வெற்றிவலவன் பதிவுகள்

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு

Sunday, 30 January 2022

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்


அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் தலையங்கம்
  January 30, 2021 • Viduthalai

தமிழாக்கம்: மு.வி.சோமசுந்தரம்

அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு ஷாகுஜி மகாராஜ் உதவியுடன், ஆதரவுடன் வாரம் இருமுறை நாளிதழை அவரின் முதல் முயற்சியாக ஆரம்பித்தார். அந்த இதழின் பெயர் ‘மூக்நாயக்‘ (பேசாத மக்களின் தலைவன்) முக்கிய இந்த இதழ்களில் ‘சுயராஜ்யம்‘, ‘தீண்டப்படாதவர்களுக்குக் கல்வி‘, ‘தீண் டாமையின் தீமைகள்’ ஆகியவை பற்றி தேவைப்படும் அளவுக்கு கூறாததால் அவற்றைப் பற்றி தன் கருத்துகளை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இந்த இதழை ஆரம்பித்தார். இந்த இதழ் மூன்றாண்டுகள் வரை வெளிவந்தது. முதல் இதழ் 31.1.1920இல் வெளிவந்தது. அந்த இத ழில் வந்த தலையங்கத்தைக் காண்போம்.

ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தியா

நம் நாட்டின் அமைப்பு முறையில் ஒட்டுமொத்த மனித இனத்தையும், மனித இனம் இல்லாதவற்றின் தோற்றத்தையும் ஒருவர் கணக்கிலெடுத்துக் கொண்டால் அய்யத்திற்கு இடமில்லாமல், இந்தியா பல்வகையான ஏற்றத்தாழ்வுத் தன்மை, குணத் தனித்தன்மை கொண்டது என்பது வெளிப்படும். இந்த ஏற்றத்தாழ்வு முறையில் உலகாயுத அளவுகோல் வாழ்வியலில் அமைந்துள்ள சமநிலையற்றதை நிரூபிக் கும் நிலை வெட்கப்படத் தக்கது.

ஆபத்தான மத வேற்றுமைகள்

இந்தியர்கள், பல்வேறு வகையில் வேறு பட்டிருந்தாலும், உடல் அமைப்பாலோ, அறிவுக்கூர்மையினாலோ அமைந்த வேற்றுமைகளை விட மதம் சார்ந்த வேற் றுமைகள் மிகுந்த ஆபத்தை உள்ளடக்கி யவை. மதத்தை அடிப்படையாகக்கொண்ட வேற்றுமைகள், அதன் எல்லை கடந்த நடத்தையால் ரத்தம் சிந்தும் நிலை ஏற்படக் காரணமாகிவிடுகிறது. இந்துக்கள், பார்சிக் கள், யூதர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் ஏனைய பிரிவினர்கள் இடையே பல தோற்றங்கள் காணப்படுகின்றன. ஆனால், நெருங்கிக் கூர்ந்து ஆய்ந்தால் இந்துக்களிடையே உள்ள படிநிலை வேற்று மையின் இடைவெளியை முழுமையாகக் காணலாம். குறையுடைய இது நம்புவதற்குக் கடினமானதாகவும் உள்ளது.

ஒரு அய்ரோப்பியனை, நீ யார் என்று கேட்டால், அவன் இங்கிலீஷ் அல்லது ஜெர்மன் அல்லது பிரெஞ்சு அல்லது இத்தாலி என்று அவன் நாட்டினத்தைக் குறிப்பிட்டு அளிக்கும் விடை, தேவையைச் சரிசெய்யப் போதுமானதாகி விடுகிறது. இருந்தபோதிலும், ஓர் இந்துவைப்பற்றி இதுபோல் கூறிவிட முடியாது. ‘நான் இந்து’ என்று கூறுவது எவரையும் திருப்திப்படுத் தாது. ஓர் இந்து, தன்னுடைய குறிப்பிட்ட அடையாளத்தை கூற, அவர் தன்னுடைய ஜாதியைக் கூறுவது அவசியமாகிறது.

படிக்கட்டில்லாத கோபுரம்

ஜாதிகளால் உருவாக்கப்பட்ட, இந்து இனம் என்று கூறக்கூடியவை படிநிலை ஏற்பாட்டில் அமைந்தவை, இந்து சமூகம் ஒரு கோபுரம் போன்றது. அதனுடைய ஒவ்வொரு தளமும், ஒவ்வொரு ஜாதிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க கருத்து என்னவென்றால், இந்தக் கோபுரத் திற்குப் படிக்கட்டு கிடையாது. அதனால் ஒரு தளத்திலிருந்து, மேல் தளத்திற்கோ, கீழ்த் தளத்திற்கோ செல்ல முடியாது. எந்தத் தளத்தில் ஒருவர் பிறக்கிறாரோ, அவர் இறக்கும் தளமும் அதுவேதான். கீழ்தளத் திலுள்ள ஒருவர் எவ்வளவு திறமை உடையவராக இருந்தாலும் அவர் மேல் தளத்திற்கு ஏறிச் செல்லும் எந்த வாய்ப்பும் இல்லை. அதைப்போலவே, சிறிதுகூட தகுதி இல்லாத ஒருவரை, அவருக்கென ஒதுக்கப்பட்ட மேல் தளத்திலிருந்து கீழே இறக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

தூய்மை அற்றவர் என்ற முத்திரை

ஜாதிகள் இடையே, ஒன்றுக்கொன்று தொடர்பு என்பது, எந்தவித விவாதத்திற்கும் அடிப்படைக்கும் இடமில்லாத வகையில் அமைந்துள்ளது. ஓர் உயர் ஜாதி மனிதன் எந்தத் தகுதியும் இல்லாத நிலையிலும், அவனுடைய உயர்நிலை மதிப்பு உயர் வாகவே இருக்கும். ஆனால், தகுதிமிக்க கீழ்ஜாதி மனிதன், தன் தாழ்ந்த நிலையி லிருந்து தாண்டிச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. கீழ்ஜாதி, மேல் ஜாதிக்காரர் களுக்கு இடையே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும், அவர்களுக்கிடையே கலப்பு மணம் நிகழ்வதற்கும் கடுமையான தடை விதித்திருக்கும் காரணத்தால், அந் தந்த ஜாதிக் குழுக்கள், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே முன்ன தாகவே தனித்து வைத்த முறையில் தொடர்ந்து எப்பொழுதும் தனித்திருப்பது விதிமுறை என ஆக்கப்பட்டது.

ஜாதிகள் இடையே தொடர்பு ஏற் படக்கூடிய வட்டாரத்தில். நெருக்கத்தினால் ஏற்படும் பிணைப்புக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலிருந்தாலும், ஜாதி சட்டத்தினை அத்துமீறி, ஜாதிகள் இடையே தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பைக் கூர்ந்து கண்காணித்து வந்தனர். சில ஜாதி களின் அமைப்பு முறையில் ஓரளவுக்கு கலப்பு ஏற்பட அனுமதிக்கப்பட்டாலும், ‘தூய்மையற்றது’ என்று முத்திரை குத்தப் பட்ட சில ஜாதிகள் இடையே அத்தகைய கலப்பு முறை முற்றிலுமாக மறுக்கப்பட்டது. இந்தத் தூய்மையற்ற ஜாதியினர். தீண்டத் தகாதவர் எனப்பட்டனர். அத்தகையோர் உயர்ஜாதி இந்துக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தானவர்களாகக் காணப்பட்டனர்.

பார்ப்பனர்கள் கடவுள்கள்

ஜாதி படிநிலை அமைப்பில் உச்சி நிலையில் பார்ப்பனர்கள் இருந்தனர். அவர்கள் இந்த நிலவுலகின் கடவுள்களாக கருதினர். ஏனைய ஆண்கள், பெண்கள் அவர்களுக்கு சேவை செய்யப் பிறந்த வர்கள். அல்லது அத்தகைய நம்பிக்கையில் அவர்கள் உள்ளவர்கள். எனவே அவர்கள் தங்களின் கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏவல் செய்வதைக் கேட்கும் தகுதியை முழுமையாகப் பெற்றவர்கள் என்று கருதினர். பார்ப்பனர்கள், தாங்கள் இந்து புனித மத நூல்களின் ஆசிரியர்கள் என்ற வகையில், அந்த நூல்களின் மூலம் படிப்பிக்கப்படும் சகிப்புத்தன்மை, பிறர் உணர்வை மதிக்கும் மனம் போன்ற அறிவுரைகளைப் பற்றி கவலைப்படாமல், தங்களுக்கு சிறப்பைச் சேர்ப்பதில் ஏவல் செய்வோர் இனத்தின் கடமை என்பதில் உறுதியாக இருந்தனர்.

அடிமைத்தளையும் தன்முனைப்பும்

மறுபக்கம், பார்ப்பனரல்லாதவர்கள், போதுமான சொத்தும், கல்வியும் இல்லா ததால் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள னர். ஆனால், அவர்களுடைய அடிப்ப டைத் தேவைகள் முழுமையாகக் கவரப்பட் டதால், வறுமை நிலை, பிற்படுத்தப்பட்ட நிலை ஏற்பட்டது என்று கூறவேண்டிய கட்டாயமில்லை. ஏனென்றால், விவசாயத் தின் மூலமாகவோ, தொழிற்சாலையில் வேலை செய்வதின் மூலமாகவோ, வியா பாரம் மற்றும் வேறு வேலை வாய்ப்புகள் மூலமாகவோ வாழ்க்கைத் தேவைகளைப் பெற அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகவில்லை. வறுமையில் உழல்பவர் களாக, வலிமையற்றவர்களாக, சுயமரியா தையை இழந்தவர்களாக, சமூக இனப் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்ட மக்களே. எனவே அத்தகைய வருந்தத்தக்க அவல நிலையில் உள்ளவர்களைத் திட்டமிட்டு வெளிச்சத் திற்குக் கொண்டு வர வேண்டும். அவர்கள் தங்களின் அடிமைத்தளையிலிருந்து மீண்டு வருவது என்பது அவர்களுடைய தன் முனைப்பு மூலமாகத்தான் அமைய வேண்டும். அந்தத் தடத்தில் செயல்பாடுகள் துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.

வெற்றிடத்தை நிரப்ப ‘மூக்நாயக்‘

ஒரு நிறுவன அமைப்பு முறையில் பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் துறை ஏதும் இல்லாதது வருந்தத்தக்கது. ஏதேனும் ஓர் ஊடக வாயிலாக, ஒளிவு மறைவின்றி, அச்சமின்றி, தாழ்த்தப்பட்ட வர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சி னைகளை ஊடக வாயிலாகக் கூற, தளம் ஏதும் இல்லாதது குறைபாடே. சில செய்தித் தாள்களும், வார-மாத இதழ்களும், தாழ்த் தப்பட்ட மக்கள் என்று கூறப்படுபவர்களின், பிரச்சினைகள் பற்றியும், அவற்றிற்காக தேவைப்படும் தீர்வுகளின் அவசியம் பற்றியும் எழுதி வருவது உண்மையே. ஆனால் இவை எதுவுமே தீண்டப் படாதவர்களின் உரிமை பற்றி உண்மையில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. அந்த நோக்கத்துடன், ஏற்பட்டிருக்கும் வெற்றி டத்தை நிரப்ப இந்த ‘மூக்நாயக்‘ என்ற பத்திரிகை திட்டமிடப்பட்டு மக்களிடையே கொண்டுவரப்பட்டுள்ளது.

(நன்றி: ‘தி இந்து’, 2.2.2020)

https://www.viduthalai.page/2021/01/blog-post_958.html
Posted by parthasarathy r at 20:44
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: அம்பேத்கர், தலையங்கம், மூக்நாயக்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Followers

Blog Archive

  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ▼  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ▼  January (3)
      • அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆரம்பித்த பத்திரிகையின் ...
      • இதர பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக் கல்விக்கான இடஒத...
      • 80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு (சம...
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • அவதூறு பரப்பும் சீமான் மீது நடவடிக்கை கோரி புகார் மற்றும் விரிவான விளக்கம்
    பார்ப்பன அடிவருடியாகவும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கைக்கூலியாகவும் ஆகிவிட்ட சீமான் சில காலமாக தந்தை பெரியாரைப் பற்றி அவதூராகவும் ...
  • மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?
    பெல் ம. ஆறுமுகம் உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்....
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • சூத்திரன் குடிக்கத் தடை செய்யப்பட்ட மாட்டுப் பால்! -செ.ர.பார்த்தசாரதி
    வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்’ என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூ...
  • ‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!
      Published August 22, 2024, விடுதலை நாளேடு கைவல்யம் பிறந்த நாள் இன்று (22.8.1877) ‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி! கைவல்யம் (1877-1...
  • திராவிடர் இயக்கம் தோன்றிய வரலாறு
    *வரலாறு அறிவோம்.* ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். *பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பி...
  • தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)
    தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4 • கே.ஜி. சுப்பிரமணியன் தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்...
  • வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி
    - செ.ர.பார்த்தசாரதி புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் ...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.ர. பார்த்தசாரதி
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.