Friday 22 May 2020

சமணர் என்போர் சைனரா?





திராவிடர் இயக்க எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுரை நூலான "சமணர் என்போர் சைனரா?' என்ற மனிதம் பதிப்பகம் வெளியிட்ட நூலை இன்று படித்துமுடித்தேன்.

இன்றைய நிலையில் குஜராத்தில் உள்ள மார்வாடி, சேட்டுகளின் மதமான ஜைன மதமும் சமண மதமும் ஒன்றே என பொதுவாக கூறப்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில் கடை சங்க நூல்களை ஜைனர்களே எழுதியதாக கூறப்படுகிறது.

இக் கருத்தை சுக்குநூறாக்குகிறார், அவர்கள் அனைவரும் ஆசீவக சமயத்தை சேர்ந்த தமிழர்கள் என்கிறார்.

ஆசீவக சமயமும் ஜைன சமயமும் ஒன்றுபோல் இருந்ததால் பிற்காலத்தில் ஒன்றுபோல் ஆகிவிட்டது.

பல சமயங்கள் இப்படித்தான் ஒன்றாகி இந்து மதம் என்ற போர்வையில் உள்ளது
- 15.4.20

No comments:

Post a Comment