Wednesday, 5 August 2026

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள் - செ.ர.பார்த்தசாரதி

பார்ப்பனர்களைப் பற்றிய பழமொழிகள்

கி.வா.ஜெகன்நாதன் அவர்கள் எழுதிய 'தமிழ் பழமொழிகள்' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

1. அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் -38

2. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?-39

3. அக்கிரகாரத்து நாய் அபிமானத்திற்கு செத்தது-40

4. அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?- 41

5. அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல - 42

6.அச்சி வீடு தீ பிடித்தால் பட்டர் முண்டு தோளில் 162

7. அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும் -204

8. அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும். (வடமன் - பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்)-206

9. அழுகின பழம் அய்யருக்கு -1392 

10. ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்கிறேன், என்னை ஆற்றுக்கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு -1745

11. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு -1761

12. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்காருக்கு மூன்று கொம்பு-1816

13 ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?- 2072

14 ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம் (பஞ்சநதம் திருவையாறு) 2105

15 ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு (பார்ப்பானுக்கு) அதுவும் இல்லை - 2122 

16 ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்- 2133

17 ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல - 2143

18 ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? -2611

19 ஆற்றுக்குப் போன ஆசார பாப்பாத்தி, துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம் -2615.

20 ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணூல் - 2667

21 ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலி (முதலை)யை விடு -2684.

22 ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கள் - 2703.

23 அய்யர் என்பவர் துய்யர் ஆவர்-5806.

124 அய்யர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை - 5807

25 அய்யர் தின்னும் பருப்பு அய்ந்து குடி கெடுக்கும் -5808.

26 அய்யர் பாதி, அரண்மனை பாதி (புதுக்கோட்டை மில்)-5809

27 அய்யர் வரும் வரை அமாவாசை  காத்திருக்குமா? -5810

28 காசிக்குப் போயும் மூடத்தவசி காலில் விழுகிறதா? - 7744

29 கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம் - 8371

30 உழவுக்கும் அக்கினி ஹோத்திர(த்திற்கும் வெகு தூரம். - 4288 

31 ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? -4646

32 எல்லோரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச் சரிந்து விழுந்தார் - 5264

33 அய்யங்கார் அம்மானையில் சறுக்கினார் 5791

34 அய்யங்காரும் தத்துக் கொடுத்தார்- 5792

35 அய்யர் இடம் கொடுத்தாலும்; அடியாள்கள் இடம் கொடார்கள் 5803.

36 அய்யங்காரை கெடுத்தவள் அய்யங்காரிச்சி; தாதச்சியை கெடுத்தவன் தாதன்- 5794

37 அய்யர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான் 5804,

38 அய்யர் உருள; அம்மை திரள 5805

39 உணவை தின்பான் திவசப் பிராமணன்; சூத் துக்கு நிற்பான் வீர முஷ்டி. -4027

40 உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல 4108.

41 செக்கானிடம் சிக்கிய மாடும்; பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்பட மாட்டார்கள் - 11208

42 செத்தவன் இருக்க சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்-11316

43 செத்துப் போன பசுவைக் கெட்டுப்போன பார்ப்பானுக்கு தாரை வார்த்த கதை- 11350 

44 செத்துப் போன பார்ப்பானுக்கு செட்டிப் பெண்ணைக் கொடுத்தானாம் - 11353

 45 தட்சணை இல்லாவிட்டால் (குறைத்தால்) அப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம். (மலையாளப் பார்ப்பான் கூற்று)-11828

46 தில்லை அந்தணர் கூடுவது எப்போது; ஓடுவது எப்போது - 12804

47 தென் திசை பார்ப்பான் வடதிசைக்கு ஏகின், நடை திருந்திப் பார்ப்பான் ஆவான். (கபிலர் அகவல்) - 13166

தகவல்:

செ.ர.பார்த்தசாரதி

(தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்)

- விடுதலை ஞாயிறு மலர்




Tuesday, 4 August 2026

பனிக்கட்டி வழுக்குவது ஏன்? - மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

பனிக்கட்டி வழுக்குவது ஏன்?

மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

எந்த ஒரு பொருளும், தடை இல்லாவிட்டால் இயங்கிக் (ஓடிக்) கொண்டே தான் இருக்கும்.

நாம் நடக்கும் போது; நம் கால்களில் உள்ள கோடுகள் (ரேகை); தரையில் உள்ள சிறு சிறு கீறல்கள் மற்றும் மேடு பள்ளங்களில் படிந்து ஒரு தடையை ஏற்படுத்து கின்றன. இதனால் ஒரு வகையான பிடிமானம் ஏற்பட்டு நம் கால்கள் வழுக்கு வதில்லை; இதனால் தொடர்ந்து நடக்கிறோம்.

ஆனால், தரையில் எந்த வகையான தடைகளும் (சிறு சிறு கீறல் மற்றும் மேடு பள்ளங்கள்) இல்லாமல் இருந்து நடந்தோமானால் நம் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் வழுக்கிக் கொண்டே சென்று கடைசியில் நிலை தடுமாறி கீழே விழ வேண்டி வரும்.

இதேபோல் தான் பனிக்கட்டியின் மீது நடக்கும் போதும் ஏற்படுகிறது. 

பனிக்கட்டியின் மேல் நாம் காலை வைத்தவுடன், நம் காலில் உள்ள வெப்பம் பனிக்கட்டியினுள் ஊடுருவி பனிக்கட்டியை உருக்கு (கரைக்) கிறது; இதனால் நம் காலுக்கும் பனிக்கட்டி க்கும் இடையில் 'நீர்' உண்டாகிறது. இதன் ஆக்கமாக (காரணமாக) பிடிப்பற்ற தன்மை ஏற்பட்டு பனிக்கட்டியின் மீது நாம் வழுக்கி விழுகிறோம்.

பல்லி நடப்பது எப்படி?

 'பல்லி' தனது கால்களில் உள்ள 'பை' போன்ற பகுதி யிலுள்ள காற்றை அழுத்தி வெளியேற்றி 'வெற்றிட பிடிப்பான்' முறையில் நடப்பதாக பலரும் நம்பிக் கொண்டு வருகின்றனர். 'அதனால்தான் வழுவழுப்பான கண்ணாடியில் கூட அதனால் நடக்க முடிகிறது' என்று கூறி வருகின்றனர்.

உண்மை அதுவல்ல! 'பல்லி'யின் கால்களின் அடியில் நூறு மில்லியன் கணக்கான 'மைக்ரோஸ்கோப்பிக் மயிரிழைகளால் ஆன 'பிரஷ்'கள் உள்ளன. இவை மிக வழுவழுப்பான இடங்களின் மீது இருக்கும் மிகச் சிறு சிறு மேடு பள்ளங்களில் கூட நுழைந்து பொருந்தக்கூடியது. அப்படி செல்லும் போது மயிரிழைகளின் மூலக்கூறுகளும், மேற்பரப்பு (கண்ணாடி) எந்த மூலக்கூறுகளால் ஆனதோ அவையும் மிக நெருக்கமாக உள்ளதால் இவற்றின் இடையே மூலக் கூறுகளின் 'ஒட்டிணைவாற்றல் சக்தி இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் கண்ணாடியும் பல்லியின் காலும் நன்றாக ஒட்டிக் கொள்கிறது.


மூலக்கூறுகளின் 'ஒட்டிணைவாற்றல் சக்தியால் தான் பல்லி கீழே விழாமல் தொங்கிக் கொண்டு மேல் தளத்தில் கூட நடக்கிறது.

- விடுதலை ஞாயிறு மலர்

Sunday, 2 August 2026

உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும் - செ.ர.பார்த்தசாரதி

 உலக நாத்திகர் மாநாடும் விஜயவாடா பயணமும்


குண்டூரைச் சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா, ஷேக் அலிக் ஆகியோர் பொதுச்செயலாளரிடம் கடிதம் கொடுத்தபோது...


4 -வது உலக நாத்திகர் மாநாடு விஜயவாடாவில் (ஆந்திர மாநிலம்) 'பென்ஸ் 'சர்க்கிள்' என்ற இடத்தில் உள்ள 'நாத்திக மய்யத்தில்' 1996 ஜனவரி 4,5,6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 'கோரா' நாத்திக மய்யமும், திராவிடர் கழகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.


இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து 100 நாத்திக பேராளர்களுக்கு விஜயவாடா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் டாக்டர் இலவணம் அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்து 120 பேராளர்கள் வந்து கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு வருகை தந்தோரில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


3.1.96 பிற்பகல் 3.10 மணிக்கு 'பினாகினி' விரைவு தொடர்வண்டி 108 தமிழ்நாடு நாத்திக பேராளர்களை சுமந் துகொண்டு விஜயவாடா நோக்கி புறப் பட்டுச் சென்றது. அதில் நானும் ஒருவராகச் சென்றேன். வண்டி இரவு 10 மணிக்கு விஜயவாடாவை சென்று அடைந்தது. எங்களை விஜயவாடா நாத்திக மய்யத்தில் 'கோரா' அவர்களின் மனைவி சரசுவதி கோரா மற்றும் அவரது மகன் இலவணம் அவர்களின் உடன்பிறப்பு டாக்டர் ஜி. விஜயம் அவர்கள் வரவேற்றார்.


மூன்று நாட்களுக்கும் தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தனர்.


பன்னாட்டு நாத்திகர்களும் பங்கேற்க 4.1.96 மாலை 4 மணிக்கு டாக்டர் விஜயம் அவர்களின் வாழ்த்துரையுடனும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறப்பானதொரு வரவேற்புரை யுடனும் மாநாடு துவங்கியது.


தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டுப் பேராளர்களுக்கு 10 சிந்தனைகளை எடுத்து வைத்து பேசினார். அனைவரின் கவனத்தையும் இந்த சிந்தனையும், பேச்சும் கவர்ந்தது.


மாநாட்டு மேடையில் 'நம்பிக்கையான எதிர்காலத்திற்கு பயனுள்ள நாத்திகம்' என்ற சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது.  தந்தை பெரியார் தொண்டர்களையும், பெரியார் இயக்கத்தையும், பெரியாரின் தொண்டையும் ஒவ்வொருவரிடமும் பன்னாட்டு நாத்திகர்கள் சிறப்பாக பாராட்டினர்.


லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஹூ மணிஸ்டு அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் 'ஹாரி ஸ்டேப்ஸ் ரோப்' என்பவர், எங்களை எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டார்; நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெரியாரிஸ்டுகள் என்றேன். உடனே அகமகிழ்ந்து என்னை கட்டித்தழுவி; தந்தை பெரியாரை 'மாமனிதர், அவர் பணி அரும்பணி' என்று மனந்திறந்து பாராட்டினார். அதனுடன் 'நான் 13 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்தேன். அப்போது தங்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன், வியந்தேன்' என்று கூறினார். சென்னையில் நடை பெறவிருக்கும் மாநாட்டுக்கு வருமாறு கூறிய போது; கட்டாயம் வருவேன் என்று கூறினார். அதே போல் சென்னை பகுத்தறிவாளர் கழக மாநில

மாநாட்டிற்கு வருகை தந்தார். 


4-வது உலக நாத்திகர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஆயிரம் (1000) துண்டறிக்கைகளை தாம்பரம் மாவட் டம் மற்றும் தென் சென்னை மாவட்டம் சார்பில் விஜயவாடாவிலேயே தெலுங்கில் அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங் கினோம்.

தி.இரா. இரத்தினசாமி (தாம்பரம் மாவட்டத் தலைவர்) அவர்கள் விஜயவாடாவில் துண்டறிக்கையை வழங்கியபோது...


அந்த துண்டறிக்கையில் ‘தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு தத்துவம் மற்றும் 'சர்வ சக்தி சாமிக்கு தெலுங்கு - தமிழ் தெரியாதா?' என்ற முழக்கமும் அச்சிட்டோம். துண்டறிக்கையில் பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் கடவுள் மறுப்பு தத்துவத்தை அச்சிட் டோம். இத்துண்டறிக்கைகளை பெற் றுக் கொண்டபின் பொதுமக்கள் பரபரப்பாக காணப்பட்டனர். மாநாட்டைப் பற்றி தெரியாமல் இருந்த பொதுமக்கள். 'மாநாட்டின் காரணத்தைப் பற்றி தெரிந்து கொண்டனர். பலர் துண்டறிக்கைகளை வாங்கிப் படித்துவிட்டு, கேள்விகளைக் கேட்டனர். எங்களுக்குத் தெரிந்த தெலுங்கு சொற்களை வைத்து தமிழ் -தெலுங்கு ஆங்கிலம் என்று கலந்து கலந்து பதில்களை கூறி தெளிவுபடுத்தினோம்.


தாம்பரம் மாவட்ட அமைப்பாளர் வீரபத்திரன் அவர்களுக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியுமாதலால் பலருக்கு அவர் தெலுங்கில் விளக்கம் கொடுத்தார். 


இத்துண்டறிக்கையை அச்சிட அச்சுக் கூடங்களை அணுகியபோது, அச்சிட மறுத்தனர். நாத்திக மய்யத்திலே அச்சுக் கூடம் இருப்பதை அறிந்து அங்கேயே அச்சிட்டோம்.


இதைக் கேள்விப்பட்ட 'இலவணம்' அவர்கள் 'நாத்திக கருத்தை பரப்ப பணம் வாங்குவதா?' என்று கூறி, எங்களிடமிருந்து அச்சிட் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறு கூறி விட்டார்.


நாத்திக மய்யத்தில் மருத்துவமனை, அச்சுக்கூடம், சமூக நலக் கூடம், நூலகம், புகைப்பட அரங்கு மற்றும் அறிவியல் மய்யம் முதலியவைகள் உள்ளன. இதே போன்று சிறிய அளவில் நமது பெரியார் திடலிலும் ஓர் அறிவியல் மய்யம் அமைத்தால் நன்றாயிருக்கும்.


மாநாட்டிற்கு பேராளர்கள் மட்டுமே வந்தார்களே தவிர, பொதுமக்கள் வர வில்லை. போதிய அளவு பிரச்சாரமும், விளம்பரமும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.


குழுக் கலந்துரையாடல் கூட்டத்தில் அ. அருள்மொழி அவர்கள் பேசியதை அனைவரும் பாராட்டினர்.


குண்டூரை (ஆந்திரா) சேர்ந்த வேஜன்லா சத்திய நாராயணா என்பவரும், ஷேக் அலிக் என்பவரும் அருள்மொழியின் பேச்சைக் கேட்டுவிட்டு இந்த மாதிரி ஒரு பேச்சை இதுவரையில் கேட்டதில்லை. தெலுங்கில் பேசி இருந்தால் இன்னும் நன்றாக புரிந்து கொண்டிருப்போம் என்று எங்களிடம் கூறினார்கள்.


அருள்மொழி அவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தினோம் அருள் மொழிக்கும் தெலுங்கு தெரியும் என்று கூறியவுடன் குண்டூருக்கு வந்து பிரச்சாரம்



டாக்டர் ஹாரிஸ்டேப்ஸ்-ரோப்

(இலண்டன்) உடன் செ.ர. பார்த்தசாரதி


செய்யும்படியும், அதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார்கள்.


இருவரும் கழக பொதுச் செயலாளரிடம் ஆந்திராவில் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும்படி கடிதம் கொடுத்தனர். அக்கடிதத்தில், 'இங்கே பிரச்சாரமே செய்யப்படுவதில்லை. வெளியே சென்று பிரச்சாரம் செய்ய வேண்டாம்' என்று கூறுகின்றனர். அறைக்குள்ளேயே கூட்டத்தை நடத்திவிடுகின்றனர். தாங்கள் இங்கே வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். தந்தை பெரியாரின் பணியை பாராட்டுகிறோம். அவரின் பணி பெரும்பணி' என்று எழுதிக் கொடுத்தனர். அவர்களை சென்னை மாநாட்டிற்கு வருமாறு அழைத்தோம். அவர்களுள் ஷேக் அலிக் என்பவர் முன்கூட்டியே சென்னை மாநாட்டிற்கு வந்து பேரணியிலும் கலந்து கொண்டார். நமது பணிகளை நேரில் கண்டு வியந்து மாநாட்டு முடிவில் கழக பொதுச் செயலாளரிடம் 1000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.


தந்தை பெரியாரின் பணியும், மற்ற நாத்திகர்களின் பணியும் ஒன்றாக ஒப்பிட முடியாதது. தந்தை பெரியார் செய்த அரும் பணியால் தான் தமிழ்நாட்டில் நாத்திகம் வெற்றிகரமாக, மக்கள் இயக்கமாக நடைபெறுகிறது. இதே போல் மற்ற இடங்களில் நடைபெறாத தற்குக் காரணம் தந்தை பெரியாரின் வேலை திட்டங்கள் போல் இல்லாதது தான் காரணம்.


-செ.ர.பார்த்தசாரதி

திராவிடர் கழக தென் சென்னை இளைஞர் அணி பொருளாளர்


  • - விடுதலை நாளேடு, 19.01.1996

 











 




Friday, 31 July 2026

இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு! -செ.ர.பார்த்தசாரதி

 இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!


- செ.ர.பார்த்தசாரதி





"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வர வேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டி வந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.

உவமைக் கவிஞர் சுரதா கூட தமது ‘சுரதா' இதழிலே ஒரு முறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்' என்று எழுதியிருந்தார்.

ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.

சீதை இராவணனை இலை குடிலுக்குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.

இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:

"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்

வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.


(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)

கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமிப் புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக்குள் அமரவைத்து பேசியதாக தான் கூறுகிறது.

வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழிபெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்

துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)

சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!

ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டை பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படி செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை எழுதி, நடந்ததாக பொய் சொல்லி, அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.


- உண்மை இதழ், 01.11.1986


Monday, 13 July 2026

இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! - கலி.பூங்குன்றன்

 


நீதிக்கட்சி என்று சொல்லப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றம் 1916ஆம் ஆண்டு.

இந்த அமைப்புத் தோன்றுவதற்கு மும்மூர்த்திகளாக இருந்த பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்கள் ஆவார்கள்.

1912ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சிக்கு முன்னோடியாக ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குரிய பெருமான் டாக்டர் சி.நடேசனார். அவ்வமைப்பின் பெயர் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் (Madras United League) 1913ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை வேப்பேரியில் வழக்குரைஞர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ராமராய நிங்கர் (பனகல் அரசர்) உள்ளிட்ட 26 பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த நீதிக்கட்சி.

அதன் முதல் கொள்கை அறிக்கையை (Non-Bramin Manifesto) வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்டார். (20_12_1916) 


சுயமரியாதை இயக்கம் என்கிறபோது அதற்கென்று தொடக்க விழா இல்லை; எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்றுகூட அறுதியிட்டுக் கூறமுடியாது. சமூகச் சூழலும், அந்தப் பருவத்தில் ஞான சூரியனாகத் தோன்றிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையில் வெடித்த கருத்துகளும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் சுயமரியாதை இயக்கம்.

காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் குடிஅரசு இதழைத் துவக்கினார்களே _ அந்த மே 2ஆம் தேதி (1925)யை சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் என்று கூறுவோரும், தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் சமூக நீதிக் கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரே (22.11.1925) அந்த நாள்தான் சுயமரியாதை இயக்கம் பிறப்பெடுத்த நாள் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு என்றாலும் 1925இல் தந்தை பெரியார் என்னும் பேராசானின் மூளையில் பிரசவிக்கப்பட்ட இயக்கம் இவ்வியக்கம் என்பது மட்டும் உண்மை. அதன் அடிப்படையில்தான் 1975இல் தஞ்சையில் பொன்விழா அன்னை மணியம்மையார் அவர்களால் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. 

சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்துதான் சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற   வரலாற்றுத் திருப்பு முனையை உருவாக்கினார்! (27.8.1944)

இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! 


நீதிக்கட்சி நூறு சுயமரியாதை இயக்கம் தொண்ணூறு - கலி.பூங்குன்றன்

கட்டுரையின் சில பகுதிகள் -உண்மை இதழ்,16-30.11.15,

Friday, 10 July 2026

நான் பாரதியாரைச் சந்தித்தால்... 'குமுதம்' ஏடு கேட்டதற்கு இணங்க கி.வீரமணி கட்டுரை



 நான் பாரதியாரைச் சந்தித்தால்...

கி.வீரமணி கட்டுரை

(பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981ஆம் ஆண்டில்,'குமுதம்' ஏடு ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கேட்டு பெற்று வெளியிட்ட கட்டுரை இது) 

பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று 'குமுதம்' ஏடு என்னைக் கேட்கிறது. பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றலும் இது ஒரு இனிய கற்பனைதான். இன்றைக்கு பாரதியாரைப் பற்றி ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் குழப்பமாக இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்துவதற்கு பாரதியாரைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன். நான் தந்தை பெரியாரின் தொண்டன். எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதோ, அல்லது எல்லோரும் நீச்சலடிக்கிறார்கள் என்பதற்காக அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்கிற அவசியமோ இல்லாதவன் நான். ஈரோட்டுக்குப் போனவர்கள் நன்றாக எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்பவர்கள் தான். எனவே பாரதியாருக்கு நூற்றாண்டு விழா என்ற காரணத்தினால், அவரை ஒரு தேசீயக் கவி என்று புகழ் பாடுகிற நேரத்தில், ஒரு மகாகவிக்கு அத்தகைய குழப்பங்கள் ஏன் இருக்க வேண்டும் என்பது புரியவில்லையே என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டிருப்பதை விட, அவரையே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமானால் நிச்சயமாக கேட்கலாம் அல்லவா? என்னுடைய கருத்துப்படி, ஒருவரை தேசீயக் கவி என்று அழைக்கும் போது, அவருக்குத் தெளிவான, தொடர்பான. குழப்பமில்லாத, முரண்பாடு இல்லாத கருத்துகள், கேள்விகள் இருக்க வேண்டும். சுதந்திரத்துக்காகப் பாடினார் என்பது மட்டுமே பாரதியாருக்கு உள்ள மாபெரும் தகுதியாக ஆகிவிட முடியாது. தேசீயக் கவிஞர் என்று சொல்லும்போது தேசீயப் பார்வை, தேசம் முழுவதையும் ஒட்டிய பார்வை, மக்கள் அனைவரையும் சமத்துவமாக கருதக்கூடிய பார்வை என்பது வரவேண்டும். ஆனால் பாரதியாரின் பாடல்களில் அத்தகைய பார்வைகள் இல்லை என்பதை சற்று விளக்குகிறேன்.

எங்கள் ஆரிய பூமி. எங்கள் ஆரிய நாடு என்று பல இடங்களில் உரைக்கின்றார். 'ஆரிய நாட்டினர். ஆண்மையோடு இருந்தும் சீரிய முயற்சிகள் திரண்டு மிட்கோட்டுகர் வீரியம் ஒழிந்து வெம்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்; பிச்சை வாழ்வதற்கு பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்' என்று பாரதியார் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் பிராமண தேசம் ஆகிவிட வேண்டும் என்று அவர் இன்னொரு இடத்தில் சொல்லியிருக்கிறார். 'ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்' என்று பாரதியார் பாடியிருக்கிறார். எனவே மொழி என்று வரும் பொழுது ஆரிய மைந்தன் இலக்கணம் அமைத்தான் என்று கூறி, தேசம் என்று வரும்பொழுது ஆரிய வேதம் ஆரிய நாடு என்று கூறி தன்னை ஒரு ஆரியன். வேதியன் என்றும் வேதியன் உயர்ந்தவன், ஆரியன் உயர்ந்தவன், இது ஆரியர்களுக்குரிய நாடு என்றும் அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பது அவருக்கு தேசீயப் பார்வை இருக்கிறதா, ஆரியப் பார்வை உள்ளதா என்று பாரதியை துணிச்சலோடு, நேர்மையோடு கேட்பேன். நேர்மைத் திறமில்லாதவர்கள் தான், என்னவோ அவரைப் புகழ்கிறார்கள்; இது புகழ் பாட வேண்டிய நாமாவளிக் கட்டம், எனவே புரிந்தவர்கள், புரியாதவர்கள், விழாவுக்கு என்றே பாரதியாரை ஒரு நாள் புரட்டியவர்களெல்லாம் மாமேதைகளைப் போல, ஓடுகின்ற நீரிலே தாங்களும் ஓடவேண்டும் என்று நினைப்பதை போல நான் ஓட விரும்பவில்லை. பாரதியைப் பார்த்துத் துணிச்சலோடு, தந்தை பெரியார் தொண்டனாகிய நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று நீங்கள் பாடினீர்கள் என்று பெருமிதத்தோடு எல்லோரும்  மேடையிலே சொல்ல இன்றைக்குக் கேட்கிறோம். ஆனால் உங்களோடு நெருங்கிப் பழகிய நண்பர் என்று கருதக் கூடிய ஒருவர்-திரு பத்மநாபன் அவர்கள் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்னால் 'இந்து' பத்திரிகையிலே ஒரு விமரிசனக் குறிப்பு எழுதியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது "சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் எழுதவில்லை. சாதி பேதம் இல்லையடி பாப்பா என்றுதான் எழுதினார். பிறகு பாடபேதமாக. 'சாதிகள் இல்லையடி' என்று வந்துவிட்டது'' என்று குறிப்பிட்டிருக்கிறார் பத்மநாபன். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் சாதி ஒழிப்பிலே உள்ள நம்பிக்கை என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

சனாதன வகை தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும். சிலைகளும், சூரிய ஜோதியிலே காணப்படும். ஏழு வர்ணங்களைப் போலவே அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களே அல்லாமல் குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமக்கு அழிவுக்குக் கருவிகள் ஆகமாட்டா" என்று சாதியைப் பார்க்கக் கூடிய வெள்ளத்தை நீங்கள் அங்கே காட்டுகிறீர்கள். இன்னும் ஒரு செய்தி. சாதியைப் பற்றி உங்களுக்குத் தெளிவான திட்டவட்டமான கருத்துக்கள் இருக்குமேயானால் நீங்கள் இந்தப் பகுதியை உங்கள் கட்டுரையில் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்.

நீங்கள் பதில் சொல்லா விட்டாலும் உங்களுக்காகப் பரிந்து கொண்டு சிலர் பதில் சொல்ல வருவார்கள். வருவார்கள். அது ஒரு ஒரு நல்ல  வாய்ப்பு தான். அதனால்தான் இவைகளை தெளிவாகக் கூற முன் வந்திருக்கிறேன்.

" "கீழ் ஜாதியாரை நல்ல  சமஸ்காரங்களால் பிராமணர்கள்  ஆக்கிவிட முடியும் என்பதற்கு நம்முடைய . வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராம்மண தேசமாகச் செய்துவிட்டால் நல்லதென்பது. என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாமிச பட்சணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துவிட வேண்டும். பிறகு அவன் பிராம்மணனாகவே கருதப்படல் வேண்டும்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். எல்லோரும் மனிதர்களாக வேண்டும் விரும்புகிறார்களே தவிர எல்லோரும் பிராம்மணனாக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். விரும்பக்கூடாது.பூணூல் போடப்பட்டு விடுவதாலேயே எல்லோரும் உயர் ஜாதிக்காரர்களாக ஆகிவிட முடியும் என்று சொன்னால் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே ராமானுஜர் வெற்றி பெற்றிருப்பாரே? ராமானுஜர் தோல்வி அடைந்த இடத்திலேதான் நீங்களும் நிற்கிறீர்கள். ஏன்? நீங்களே கூட புதுவையில் கனகலிங்கம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதி நண்பருக்குப் பூணுால் போட்டு வைத்தீர்களே? கனகலிங்கம் அய்யர் ஆக்கப்பட்டாரா? கனகலிங்கம் பிராம்மண வகுப்பில்சேர்த்துக் கொள்ளப் பட்டாரா?  

அது நீங்கள் அடைந்த தோல்வியே தவிர வெற்றியல்லவே. எனவே இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சுருத்தைத் தாங்கள் சொல்ல வேண்டும்? அது மாத்திரமல்ல. 'முன்னாளில் அய்யர் எல்லாம் வேதம் சொல்வார். அதில் மூன்று மழை பெய்யுமடா மாதம்-இத்தாளில் பொய்மையில் பார்ப்பார் இவர் ஏதும் செய்து காசு பெறப் பார்ப்பார்' என்று நீங்கள் பாடலை புனைந்திருக்கிறீர்கள்.அய்யர் வேதம் ஓதினால் மழை பெய்யும் என்று கருதுகிறீர்களே? இதற்கு விஞ்ஞான பூர்வமாக ஆதாரம் ஏதேனும் உண்டா? நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு இருக்கிற அந்த உயர்ந்த ஜாதிக் கருத்து என்பது பல நேரங்களிலே உங்களை ஈர்த்திருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.

"ஜாதிப் பிரிவுகளில் இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். நம்முடைய கிறிஸ்தவப் பாதிரிமார்களாலே நேர்ந்த அவமானம்தான் இது. இந்து மதம் அப்படி அல்ல. எல்லோரும் இதை வேதமாகக் கொள்ள வேண்டும். எல்லோரும் இந்துக்களாகிவிட வேண்டும். எல்லோரும் இந்த இடத்திலே இந்துக்கள் என்று சிறப்பாக நினைக்க வேண்டும்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்" என்று சொல்லுகிறீர்கள். முப்பது கோடியும் வாழ்வோம், வீழ்ந்திடில் முப்பது கோடி முழுவதும் வீழ்வோம்' என்று நீங்கள் ஓர் இடத்தில் கூறியிருக்கிறீர்கள்.முப்பது கோடியும் வாழ வேண்டும் என்று சொன்னால் எல்லோரையும் இந்துக்களாக்கிய பின்தான் முப்பது கோடியும் வாழ வேண்டும் என்று சொல்லுகிறீர்களா? அல்லது நீங்கள் பிறிதொரு இடத்தில் இந்துக்கள் இருபது கோடி என்று குறிப்பிட்டுள்ளீர்களே. அதன்படி பார்த்தால் முப்பது கோடி, இருபது கோடியாகக் குறைகிறது. உங்களுக்கு தேசீயப் பார்வை இருக்குமானால். உங்களுக்கு ஜாதி ஒழிப்புப் பார்வை இருக்குமேயானால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நிலைக்குச் சென்றிருப்பீர்களா என்பது எங்களுக்குச் சந்தேகம், சில நேரங்களில் ஒரு கவிஞனுடைய கண்ணோட்டத்திலே மாறுபட்ட நிலைகள் இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய சீடராகப் பெருமையோடு தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு காலத்தில் சுப்பிரமணியர் துதியமுது பாடியவர்தான். ஆனால் சுப்பிரமணியர் துதியமுது பாடிய கனகசுப்புரத்தினம், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, அவரை 'இல்லையென்போன் யாரடா; தில்லை சென்று பாரடா!' என்று கேட்டவர்களுக்கு 'இல்லையென்போன் நானடா, அத்தில்லை சென்று தானடா' என்று உறுதியாகச் சொன்னார்.

எனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய நிலையை எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் அவர் மாற்றமடைந்திருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும். அவர் போக்கில் வளர்ச்சியைக் காண முடியும்.    முரண்பாட்டைக் காண முடியாது. அதுபோல உங்களுடைய கால கட்டத்தில் பிற்காலத்தில் மாற்றப்பட்ட கருத்து. ஏற்கெனவே உங்களுக்கு இருந்த கருத்து. வளர்ச்சிப் போக்கில் உள்ள கருத்து என்று தெளிவான வரையறைகள், குறுக்குக் கோடுகள் இருக்கின்றனவா என்று அப்படிப்பட்ட குழப்பமில்லாத நிலை நாங்கள் தேடிப் பார்க்கிறோம். உங்கள் படைப்புக்களிலே காண முடியவில்லை. குழப்பங்களும் முரண்பாடுகளும் தான் மிஞ்சி நிற்கின்றன. இந்தக் குழப்பங்கள் எப்படியிருக்கின்றன. என்பதற்கு இன்னொரு உதாரணத்தைக் கூட நான் சுட்டிக்காட்டி உங்களிடம் கேட்கிறேன். உங்களைப் பாராட்டுகின்ற பலர், உங்களுடைய நூற்றாண்டு விழாவிலே பங்குகொள்கின்ற பலர், உங்களுடைய படத்துக்கு மாலை அணிவிக்கின்ற பலர் உங்களுடைய நால்களை அச்சிட்டு வியாபாரம் செய்யவேண்டும் என்று நினைக்கின்ற பலர் தெளிவாக இதைக் கேட்க மாட்டார்கள். பலர் போகாத அந்த இடத்திற்குத் துணையாக நான் போகிறேன். மற்றவர்கள் எனைத் தாக்குவார்களே. தூற்றுவார்களே என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தாக்க வேண்டும். தூற்ற வேண்டும். அதன் மூலம் சில உண்மைகள் வெளிப்படையாக, அப்பட்டமாகத் தெரிய வேண்டும் என்ற உணர்வோடு இதை நான் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதற்குப் பாராட்டு நீங்கள் தெரிவித்தீர்கள் என்பதற்காகத்தான் நம்முடைய அருமைப் பொதுவுடைமை நண்பர்கள் எல்லாம். 'பொதுவுடைமை இந்த உலகத்திலே கொள்கையாகக் கொள்வோம், புனிதமோடு அதை நாங்கள் காப்போம்' என்று சொன்ன புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை விட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஓகோ என்று புகழ்கிறார்கள். எப்படியிருந்தாலும், நீங்கள் அந்த ரஷ்யப் புரட்சியை அவ்வளவு பாராட்டியிருக்கிறீர்கள்.

'மாகாளி, பராசக்தி, உருஷ்ய நாட்டில் கடைக்கண் வைத்தாள். அங்கே ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி"

என்று பாடியிருக்கின்ற நீங்கள், மற்றொரு கருத்தையும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லியிருப்பதைப் படிக்கிறேன் கேளுங்கள்!

(1917'ம் ஆண்டு நவம்பர் 28'ம் தேதி செல்வம் என்ற தலைப்பிலே வெளியான உங்கள் கட்டுரையில் ஒரு பகுதிதான் இது.)

ரஷ்யாவைப் போல் புரட்சி இந்த நாட்டின் மண்ணில் ஏன் வெடிக்கவில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஒரு காரணத்தோடு ஆராய்கிறீர்கள். அன்றைக்கு மட்டும் அல்ல. இன்றைக்கும் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்விதான், மக்கள் மன்றத்திலே கேட்கப்பட்டு வருகின்ற கேள்வியும் ஆகும். நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்:

"முதலாவது காரணம் இந்து ஜன சமூக அமைப்பில், ஐரோப்பாவில் இருப்பதுபோல் அத்தனை அதிகமான தாரதம்மியம் இல்லை முதலாளி, தொழிலாளி,.செல்வன். ஏழை இவர்களுக்கிடையே அய்ரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை, ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பது போலவே, நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நம் தேசத்தில் இருக்கும் அளவுக்கு அந்தக் கண்டத்தில் கிடையாது. கொலையாலும். கொள்ளையாலும். அன்பையும், சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர், தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்றே நான் கருதுகிறேன். இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்க, கொலையைத்தானே கையாள நேருகிறது? அநியாயம் செய்வோரை அநியாயத்தால் தானே அடக்க நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை" என்று சொல்லியிருக்கிறீர்கள்.

(மீதி அடுத்த இதழ்)

நான் பாரதியாரைச் சந்தித்தால்...

கி. வீரமணி

(சென்ற இதழ் தொடர்ச்சி)

லெனினே பரம் மூடர் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், புரட்சி வெடித்து ஜார் மன்னன் வீழ்ந்தான் என்று சொன்னால், அந்தப் புரட்சிக்குத் லெனின் தந்தையாக இருந்த காரணத்தினால் தான் ஜார் கட்சி கட கடவென்று சரிந்தது. மாகாளியின் தத்துவம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் மாவீரனான லெனின் இதைச் சொல்லும்போது தன்னைத்தானே உணராத பரம மூடர்கள் செய்கை என்கிறீர்கள், முன் வரியிலே இதைச் சொல்லி, லெனின் இதைச் செய்வது முற்றிலும் தவறான கொள்கை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதற்கு 'ஈக்வேஷன்' என்ன? லெனின் பரம மூடன் என்பதே! பொதுவுடைமைக் கொள்கையை ஒரு பக்கத்தில் நீங்கள் பாராட்டிவிட்டு, மற்றபடி தானம் கொடுப்பதன் மூலமாக ஏழ்மைத்தனத்தை ஒழித்துவிட முடியும் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது?

எந்த உண்மையான பொதுவுடைமைவாதியும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். தர்மகர்த்தா முறையாக வேண்டுமானால் கருதப்படலாம். ஆனால் வேத உணர்ச்சியிலே கூட, இங்கிருக்கிற பிறவி பேதம், ஜார் முதலாளித்துவ பேதத்தை விட ஆழமானது. எனவே ஐரோப்பாவில்தான் இங்குள்ளதைவிட அதிக பேதம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிக மிக அதிசயமான வினோதமான நிலையிலே இருக்கிறது.

அதே கட்டுரையில் நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள் "லெனின் வழி சரியான வழி இல்லை, காரணம் என்ன என்று சொன்னால், நாம் இந்தியாவில் இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்திய அசாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவில் உள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும், அய்ரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும். குரோதமும் பூண்டோர் அல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டும் என்றால், நியாயம் ஆகாது. அதற்கு நம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள்"என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

இதைச் செய்யாமல் எப்படி இங்கே பொதுவுடைமை வரும்? இதை எந்த உண்மையான பொதுவுடைமைவாதியால் ஏற்றுக் கொள்ள முடியும்? 

இந்தியாவிலே இருக்கிற நிலச்சுவான்கள் அங்கேயிருக்கிற நிலச்சுவான்களைவிட நல்லவர்கள் என்று சொன்னால், நிலச்சுவான் முறை இருக்க. வேண்டும் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள்: என்றுதானே பொருள்?

ஒரு பக்கத்திலே ஜாதி முறை நல்லது என்று வாதாடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே எல்லோரும் இந்துக்களாக வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் அதையும் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே இந்த தேசம் ஆரிய நாடு என்று சொல்லுகிறீர்கள், அதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்னொரு நேரத்தில் எல்லோருக்கும். பிராம்மணர்களைப் போல் பூணூல் போடப்பட்டு, சந்தியாவந்தனம் சொல்லித்தரப்பட்டு பிராம்மண தேசமாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.. இவைகளெல்லாம் முற்போக்கு என்பதற்கு நிச்சயமாக வழிகாட்டுகின்ற முறையாக இருக்க முடியாது.

ஒரு தேசீயக் கவிஞன் பார்வையில் இத்துணை குழப்பங்கள். இருக்கக் கூடாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் அத்தகையவர்கள் ஒரு தேசீயக் கவியாக இருக்க முடியாது. மற்றவர்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறர்கள் என்பதற்காக அந்த இடத்திற்கு போய் எல்லோரும்பாராட்ட வேண்டும் என்பது அல்ல. இவைகளெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாத பகுதி என்பதைப் போல் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் ஏன்? இதற்கு உங்களுடைய நியாயமான பதில் என்ன? ஒருவேளை நீங்கள் இந்தப் பழமையான கருத்துகளில் ஊறித் திளைத்த காரணத்தினால், உங்களுக்கு ஏற்பட்ட சுற்றுச் சார்வு காரணமாக இந்த நிலை இருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக. பல நேரங்களில் சில கருத்துக்கள் உங்களிடம் வெடித்திருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

‘ஆயிரம்.தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகள்’ என்று நீங்கள் சொல்லியிருப்பது என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல. மூட பக்தி என்ற பெயராலே நம்முடைய நாட்டில் எவ்வளவு நேரம். காலம் வீணாகிறது என்பதைப் பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அதை நாங்கள் மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறோம். "மூட பக்தியிலே சில தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள், நட்சத்திரம், லக்கினம் முதலியவை பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாசப் பொருத்தம், பக்ஷப் பொருத்தம். திதிப் பொருத்தம், நாள் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், வியாபாரங்கள். சடங்குகள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்க்கும் செயலில் கால விரயத்திற்கும், பொருள் விரயத்திற்கும். வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும்.

காரியங்களுக்கும் பொருந்தாது. தடையாக முட்டு கொண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுணம் பார்ப்பதால் காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது.நாட்பொருத்தம் லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே காரிய நஷ்டமின்றி. மேற்படி லக்கினப் பொருத்தம் பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது."

இப்படியெல்லாம் சிலவற்றை நீங்கள் கண்டித்திருக்கிறீர்கள், அதை வரவேற்கிறேம். ஆனால் உங்களுக்கு நூற்றண்டு விழாவில் கொண்டாடுகிறவர்கள் கூட நாள் பார்த்து சகுனம் பார்த்து, நேரம் பார்த்து அதிலேகூட உங்களைக் கைவிட்டுத்தான் காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நீங்கள் எங்கோ சில இடங்களில் முற்போக்கு முத்திரைகளைப் பதிப்பித்திருக்கிறீர்களே. அவைகூட நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறதா என்பது முக்கியம் அல்ல. சாதி இல்லை என்று நீங்கள் கூறிய நேரத்தில் பறையருக்கும், இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்று பாடினீர்கள். அந்த விடுதலை இசைத்தட்டிலே மட்டும்தான் ஒலிக்கிறது. நாட்டிலே காண முடிகிறதா என்று கேள்வி கேட்கும்போது, இந்த நிலைக்கு ஆசைப்பட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதிலேகூட உங்களுக்கு முரண்பாடும் குழப்பமுமாக இருந்திருக்கிறது.

உங்களுடைய உயர்ஜாதித் தனம் என்பது உங்களை அறியாமல் உங்களுடைய ரத்தத்திலே கலந்துவிட்ட. காரணத்தினாலோ என்னவோ உங்களுடைய புரட்சிக்குக்கூட ஒரு புதிய பார்வையையும்: புதிய கோணத்தையும் கொடுத்திருக்கிறதே தவிர. உங்களுடைய தேசீயப் பார்வையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. எனவே உங்களை நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறேன்.

என்ன பதிலை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ, உங்கள் சீடர்கள் மூலமாக சொல்லுங்கள். எதிர்பார்க் கிறேன். மீண்டும் சில கேள்விகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

பேட்டி என்.பி.

குமுதம் வார ஏடு, 1981


Wednesday, 18 March 2026

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு, பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது 'இருக் வேதத்தில் (இருக வேதம் (57) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள். மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும் முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம் 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு தொகுப்பு | பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு. இந்திய வரலாறு-பக்கம் 118). ("விடுதலை" அசுரன் மலர் 2006, பக்கம் 16] உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு. அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது.
அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம் என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம், வால்மீகியும் கம்பரும், பக்கம் 15)

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் 'இரகு வம்சம்' என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது.

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும். வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ர.பார்த்தசாரதி, சென்னை

விடுதலை நாளேடு 18.8.2012