Showing posts with label நன்னன். Show all posts
Showing posts with label நன்னன். Show all posts

Tuesday, 23 February 2021

பெரியார் பணத்தாசை பிடித்தவரா?

பெரியார் பணத்தாசை பிடித்தவர், பணஞ்சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பவர் என்றெல்லாம் நாக்கு நரம்பில் உணர்ச்சி யில்லாதவர்களெல்லாம் கூறியதை நாம் கேட்டிருக்கிறோம். பெரியார் என்னும் பெரும் பண்பாளர் தாமே அதுபற்றிக் கூறுவதை இங்குக் காணலாம்.

எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்த போது என்னிடமிருந்த பணத்தை - சொத்தை யெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்து விட்டதால் இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமுமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும் மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. அது பொது நன்மைக்கானது என்று பார்த்து (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.
(விடுதலை, 18.08.1968)

தம் குடும்பச் சொத்தையும், தம்மை நம்பித் தமக்காகத், தம்மிடம் பிறர் கொடுத்தவற்றையும் பொதுவுக்கே ஆக்கிவைத்துப் பொதுநலம் விளைத்த அப்புனிதரை இச்சமுதாயம் என்றும் மறக்காது.

- ஒப்பற்ற சுய சிந்தனையாளர் பெரியார்

- நன்னன்