Sunday 10 May 2020

நவபாரத சிற்பிகள் வரிசையில் சி என் அண்ணாதுரை


இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பப்ளிகேஷன் டிவிஷன் நவபாரத சிற்பிகள் என்ற தலைப்பில் முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டு வருகிறது, அந்த வரிசையில் சி என் அண்ணாதுரை என்ற பெயரில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை பி.சி கணேசன் என்பவரை கொண்டு எழுதி நூலாக வெளியிட்டு உள்ளது.
நூலாசிரியர் காங்கிரசை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல வண்ணமே நீதிக்கட்சி திராவிடர் இயக்கம் பெரியார் அண்ணாவைப் பற்றி எழுதியுள்ளார்.
ஈ.வெ.கி. சம்பத் பெரியாரின் தம்பி மகன் என்று எழுதியுள்ளார். அவர் தந்தை பெரியாரின் அண்ணனான கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஆவார்.
இந்த நூலில்
"பெரியார் முழுக்க முழுக்க சமுதாய சீர்திருத்த வாதி முரட்டு சுபாவம் உடைய பகுத்தறிவு வாதியான அவர் மனிதர்களையும் செயல்களையும் கணிக்கும் போது மனித உறவுகளில் காரண காரியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் மனிதாபிமான கோணத்திலேயே அண்ணா பார்த்தார். அண்ணாவும் பகுத்தறிவுவாதி தான் ஆனால் ஓர் இயக்கத்தை வளர்க்கும் போது மனித உறவுகளுக்கும் இருதரப்பு அன்பிற்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் நம்பினார். நாத்திகவாதியான பெரியார் இடத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் இடம் இருந்ததில்லை. தொன்மையான கலை இலக்கியங்களை தூக்கி எறியும் அளவிற்கு அவரின் பகுத்தறிவு தீவிரவாதம் அமைந்து இருந்தது. ஆனால் அண்ணாவோ இலக்கிய மாணாக்கரும் கலைகளின் ரசிகரமாக எல்லா உயர்ந்த விஷயங்களையும் விரும்பினார்.
பெரியாரைப் பொருத்தவரை மதமும் கடவுளும் வெறுமனே சுண்டல் கருவிகள். மக்களின் சொந்த சுகங்களுக்காக சூழ்ச்சி நிறைந்த பூசாரிகளும் இவற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்ததாக அவர் நம்பினார். இந்த சுரண்டலுக்கு முடிவு கட்ட கடவுள் கருத்துக்களையும் மதக்கோட்பாடுகள் ஒழிக்க வேண்டும் என்பது அவசியம் என்று பெரியார் கருதினார். எனவே இவைகளின் மேல் உள்ள பெரியாரின் எதிர்ப்பு நேரடி ஆனதும் தீவிரமானதுமாகும். ஆனால் இலக்கிய கல்வியாலும் வரலாற்று அறிவிலும் நன்கு பதப்படுத்தப்பட்ட அண்ணா ஆக்கப்பூர்வமாக இப் பிரச்சினையை அணுகினார். கடவுள் மதம் கலை இலக்கியம் மூலமாக உயர்ந்த குலத்தவர் சமுதாயத்தை தமது இறுக்கமான பிடியில் வைத்துக் கொள்ளும் போது அது சமண படுத்துவது என்பது அதே கலை இலக்கியம் மூலமாகவே நடைபெற வேண்டும் என்று அவர் கருதினார். அதே நோக்கோடு வரலாற்றின் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு தொடர்பான வரலாற்று பதிவுகளை கண்டெடுத்து பிறகு சமுதாய அமைப்பை தங்களின் கட்டுக்கோப்பில் வைத்து கொண்டு அதற்கு மேல் குடியினர் எத்தனை வழிமுறைகளை மேற்கொண்டார்கள் என்பதை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகங்களாக உருவாக்கினார். அண்ணாவிடன் பிரச்சார உத்திகளை வெளிப்படையாகவே பெரியார் விமர்சித்தார். இருவரும் ஒத்துப் போகாத சூழ்நிலை உருவாகும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.
கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன பெரியாருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்கிறார். முரட்டுசுவாபம் உள்ளவர் என்கிறார். இயக்கத்தின் தலைவர் பெரியார். அனைத்திற்கும் பொறுப்பு அவரே ஆவார். கம்பிமேல் நடப்பது போன்றது.
பெரியாரிடம் இருந்த காலமே வசந்த காலம் என்று அண்ணாவே கூறியுள்ளார்.
பெரியாருக்கு இலக்கிய ரசனை இல்லை என்கிறார். நல்ல இலக்கியம்தான் தேவையென்றார். திருக்குறளை மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தார்.
இன்னொரு இடத்தில் பெரியாரை சர்வாதிகாரி என்கிறார். அண்ணா ஜனநாயகவாதியாம்.
கொள்கைக்கு தலைவரும் அவரே இயக்கத்திற்கு தலைவரும் அவரே நிர்வாக செலவுக்கும் தலைவர் அவரே அப்படி இருக்கும் போது அவர் சொல்வதை தானே கேட்கவேண்டும்!
தொண்டர்கள் இடத்தில் அன்பு இல்லாதவர், பாரதிதாசனுக்கு கூட உதவி செய்யாதவர், அண்ணாதான் உதவி செய்தார் என்று கூறுகிறார். உதவி செய்ததை கூட பெரியார் கண்டித்ததாக கூறுகிறார்.
ஆனால் திராவிடர் கழக மாநாட்டில் பாரதிதாசனுக்கு நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானம் போட வைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் ஏற்பாட்டில் தான் அண்ணா மூலமாக பாரதிதாசனுக்கு நிதி வழங்கப்பட்டது என்பது உண்மை.
இப்படி பல இடங்களில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த முரண்பாட்டை விமர்சித்து எழுதியுள்ளார்.
நூலின் விலை : ரூ 215.00
பக்கங்கள் : 226

No comments:

Post a Comment