Sunday 14 June 2020

திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? (தாழ்த்தப்பட்டடோருக்கு)

பார்ப்பனர் அல்லாதார் படும் துன்பங்களைக் களையவே நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிடர் இயக்கங்கள் இங்கே தோன்றின. 

தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்கள் இங்குள்ள மக்களை அடிமைகளாக மாற்றி விட்டனர்.

சொந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே பல்லாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் உரிமைக்காகப் போராடுபவர்கள் தான் திராவிடர் இயக்கத்தினர்!   

திராவிடர் என்பதும், தமிழர் என்பதும் ஒன்று தான்! அதிலும் தமிழர்கள் என்றால் முற்பட்ட, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்டியல் இன மக்கள் அனைவருமே தமிழர்கள் தான்! 

இப்படி இருக்க நீதிக்கட்சி உள்ளிட்ட திராவிடர் இயக்கங்கள் பட்டியல் இன மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்கிற தங்களின் வழக்கமான நயவஞ்சகக் கருத்தைப் பார்ப்பனர்கள் பரப்பி வருகின்றனர்.
பட்டியல் இன மக்களுக்கு திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? - 1

 1) “பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதி திராவிடர் என்ற பொதுப் பெயர் சூட்டியது நீதிக்கட்சி. எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922

2) ஆதி திராவிடர் பிள்ளைகளைப் பொதுப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை. (G.O.No.87 நாள் 6.1.1923)

3) அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் ரத்து செய்யப்படும். (அரசு ஆணை G.O.No.88. நாள் 16.1.1923)

4) திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதி திராவிடர் பிள்ளைகளைத் தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற ஜாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத் தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை. (G.O.No.2015 dated 11.2.1924)

5) இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க, ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. (G.O.No.2563 dated 24.10.1923)

6) 1931 இல் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132).

7) ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (G.O. 1243.நாள்  5.7.1922)

8) ஆதி திராவிட மாணவர்கள் தேர்வு எழுதத் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

9) ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (G.O. 1568 சட்டம், நாள் 06.11.1923)

10) ஆதி திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசுக் கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது.  (G.O.205 நாள் 11.02.1924)
பட்டியல் இன மக்களுக்கு திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? - 2

11) மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 866 (பொது) (சுகாதாரம், நாள் 17.06.1922)

12) இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளி விவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4,40,000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

13) கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

1920-21 மொத்த எண்ணிக்கை ஆதி திராவிடர் நியமனம் பெற்றவை மாவட்டக் கழகங்கள் (District Boards) 17,  வட்டக் கழகங்கள் (Taluk Boards) 66, நகராட்சிகள் (Municipalities) 46.

14) ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் அவர்கள் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazette Notification 08.04.1925 Part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலமும் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

15) 1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும் வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928 இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில் தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால் தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய முடிந்தது.
பட்டியல் இன மக்களுக்கு திராவிடர் இயக்கங்கள் செய்தது என்ன? - 3

16) 1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், பார்ப்பனர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறை படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர். 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது ‘Staff Selection Board ‘என்று அதற்குப் பெயர். அதுதான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது. 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.

17) பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் 1927-1926 க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935 இல் துணைக் கண்காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர். 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; (Staff Selection Board அறிக்கை பக் 120) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல்துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42)

திராவிடர் இயக்கங்களை நம்ப மறுத்து, பார்ப்பனீயச் சூழலுக்குப் பலியாகிறார்கள் நம் தமிழர்கள்!

Saturday 13 June 2020

அடுத்த பிறவியில் பசுவாக பிறப்பான் பார்ப்பான்!



பார்ப்பான் உட்பட இந்துக்கள், கடவுளுக்கு அர்ப்பனித்தப்பின் பசு உட்பட இறைச்சி உணவுகளை உண்ணலாம்.
பார்ப்பான் பசுவை உண்ணாவிட்டால் அடுத்த பிறவியில் பசுவாக பிறப்பான்.என மனு தர்ம சாஸ்த்திரம் கூறுகிறது.
இன்றைக்கு சுற்றும் பசுக்கள், சிரார்த்தத்தில் இறைச்சி தின்னாத பார்ப்பனர்களோ!
- செ.ர.பார்த்தசாரதி, முகநூல் பக்கம், 10.6.17

மந்திரமா? தந்திரமா? பயிற்சி பட்டறை



சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? பயிற்சி பட்டறையின் முடிவில் எடுக்கப்பட்ட குழுப் படம்.-2.6.13

சர் பிட்டி தியாகராயர்



 இன்று திராவிடர் இயக்க முன்னோடி, தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின்(ஜஸ்டிஸ் கட்சி ) தலைவர், முதல் முதலாக சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சர் பிட்டி தியாகராயரின் 169வது பிறந்த நாளை கொண்டாடினோம். ( 27.04.2020)
- எனது முகநூல் பக்கம்

1.6.17ல் மறைந்த வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் சர் பிட்டி தியாகராயரின் 165வது பிறந்த நாளை முன்னிட்டு, 27.4.2015ல் வெளியிட்ட நூல் இது.(பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகம்)
- செ.ர.பார்த்தசாரதி, 5.6.17

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்கிற இந்த நூலை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதியுள்ளார். திராவிடர் கழக வெளியீடு ஆகும் இந் நூல், விலை ரூ 140/-
நீதி கட்சி காலம் தொடங்கி இன்றைய காலம் வரை திராவிடர் இயக்கம் குறித்த பார்ப்பனர்களின் தவறான கருத்து பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுத்து எழுதப்பட்டுள்ளது. பல வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. படித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.
-செ.ர.பார்த்தசாரதி, 3.6.14

பெரியாரின் வாதம் கர்ப்பனா வாதமா! தத்துவ வாதமா!


என்ன தான் பல்கலைக்கழக பாடமாக இருந்தாலும், அதை விளக்கிச் சொல்ல பேராசிரியர் வேண்டும். அந்த பேராசிரியர் நடைமுறை உதாரணங்களை எடுத்துச்சொல்லி விளக்கினால் தான் மாணவர்கள் விளங்கிக்கொள்ள முடியும். தந்தை பெரியார் தத்துவ பேராசிரியர், அவர் பாமரமக்களிடையே விளக்கி பேசினார், பாமரர்களுக்கு விளங்கும் வகையில் பேசினார். தந்தை பெரியாரின் ''இலங்கைப் பேருரை, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதி வாதம், இனி வரும் உலகம்'' போன்ற நூல்களை படித்துப் பாருங்கள் தந்தை பெரியாரின் வாதம் கர்ப்பனா வாதமா! தத்துவ வாதமா! என்பது புரிந்துவிடும்.
- செ.ர.பார்த்தசாரதி, 4.6.14

Friday 12 June 2020

பௌத்தமும் பெரியாரியமும் - நூல் ஆய்வு



"பௌத்தமும் பெரியாரியமும்" என்ற நூலை 'நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்' சிறு நூல் வரிசையில் வெளியிட்டுள்ளது.
ந.முத்து மோகன் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம் சார்பில் 9 10 2012 அன்று பேராசிரியர் அறவேந்தன் ஏற்பாடு செய்திருந்த "இந்திய தத்துவ மரபில் பெரியாரியம்" என்ற கருத்தரங்கில் "பௌத்தமும் பெரியாரியமும்" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இந்நூல். பக்கங்கள் - 16
விலை 10 ரூபாய் தான்.
இந்நூலில் இந்திய தத்துவங்களை விளக்கிக் கூறுகிறார். தந்தை பெரியாரின் தத்துவங்களை விளக்கிக் கூறி விட்டு, பௌத்தத்திற்கும் தந்தை பெரியார் தத்துவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகளை எடுத்துக்காட்டுகிறார். ஆத்மா மறுப்பு, உடல் இயங்கு தத்துவம் போன்றவற்றை விளக்கி பேசியுள்ளார். தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை இடையில் வெளிப்படுத்துகிறார்.
- செ.ர.பார்த்தசாரதி, முகநூல் பதிவு, 31.5.20