Sunday 4 December 2022

இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத்தது - ஆசிரியர் கி.வீரமணி

Saturday 26 November 2022

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் புதிய முகவரியில் செயல்படும்


சென்னை, நவ. 26- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கா தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத் துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 1.12.2022ஆம் தேதி முதல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் புதிய முகவரியான 735, இரண்டாம் தளம், தேவநேயப் பாவாணர் மாவட்ட மய்ய நூலகக் கட்டடம், (எம்.எல்.ஏ. கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரியில் செயல்படும். ஆணை யத்தின் புதிய முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் முகவரி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாநில ஆணையம், 735 இரண்டாம் தளம், தேவநேயப் பாவாணர் மாவட்ட மய்ய நூலகக் கட்டம், (எம்எல்ஏ கட்டடம்), அண்ணா சாலை , சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: tnscstcommission@gmail.com

Saturday 22 October 2022

234 -எம் எல் ஏக்களுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி ( ஈ மெயில் ஐடி) கொடுக்கப்பட்டுள்ளது.

234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.
பதில் வருமா வராதான்னு தெரியாது,
எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது 
அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.
234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...SKV🙏

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in
முடிந்தவரை பிறருடன் பகிரவும்...
VERY IMPORTANT SO SHARE SHARE SHARE!

Friday 14 October 2022

பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (276)

செப்டம்பர் 1-15,2021

முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் விழா

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி....




செங்கல்பட்டு சின்னம்மன் கோயில் தெரு பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் மணமக்கள் பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று 9.2.1997 அன்று நடத்திவைத்தேன். மணமக்கள் இருவரும் முழுமையான சுயமரியாதைத் திருமண முறையில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியைக் கூறச் செய்து, வந்திருந்தவரின் கைத்தட்டலுக்குமிடையே நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tuesday 4 October 2022

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

 

ஏனெனில்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அதுதான்  விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.

நன்றி,

Thursday 1 September 2022

தலைவெட்டி முனியப்பன் அல்ல; புத்தர்!


சேலம் கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயில் என்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் கடந்த 2011இல் தாக்கல் செய்த மனு:

"சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில், தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலையாகும். இதுதொடர்பாக கடந்த 2008இல் சர்ச்சை எழுந்தது.

அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது. சிலை மட்டுமின்றி அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என அம்மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா, புத்தர் சிலையா என ஆய்வு செய்து, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை விவரம்:

"தலைவெட்டி முனியப்பன் கோயில் கட்டடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், தியான முத்ரா கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலைப் பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள்படி ஆய்வு செய்யப்பட்டன. இதில், அந்த சிற்பம் மகா இலட்சணங்களைக் கொண்டுள்ள புத்தர் சிலைதான்" எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது

இதையடுத்து, அரசு தரப்பில் 'தலைவெட்டி முனியப்பன் சிலை' எனக்கருதி பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். எனவே, இந்து சமய அறநிலையத் துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

"பெரியேரியில் இருப்பது புத்தர் சிலைதான் என்பதை தொல்லியல் துறை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு தலைவெட்டி முனியப்பன் சிலை என்பதை இந்து சமய அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலைதான் என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம். அதேவேளையில், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். 

சேலம் பெரியேரியில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை எனவும், அது தங்களுக்கு சொந்தமானது என்றும் கடந்த 2010 இல் இந்திய புத்த சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது, மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பவுத்த பிக்கு வி.மௌரியா மெத்தபால், "தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்பட்டு வரும் சிலை முனியப்பன் சிலை அல்ல. புத்தரின் சிலை. அசோகர் காலத்தைச் சேர்ந்த அந்த சிலை 300 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள பெரியேரி என்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த இடம்தான் இப்போது சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள இடமாகும்.

மேலும், இங்கு 3 கிரவுண்ட் நிலம் புத்த டிரஸ்டிற்குச் சொந்தமானது. வேறு சிலைகள் வைத்து வழிபடக் கூடாது. எதிர்காலத்தில் தியான மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய புத்த சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் 2011 இல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், சேலம் கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயிலில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.பர்னபாஸ் கூறியது:

"சேலம் கோட்டையில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை என வரலாற்று ஆசிரியர் ஆர்.பூங்குன்றன் தனது "வரலாற்றில் சேலம் - 1979" நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல புத்தர் சிலையை சமணர் உருவம் என ஆங்கிலேயேர் எப்.ஜே.ரிச்சார்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி வாழ்ந்த புத்தரின் உருவத்தைத் தான் தலைவெட்டி முனியப்பனாக வணங்கி வந்தனர். மேலும், அச்சிலையின் முன் ஆடு, கோழி பலியிடுவது முரண்பாடாகவும், வேதனையாகவும்உள்ளது.

1960-1970களில் திராவிடர் கழகத்தினர் தலைவெட்டி முனியப்பன் கோயில் முன்பு புத்தர் கோயில் என பதாகையை வைத்தனர்.  கோயிலில் ஆடு, கோழி பலியிடப்படுவதை பெரியார் தடுத்து நிறுத்தினார் என பஸ்நாகி ராஜண்ணன் தனது "சேலம் சைக்ளோபீடியா - 1992" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த மத உருவங்களில் இந்த சிலையும் ஒன்றாகும். ஆத்தூர் வட்டத்தில் உள்ள தியாகனூரில் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக கி.பி. 16 ஆம் ஆண்டில் சமய பூசல்களின்போது சமண, புத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் வழிபட்ட புத்த, சமண சிற்பங்களின் தலைகள் உடைக்கப்பட்டு வீசப்பட்டன. அதுபோன்றுதான் சேலம் கோட்டையில் உள்ள புத்தரின் சிலையின் தலை உடைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சிலையின் தலை மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது. ஆனால், தலை வெட்டப்பட்டு, மீண்டும் ஒட்டப்பட்டதால் இந்த சிலை இடது பக்கமாக சாய்ந்துள்ளது. தலை வெட்டப்பட்டு பின்பு ஒட்டப்பட்டதால் தலைவெட்டி முனியப்பன் என்று மக்கள் அழைத்து வழிபடத் தொடங்கினர்.

தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலைதான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சிலைஒப்படைக்கப்படும். அதேவேளையில் கொல்லாமையை வலியுறுத்திய புத்தர் சிலை முன் இனி உயிர்ப் பலி தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

வரலாறு எப்படி எல்லாம் திருத்தப்பட்டுள்ளது. எந்தெந்த பவுத்தப் பள்ளிகள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன என்கிற தகவல்களை கல்வெட்டு ஆதாரங்களுடன் மயிலை சீனி. வேங்கடபதி "பவுத்தமும் தமிழும்" என்ற நூலில் விவரித்துள்ளார்.

சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் - இப்பொழுது இந்துக் கடவுளான அய்யப்பனுக்கு அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர். விநாயகர் (தலைவர்) என்று புத்தருக்குப் பெயர். அதனை இப்பொழுது பிள்ளையாருக்குச் சூட்டியுள்ளனர். ஆரியத்தின் சூழ்ச்சி அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Sunday 7 August 2022

விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டது மதம் (பூமி உருண்டை)

Wednesday 27 July 2022

அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா?

Tuesday 26 July 2022

நாங்கள் ஹிந்து அல்ல... திராவிடர்! இலண்டனில் நடைபெற்ற வழக்கு!

103 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்வில் செய்த வரலாற்று சாதனை

Wednesday 20 July 2022

தஞ்சையில் காணாமல்போன தமிழ் பைபிள் 300 ஆண்டுகளுக்குப்பின் லண்டனில் கண்டுபிடிப்பு

Sunday 17 July 2022

பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! (வரலாற்று சுவடு)


(வரலாற்று சுவடு)
பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! போலீசார் தடியடி நடத்தி பெண் வக்கீல்களை விட்டினார்கள். 20 பெண் வக்கீல்கள் காயம் அடைந் தார்கள்.

ஓர் ஆணுக்கு எதிராக 2 பெண்கள் சாட்சி சொன்னால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற சட்டத்தை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

- ராணி வார இதழ், 27.02.1983

Saturday 2 July 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்

ஜாதி, மதம் அற்றவர்கள் எனச் சான்றிதழ்


சிவகாசி, ஜூன் 24 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்து பகுதி யைச்  சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்க வேண் டும் என்று விண்ணப்பம் அளித்தார். விண் ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுவரை இப்படி சான்றிதழ் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறினர். அப்போது கார்த்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் ஜாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள் ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அதி காரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்தி கேயன், அவருடைய மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் ஜாதி, மதம் அற்ற வர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, "எனது சொந்த ஊர் சிவகாசி. சில ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு மனு கொடுத் தேன். அப்போது வழங்க மறுத்துவிட்டனர். ஆனால், அந்த சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இணையதளத்தில் அதற்கான தகவல்கள் கிடைத்தன, கடந்த 2018 இல் வழக்குரைஞர் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார். 

இதை ஆதாரமாக வைத்து ஜாதி, மதம் அற்றவர்கள் என்று எனக்கும், என் மனை விக்கும் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியையாக உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் நேசன்(4) யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கி றேன். 2 ஆவது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுப்பேன்.

 இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மதம் அற்றவர் என மகளுக்குச் சான்று பெற்றனர்

 குழந்தைக்கு ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்: கோவையைச்சேர்ந்த பெற்றோரின் உறுதி

கோவை, ஜூன் 1 - பள்ளி, கல்லூரி களில் மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை பெறுவதற்கு ஜாதிச் சான்றிதழ் அவசியம் ஆகும். 

அதேநேரத்தில், எந்த ஜாதி, மத அடையாளமும் தேவையில்லை என்று கூறுவோருக்கு ஜாதி, மதம் அற்றவர் என சான்றளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அர சாணை உள்ளது. எனினும், அச்சான்றிதழ் பெறுவதில் பெரும் அறைகூவலையே பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் பெரு மளவிலான எதிர்நீச்சல் போட்டு, தங்களின் மகளுக்கு  சான்றிதழைப் பெற்றுள்ளனர் அச்சிறுமியின் பெற்றோர்.

கோவையை சேர்ந்த இணையர் தங்களது மகளுக்கு ஜாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்.  கல்வி நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கும்போதே, அவர்களுடைய விவரங்களில் ஜாதி மற்றும் மதம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் கேட்டு பெறுகின்றன. இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், தங் களது ஜாதி மற்றும் மதத்தினை குறிப்பிட விரும்பாதவர்கள் அதனை புறக்கணிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு முன்னரே அறிவித்திருந்தது.  இந்நிலையில் கோவையை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றி தழை பெற்றுள்ளனர்.

கோவையில் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருபவர் நரேஷ் கார்த்திக். 

இவரது மகள் வில்மா. தற்போது மூன்றரை வய தாகும் வில்மாவை பள்ளியில் சேர்க்க முடிவெடுத்த நரேஷ் பல பள்ளிகளை அணுகி யுள்ளார். விண்ணப்ப படிவத்தில் மாணவியின் ஜாதி மற்றும் மதம் குறித்த தகவல் களை நரேஷ் பூர்த்தி செய்யாமலேயே விட்டிருக்கிறார். ஆனால், இதனை காரணம்காட்டி 22 பள்ளிகளில் அவரது மகளுக்கு இடம் கிடைக்க வில்லை. இதுபற்றி அவர் கூறுகையில்,"மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் ஜாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கடந்த 1973 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக் காக ஜாதி சான்றிதழ் கேட்கின்றனர்" என்றார்.

ஜாதி மற்றும் மதம் வேண்டாம்

இதனையடுத்து தனது மகள் வில்மாவிற்கு ஜாதி மாற்று மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி கோவை மாவட்டம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார் நரேஷ் கார்த்திக். இப்போது அவருக்கு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தனது மகளை ஜாதி, மத அடை யாளங்களை கடந்து வளர்க்க விரும் புவதாக கூறும் நரேஷ்," கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப் பட்டு உள்ளது. வேலைக்காக விண் ணப்பிக்கும்போது, ஜாதிப் பிரிவு களில் ழிசி  எனப்படும் ஜாதியற்றவர் களுக்கான பிரிவும் இருக்கவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

தனது மகளின் ஜாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத நரேஷ் கார்த்திக், ஜாதி மற்றும் மதம் அற்றவர் என தனது மகளுக்கு சான்றிதழ் பெற்றிருப்பது பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Saturday 11 June 2022

'சைவம்' ஒரு சர்ச்சை!


'சைவம்' ஒரு சர்ச்சை!

'சைவம்' என்றால், கறி (ஊன்), மீன், முட்டை போன்ற பொருள்களை சாப்பிடாமல் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது.

 'சைவம்' - பெயர் வரக் காரணம்

 தமிழ் நாட்டில் சைவ சமயத் தவர்கள் தான் இந்த முறையை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். அதனால் இந்த முறைக்கு 'சைவம்' என்ற பெயர் வந்துவிட்டது.

வட நாட்டில் வைணவம்' என்றால்தான் 'சைவம்' என்று பொருள்.

சைவம் என்றால் என்ன?

இந்த சைவ முறை, வீட்டுக்கு வீடு; நாட்டுக்கு நாடு, வேறுபடுகிறது.

வெளிநாட்டு வகையை சேர்ந்த 'லகான்' கோழி முட்டையை சில வீடுகளில் 'சைவ முட்டை' என்று
உண்கின்றனர்.

காஷ்மீர், மேற்கு வங்கம், இலங்கை போன்ற இடங்களில் மீனை 'ஜலப்புஷ்பம் என்ற பெயராலே 'சைவம்'' என்று பார்ப்பனர்கள் உட்பட உண்கின்றனர்.

இந்தியாவில் 'சைவம்' என்று சொல்லப்படும் 'பால்' பொருள்களை சீனாவில் 'அசைவம்' என்று ஒதுக்கி
விடுகின்றனர்.

ஆங்கிலத்தில் சொல்லப்படும் 'விஜிடேபுள்' என்பதன் பொருள் 'தாவர உணவு' என்பதாகும்.

பொதுவாக பார்க்கப்போனால்;  சைவ உணவு உண்ண வேண்டும் என்று சொல்லப்படுவதன் நோக்கம்; "எந்த உயிரையும் துன்புறுத்தவோ கொல்லவோ! கூடாது" என்பதுதான்.

விவேகானந்தர் கூற்று

விவேகானந்தர் ஒரு முறை கூறினார்;

எந்தவொரு உயிரையும் வஞ்சிக்காமல்; எந்த ஒரு மனி தனாலேயும் வாழ முடியாது' என்று.

முதல்வர் கலைஞர் கேட்ட கேள்வி!

ஊன் (அசைவ) உணவை விட்டு விட்டு; இப்பொழுது 'சைவ உணவையே' உண்பதாக கூறியுள்ள தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள்; இளமைக் காலத்தில் ஒரு முறை, கிருபா னந்தவாரியாரைப் பார்த்து. 'உயிரை கொல்லக்கூடாது என்கிறீர்களே!' கீரைத்தண்டை

(6-ம் பக்கம் பார்க்க)

5-ம் பக்கத் தொடர்ச்சி...

வேரோடு பிடுங்கி சமைத்து உண்கிறீர்களே! இது கொலை அல்லவா? என்று கேட்டாராம். 

கிருபானந்த வாரியார் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட: இன்றளவும் இதற்கு பதில் இல்லையே! என்று கூறியிருந்தார்.

எது சரி?

ஒரு மாட்டைக் கொள்றால் சுமார் 200 பேர் பங்கு போட்டு உண்ணலாம். ஆனால் 'சைவ உணவு" என்று சொல்லப்படும் முளைக்கீரைகளில் சுமாராக 200 அய் கொன்று ஒருவர் தான் உண்ண முடியும்.

ஒன்றை கொன்று 200 பேர் சாப்பிடுவது சரியா? 200 அய் கொன்று ஒருவர் சாப்பிடுவது சரியா? முதலில் கூறப்பட்ட வழியே சிறந்த வழி!

மனித இனம் வாழ பெரியார் கூறிய வழி!

''மனித இனப்பெருக்கத்தினால் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது. இதை ஓரளவு தடுக்க வேண்டுமானால், 'இறைச்சி' உணவை உண்டு வந்தால்தான் முடியும். அதோடு சத்தான உணவும் இறைச்சிதான். ஆகையால் இறைச்சி உணவை அனைவரும் உண்ண வேண்டும்" என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

அதோடு மனித இனப்பெ ருக்கத்தினால் நிலப்பரப்பில் தாவர  உணவும், இறைச்சி உணவும் கிடைக்காமல் போகும்போது முழுக்க முழுக்க மனிதன் கடலினுள் இருக்கும் 'மீன்' இனத்தை நம்பித்தான் இருக்க முடியும்" என்றும் கூறியுள்ளார்.

பெரியார் தத்துவம்தான் இன்றைக்கும். நாளைக்கும் பொருந்திவரக் கூடியது.

உயிரினங்களை கொன்று தின்னாத மனிதனே உலகில் கிடையாது.

ஏதாவது ஒரு வகையில் உயிரினங்களைக் கொன்று கொண்டுதான் இருக்கிறனர்.

. 'தயிர்' எனப்படும் 'பால்' பொருள், "ஈஸ்ட்டு' எனப்படும் பாக்டீரியாவால்தான் உண்டாக்கப்படுகிறது. 
தயிரை சாப்பிடும்போது அதில் உள்ள 'ஈஸ்ட்டு'களையும் விழுங்கி சீரணித்து விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அனைவரும் இதைத்தான் செய்கின்றனர். 'சைவ' வேடம் போடுகிறவர்களை மூட்டை பூச்சி, கொசு கடித்தால் சும்மாவாகவா இருக்கிறார்கள்?

'தோல்', பொருள்களைப் பயன்படுத்தாதவர்கள் யார்? தோள்பை, பணப்பை (மணி பர்சு), கைப்பை, காலணிகள். உடைகள் என்று வகைவகையாக பயன்படுத்துகிறார்களே! 

'ஷூ' கம்பெனிகளை பலபார்ப்பனர்கள் வைத்துக் கொண்டுள்ளனரே! 'ஷூ'வுக்கு பாலிஷ் தயார் செய்யும் கம்பெனிகளைக்கூட வைத்துள்ளனரே! 

இனிதான 'தேன்' எப்படி கிடைக்கிறது? தேனீக்களின் எச் சிலுடன் பூவின் தேன் கலக்கப்பட்டு தேன் கூட்டில் உமிழப்படுகிறது. அந்த எச்சிலை தான் உண்கின்றனர். அப்பொழுது எச்சில் தீட்டு என்ன ஆனது!

பட்டுப் பூச்சியின் எச்சில் தான் பட்டுத்துணி, பட்டுப் பூச்சிகளை சுடு நீரில் கொன்று தானே பட்டாடைகள் தயாரிக்கப்படுகின்றன. அப்பொழு தெல்லாம் ஏன் உயிர்க் கொலை தெரிவதில்லை!

சைவத்தை யாராலும் கடைப்பிடிக்க முடியாது!. எல்லோரும் சைவ வேடதாரிகளே! சைவர்கள் அல்ல!

- செ.ர.பார்த்தசாரதி

(21.9.97, விடுதலை ஞாயிறு மலர், பக்கம் -5,6)