Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Saturday, 8 August 2026

முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி சென்னை-34

முதலைக் கண்ணீர் வடிப்பதேன்?


'முதலைக் கண்ணீர் வடிக்காதே!' என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வஞ்சக செயல் செய்துவிட்டு அதற்கு வருந்துவது போல் நடித்தால் இப்படி சொல்லு வார்கள். 


தற்போதைய 'இந்தியா டுடே (மே இதழ்) தமிழ் பதிப்பில் கூட 'வெட்டுத் தீர்மானம்' குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது ‘முதலைக் கண்ணீர்’ என்று தலைப்பிட்டுள்ளது. 


முதலை ஏதாவது உயிரினத்தைக் கொன்று தின்று விட்டால்;  'வருத்தப்பட்டு, கண்ணீர் வடிக்கும்’ என்று ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.


இது உண்மையாக இருக்குமா? ஒருபோதும் இருக்காது! காரணம் முதலை மனிதனைப் போல் சிந்திக்கும் திறனில் மேலோங்கியது கிடையாது. அதற்கு உணவே உயிரி உயிரினங்கள் தான். முதலை நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியது; உயிரைக் கொல்லுவதில் வருத்தப்படுவதாக விருந்தால் நிலத்தில் உள்ள தாவரங்களை ஒடித்து உண்ண வேண்டியது தானே!


பின் எதற்குத்தான் முதலை கண்ணீர் வடிக்கிறது?

நிலத்திலுள்ள மனிதன் உட்கொள்ளும் உப்பின் அளவு ஓரளவு குறைவானது. அந்த உப்புக்களை சிறுநீரகம் வடிகட்டி வெளியேற்றி விடுகிறது. ஆனால், கடலில் வசிக்கும் உயிரினங்களின் சிறுநீரகமோ வளர்ச்சி குன்றியது: இதனால் அவைகளின் உடலில் இருந்து உப்பை வெளியேற்ற முடியாது. அதோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உப்பின் அளவு அதிகம். உப்பு உடலில் அதிகமாக சேர்ந்தால் உயிருக்கே ஆபத்து. ஆகையால் உடலில் சேரும் உப்புக்களை வெளியேற்ற உடலில் தனியே ஒரு அமைப்பு கடல்வாழ் உயிரினங்களில் உள்ளது.


மீனுக்கு 'செதில்' பகுதி உப்பை வடித்து வெளியேற்றுகிறது. சில கடல் வாழ் பறவைகளுக்கு மூக்கினுள் இப்பகுதி அமைந்துள்ளது.


''ஆமை', 'முதலை' போன்ற கடல் வாழ் ஊர்வன வற்றின் கண்களின் ஓரத்தில் இச்சுரப்பி அமைந்துள்ளது.


முதலை தான் உண்ட உணவிலும், நீரிலும் உள்ள தேவைக்கு அதிகமான உப்பைக் கண்களின் ஓரத்தில் உள்ள உப்பு சுரப்பியின் மூலம் நீருடன் கலந்து துளித் துளியாக வெளியேற்றுகிறது.


இதை அறியாததால் தான் 'வருத்தப்பட்டு முதலை கண்ணீர் வடிப்பதாக' கூறுகிறார்கள்.


இதேபோல், பச்சை ஆமை யை பற்றியும் ஒரு கதை உண்டு.


பச்சை ஆமைகள் கடலிலேயே உயிர் வாழ்பவை. சில குறிப்பிட்ட காலத்தில் நிலத்திற்கு வந்து (கரையில்) மணலைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.


அப்படி செல்லும்போது மணலின் மீது கண்ணீரை விட்டு விட்டுச் செல்கின்றன.


இவை உறைந்து உப்பு உப்பாக இருக்கும். இதைப் பார்க்கும் மக்கள் ஆமை முட்டையை விட்டு விட்டுச் செல்வதால் அழுவதாக நம்புகிறார்கள்.


உண்மை அதுவல்ல; ஆமைக்கும் கண்ணின் ஓரத்தில் உப்பு நீர் சுரப்பி இருக்கிறது. அதன்மூலம் எப்போதும் உப்பு நீரை வெளியேற்றிக் கொண்டேயிருக்கும். கடலில் இருக்கும் போது நமக்கு இது தெரிய வாய்ப்பில்லை; நிலத்தில் வரும்போது இதைப் பார்ப்பதால் கண்ணீர் வடிப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. 


உண்மை ஆராயப்படும் போது தான் தெரிகிறது!


- செ.ர.பார்த்தசாரதி சென்னை-34


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம்-9, 25.6.1995

Friday, 7 August 2026

சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி


சைவமா?-அசைவமா?


மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி                                    

"சைவ உணவு மட்டும் தான் நலன் பயக்கும் உணவு" என்று தவறான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இறைச்சிகளில் தான் நமது உடல் எளிதாக செரிமானம் செய்து கொள்ளக் கூடிய முறையில் சத்துக்கள் உள்ளன.


எப்படி பென்றால், உயிரினங்கள் உண்டவுணவை கடினப்பட்டு செரிமானம் செய்து தனது உடலில் சேர்த்து வைக்கின்றன. அதை நாம் எளிதாக உண்டு விடுகிறோம்.


எளிதான முறையில் உள்ளதால் நமது உடல் செரிமானம் செய்து சேர்த்து வைத்துக் கொள்கிறது. நாம் மிகுதியாக சாப்பிடுவதால் மிகுதியாக சேர்த்து வைத்துக் கொள்கிறது, இதனால் நோய் வருகிறது.


ஆகையால் சரியான அளவில் உணவை உண்டால் நலமாக இருக்கலாம்.


சிலர் கடவுள் மனிதனை சைவ விலங்காகதான் படைத்தான், அதனால்தான் விலங்குகளுக்கு உள்ள குத்திக் கிழிக்கும் வளைந்த பற்களை மனிதனுக்கு கொடுக்க வில்லை என்கின்றனர்.


ஒருசிலர் 'மனிதன் 'சைவ' விலங்கு', அதனால் தான் இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு உள்ளது போல் வளைந்த குத்திக் கிழிக்கும் பற்கள் இல்லை. 'மனித இனத்தை சேர்ந்த குரங்கும் சைவ உணவையே உண்கிறது' என்று கூறுகின்றனர்.

[குத்திக் கிழிக்கும் பற்கள் உள்ள தாவர உண்ணியான நீர்யாணை]


கடவுள் பெயரால் சொல்லப்படும் காரணம் முழுக்க முழுக்க பொய்யே!


இப்பொழுதுதான் கட வுள்களுக்கு கெல்லாம் "சைவ வேடம்’ போடப்படுகிறது.


வேதங்களில் கடவுள்களுக்கு உயிரினங்களை வெட்டிப் படைப்பதை தான் முக்கியத் தொழிலாக சொல்லப்படுகிறது. வேதப் படி பார்ப்பனர்கள் அனைவரும் ஆடு, மாடு, கோழி, குதிரை என்று அனைத்தையும் வெட்டித்தான் உண்டிருக்கின்றனர்.


கவுதம புத்தரின் கொள்கை பரவுதல் காரணமாக தாக்குபிடிக்க முடியாமல் இடையில் பார்ப்பனர்கள் 'சைவ' வேடம் போட ஆரம்பித்துவிட்டனர்.


மனிதன் சைவ விலங்கா?


உயிரினங்களுக்கு அதனதன் பழக்கவழக்கங்களுக்கு உறுப்புகள் உள்ளன' என்பது உண்மைதான்.


அந்த அடிப்படையில்தான் பற்களும் அமைந்துள்ளன.


பற்கள் குத்திக்கிழிக கூடிய முறையில் இல்லாததால், இறைச்சிகளை சீரணிக்க முடியாமலா இருக்கிறான் மனிதன்.


அனைத்தையும் சீரணிக்கக் கூடிய வகையிலேதானே மனிதன் உள்ளான்.


விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவன் தோன்றுவதற்கு அடிப்படையான உயிரினங்கள் இறைச்சியை குத்திக் கிழித்து உண்ணும் உயிரினங்களாகத்தான் உள்ளன.


“எந்த ஒரு உறுப்பையும், எந்த ஒரு விலங்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அந்த உறுப்பு காலப்போக்கில் வளர்ச்சி குன்றி பிறகு மறைந்து கூட போய்விடும்" இது அறிவியல் உண்மை


"மனிதனுக்கு குத்திக்கிழிக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டதால், மனிதனின் பற்களும் வடிவ மாற்றம் பெற்றுவிட்டன” என்பதுதான் உண்மை.


சைவ உணவால் கொழுப்பு சேராதா?


கொழுப்பு பொருள்கள் உடலில் மிகுதியாகச் சேர்வதால் உடலில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது 'மாரடைப்பு' நோய்’ ஆகும். இந் நோய்தான் பெரிய அளவில் அச்சுறுத்துகிறது.


'சைவம்' என்று சொல்லப்படும் பால், வெண்ணெய், நெய், எள், நிலக்கடலை, தேங்காய் மற்றும் பலவகை பருப்புகளில் கொழுப்பு நிறைந்துள்ளது. சில வகை காய்கறிகளில் மட்டுமே கொழுப்பு குறைவாக உள்ளது.


ஆகையால் 'சைவ உணவு சாப்பிட்டால் மட்டும் கொழுப்பு இதயக் குழாய்களை அடைக்காது' என்று சொல்வது தவறானதாகும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும்!


அதோடு, ‘புல்'லை மட்டுமே தின்னும் செம்மறி ஆட்டின் உடலில் எப்படி கொழுப்பு சேர்கிறது!

அதற்கும் சில அடிப்படைக் காரணம் உள்ளன.


60 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை கொழுப்பு சத்துக்கள். உடலில் உள்ள பல சுரப்பிகளின் மூலமாக குடலிலும் கல்லீரலிலும் தயாரிக்கப்படுகிறது. மீதிதான் உணவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொழுப்புச் சத்தை சாப்பிட்டால்தான் உடலில் கொழுப்பு சேரும் என்பதல்ல; எதைச் சாப்பிட்டாலும் உடலே கொழுப்பை உண்டாக்கிக் கொள்ளும் என்பதுதான் உண்மை.


அதனால்தான் புல்லை மட்டுமே தின்னும் ஆடும், மாடும் கொழுகொழுவென கொழுப்புடன் இருக்கின்றன.



கொழுப்பால் உடல் பாதிக்குமா?


கொழுப்பால் உடல் பாதிப்படையாது. கொழுப்பு உடலுக்கு தேவையே! அளவை மீறும் போது தான் கோளாறு வருகிறது.


கொழுப்பின் வகைகள்


கொழுப்பில் நான்கு வகை உண்டு. இதில் முக்கியமானது (1) குறைந்த அடர்த்தி கொழுப்பு, (2) மிகு அடர்த்தி கொழுப்பு என்பவையாகும்.


இதில் குறைந்த அடர்த்தி கொழுப்பு மற்ற கொழுப்பு சத்துக்களை உடல் முழுக்க எடுத்துச் சென்று அணுத் திசுக்களுக்கு ஊட்டுகின்றன. திசுக்களுக்குள் சென்ற குறைந்த அடர்த்தி கொழுப்பை மிகு அடர்த்தி கொழுப்பு ஈர்த்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று சிதைவடைய வைக்கிறது.


ஆனால், இரத்தத்தில் குறைவு அடர்த்தி கொழுப்பு 160 மி.லி. கிரா முக்கு மேல் இருந்தாலும் 'மிகு அடர்த்தி கொழுப்' பின் அளவு 35 மி.லி. கிராமுக்கு குறைவாக இருந்தாலும் திசுக்களிலேயே குறை அடர்த்தி கொழுப்புகள் தங்கி; இரத்த நாளங்களில் படிந்து அடைக்க ஆரம்பித்துவிடும்.


மிகு அடர்த்தி கொழுப்பைப்பற்றிய கவலையே தேவையில்லை. அது கல்லீரலில் சிதைவடைந்துவிடும். 


 இரண்டு வகை கொழுப்புமே உடலுக்குத் தேவை தான், ‘அளவு சரியாக இருக்க வேண்டும்’

என்பதுதான் முக்கியம். 


இறைச்சி வகைகளில் மிகுதியாக, குறைவு அடர்த்தி கொழுப்புகளே உள்ளன. ஆகையால் இறைச்சியை அளவோடு சாப்பிட வேண்டும்.


மற்ற இறைச்சி வகைகளை விட கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. 


ஆகையால் கோழி இறைச்சியை மற்ற இறைச்சியைவிட தாராளமாகச் சாப்பிடலாம்.


உற்சாகமூட்டும் கோழி!

அதோடு கோழி இறைச்சியில் 'டைரோசின்' என்ற அமினோ அமிலம் இருப்பதால் மூளையில் டோபா மைன், நாராஃபிறெய்ரைன் என்ற வேதிப் பொருள்களின் அளவை மிகுதியாக்கும். இவை மனதிற்கு உற்சாகத்தையும் செயல்பாட்டில் வேகத்தையும் அளிக்கிறது. 


அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி முடிவு, ''டைரோசின் உடலுக்கு சக்தி தந்து பதற்றமான நிலைமைகளை சமாளிக்கும் திறனை தருகிறது" என்று கூறுகிறது.


புற்றுநோயைத் தடுக்கும் மீன்


மீன் உணவில் மிகுதியாக அடர்த்தி மிகுந்த கொழுப்பே இருக்கிறது. அடர்த்தி மிகுந்த கொழுப்பு: அடர்த்தி குறைந்த கொழுப்பை கரைக்கும்; இதனால், மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது. ஆதலால் மீனை மிகுதியாக உண்ணலாம்.


மீன் உணவு கொழுப்பை கரைப்பதோடு அல்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.


நிலத்திலுள்ள உணவு பொருள்களில் 'அயோடின்' சந்து மிகமிகக் குறைந்த அளவே உள்ளது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களில் 'அயோடின்' சத்து நிறைந்துள்ளது. ஆகையால் மீன் உணவை உண்பதால், அயோடின் குறைவால் ஏற்படும் 'தைராய்டு அழற்சி. நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.


மூளை வளர்ச்சிக்கு மீன்


'ஸ்பெயின் நாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள், மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது' என்கின்றனர். ஆகையால் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மீன் கொடுத்துப் பழக்க வேண்டும். குறைந்தது வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். 


கருவுற்ற தாய்மார்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் மீன் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


உற்சாகமூட்டும் புரதம்


தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 'கார்போ அய்ட்ரேட்' நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில், அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு மாறாக புரதம் நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில் அவர்களுக்கு உற்சாக மேற்பட்டது; என்றும் சத்துணவு ஆராய்ச்சியாளர் 'போலி ஸ்ப்ரிங்' என்பவர் கூறுகிறார்.


'கார்போ அய்ட்ரேட்' எனப்படும் மந்தமாக்குகிற மாவுச்சத்து பொருள் தாவர வகை உணவுகளில் தான் நிறைந்துள்ளது.


ஆனால், உற்சாகமூட்ட கூடிய புரதப் பொருள் இறைச்சி வகைகளிலே தான் நிறைந்து உள்ளது.


இறைச்சியில் இரும்பு

இறைச்சியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இறைச்சியை புறக்கணித்தால் இரும்பு சத்து குறைவு ஏற்படும். உடலில் இரும்பு சத்து மிகுதியாக தினமும் 85 கிராம் இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


இறைச்சியை முழுமையாகத் தவிர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை. தீமையே மிகும்!


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 3, 12.4.1998




Sunday, 2 August 2026

உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் - செ.ர.பார்த்தசாரதி

 உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும்


குண்டூரைச் சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா, ஷேக் அலிக் ஆகியோர் பொதுச்செயலாளரிடம் கடிதம் கொடுத்தபோது...


4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.


இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


3.1.96 பிற்பகல் 3.10 மணிக்கு 'பினாகினி' விரைவு தொடர்வண்டி 108 தமிழ்நாடு நாத்திக பேராளர்களை சுமந் துகொண்டு விஜயவாடா நோக்கி புறப் பட்டுச் சென்றது. அதில் நானும் ஒருவராகச் சென்றேன். வண்டி இரவு 10 மணிக்கு விஜயவாடாவை சென்று அடைந்தது. எங்களை விஜயவாடா நாத்திக மய்யத்தில் 'கோரா' அவர்களின் துணைவி சரசுவதி கோரா மற்றும் அவரது மகன் இலவணம் அவர்களின் உடன்பிறப்பு டாக்டர் ஜி. விஜயம் அவர்கள் வரவேற்றார்.


மூன்று நாட்களுக்கும் தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தனர்.


பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.


தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டுப் பேராளர்களுக்கு 10 சிந்தனைகளை எடுத்து வைத்து பேசினார். அனைவரின் கவனத்தையும் இந்த சிந்தனையும், பேச்சும் கவர்ந்தது.


மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது.  தந்தை பெரியார் தொண்டர்களையும், பெரியார் இயக்கத்தையும், பெரியாரின் தொண்டையும் ஒவ்வொருவரிடமும் பன்னாட்டு நாத்திகர்கள் சிறப்பாக பாராட்டினர்.


லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஹூ மணிஸ்டு அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் 'ஹாரி ஸ்டேப்ஸ் ரோப்' என்பவர், எங்களை எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டார்; நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெரியாரிஸ்டுகள் என்றேன். உடனே அகமகிழ்ந்து என்னை கட்டித்தழுவி; தந்தை பெரியாரை 'மாமனிதர், அவர் பணி அரும்பணி' என்று மனந்திறந்து பாராட்டினார். அதனுடன் 'நான் 13 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்தேன். அப்போது தங்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன், வியந்தேன்' என்று கூறினார். சென்னையில் நடை பெறவிருக்கும் மாநாட்டுக்கு வருமாறு கூறிய போது; கட்டாயம் வருவேன் என்று கூறினார். அதே போல் சென்னை பகுத்தறிவாளர் கழக மாநில

மாநாட்டிற்கு வருகை தந்தார். 


4-வது உலக நாத்திகர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஆயிரம் (1000) துண்டறிக்கைகளை தாம்பரம் மாவட் டம் மற்றும் தென் சென்னை மாவட்டம் சார்பில் விஜயவாடாவிலேயே தெலுங்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங் கினோம்.

தி.இரா. இரத்தினசாமி (தாம்பரம் மாவட்டத் தலைவர்) அவர்கள் விஜயவாடாவில் துண்டறிக்கையை வழங்கியபோது...


அந்த துண்டறிக்கையில் ‘தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு தத்துவம் மற்றும் 'சர்வ சக்தி சாமிக்கு தெலுங்கு - தமிழ் தெரியாதா?' என்ற முழக்கமும் அச்சிட்டோம். துண்டறிக்கையில் பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் கடவுள் மறுப்பு தத்துவத்தை அச்சிட் டோம். இத்துண்டறிக்கைகளை பெற் றுக் கொண்டபின் பொதுமக்கள் பரபரப்பாக காணப்பட்டனர். மாநாட்டைப் பற்றி தெரியாமல் இருந்த பொதுமக்கள். 'மாநாட்டின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர். பலர் துண்டறிக்கைகளை வாங்கிப் படித்துவிட்டு, கேள்விகளைக் கேட்டனர். எங்களுக்குத் தெரிந்த தெலுங்கு சொற்களை வைத்து தமிழ் -தெலுங்கு ஆங்கிலம் என்று கலந்து கலந்து பதில்களை கூறி தெளிவுபடுத்தினோம்.


தாம்பரம் மாவட்ட அமைப்பாளர் வீரபத்திரன் அவர்களுக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியுமாதலால் பலருக்கு அவர் தெலுங்கில் விளக்கம் கொடுத்தார். 


இத்துண்டறிக்கையை அச்சிட அச்சுக் கூடங்களை அணுகியபோது, அச்சிட மறுத்தனர். நாத்திக மய்யத்திலே அச்சுக் கூடம் இருப்பதை அறிந்து அங்கேயே அச்சிட்டோம்.


இதைக் கேள்விப்பட்ட 'இலவணம்' அவர்கள் 'நாத்திக கருத்தை பரப்ப பணம் வாங்குவதா?' என்று கூறி, எங்களிடமிருந்து அச்சிட வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறு கூறி விட்டார்.


நாத்திக மய்யத்தில் மருத்துவமனை, அச்சுக்கூடம், சமூக நலக் கூடம், நூலகம், புகைப்பட அரங்கு மற்றும் அறிவியல் மய்யம் முதலியவைகள் உள்ளன. இதே போன்று சிறிய அளவில் நமது பெரியார் திடலிலும் ஓர் அறிவியல் மய்யம் அமைத்தால் நன்றாயிருக்கும்.


மாநாட்டிற்கு பேராளர்கள் மட்டுமே வந்தார்களே தவிர, பொதுமக்கள் வர வில்லை. போதிய அளவு பிரச்சாரமும், விளம்பரமும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.


குழுக் கலந்துரையாடல் கூட்டத்தில் அ. அருள்மொழி அவர்கள் பேசியதை அனைவரும் பாராட்டினர்.


குண்டூரை (ஆந்திரா) சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா என்பவரும், ஷேக் அலிக் என்பவரும் அருள்மொழியின் பேச்சைக் கேட்டுவிட்டு இந்த மாதிரி ஒரு பேச்சை இதுவரையில் கேட்டதில்லை. தெலுங்கில் பேசி இருந்தால் இன்னும் நன்றாக புரிந்து கொண்டிருப்போம் என்று எங்களிடம் கூறினார்கள்.


அருள்மொழி அவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தினோம் அருள் மொழிக்கும் தெலுங்கு தெரியும் என்று கூறியவுடன் குண்டூருக்கு வந்து பிரச்சாரம்



டாக்டர் ஹாரிஸ்டேப்ஸ்-ரோப்

(இலண்டன்) உடன் செ.ர. பார்த்தசாரதி


செய்யும்படியும், அதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்கள்.


இருவரும் கழக பொதுச் செயலாளரிடம் ஆந்திராவில் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும்படி கடிதம் கொடுத்தனர். அக்கடிதத்தில், 'இங்கே பிரச்சாரமே செய்யப்படுவதில்லை. வெளியே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டாம்' என்று கூறுகின்றனர். அறைக்குள்ளேயே கூட்டத்தை நடத்திவிடுகின்றனர். தாங்கள் இங்கே வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தந்தை பெரியாரின் பணியை பாராட்டுகிறோம். அவரின் பணி பெரும்பணி' என்று எழுதிக் கொடுத்தனர். அவர்களை சென்னை மாநாட்டிற்கு வருமாறு அழைத்தோம். அவர்களுள் ஷேக் அலிக் என்பவர் முன்கூட்டியே சென்னை மாநாட்டிற்கு வந்து பேரணியிலும் கலந்து கொண்டார். நமது பணிகளை நேரில் கண்டு வியந்து மாநாட்டு முடிவில் கழக பொதுச் செயலாளரிடம் 1000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.


தந்தை பெரியாரின் பணியும், மற்ற நாத்திகர்களின் பணியும் ஒன்றாக ஒப்பிட முடியாதது. தந்தை பெரியார் செய்த அரும் பணியால் தான் தமிழ்நாட்டில் நாத்திகம் வெற்றிகரமாக, மக்கள் இயக்கமாக நடைபெறுகிறது. இதே போல் மற்ற இடங்களில் நடைபெறாத தற்குக் காரணம் தந்தை பெரியாரின் வேலை திட்டங்கள் போல் இல்லாதது தான் காரணம்.


-செ.ர.பார்த்தசாரதி

திராவிடர் கழக தென் சென்னை இளைஞர் அணி பொருளாளர்


  • - விடுதலை நாளேடு, 19.01.1996

 



___________________________________________________________________________________

உலக நாத்திகர் மாநாடு (விஜயவாடா)

ஜனவரி 4,5,6 1996

4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.


இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.


மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது. 

மாநாட்டில் கலந்து கொண்ட திராவிடர் கழக தென் சென்னை, தாம்பரம் மாவட்ட தோழர்கள்









Saturday, 27 September 2025

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

கட்டுரை, ஞாயிறு மலர்

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்லி; ‘மாயாஜால வித்தை’ (தந்திரக் காட்சி) காட்டுபவர்கள், கடைசியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமலேயே மூட்டை கட்டி விடுவர்.

இது எதனால் என்றால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டால், கீரி பாம்பை கொன்று விடும் அதனால்.!

பாம்புகளின் வகைகள்

பாம்புகளில் நஞ்சு உள்ளவை நஞ்சு இல்லாதவை என இரண்டு வகை உள்ளது.  அதேபோல் நஞ்சு உள்ளவைகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

1.. நீயூரோ டாக்சிக்’ (Neurotoxic) உள்ளவை.  2.‘ஈமோ டாக்சிக்’(Hemotoxic) உள்ளவை. என்பனவாகும்.

நியூரோ டாக்சிக் நஞ்சு உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சு இரத்தத்தைப் பாதித்து, திசு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நாகப்பாம்புகள், மாம்பாக்கள் மற்றும் கிரெய்ட்கள் ‘நியூரோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன, அதே நேரத்தில் ‘ராட்டில் ஸ்னேக்ஸ்’ மற்றும் ‘அட்டர்ஸ்’ போன்ற விரியன் பாம்புகள் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன.

கீரிப்பிள்ளையும் பாம்பும்

கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை மூண்டால் கீரிப்பிள்ளையே வெல்லும்.   கீரிப்பிள்ளை விரைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது. இதனால் பாம்பிடம் சண்டை போட்டு, போக்கு காட்டி, பாம்பை சோர்வடைய வைக்கும். கீரிப்பிள்ளை தனது உடலில் இருக்கும் மயிர்களை சிலிர்க்க வைத்து பாம்புக்கு பெரிய உடலாக காண்பிக்கும்; இதனால் பாம்பின் கடி கீரிப்பிள்ளையின் உடல் மீது பதியாமல், மயிர் பகுதியிலேயே பதியும்.  அதோடு அதன் தோல் பகுதி மிகவும் கடினமானதால், கடியும் சரியாக பதியாது. கீரிப்பிள்ளை பாம்பின் தலையை சிதைத்தும்; கழுத்தை குதறியும் கொன்றுவிடும். கீரிப்பிள்ளையின் கடி மிக வலிமை வாய்ந்தது.  அப்படியே பாம்பின் கொத்து, கீரியின் உடம்பில் பட்டு நஞ்சு பாய்ந்தாலும் பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாது. காரணம் கீரிப்பிள்ளையின் உடம்பில் பாம்பின் நஞ்சுக்கான எதிர் புரதம் (Antibody), அதாவது மாறுபட்ட ‘அசிட்டோகோலின் ஏற்பி’ (Acetylcholine receptor) என்ற நச்சு முறிவு பொருள் (anti venom) உள்ளது. அதேபோல் கிளைக்கோ புரதம் ((Glycoprotein) என்கிற நஞ்சு எதிர்ப்பு பொருளும் உள்ளது. இந்தப் பொருள்கள் பாம்பின் நஞ்சை முறித்து விடும். இதனால் கீரிப்பிள்ளை பாம்பு கடியால் இறக்காது தப்பித்துவிடும்.   இதே போல் பாம்பு நஞ்சிற்கு எதிரான ‘புரதப் பொருள்’ உள்ள பல உயிரினங்கள் உள்ளன.

அதில் ஒன்று குதிரை. குதிரையின் காலில் பாம்பு கொத்திய பிறகு, குதிரையின் உடம்பில் பாம்பு நஞ்சுக்கு எதிரான புரதம் சுரந்து இரத்தத்தில் கலந்து விடும். இதனால் குதிரை பிழைத்து விடும்.

இதை பயன்படுத்தி குதிரையின் இரத்தத்திலிருந்து பாம்பு கடிக்கு ‘முறிவு மருந்து’ தயாரிக்கிறார்கள்.

 பாம்பு கடிக்கு மருந்து

பாம்பின் நஞ்சை சிறிய அளவில் மாற்றம் செய்து, ஊசி மூலம் குதிரைக்கு செலுத்துகிறார்கள். சில நாட்களில் குதிரையின் உடம்பில் ‘நஞ்சு முறிவு புரதம்’ சுரக்கிறது. குதிரையின் இரத்தத்தில் இருக்கக்கூடிய இந்த புரதத்தை பிரித்தெடுத்து, மனிதர்களுக்கு ஏற்படும் பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

அதேபோல், கோழியின் உடலில் சிறிய அளவில் பாம்பின் நஞ்சை செலுத்தி;, அது இடும் முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர். பாம்பு கடிக்கு மருந்து உயிரினத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ‘இறைச்சி உணவு’ கூடாது என்பவர்கள் (Non-Vegetarian); பாம்பு கடிக்கு பலியாக வேண்டியது தான்!

- விடுதலை ஞாயிறு மலர், 27.09.2025 

1. குதிரை மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை

2. கோழி மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை





Saturday, 20 September 2025

குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


‘குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


கட்டுரை, ஞாயிறு மலர்

சைவ மதத்தின் பெருமையை கூறுவதோடு, அதன் கதாநாயகர்களான பார்வதி பரமசிவனின் திருமணக் காட்சி களையும், அவர்களின் மகனாக ஸ்கந்தன் (கந்தன் – முருகன்) பிறப்பதை பற்றியும் ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் கூறுகிறது.

இந்த காப்பியத்தை காளியின் பக்தராக கூறப்படும், ‘கவிஞர் காளிதாசர்’ இயற்றியதாக கூறப்படுகிறது. (இவர் வாழ்ந்த காலம் பொ.மு 01 முதல் பொ.பி. 05 வரை ஏதோ ஒரு நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது!

‘குமார சம்பவம்’ என்கிற இந்த காப்பியத்தில் 17 சருக்கங்கள் இருக்கின்றன. இதில் எட்டு சருக்கங்களை தான் ‘காளிதாசர்’ இயற்றிய தாகவும், மற்ற 9 சருக்கங்களை வேறு யாரோ எழுதி ‘இடை செருகல்’ செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

முதல் 8 எட்டு சருக்கங்களைத் தான் பலர் ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். சிலர் மட்டுமே 17 சருக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பக்தி நூல்களை வெளியிடும் ‘லிட்டில் பிளவர் பதிப்பகம்’ ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் 8 சருக்கங்கள் கொண்டதையே வெளியிட்டுள்ளது.

காப்பியத்தின் பெயர் ‘குமார சம்பவம்’, ஆனால் இந்த எட்டு சருக்கங்களில் குமார சம்பவத்தை பற்றியே குறிப்பிடப்படவில்லை!. அதாவது குமாரன் எனப்படும் ஸ்கந்தனின் பிறப்பு பற்றியே குறிப்பிடப்படவில்லை. குமாரனின் பிறப்பு பற்றி காவியம் எழுத வந்த காளிதாசர், குமாரனின் பிறப்பை பற்றி, கூறாமலா இருந்திருப்பார்?

பிறகு வரும் 9, 10, 11 ஆகிய சருக்கங்களில் தான் கந்தன் எனப்படும் குமாரன் எப்படி பிறந்தான் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த வர்ணனை மிகவும் அருவருப்பாக (ஆபாசமாக) இருப்பதால் தான் இடைச்செருகல் என புறக்கணித்து விடுகின்றனர்.

‘குமார சம்பவம்’ என்கிற காப்பியத்தில் உள்ளபடி…..

பார்வதி – பரமசிவன் திருமணம் பருவதமலையில் நடைபெறுகிறது. அங்கே ஒரு மாதம் தங்கி இன்பம் அனுபவிக்கின்றனர். பிறகு இமய மலையின் உச்சிக்கு(கந்தமாதன மலை) புறப்பட்டு சென்று அங்கு யாரும் அறியா இடத்தில் மதுவை உண்டு, பாலின்ப களிப்பில், வாழ்க்கை வாழ்கின்றனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இப்படியே நூறு தேவ ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர்.(மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் ஒரு நாள். 360 மனித ஆண்டுகள் தேவர்களின் ஒரு ஆண்டு. அப்படியானால் 360×100 =36000 மனித ஆண்டுகள்) அதாவது 36,000 மனித ஆண்டுகள் பார்வதியும் -பரமசிவனும் உடலுறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

ஆனாலும் பார்வதிக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலங்கி போய், இனிமேல் ஒரு குழந்தை பிறந்தால் யாரால் தாங்க முடியும்? என அஞ்சிய தேவர்கள் ‘அக்னி’ தேவனை தூது அனுப்ப முடிவு செய்தனர். அக்னி தேவன் ‘புறா’ வடிவில், பார்வதியும் பரமசிவனும் உடலுறவு கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான். துணுக்குற்ற சிவன் அப்படியே வெளியே வந்து அக்னி தேவனிடம் ‘என்ன அவசரம்?’ என்று கேட்டான். தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் ‘தாரகாசுர’னை கொல்ல, ஒரு மகனை தாங்கள் பெற்றுத் தர வேண்டும்’ என தேவர்கள் என்னை அனுப்பி வைத்துள்ளனர்’ என கூறினார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

சமாதானம் அடைந்த சிவன், “உடலுறவுக்கு இடையே என்னை தொந்தரவு செய்ததால் வெளியேறும் ஸ்கலிதத்தை (விந்துவை) நீ ஏந்தி கொள்” என அக்னி பகவானிடம் விட்டார்.

அக்னி பகவான் அதன் வெப்பத்தை தாளமாட்டாமல் கங்கை நதியின் ‘சரவணப் பொய்கை’யில் மூழ்கி அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டான். அங்கே நீராட வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த விந்துவின் நீரினால் கர்ப்பமானார்கள். அந்த கர்ப்பத்தை அங்கேயே ஈன்று விட்டு விட்டனர்.

அதைப் பார்வதி எடுக்க ஆறு குழந்தைகளாக மாறின. அதை ஒன்றாக சேர்க்க ஆறு தலை 12 கை உடைய கந்தனாக (ஆறுமுகம் – ஷண்முகம்) மாறியது.

‘குமார சம்பவம்’; சருக்கம்: 9,10,11 பகுதிகள் தான் இவற்றை விவரிக்கின்றன.

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், பால காண்டம் சருக்கம் 36, 37இலும்,

ஸ்ரீ சிவ மஹா புராணம்,1 ஞான சம்ஹிதை,18. தாரகாசூரன் உதயமும் திரிபுரத் தோற்றமும்’ பகுதியிலும்  இதே கதை இடம்பெற்றுள்ளது.

‘குமார சம்பவம்’ என்ற பெயரில் காப்பியம் எழுத வந்தவர், குமாரனின் பிறப்பு பற்றி எழுதாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை. பிறகு வந்தவர்கள் காப்பியத்தை நகலெடுக்கும் போது அந்தந்த காலகட்டத்தில் இருந்த மொழி நடைக்கேற்றாற் போல் எழுதியிருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு “இந்தப் பகுதி இப்படி இருக்கிறது; அந்தப் பகுதி அப்படி இருக்கிறது’ அதனால் இந்த பகுதிகளை அவர் எழுதி இருக்க மாட்டார்” என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதையே!

- விடுதலை ஞாயிறு மலர், 20.09.2025