taramani 044-22541636
J9. Thoraipakkam 044-23452776
J10 Chemmanchery 044-24500707
J11Kannagi Nagar 97910 90918
J 8 Neelangari 044-24491196
J 12 Kannathur 044-27472182
R1. Mambalam 044-23452608/609
R4 Soundarapandiyanar
angadi (Pondi bazaar) 044-23452624/625
R8 Vadapalani 044-23452635/634
R5 Virugambakkam 044-23452637/638
R9 Valasaravakkam 044-23452649
R11Royala nagar 044-23452649(R9.No)
R3. Ashok Nagar 044-23452617/618
R7 K.K. Nagar 044-23452630/631
R10 MGR Nagar 044-23452560/561
E3 Teynampet 044-23452569/568
R2 Kodambakkam 044-23452615/616

Wednesday 18 July 2018

பூனூல் எத்தனை பூனூல் 1886

பூனூல் எத்தனை பூனூல் 1886 சொல்வது புரட்சியாளர் அம்பேத்கர்
""""""""""""""""""""""""""""""""""""""""""

  இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்லர் ! அவர்களில் 1886 பிரிவினர் உள்ளனர் !

திராவிட பார்ப்பனர்கள் 5, மராட்டிய பார்ப்பனர்கள் 31, ஆந்திரப் பார்ப்பனர்கள் 16, தமிழ்ப் பார்ப்பனர்கள் 11, கர்நாடக பார்ப்பான் 7,குர்ஜான் பார்ப்பான் 147, கவுட பார்ப்பான் 5, சரஸவத பார்ப்பான் 3 , பஞ்சாப் சரஸ்வத் பார்ப்பான் 222, மலைநாட்டு சரஸ்வத்ப் பார்ப்பான் 35, நாட்டுப்புற சரஸ்வதப் பார்ப்பான் 57,

காஷ்மீர் சரஸ்வதப் பார்ப்பான் 155, காஷ்மீர் பார்ப்பான் 221, சிந்து சரஸ்வதப் பார்ப்பான் 6, கன்யா குப்ஜ பார்ப்பான் 10,  !

இதில் மிஸ்ரா,  சுக்லா, திவாரி,  துபே,  பாண்டே , உபாத்யாயா,  கபுவே,  தீட்சித் மற்றும் வாஜ்பேயி
ஆகியோர் அடக்கம் !

Tuesday 3 July 2018

பெல் ம.ஆறுமுகம் பணிநிறைவு - பாராட்டு விழா

கழகத் துணைத் தலைவர், செயலவைத் தலைவர் பங்கேற்று வாழ்த்துரை








திருச்சி, ஜூன் 27- பெல் ம.ஆறு முகம் பணிநிறைவு - - பாராட்டு விழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் பங் கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

துணைத் தலைவர்


ஜூன் 23 மாலை  4.30 மணி யளவில்  பெல் நிறுவனத்திலி ருந்து பணிநிறைவு பெற்று வந்த ம.ஆறுமுகத்திற்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஆறுமுகத்திற்கு  சால்வை அணிவித்து வாழ்த்தி னர்.

தொடர்ந்து பெல் நிறுவனத் திலுள்ள டாக்டர் அம்பேத்கர், காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ம.ஆறுமுகம் மாலை அணிவித்தார். பின்னர் திருவெறும்பூரி லுள்ள தந்தை பெரியார் படிப் பகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ம.ஆறுமுகம் மாலை அணிவித் தார்.

பாராட்டு


அதனைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவிற்கு மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப் பினர் மு.சேகர் முன்னிலை வகித்தார்.  செ.பா. செல்வம் வரவேற்புரையாற்றினார். கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்று கையில், தோழர் ம.ஆறுமுகம் ஓய்வு பெறும் இந்த நாளன்று   நான் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச் சியளிக்கிறது. நான்  அரசுப் பணியில் இருந்து வெளியே வந்ததுதான் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்தது. அதனால்தான் இந்த இயக்கத் திற்கு முழு நேரமாக வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில்    தோழர் ஆறுமுகத்தை நீங்கள் எல்லாம் வழியனுப்ப வந்துள்ளீர்கள். நான் இயக்கப் பணியாற்றுவதற்காக அழைத் துச் செல்ல வந்திருக்கிறேன். தோழர் ஆறுமுகம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழி லாளர்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத் தியிருக்கிறார். இந்த பெல் நிறுவனத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. நிறுவனம் தொடங்கிய காலத்தில் வெறும் மலையாளி  கள் மட்டுமே பணியமர்த்தப் பட்ட நிலை இருந்தது. அதனை மாற்றி அவர்களையெல்லாம் விரட்டிய பெருமை இந்த இயக்கத்திற்கும், தந்தை பெரி யாருக்கும் உண்டு. தோழர் ஆறுமுகத்தை பற்றி தோழர்கள் நிறைய எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய இயக்க தோழருக்கு இவ்வளவு பெரிய பெருமை இருக்கிறது.  இவ்வளவு பெரிய சாதனையா ளராக இருந்தார்  என்பதை எண்ணி பார்க்கின்ற போது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக் கின்றது. அவர் தொடர்ந்து இயக்க பணியையும், சமுதாய பணியையும் ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக புலவர் முரு கேசன்,  கிருஷ்ண குமார், சுதர் சனம்,  பூபாலன், மாரியப்பன் ஆகியோர் பேசினார்கள். காட்டூர் சங்கிலிமுத்து, தமிழ்ச்சுடர், அமைப்புச் சாரா தொழிற்சங்க செயலாளர் திரா விடன் கார்த்திக், தாமஸ், விடு தலை கிருஷ்ணன், ஆண்டிராஜ், சிவானந்தம், சுரேஷ், செங்கை குயிலி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பெல் ஒப்பந்த தொழிலாளர்களும் (எல்.சி.எஸ்) திராளாக கலந்து கொண்டனர். நிறைவாக ம. ஆறுமுகம் ஏற்புரை வழங்கி உரையாற்றினார். க.சுப்ரமணி யன் நன்றி கூறினார்.

பாராட்டு விழா


ம.ஆறுமுகத்தின் பணி நிறைவு பாராட்டு விழா இரண் டாவது நாள் முறையே   பெல் சமுதாய கூட்டத்தில் ஜூன் 24 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செ.பா. செல்வம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் மு.நற் குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், பொதுக்கு உறுப் பினர் மு.சேகர், ஒன்றிய தலை வர் மாரியப்பன், ஒன்றிய செய லாளர் தமிழ்ச்சுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு


இவ்விழாவில் கலந்து கொண்டு கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசு கையில்,

நான் தொழிற்சங்க பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு இந்த பெல் நிறுவனத்தில் 3 நண்பர் கள் கிடைத்தார்கள். அதில் மறைந்த நண்பர் மேகநாதன், இனியன் (எ) லூக்காஸ், ம. ஆறுமுகம். இவர்களில் ம.ஆறு முகத்தின் பணி இந்த பெல் நிறுவனத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இன்றைக்கு முழுமையாக விடுதலையாகி வெளியே வந்திருக்கிறார். அவரது உழைப்பை, போராட்டத்தை இனிமேல் இந்த சமூகம் முழுக்க பயன் படுத்திக் கொள்கிற வாய்ப்பை இந்த நிறுவனமும், இயற்கை யும் அவரது வயதும், சேர்த்து நமக்கு அளித்திருக்கிறது. ஆறு முகம் பற்றிய ஒரு குறும் படத்தை மிக அருமையாக இங்கே ஒளிப்பரப்பினார்கள். ஆறுமுகத்தால், உருவாக்கப்பட் டவர்கள், உருவாக்கிய இந்த குறும்படம் மிகவும் தேவையான ஒன்று. பாராட்டுக்குரியது. இந்த நிறுவனம் ஆறு முகத்தை பல்வேறு வகையில் மிரட்டி விடலாம் என்று எண் ணியது. ஆனால் அவர்கள்தான் மிரண்டு போனார்கள். தந்தை பெரியார், அம்பேத்கர் இந்த இருபெரும் தலைவர்களின் கருத்தையும் உள்வாங்கிய நண் பர் ஆறுமுகம்,  தொழிலாளர்கள் மத்தியிலும், சமுதாயத்திற்கும் பாடுபட்டார். இனிமேலும் முழு நேரமாக உழைக்க வேண் டும். அவருக்கு பணியிலிருந்து தான் ஓய்வு. சமூகப் பணியிலி ருந்து  அவருக்கு ஓய்வில்லை. தொடரட்டும் அவரது பணி என்று கூறினார்.

தொழிற்சங்கம்


திராவிடர் கழக தலை மைக்கழக பேச்சாளர் அதிரடி க.அன்பழகன், கவிஞர் ப.சங் கரன், சந்திரசேகர் (எஸ்.சி.யூ), ஆறுமுகம் (ஆதித்தமிழர் பொறி யாளர் பேரவை), இளந்தமிழன் (எல்.எல்.எப்), அருணா (சி. அய்.டி.யூ), சுந்தரராஜன் (பு.ஜ. தொ.மு), அய்யாதுரை (அம் பேத்கர் தொழிற்சங்கம்) உள் ளிட்ட ஏராளமான தொழிற்சங்க பிரதிநிதிகள்,பெல் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பாராட்டினார்கள்.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் புதிய இணைய தளத்தை பெல் ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.

நிறைவாக ம.ஆறுமுகம் ஏற்புரையாற்றினார். சுதர்சனம் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 27.6.18

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு


சென்னை, ஜூலை 3- சட்டப் பேரவையில் தொழி லாளர், வேலை வாய்ப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின் போது விபத்து ஏற்பட்டு பணியிடத்தில் மரணம் அடையும்போது வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சம் உதவித் தொகை, பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.கட்டுமானத் தொழி லாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகி றது.

இந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள60 வயது பூர்த்தியடையாத தொழிலாளிநோய் மற்றும் உடல் பலமின்மை காரணமாக முடக்கம் ஏற்பட்டால் அவரும் ஓய்வூதியம் பெற தகுதியானவர் ஆவார்.மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்து விட்டால் அவரது கணவர், மனைவிக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 400 லிருந்து 500 ஆக உயர்த்தப் படுகிறது.தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் அவரது பணிக் காலத்தில் இறக்க நேர்ந்தால் அவரது ஈமச்சடங்கு செலவிற்காக வழங்கப்பட்டு வரும் ரூ. 2000 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

 

வேலைவாய்ப்பு துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. மேலும் 13 மாவட்டங்களில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவுகள் இயங்கி வருகின்றன.இந்த ஆண்டு முதல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், சிவகங்கை, நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், திருண்ணாமலை, திண்டுக் கல், இராமநாதபுரம், தேனி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய 18 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை மேம் படுத்தும் வகையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 3.7.18

Monday 2 July 2018

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்

ஒரு எழுத்தை நான்கு வகையாக ஒலிக்கலாம்.அந்தந்த நாட்டின் வெப்பநிலைக்கேற்ப வாயையும்,நாக்கையும் பயன்படுத்தும் நிலையில் ஒலிப்பு மாறும். அதோடு பக்க எழுத்துக்கு ஏற்பவும் ஒலிப்பு மாறும்.[மஞ்ச(ஜ)ள்,அஞ்சா(ஜா) நெஞ்ச(ஜ)ன்,அஞ்ச(ஜ)ல்] ஒவ்வொரு ஒலிப்புக்கும் எழுத்து கொடுத்துக்கொண்டே சென்றால் கற்றல் எளிதாக இருக்காது. ஜ,ஸ,ஷ,ஹ,க்ஷ போன்றவை சமஸ்கிருத எழுத்துகள் அல்ல. சமஸ்கிருதத்திற்கு எழுத்தே கிடையாது. மேற் கண்டவை தமிழில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள்(கிரந்த) அவை.
- முக நூல் 3.7.16 (நான்)