Showing posts with label மூக்நாயக். Show all posts
Showing posts with label மூக்நாயக். Show all posts

Saturday, 2 July 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்

Sunday, 30 January 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்

அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு ஷாகுஜி மகாராஜ் உதவியுடன், ஆதரவுடன் வாரம் இருமுறை நாளிதழை அவரின் முதல் முயற்சியாக ஆரம்பித்தார். அந்த இதழின் பெயர் ‘மூக்நாயக்‘ (பேசாத மக்களின் தலைவன்) முக்கிய இந்த இதழ்களில் ‘சுயராஜ்யம்‘, ‘தீண்டப்படாதவர்களுக்குக் கல்வி‘, ‘தீண் டாமையின் தீமைகள்’ ஆகியவை பற்றி தேவைப்படும் அளவுக்கு கூறாததால் அவற்றைப் பற்றி தன் கருத்துகளை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இந்த இதழை ஆரம்பித்தார். இந்த இதழ் மூன்றாண்டுகள் வரை வெளிவந்தது. முதல் இதழ் 31.1.1920இல் வெளிவந்தது. அந்த இத ழில் வந்த தலையங்கத்தைக் காண்போம்.

ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தியா

நம் நாட்டின் அமைப்பு முறையில் ஒட்டுமொத்த மனித இனத்தையும், மனித இனம் இல்லாதவற்றின் தோற்றத்தையும் ஒருவர் கணக்கிலெடுத்துக் கொண்டால் அய்யத்திற்கு இடமில்லாமல், இந்தியா பல்வகையான ஏற்றத்தாழ்வுத் தன்மை, குணத் தனித்தன்மை கொண்டது என்பது வெளிப்படும். இந்த ஏற்றத்தாழ்வு முறையில் உலகாயுத அளவுகோல் வாழ்வியலில் அமைந்துள்ள சமநிலையற்றதை நிரூபிக் கும் நிலை வெட்கப்படத் தக்கது.

ஆபத்தான மத வேற்றுமைகள்

இந்தியர்கள், பல்வேறு வகையில் வேறு பட்டிருந்தாலும், உடல் அமைப்பாலோ, அறிவுக்கூர்மையினாலோ அமைந்த வேற்றுமைகளை விட மதம் சார்ந்த வேற் றுமைகள் மிகுந்த ஆபத்தை உள்ளடக்கி யவை. மதத்தை அடிப்படையாகக்கொண்ட வேற்றுமைகள், அதன் எல்லை கடந்த நடத்தையால் ரத்தம் சிந்தும் நிலை ஏற்படக் காரணமாகிவிடுகிறது. இந்துக்கள், பார்சிக் கள், யூதர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் ஏனைய பிரிவினர்கள் இடையே பல தோற்றங்கள் காணப்படுகின்றன. ஆனால், நெருங்கிக் கூர்ந்து ஆய்ந்தால் இந்துக்களிடையே உள்ள படிநிலை வேற்று மையின் இடைவெளியை முழுமையாகக் காணலாம். குறையுடைய இது நம்புவதற்குக் கடினமானதாகவும் உள்ளது.

ஒரு அய்ரோப்பியனை, நீ யார் என்று கேட்டால், அவன் இங்கிலீஷ் அல்லது ஜெர்மன் அல்லது பிரெஞ்சு அல்லது இத்தாலி என்று அவன் நாட்டினத்தைக் குறிப்பிட்டு அளிக்கும் விடை, தேவையைச் சரிசெய்யப் போதுமானதாகி விடுகிறது. இருந்தபோதிலும், ஓர் இந்துவைப்பற்றி இதுபோல் கூறிவிட முடியாது. ‘நான் இந்து’ என்று கூறுவது எவரையும் திருப்திப்படுத் தாது. ஓர் இந்து, தன்னுடைய குறிப்பிட்ட அடையாளத்தை கூற, அவர் தன்னுடைய ஜாதியைக் கூறுவது அவசியமாகிறது.

படிக்கட்டில்லாத கோபுரம்

ஜாதிகளால் உருவாக்கப்பட்ட, இந்து இனம் என்று கூறக்கூடியவை படிநிலை ஏற்பாட்டில் அமைந்தவை, இந்து சமூகம் ஒரு கோபுரம் போன்றது. அதனுடைய ஒவ்வொரு தளமும், ஒவ்வொரு ஜாதிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க கருத்து என்னவென்றால், இந்தக் கோபுரத் திற்குப் படிக்கட்டு கிடையாது. அதனால் ஒரு தளத்திலிருந்து, மேல் தளத்திற்கோ, கீழ்த் தளத்திற்கோ செல்ல முடியாது. எந்தத் தளத்தில் ஒருவர் பிறக்கிறாரோ, அவர் இறக்கும் தளமும் அதுவேதான். கீழ்தளத் திலுள்ள ஒருவர் எவ்வளவு திறமை உடையவராக இருந்தாலும் அவர் மேல் தளத்திற்கு ஏறிச் செல்லும் எந்த வாய்ப்பும் இல்லை. அதைப்போலவே, சிறிதுகூட தகுதி இல்லாத ஒருவரை, அவருக்கென ஒதுக்கப்பட்ட மேல் தளத்திலிருந்து கீழே இறக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

தூய்மை அற்றவர் என்ற முத்திரை

ஜாதிகள் இடையே, ஒன்றுக்கொன்று தொடர்பு என்பது, எந்தவித விவாதத்திற்கும் அடிப்படைக்கும் இடமில்லாத வகையில் அமைந்துள்ளது. ஓர் உயர் ஜாதி மனிதன் எந்தத் தகுதியும் இல்லாத நிலையிலும், அவனுடைய உயர்நிலை மதிப்பு உயர் வாகவே இருக்கும். ஆனால், தகுதிமிக்க கீழ்ஜாதி மனிதன், தன் தாழ்ந்த நிலையி லிருந்து தாண்டிச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. கீழ்ஜாதி, மேல் ஜாதிக்காரர் களுக்கு இடையே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும், அவர்களுக்கிடையே கலப்பு மணம் நிகழ்வதற்கும் கடுமையான தடை விதித்திருக்கும் காரணத்தால், அந் தந்த ஜாதிக் குழுக்கள், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே முன்ன தாகவே தனித்து வைத்த முறையில் தொடர்ந்து எப்பொழுதும் தனித்திருப்பது விதிமுறை என ஆக்கப்பட்டது.

ஜாதிகள் இடையே தொடர்பு ஏற் படக்கூடிய வட்டாரத்தில். நெருக்கத்தினால் ஏற்படும் பிணைப்புக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருந்தாலும், ஜாதி சட்டத்தினை அத்துமீறி, ஜாதிகள் இடையே தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பைக் கூர்ந்து கண்காணித்து வந்தனர். சில ஜாதி களின் அமைப்பு முறையில் ஓரளவுக்கு கலப்பு ஏற்பட அனுமதிக்கப்பட்டாலும், ‘தூய்மையற்றது’ என்று முத்திரை குத்தப் பட்ட சில ஜாதிகள் இடையே அத்தகைய கலப்பு முறை முற்றிலுமாக மறுக்கப்பட்டது. இந்தத் தூய்மையற்ற ஜாதியினர். தீண்டத் தகாதவர் எனப்பட்டனர். அத்தகையோர் உயர்ஜாதி இந்துக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தானவர்களாகக் காணப்பட்டனர்.

பார்ப்பனர்கள் கடவுள்கள்

ஜாதி படிநிலை அமைப்பில் உச்சி நிலையில் பார்ப்பனர்கள் இருந்தனர். அவர்கள் இந்த நிலவுலகின் கடவுள்களாக கருதினர். ஏனைய ஆண்கள், பெண்கள் அவர்களுக்கு சேவை செய்யப் பிறந்த வர்கள். அல்லது அத்தகைய நம்பிக்கையில் அவர்கள் உள்ளவர்கள். எனவே அவர்கள் தங்களின் கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏவல் செய்வதைக் கேட்கும் தகுதியை முழுமையாகப் பெற்றவர்கள் என்று கருதினர். பார்ப்பனர்கள், தாங்கள் இந்து புனித மத நூல்களின் ஆசிரியர்கள் என்ற வகையில், அந்த நூல்களின் மூலம் படிப்பிக்கப்படும் சகிப்புத்தன்மை, பிறர் உணர்வை மதிக்கும் மனம் போன்ற அறிவுரைகளைப் பற்றி கவலைப்படாமல், தங்களுக்கு சிறப்பைச் சேர்ப்பதில் ஏவல் செய்வோர் இனத்தின் கடமை என்பதில் உறுதியாக இருந்தனர்.

அடிமைத்தளையும் தன்முனைப்பும்

மறுபக்கம், பார்ப்பனரல்லாதவர்கள், போதுமான சொத்தும், கல்வியும் இல்லா ததால் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள னர். ஆனால், அவர்களுடைய அடிப்ப டைத் தேவைகள் முழுமையாகக் கவரப்பட் டதால், வறுமை நிலை, பிற்படுத்தப்பட்ட நிலை ஏற்பட்டது என்று கூறவேண்டிய கட்டாயமில்லை. ஏனென்றால், விவசாயத் தின் மூலமாகவோ, தொழிற்சாலையில் வேலை செய்வதின் மூலமாகவோ, வியா பாரம் மற்றும் வேறு வேலை வாய்ப்புகள் மூலமாகவோ வாழ்க்கைத் தேவைகளைப் பெற அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகவில்லை. வறுமையில் உழல்பவர் களாக, வலிமையற்றவர்களாக, சுயமரியா தையை இழந்தவர்களாக, சமூக இனப் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்ட மக்களே. எனவே அத்தகைய வருந்தத்தக்க அவல நிலையில் உள்ளவர்களைத் திட்டமிட்டு வெளிச்சத் திற்குக் கொண்டு வர வேண்டும். அவர்கள் தங்களின் அடிமைத்தளையிலிருந்து மீண்டு வருவது என்பது அவர்களுடைய தன் முனைப்பு மூலமாகத்தான் அமைய வேண்டும். அந்தத் தடத்தில் செயல்பாடுகள் துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.

வெற்றிடத்தை நிரப்ப ‘மூக்நாயக்‘

ஒரு நிறுவன அமைப்பு முறையில் பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் துறை ஏதும் இல்லாதது வருந்தத்தக்கது. ஏதேனும் ஓர் ஊடக வாயிலாக, ஒளிவு மறைவின்றி, அச்சமின்றி, தாழ்த்தப்பட்ட வர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சி னைகளை ஊடக வாயிலாகக் கூற, தளம் ஏதும் இல்லாதது குறைபாடே. சில செய்தித் தாள்களும், வார-மாத இதழ்களும், தாழ்த் தப்பட்ட மக்கள் என்று கூறப்படுபவர்களின், பிரச்சினைகள் பற்றியும், அவற்றிற்காக தேவைப்படும் தீர்வுகளின் அவசியம் பற்றியும் எழுதி வருவது உண்மையே. ஆனால் இவை எதுவுமே தீண்டப் படாதவர்களின் உரிமை பற்றி உண்மையில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. அந்த நோக்கத்துடன், ஏற்பட்டிருக்கும் வெற்றி டத்தை நிரப்ப இந்த ‘மூக்நாயக்‘ என்ற பத்திரிகை திட்டமிடப்பட்டு மக்களிடையே கொண்டுவரப்பட்டுள்ளது.

(நன்றி: ‘தி இந்து’, 2.2.2020)

https://www.viduthalai.page/2021/01/blog-post_958.html