Showing posts with label காரணம். Show all posts
Showing posts with label காரணம். Show all posts

Monday, 9 January 2023

நீட்"க்குக் காரணம் தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

 நீட்"க்குக் காரணம் தி.மு.க.வா - பா.ஜ.க.வா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

நீட் தேர்வு செயல்பாட்டுக்கு வந்தது பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான். காங்கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் செயல் பாட்டுக்கு வந்தது என்பது வீண் பொய்யே.

நீட் தேர்வைப்பற்றிப் பேசும் பொழுதெல்லாம் அது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது - காங் கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. எனவே, நீட் கொண்டு வந்தது பிஜேபி ஆட்சியல்ல, காங்கிரஸ் தலைமையில் அமைந்த தி.மு.க. இடம்பெற்ற அந்த ஆட்சிதான் நீட் தேர்வைக் கொண்டுவந்தது என்று கீறல் விழுந்த கிராமஃபோன் பெட்டிப் பாடல் போல பாடிக் கொண்டு இருக்கிறார்கள்,

ஆனால் உண்மை நிலை என்ன? 21.12.2010இல் இந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தபோது திரா விட முன்னேற்றக் கழக அரசு கடுமையாக எதிர்த்து, அப்போது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத்துக்குக் கடிதம் எழுதி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் உடனடியாக வழக் குத் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தடை பெற்று, தமிழ் நாட்டில் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அன்றைக்கு, தி.மு.க. அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்குதான் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீட் தேர்வு செல்லாது என்று 18.7.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி இருந்த வரையிலும், ஒன்றியத்தில் தி.மு.க. பங்கேற்றிருந்த அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரையி லும், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தமிழ் நாட்டிற்குள் நுழைய விடவில்லை. ஆனால், ஒன்றியத் தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி யிலிருந்த அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வேரறுக் கவும், மாநில உரிமைகளில் சமாதானம் செய்து கொள் ளவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை தகர்க்கவும் இந்த நீட் நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாக மாணவர்கள் மீது நுழைத்தன.

18.7.2013 இல் வழங்கப்பட்டhristian Medical College Vellore & Ors Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305)  வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்ட சிலர் மறு ஆய்வு (Review Petitions) மனு தாக்கல் செய் கின்றனர். அந்த வழக்கில் 2013 முதல் வழக்கின் தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதிகள் திரு. அல்டாமஸ் கபீர் மற்றும் திரு. விக்ரமஜீத் சென் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் திறமையாகக் காய்களை நகர்த்தி யது. மறு ஆய்வு மனுவை இதனை ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டி 21.1.2016 அன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்குத் தலைவர் மேற்படி Christian Medical College Vellore & Ors Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த அதே நீதிபதி திரு. அனில்தவே அவர்களேதான் - மற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே. அகர்வால், ஆதர்ஸ் குமார் கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட இந்த அமர்வுதான் நீட்டுக்குப் பச்சை கொடி காட்டியது.

ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது, நீட் செல்லாது, மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன் பிறகு பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்தான் வேக வேகமாக நீட்டைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மருத்துவக் கவுன்சிலின் ஒத்துழைப்போடு நடந்தன என்பதுதான் உண்மை.

'நீட்'டுக்குக் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்பது பச்சைப் பொய்யே யாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நரேந்திர தாமோதரதாஸ் மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது நீட்டை எதிர்த்தவர் என்பதுதான்!

Tuesday, 4 October 2022

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

 

ஏனெனில்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.

நன்றி,