வெற்றிவலவன் பதிவுகள்

மூலிகை மன்னன் செ.ர.பாத்தசாரதி அவர்களின் படைப்புகளும், குறிப்பிடத்தக்க செய்திகளும் இடம்பெறும்.

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு
Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Sunday, 27 October 2024

வழக்கறிஞர் நோட்டீசை திரும்ப பெற்ற சத்ய சாய்பாபாவின் சீடர்கள்!

 

எதிர்த்த வழக்கறிஞரே ஏற்று செயல்பட இணைந்தார்!

நவம்பர்16-30
November 16, 2015உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில் – 142…

எதிர்த்த வழக்கறிஞரே ஏற்று செயல்பட இணைந்தார்!

அந்த வழக்கறிஞர் அனுப்பிய கடிதம் இதுதான்!

RAM RAIS & YAP
8th January 1981

To

Mr. K. Veeramani,
13, I Main Road,
Kasturiba Nagar,
MADRAS – 600 020.
INDIA.

Dear Sir,

You may recall that when you were in Malaysia in 1979, you had received correspondence from this firm. I was then acting on behalf of the devotees of Satya Sai Baba to stop you from making deregatory remarks against the said Satya Sai Baba. I had then in personal capacity held similar views, having been a deveotee myself of Satya Sai Baba.

However, of late it has come to light that the said Satya Sai Baba has carried out homosexual activities on the boys studying in his colleges in whitefiled and Puttaparthi. His biggest mistake was that he carried out such activities on Malaysian students studying there. These students have brought to the notice of the public in Malaysia this activity of Satya Sai Baba. It has become necessary for the people in Malaysia to have proper assessment of him. Unfortunately the written materials available are the propaganda stuff published by Satya Sai Baba and his devotees.

There is the urgent need to circulate in Malaysia, books, new cuttings and other printed matter in English and Tamil pertaining to the fraud being perpetrated by Satya Sai Baba and his devotees. I am willing to purchase all of them. If you do have them, please be free to send copies of the same and let me know the charges. If you do not have for distribution, you can let me have the sources and the addresses from where I can obtain the materials.

I read in our local news papers that an Atheist conference was held in Vijayawada recently. There is the need for me to get held of the proceedings of the conference so that they can be made available to the public in Malaysia.

I think it is possible for us to work together in exposing the said Saya Sai Baba in Malaysia and Singapore. Kindly let me hear from you.

Yours faithfully,
HARIRAM JAYARAM

அய்யா, 1979_ஆம் ஆண்டு நீங்கள் மலேசியாவில் இருந்தபோது, இந்த நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீசும், அது தொடர்பான கடிதங்களும் அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அப்போது நான் சத்ய சாய்பாபாவின் சீடர்களின் சார்பில் செயல்பட்டேன். சாய்பாபாவை குறைகூறி நீங்கள் கருத்து தெரிவிக்காமல் தடைபடுத்த முயன்றேன். அப்போது நான் சாய்பாபாமீது நம்பிக்கை கொண்டவனாகவே இருந்தேன். ஆனால், சாய்பாபா- _ புட்டபர்த்தியிலும், ஒயிட் பீல்டிலும் (Whitefield) (சாய்பாபா பகுதி) நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடக்கூடியவர் என்பது பிறகுதான் தெரியவந்தது. அதைவிட, அவர் செய்த மிகப்பெரிய தவறு _- அங்கே படித்த மலேசிய மாணவர்களிடமும் அவர் இதுபோல நடந்துகொண்டதுதான். சாய்பாபாவின் இந்த செயலை, அந்த மாணவர்கள் மலேசிய மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். எனவே, சாய்பாபா எப்படிப்பட்டவர் என்பதுபற்றி, சரியான முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக _- சாய்பாபாவும், அவரது சீடர்களும் எழுதிய நூல்கள்தான் இங்கே கிடைக்கின்றன. இந்த நிலையில் சாய்பாபா மற்றும் அவரது சீடர்களின் மோசடிகளை விளக்கக்கூடிய தமிழ் _- ஆங்கில நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், அவசரமாக தேவைப்படுகின்றன.

நான் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அவை இருக்குமானால், அதை உடனே அனுப்பி வையுங்கள்; அதற்குரிய கட்டணத்தை அனுப்பி வைக்கிறேன். உங்களிடம் அப்படி ஏதும் இல்லையென்றால், அவை எங்கே கிடைக்கும் என்ற விவரத்தைத் தெரிவியுங்கள்.

அண்மையில் _- விஜயவாடாவில் _- ஒரு நாத்திக மாநாடு நடந்ததாக, இங்கு வெளியான பத்திரிகையில் செய்தி வந்தது. அந்த மாநாட்டு நடவடிக்கைகள் பற்றி தகவல் கிடைத்தால், அவைகளை மலேசிய மக்களுக்கு தெரியப்-படுத்தலாம். சாய்பாபாவின் மோசடிகளை மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அம்பலப்படுத்த நாம் இணைந்து செயல்பட முடியும் என்று கருதுகிறேன். அன்புடன் எழுதுங்கள்.

உண்மையுள்ள ஹரிராம் ஜெயராம்

ஆக, நம்மை எதிர்த்து வழக்காட முனைந்தவர் நம்மோடு இணைந்து நம் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய முன்வந்தது எப்பேர்பட்ட மனமாற்றம். இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா? * * * மலேசிய வானொலியில் எனது பேட்டி: மலேசியா வானொலியில் பூச்சரம் நிகழ்ச்சிக்கு நான் அளித்த பேட்டியும் எனது பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதோ அந்தப் பேட்டி! மலேசிய நாட்டுக்கு வருவதென்பது என்னைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது தடவையாகும். 1968லே ஒருமுறை மலேசிய நாட்டை சுற்றிப் பார்த்து திரும்பி இருக்கின்றேன். இப்போது இரண்டாவது முறையாக வந்து இருக்கின்றேன். 10 ஆண்டு காலத்தில் இங்கு ஏற்பட்டு இருக்கின்ற வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. பாராட்டத் தகுந்த விதமாகவும் விரும்பத் தகுந்த விதமாகவும் இருக்கின்றது. அவைகளைத் தெரிந்துகொள்வதற்கும், தந்தை பெரியார் அவர்களுடைய நூற்றாண்டான இந்த ஆண்டு அவர்களுடைய அறிவியல் கொள்கை-களையும் கருத்துக்களையும் மலேசிய மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இங்கு வந்து இருக்கின்றோம். பொதுவாக உலகம் ஒரு குலம் என்கின்ற வகையிலே யாவரும் கேளிர் என்கின்ற முறையிலே மக்களுக்குள் பிறவிபேதம் செயற்கையாக இல்லாத ஒரு நிலையிலே சமுதாயம் அமைய வேண்டும். உழைப்புக்கு மரியாதை கொடுக்கின்ற சமுதாயம் அமைய வேண்டும்; சமநீதியும், சமவாய்ப்பும் அந்த சமுதாயத்திலே இரு அம்சங்களாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் ஒவ்வொரு தமிழரும், திராவிடரும் உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதுதான் இன்றைக்கு விரும்பத்தக்க நெறி என்பது தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையாகும். அவர் காண விரும்பிய சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள் எந்த நாட்டிலே இருந்தாலும் அவர்களைப் பாராட்டுகிறோம். அதிலும் குறிப்பாக திராவிட மக்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்று நான் குறிப்பிட்ட-போது, என்னிடம் வானொலி நிலையத்தார் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தேன்.

கேள்வி: சமூக சீர்திருத்தப் பணியில் தாங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றீர்கள். இந்த பல ஆண்டுகாலப் பணியிலே பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். அவைகளை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பதில்: என்னுடைய பத்து வயது முதற்கொண்டே தந்தை பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய தொண்டனாக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்தத்தின் மூலம்தான் ஒரு சிறப்பான திருப்பத்தினை உருவாக்க முடியும் என்று நம்புகின்றவன். தந்தை பெரியார் அவர்களின் சமுதாய சம்பந்தமான கருத்துக்கள் 5000 ஆண்டு காலத்துப் பழமையினை எதிர்த்துக் கிளம்பிய காரணத்தினாலே பலத்த எதிர்ப்புகளை ஆரம்ப காலக் கட்டத்திலே அவை சந்தித்தன. ஏனென்றால் பழமையாளர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும்போது எதிர்ப்புக் காட்டுவதும் கூக்குரல் இடுவதும் எங்கும் இயற்கை. எவ்வளவோ எதிர்ப்புக்களையும் ஏளனங்-களையும் தந்தை பெரியார் அவர்கள் தன் போராட்டத்தின்போது சந்தித்தார்கள்.

ஆனாலும், எந்த மக்கள் அவர்களது கருத்துக்களை ஒரு காலத்தில் வரவேற்காமல் எதிர்த்தார்களோ அந்த மக்கள் பிறகு உணர்ந்து திரும்பி அந்தக் கருத்துக்கள்தான் சமுதாயத்தினுடைய தேவை என்று உணர்ந்து திருந்திய ஒரு திருப்பம் ஏற்பட்டதை தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளிலே கண்டு மகிழக்கூடிய வாய்ப்பினையும் பெற்றார்கள். அது வரவேற்கத் தகுந்தது; பாராட்டத் தகுந்தது. இந்த மாற்றம் என்னை மிகவும் கவர்ந்தது. கேள்வி: பெரியார் அவர்கள் மக்களிடத்தில் மட்டும் அல்லாமல் மொழியைக்கூட சீர்திருத்தம் செய்து இருக்கின்றார்கள் என்று அறிகின்றோம். இதுபற்றி தங்களுடைய கருத்து என்ன? பதில்: மொழி என்பதற்கு எந்தவிதமான புனித தத்துவமும் தேவையில்லை. அது மக்கள் ஒருவருக்கு ஒருவர் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒரு கருவி அவ்வளவுதான். எப்படி போக்குவரத்துச் சாதனமோ, அதுபோல மொழியும் என்பது தந்தை பெரியார் அவர்களுடைய அடிப்படைக் கருத்தாகும். ஒரு காலத்தில் மக்கள் கட்டை வண்டியில் பயணம் செய்தார்கள். ஆனால், இன்று 3 மணி நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து உங்கள் நாட்டுக்கு நாங்கள் வந்ததைப் போல, மொழியிலும் மாற்றம் வேண்டும் என்று நினைத்ததால் தந்தை பெரியார் அவர்கள் வெறும் பழமையைப் பேசிக் கொண்டு மட்டும் இருந்தால் தமிழ்மொழி வளராது, அதனுடைய வளர்ச்சி உலக மக்களுக்குப் பயன்படாது என்று கருதிய காரணத்தினால் 45 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்தை ஆங்கில எழுத்துக்கள் சுருக்கமாக இருப்பதுபோல சுருக்கப்படலாம்; அதன் மூலம் தமிழ் தட்டச்சு, டைப்ரைட்டர் மாற்றி அமைக்கப்படலாம், தமிழ் அச்சு எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்படலாம்;

தமிழ் கற்கின்ற பலருக்கு எழுத்துக்கள் குறைவாக, சுருக்கமாக இருக்குமேயானால் அது ஆழமாக பரவலாகப் பயன்படலாம் என்று கருதி 247 எழுத்துக்கள் தேவை இல்லை. அதற்குப் பதிலாக 26 அல்லது 30 எழுத்துக்களுக்குள்ளாக அடக்கி விடலாம் என்று அவர்கள் நினைத்து, எழுதி, பேசி, அந்த சீர்திருத்தத்தை தாம் நடத்திய குடி அரசு, விடுதலை, உண்மை மற்றும் தாம் பதிப்பித்த இயக்க நூல்கள் இவைகளின் மூலமாக தொடர்ந்து கையாண்டு வந்தார்கள். இந்தக் கருத்தினை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, அதற்கு எதிர்ப்பெல்லாம் குறைந்த நிலையிலே தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி தமிழக அரசு தந்தை பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு, அமலுக்குக் கொண்டுவந்து தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பினைச் செய்து இருக்கின்றது. அதன் காரணமாக தமிழ் மொழி ஏனைய பிறமொழி மக்களிடையே பரவுவதற்கும் எளிதாகக் கற்றுக் கொள்வதற்கும், எழுதப் படிக்கத் தெரியாத தமிழ் மக்கள்கூட எளிதில் கற்றுக் கொள்வதற்கும் சுலபமான ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. எதையும் பயன் கருதித்தான் நோக்க வேண்டும் என்று கருதுகின்ற தந்தை பெரியார் அவர்கள் ஓர் அழிவு வேலைக்காரர் என்று சொன்னதை மாற்றி ஆக்கரீதியாகவும் அவராலே சிந்திக்க முடியும், செய்து காட்ட முடியும் என்பதற்கு அவர்களுடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ஒரு அருமையான நல்ல சான்றாகும்.

Posted by parthasarathy r at 07:13 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சாய்பாபா, சீடர், வழக்கு

Tuesday, 26 July 2022

நாங்கள் ஹிந்து அல்ல... திராவிடர்! இலண்டனில் நடைபெற்ற வழக்கு!



  May 28, 2022 • Viduthalai

பிரிட்டிஷ் மகாராணி இங்கிலாந் தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.

இந்தியாவை ஆளும் மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்த பின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தம் எனச் சட்டம் இயற்றினார்.

இந்நிலையில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண் பிள்ளையைத் தத்தெடுத்தார். சிறிது காலத்தில் ராணியும் இறந்துவிட, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்.

இதை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் வெள்ளைக்கார ஆட்சியர், இலண்டனில் உள்ள மகாராணி  சார்பில் நோட்டீஸ் அனுப்புகிறார். இதற்கு மறுப்புத் தெரிவித்து, முத்துராமலிங்கத்தைத் தத்தெடுத்தது சரியே எனச் சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுகின்றனர்!

இங்கு தான் பார்ப்பனர்கள் தங்களின் ‘விஷம’ விளையாட்டை தொடங்கினர். மீண்டும் அந்த வழக்கு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக இலண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

“ஹிந்து சட்டப்படி, ஒரு விதவைப் பெண் தத்தெடுக்க வேண்டுமானால் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்க வேண்டும் என ஸ்மிருதிகள் சொல்கின்றன. எனவே ஹிந்து மதப்படி முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது” எனக் கூறினர். 

இந்த வழக்கு 1867 ஆம் ஆண்டு இலண்டன் பிரிவியூ கவுன்சிலில் நடந்தது. இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் “எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Aryan School Of Law)  கீழ் வராது. எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின்  (Dravidian School Of Law)   கீழ் வரும்” என வாதாடி வழக்கில் வெற்றி பெற்றார்கள். 

முத்துராமலிங்கம் VS  மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (Moores Journal)   எனும் இலண்டன் பத்திரிகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இடம் பெற்றுள்ளது.  இந்திய ஒன்றியத்தின் சட்டப் புத்தகத்தில் “ஹிந்து குடும்பச் சட்டத்திலும்“ இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது!

- வழக்குரைஞர் அருள்மொழி

Posted by parthasarathy r at 06:24 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இந்து அல்ல, திராவிடர், லண்டன், வழக்கு
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2026 (16)
    • ▼  August (12)
      • பாரதி விழா (மணியம்மை)
      • பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத...
      • விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ....
      • சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோ...
      • முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி செ...
      • நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி...
      • சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார...
      • கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி
      • சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ....
      • பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி
      • பனிக்கட்டி வழுக்குவது ஏன்? - மூலிகை மன்னன் செ.ர.பா...
      • உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் - செ.ர.பார...
    • ►  July (3)
    • ►  March (1)
  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • வண்ணார் வரலாறு
    ஒற்றைப் பத்தி -  January 31, 2021  • Viduthalai 'அர்த்தமுள்ள ஹிந்து மதம்' என்று பீற்றுகிறார்கள் - அந்த மதத்தில் மனிதர்களைப் பிறப்பின...
  • சங்ககாலம் பொற்காலமா? - 2
      பிப்ரவரி 01-15 , 2014 உண்மை  இதழ் பெண்ணடிமை – மூடநம்பிக்கை – வர்ணபேதம்-ஆரியத் தாக்கம் – பேராசிரியர் ந.வெற்றியழகன்   சிறப்பிழந்த சேரமன்னர்க...
  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • திராவிடர் இயக்கத்தின் அய்ந்து ஆவணங்கள்!
    சென்னை  வேப்பேரி எதிராஜூலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பார்ப்பனர் அல்லாதாரின் ஓர் அமைப்புக் கூட்டம் நடைபெற்ற...
  • இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு வழங்கப்படும் குழந்தைகளின் சாதி சான்றிதழ் வழங்கல் - தெளிவுபடுத்தல்கள் -
     கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டு...
  • பாம்புக்கு கால் உண்டா? - செ.ர. பார்த்தசாரதி
    ‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்பு...
  • இராமாயணம் ஒரு கட்டுக்கதை!
    சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அ...
  • நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை
      நான் பாரதியாரைச் சந்தித்தால்... கி.வீரமணி கட்டுரை ( பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981 ஆம் ஆண்டில், 'குமுதம்' ஏடு ஆசிரியர் க...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அசைவம்
  • அசோக வனம்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசிதழ்
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆண்
  • ஆண்டு விழா
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயசு
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலக்குவன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உண்மை இதழ்
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுக்கதை
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்தவம்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடிஅரசு
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குமுதம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குழந்தை
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாகு மகராசர்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சித்த மருத்துவம்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாலி
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாத்திகர் மாநாடு
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பல்லி
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பனிக்கட்டி
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பாரதி
  • பாரதியார்
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவம்
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புரட்டு
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மருத்துவர்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முதலைக் கண்ணீர்
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மூலிகை மன்னன்
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயவாடா
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.