Friday 12 June 2020

பௌத்தமும் பெரியாரியமும் - நூல் ஆய்வு



"பௌத்தமும் பெரியாரியமும்" என்ற நூலை 'நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்' சிறு நூல் வரிசையில் வெளியிட்டுள்ளது.
ந.முத்து மோகன் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம் சார்பில் 9 10 2012 அன்று பேராசிரியர் அறவேந்தன் ஏற்பாடு செய்திருந்த "இந்திய தத்துவ மரபில் பெரியாரியம்" என்ற கருத்தரங்கில் "பௌத்தமும் பெரியாரியமும்" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இந்நூல். பக்கங்கள் - 16
விலை 10 ரூபாய் தான்.
இந்நூலில் இந்திய தத்துவங்களை விளக்கிக் கூறுகிறார். தந்தை பெரியாரின் தத்துவங்களை விளக்கிக் கூறி விட்டு, பௌத்தத்திற்கும் தந்தை பெரியார் தத்துவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகளை எடுத்துக்காட்டுகிறார். ஆத்மா மறுப்பு, உடல் இயங்கு தத்துவம் போன்றவற்றை விளக்கி பேசியுள்ளார். தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை இடையில் வெளிப்படுத்துகிறார்.
- செ.ர.பார்த்தசாரதி, முகநூல் பதிவு, 31.5.20

No comments:

Post a Comment