வெற்றிவலவன் பதிவுகள்

Sunday, 19 March 2023

மொழிகளின் திணிப்பு வரலாறு

 மொழி இன அடையாளமும் மேன்மையும்!

October 22, 2022 • Viduthalai
பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான்

அனைத்து உயிரினங்களிலும் மனித உயிரே கருவியைப் பயன்படுத்துகிறது. கல்லும் கட்டையும், எலும்பும் இரும்பும், வேலும் வில்லும், சக்கரமும் வண்டியும், கத்தியும் சுத்தியும், கட்டு மரமும் கப்பலும் எனத் தொடங்கி இன்று ஏவுகணைகளையும் கணினியையும் பயன்படுத்தும் அளவிற்கு மாந்தர் வளர்ந்துள்ளனர்.

மொழிப் பற்று இல்லையேல் ஒரு தேசிய இனத்திற்கு உரிமை உணர்வே இருக்காது. அத்தகைய இனம் காலப்போக்கில், அறிவி யல், சமுதாயம், அரசியல், பொருளியல் ஆகிய துறைகளின் படிப்படியாக வீழ்ந்துபடு வதைத் தவிர்க்க முடியாது. மொழியைக் காத்து வளர்க்கும் விழிப்புணர்வு, உரிமை வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வித்தாகும்.

மொழியும் ஒரு கருவியே! ஆனால் மற்றவற்றிலிருந்து அஃது அடிப்படையில் வேறுபடுகிறது. அது மனத்தைச் சார்ந்தது. அது மூளையால் பெரும்பாலும் இயல்பாக வடிவம் பெறுவது. உடலின் புற உறுப்புக்கள் மொழியைக் கையாள்வதில்லை. மொழியின் மீது அறிவின் ஆட்சி இருக்கும் அளவிற்குப் பிற கருவிகளில் இல்லை. அத்துடன், மொழிக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது, மன எழுச்சிக்கு ஊற்றாக இருக்கவல்லது; பிற கருவிகளுக்கு அத்தகு ஆற்றல் இல்லை. இன உணர்வு மற்றும் சமுதாய ஒற்றுமைக்கு அடிப்படையாகவும் வலிமை சேர்ப்பதாகவும் இருப்பது மொழியே!

ஹிந்துத்துவத்தை முதன்மைப்படுத்தும் பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணி ஆட்சியில் சமஸ்கிருதம் போற்றப்படுகிறது. அதனுடன் ஒட்டிய ஹிந்தி ஏற்றம் பெறுகிறது. தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படுகிறது. அத்துடன் தமிழ்ப் புழக்கத்தில் வடமொழி கலக்கிறது. அதாவது, தமிழ்ப் பண்பாட்டைச் சமஸ்கிருதப் பண்பாட்டிற்கு அடிமையாக்கும் வேலை மறைமுகமாகத் திட்டமிட்டபடி நடக்கிறது.

மய்ய அரசு நிறுவனங்களுக்குச் சமற் கிருதம் சார்ந்த ஹிந்தியில் அல்லது அதனு டன் ஆங்கிலத்தைக் கலந்து பெயர்களைச் சூட்டுகிறார்கள்; ராஷ்ட்ரீய கெமிகல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், பாரத சன்சா£ நிகாம், விதேஷ் சன்சா£ நிகாம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் எனும் வகையில் பலப்பல அறிவிப்பு கள் தமிழ்ச் செய்தித்தாள்களில் வருகின்றன. வடமொழியாளருக்கு மேல் நிலையும் மற்ற வருக்குத் தாழ் நிலையும் உள்ள இந்தியாவை உருவாக்குகிறார்கள்.

இந்திய நாட்டின் மூலக் குடிகளுக்குத் தொடர்பற்ற சமஸ்கிருதம், பார்ப்பன மேலாதிக்கத்திற்கெனவே உருவாக்கப்பட்ட தாகும். சமற்கிருதம் என்பதற்கு “நன்கு செய்யப்பட்டது” எனப் பொருள். அதன் மந்திரங்களை வேதியரைத் தவிர பிறர் படிக்கக் கூடாதெனக் கடுமையான தண்ட னைகள் மூலம் தடுத்தனர். பொது மக்களின் நலன் நாடிய பெரியவர்கள் அம்மொழியைப் புறக்கணித்தனர். யாகத்தையும் வேதத்தை யும் நால்வருணத்தையும் எதிர்த்துப் புதிய அறிவார்ந்த மனித நேயப் பாதையைக் காட்டிய புத்தர் செல்வாக்குப் பெறத் தொடங் கியபொழுது பார்ப்பனரில் சிலர் அவருக்குச் சீடராயினர். இருப்பினும் சமற்கிருதத்தைப் போற்றாமல் அவர்களால் இருக்க முடிய வில்லை. தொடர்ந்து என்ன நடந்தது என் பதை விவேகானந்தர் கூறுகிறார்: “புத்தர் தமது நெறியைப் பரப்பிய காலத்தில், இந்தியா வில் சமற்கிருத வழக்கொழிந்த மொழியாக இருந்தது. கற்றவரின் புத்தக மொழியாக மட்டுமே இருந்தது. புத்தரின் பார்ப்பனச் சீடரில் சிலர் அவருடைய கருத்துக்களை சமற்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பி னர். ஆனால் புத்தர் தெளிவாக இவ்வாறு அவர்களுக்கு கூறிவிட்டார்: ‘ஏழையரு டைய, பொது மக்களுடைய நலனை நான் நாடுகிறேன். அவர்களுடைய மொழியைப் பயன்படுத்தவே விரும்புகிறேன்.’ இவ்வாறு அவர் கூறிவிட்டதால் அவருடைய போத னைகளில் பெரும்பாலானவை அவர் காலத்து மக்கள் பேசிய மொழியிலேயே இருக்கின்றன” (The Complete Works of Swami Vivekananda, Vol I; 15th Edition, Page-22) 

கனிஷ்கருக்குப் பின்பு:

நமது எண்ணங்கள் பொது மக்கள் புழங்கும் மொழியில் இருக்க வேண்டும் எனப் புத்தர் விரும்பியும், கனிஷ்கருயை (கி.பி. 78-101) காலத்தில் இருந்து பவுத்தக் கொள்கைக்கான விளக்கங்கள் சமற்கிருத மொழியிலேயே எழுதப்பட்டன. அவர் காலத்தில் நான்காவது பவுத்த மாநாடு நடந்தது. அதனுடைய துணைத் தலைவராக இருந்த அசுவகோசர், சாகோத என அக்காலத்தில் அழைக்கப்பட்ட அயோத்தி யைச் சேர்ந்தவர். தாயின் பெயரை முன் வைத்துத் தம்மை “ஆர்ய சுவர்ணாக்ஷிய புத்திரன்” என அழைத்துக்கொண்டார். இவர் வால்மீகியை ஆதிகவி எனப் பாராட்டியவர். புத்த சரிதம், சவுந்தரானந்தம், சாரிபுத்ர பிரகரணம் ஆகிய பவுத்த நூல்களைச் சமற்கிருதத்தில் எழுதினார். அதைத் தொடர்ந்து, பக்தியின் சாயலை உள்ளடக்கிய, புதிய கொள்கையைக் கொண்ட, மகாயானம் எனும் பிரிவு பவுத்தத்தில் தோன்றியது.

சாதவாகன மன்னன் யஜ்ஞசிறீவுதமீ புத்ரன் (கி.பி. 166-196) காலத்தில் வாழ்ந்த நாகார்ஜுனர் தென்னிந்தியப் பார்ப்பனர். மாத்யமிகம் எனப்படும் சூன்யவாதத்திற்கு ஆதாரமான மாத்யமிக சாத்திரத்தை இவர் வடமொழியில் வடித்தார். இவருக்குப் பின்பு, குப்தர் காலத்தில் பிராமண இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. கவுசிக கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பன ரான வசுபந்து, அமிர்தகோச எனும் நூலைச் சமற்கிருதத்தில் எழுதி இரண்டாவது புத்தர் எனும் பாராட்டை அவர் காலத்தவரிடம் பெற்றார். பொது மக்களிடமிருந்து இவ்வாறு விலகிப் பண்டிதர் மொழியான சமற்கிருத்தத் திற்குள் அடங்கிய பவுத்தம், மாயாவாதக் கொள்கையை ஏற்று, தாந்திரிக நடை முறையை மேற்கொண்டு சீரழிந்தது.

ராஜா ராம்மோகன் ராய்:

பொதுமக்களின் பார்வைக்கும் சிந்த னைக்கும் வராமல், சுயநலக் கூட்டத்தின் வாழ்வுக்கு மட்டுமே உதவும் தனித்த ஓர் உடைமையாகத் திகழ்ந்த ஒரு மொழியில் செய்யும் வழுவும் புனைந்துரையும் மூடநம் பிக்கையும் கேடான கோட்பாடுகளும் குடிபுகுந்தன. ஆகையாற்றான் 1823 இல் கல்கத்தாவில் சமற்கிருதக் கல்லூரியை ஏற்படுத்த முயற்சி நடந்தபொழுது அதை எதிர்த்து, ஒரு விண்ணப்பத்தை அப்பொழு திருந்த ஆளுநர் ஆமர்ஸ்டு பிரபுவுக்கு ராம்மோகன் எழுதினார்: “ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பு தெரியப்பட்டதையும், அத்துடன் வீணான மற்றும் வெறுமையான நுண்வாதங்களையும் இங்கு மாணவர் கற்பர்... அறியாமை இருட்டில் இந்த நாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பிரிட்டிசு சட்டசபையின் கொள்கைத் திட்டமாக இருந்தால் அதற்குச் சமற்கிருதக் கல்வி மிகமிகப் பொருத்தமானதாகும்”(Page 817. Advanced History of India R.C. Majumdar and two others).

சாசனங்கள்:

அசோகன் வழிவந்த மவுரிய மன்னன் பிருகத்ரதன் என்பவனை, அவனுடைய பார்ப்பனத் தளபதி புஷ்யமித்திரசுங்கள் கொன்று விட்டுச்சுங்க வம்சத்தை நிறுவி னான். சுமார் 112 ஆண்டுகள் (கி.மு. 185-73) நீடித்த அந்த மரபினர் காலத்தில் வேதியச் சடங்குகள், யாகங்கள் முதலியவற்றுடன் நால்வருண ஏற்றத் - தாழ்வுகளும் உறுதிப் படுத்தப்பட்டன. அதற்குத் தகவேத, புராண, இதிகாச, தர்ம சாத்திர நூல்களுக்கு வடிவம் தரப்பட்டன. பவுத்த சமயம் ஒடுக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இஃது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதற்குப் பின்பு மன்னர்கள் பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆயினார். அந்த ஆதிக்கத்திற்கு ஏந்தாகச் சமஸ்கிருதம் அரசு நிறுவனத்தில் ஏற்றம் பெற்றது. அதன்பின்பு, ஆட்சியால் பொது மக்கள் நலன் பெறுவதை விடப் பார்ப்பனர் உயர்வு பெறுவதே முதன்மையிடம் பெற்றது.

சமய, மெய்யறிவுத் துறைகளில் சமற்கிரு தத்தின் மூலம சமுதாயப் பண்பாட்டு மேலாதிக்கம் பெற்ற பார்ப்பனர்கள், அரசுக் காரியங்களில் தலையிட்டுப் பாமரர்களின் மொழிகள் சரியான வகையில் வளருவதைத் தடுத்தனர். அரசாங்கச் சாசனங்கள், கல் வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் சமற்கிருத மொழியில் எழுதப் பெற்றன. கி.பி.150 இல் பாறையில் செதுக்கப்பட்ட கிர்னார் (ஜுனகாத்) சாசனம், உஜ்ஜயினிலிருந்து ஆண்ட முதலாம் ருத்ரதாமன் என்பவன் சுதர்சன ஏரியைப் புதுப்பித்ததையும் போர் களில் வெற்றி பெற்றதையும் கூறுகிறது. அலங்காரமான சமற்கிருதததில் வழக்கப்பட் டிருக்கிறது; மிக நீண்டு இருக்கிறது. அவ்வகையான சாசனங்களில் அதுவே தொன்மையானது எனக் கருதப்படுகிறது.

அசோகன் (கி.மு. 273-232) தனது அரசுக் காரியங்களில் சமற்கிருதத்தையும் பயன் படுத்தவில்லை என்பதும், அவனுடைய கல் வெட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இருந்த மொழிகளிலேயே இருந்தன என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கனவாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டில் கனிஷ்கர் காலச் சாசனங்களில் நுழைந்து, முதலாம் ருத்தர தாமன் காலத்தில் முத்திரை பதித்த வடமொழி, குப்தர்கள் காலத்தில் (கி.பி. 320 - 647) அனைத்துத் துறைகளிலும் அரசு ஆதரவு பெற்று வளரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் பல்லவர்கள் தொடக்கத்தில் பிராகிருத மொழி யைப் பயன்படுத்தினராயினும், காலப்போக் கில், சமற்கிருதத்தைப் போற்றவும் அசுவமேத யாகம் செய்யவும் தலைப்பட்டனர். பிற்காலப் பாண்டிய, சோழப் பெருமன்னர்களும், விஜயநகரப் பேரரசும், நாயக்க அரசர்களும் வடமொழிக்கே, ஏற்றம் தந்தனர். கோயில் களில் வடமொழி மந்திரங்களில் நுழைந்தன. பார்ப்பனர்களுக்கென வேதங்கள், வேதாக மங்கள், சாத்திரங்கள் கற்றுத்தர இலவயக் கல்விக் கூடங்கள் தொடங்கப் பெற்றன. பிரம்ம தேயங்கள், தேவதானங்கள், அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் எனும் வகையில் வேதியருக்குச் சலுகைகள் குவிந்தன. படிப்பும் அறிவும் இழந்து குடிமக்கள் தரித்திரர் ஆயினர்.

தமிழ் மன்னர்கள் பார்ப்பனர் தந்த வடமொழிப் பட்டங்களை ஏற்றுப் பூரித்துப் போனார்கள். எடுத்துக்காட்டாகப் பாண்டி யன் மாறவர்மன் அரிகேசரியைக் கூறலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் களப்பிரரை வீழ்த்திய கடுங்கோன் வழியில் நான்காவதாக ஆட்சிக்கு வந்த இவனைப் பெரிய புராணம் நின்றசீர் நெடுமாற நாயனார் என்கிறது; திருவிளையாடல் புராணத்தில் கூன்பாண்டி யன் என்றும், சுந்தரபாண்டியன் என்றும் அழைக்கப்படுகிறான். இவனுக்குப் பார்ப் பனர் தந்த பட்டங்கள் அரிகேசரி, பராங்குசன், விகாரி, அதிசயன், ரணோதயன், ரணாந்தகன் என்பன!

மன்னர்கள் தங்களுடைய செப்பேடுகளில் வடமொழிக்கே முதன்மையளித்தனர். எடுத் துக்காட்டாக, ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டன் நகரப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சோழர் செப்பேடுகளைச் சொல்லலாம். பெரிய லெய்டன் செப்பேடு,  வடமொழி, தமிழ் என இரு பகுதிகளைக் கொண்டது. முதல் அய்ந்து ஏடுகள் வட மொழிப் பாடல்களை உடையவை. ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இப்பகுதி யைக் கொட்டையூர் அனந்த நாராயணன் இயற்றியுள்ளான். தமிழ்ப் பகுதியும் அவ் வாறே தொடங்கி, பிள்ளையார் சுழியுடன் முடிகிறது! இச்செப்பேட்டைச் செய்வித்த வன் முதலாம் இராசேந்திரன் (1012-44). இவ்வழிகளில் கி.பி. அயந்த்£ம் நூற்றாண்டு முதல் வடமொழியும் வேதியரும் உயரவும், தமிழும் தமிழரும் தாழ்வடையவும் தொடர்ந்து இடம் ஏற்பட்டுவிட்டது.

மறுமலர்ச்சி:

ஆங்கிலேயர் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு விழிப்பால், மறுமலர்ச்சி ஒன்றை இந்தியத் துணைக் கண்டம் கண்டது. ராஜா ராம்மோகன் ராய் (1772-1833) எனும் சீர்திருத்தக்காரரும், “மேகநாதவதம்” காவியம் இயற்றி, ராமலட்சுமணர்களை ஆக்கிரமிப்பாளர் கள் எனப் படம் பிடித்த மாகவிஞர் மைகேல் மதுசூதன தத்தரும் (1824-73) வங்கத்தில் மறுமலர்ச்சி எண்ணங்களைத் தூவினர். மராத்தியத்தில் மகாத்மா ஜோதிபா ஃபுலே, புரட்சிகரச் சிந்தனைகளையும் செயல்களை யும் தொடங்கினார். நீதிபதி வேத நாயகர், இராமலிங்க வள்ளலார், பேராசிரியர் சுந்தரனார் ஆகியோர் 19-ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் தமிழில் மறுமலர்ச்சி எண்ணங்களைப் பரப்பினர். மூவருமே வேத ஆகம புராணப் பண்பாட்டைப் போக்க வேண்டினர். தமிழைப் புறக் கணித்து வடமொழி பயில்வோரை அனாம தேயத் தீவுக்கு அனுப்ப வேண்டுமென வேத நாயகர் எழுதினார். தொடர்ந்து மறைமலையடிகளார், அயோத்திதாச பண் டிதர், தேவநேயப் பாவாணர் முதலியவர் களும் திராவிடர் இயக்கத்தாரும் தமது எழுத்தாலும் செயலாலும் தமிழரின் உரிமைக்கும் தமிழின் மேன்மைக்கும் உழைத்தனர். வடமொழி ஆசிரியருக்கு ஊதியம் அதிகம், தென்மொழி ஆசிரியருக் குக் குறைவு என இருந்ததைப் பெரியார் சுட்டிக்காட்டினார்; இருவருக்கும் நிகரான சம்பளம் வந்தது. மருத்துவக் கல்லூரியில் சேரச் சமற்கிருதம் செய்ய வேண்டியிருந் தது; நீதிக்கட்சி ஆட்சியின்போது அம் முறைகேடு மறைந்தது. ஹிந்தியின் வழியே சமஸ்கிருத ஆதிக்கம் நுழைவது, தற்போ தைக்கு ஓர் அளவிற்குத் தடுக்கப்பட்டுள்ளது.

வடமொழிப் பரவல்:

ஒரு காலத்தில் சமற்கிருதப் படிப்பைச் சூத்திரருக்கு மறுத்தனர். மலையாள மறு மலர்ச்சிக்கு கவிஞர் குமாரன் ஆசான், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருக்கு அம்மொழிக் கல்வி மறுக்கப்பட்டது என்பது நவீன வரலாற்றுச் செய்தியாகும். உரிமை, சமனியம் எனும் விழுமிய வேட்கைகள் பொது மக்களிடையே வேர் விட்டுள்ள நிலையில், வடமொழியைத் தமது முற்றுரிமையாக்கி ஆதிக்கம் செலுத்த முடியாது எனப் பார்ப்பனர் கண்டு கொண்டனர். எனினும், பிற மொழிகள் வளர்வதற்கு அம்மொழி உதவுமென்றும், பண்பாட்டு ஒற்றுமைக்கு அது தேவையென்றும் காட்டி, வழக்கொழிந்த அதற்கு வாழ்வளித்துப் பரப்பும் வேலையில் இறங்கியுள்ளனர். சமற்கிருதத்திற்கு எந்த அளவு ஏற்றமோ, அந்த அளவிற்கு, மதத்தின் அடிப் படையில் அமைந்த தங்கள் தனிச் சலுகைகளை யும் உயர்வையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என அவர்களுக்குத் தெரியும். ஆனால், சமற் கிருதத்தை ஏதோ ஒரு செம்மொழி என மயங்கி யும், தேவபாஷை என நம்பியும் அடிமையாகும் தமிழருக்கு, அம்மொழியால் அறிவு முன் னேற்றம் ஏற்படாது எனும் தெளிவு உண்டா?

விவேகானந்தர்:

கற்பதும் கருதுவதும் கருத்துக்களைத் தெரிவித் தலும் தமது மொழியிலேயே இருக்க வேண்டும் எனும் உண்மையையும், அது இயற்கையாக வளர வேண்டிய தேவையையும், சமற்கிருதத் தைப் பின்பற்றிச் செயற்கையாக வளரக்கூடாது என்பதையும் விவேகானந்தர் உறுதிபட அறிவித்தார்: “புத்தர் முதல் சைதனியர், ராம கிருஷ்ணர்வரை, உலக நன்மைக்குத் தோன்றி யவர்கள் அனைவரும் பொது மக்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே கருத்தறிவித் தனர்.  நிறைபடிப்பு மிகச் சிறந்ததுதான். ஆனால், நெளிவில்லாத, புரியாத இயற்கையற்ற, செயற் கையான ஒரு மொழியின் மூலம் தான் அந்த நிறைபடிப்பை வெளிப்படுத்த முடியுமா? வேறு ஒன்றின் மூலமாகச் செய்ய முடியாதா?... எந்த மொழியில் இயல்பாக நாம் நம்மை வெளிப் படுத்திக் கொள்கிறோமோ, நமது சினம், துயரம், அன்பு முதலிய வற்றை எதன் வழியே தெரிவிக் கிறோமோ, அதை விடப் பொருத் தமான ஒன்று, மெய்யறிவையும் அறிவியலையும் பற்றிச் சிந்திக்கவும் எழுதவும் நமக்கு அமைய முடியாது... சமற்கிருதம் மெதுவாகவும் சொல் மலிந்து ஊதிப்போயும் நடையிடுகிறது. அதைப்போல ஆகும் முயற்சியில் நமது மொழி செயற்கையானதாகிறது. ஒரு நாட்டின் முன் னேற்றத்திற்கான முகாமையான கருவியாக வும், அம் முன்னேற்றத்தைச் சுட்டுவதாகவும் மொழி இருக்கிறது.”  (Volume VI, Complete Works, Pages 187-88).

கோசாம்பி:

விவேகா னந்தரைப் போன்றே நன்கு சமற்கிருதம் அறிந்தவர், வரலாற்றறிஞர் தாமோதர் தர்மானந்த கோசாம்பி. அவருடைய கூற்றையும் கவனிப்போம்: “மிகைப்பட்ட அலங்கார நடை சமற்கிருதத்தின் அதிகரித்து வரும் ஒரு தன்மையாயிற்று. திரிபான வாக்கிய  அமைப்பு, சிக்கலான கூட்டுச் சொற்கள், ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள், அளவுக்கு மீறி மிகைப் படுத்தல் ஆகிய தன்மைகளின் காரணமாக, சமற்கிருத ஆவணத்திலிருந்து துல்லியமான பொருளை (கருத்தை)ப் பெறுவது வரவரக் கடினமாயிற்று... வடிவம் அதன் உள்ளடக் கத்தை (கருத்தை) மிஞ்சியிருப்பதால் தொழில் நுட்ப நூல்கள் தெளிவாக இல்லை... சமஸ்கிருதச் சொற்கள் துல்லியமான பொருளைத் தருவன வாகவேயில்லை. முடிவற்ற எனும் பொருளு டைய “அனந்த” என்ற சமற்கிருதச் சொல், அம்மொழியில் ஒரு செடியின் பெயரும் ஆகும்.  மருத்துவ நூல்களில் 14 வெவ்வேறு வகைச் செடிகளைக் குறிப்பதற்கு “அனந்த” எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆயுர் வேத மருத்துவரும் தான் பயன்படுத்துவது தான் உண்மையான அனந்த எனும் செடி எனவும், அதே நோய்க்கு வேறு ஓர் அனந்தச் செடியைப் பயன்படுத்துபவர் அறியாமை நிறைந்த போலி மருத்துவர் எனவும் வாதிடு கிறார். ஒரு சிக்கலான வடிவமைப்பின் அழக வைத்து நேர்த்தியோடு சமற்கிருத இலக்கியம் இருக்கிறது. பாலிமொழியில் உள்ள (புத்தரின் நெறியைக் கூறும்) “தம்ம பத”த்தில் காணப் படும் ஆழம், எளிமையான வெளிப்பாடு, பெருமித உணர்வு, மனித நேயத்தின் உண்மை உயர்வு  ஆகியவற்றை, மிக மிகச் சிறந்த சமற்கிருத இலக்கியத்தில் கூடக் காண இயலாது. அஃது ஒரு வகுப்பாரின் இலக்கியம், ஒரு மக்களுக்கான இலக்கியம் அன்று.” (An Introduction to the study of Indian History)

விளம்பரம்:

பொது மக்களிடையே புழக்கத்தில் இல்லா ததும், பன்னூறு ஆண்டுகளாக அவர்களைத் தாழ்த்துவதற்கான பண்பாட்டுக் கருவியாகப் பயன்படுவதும், மனித நேயப் படைப்பில் வறுமையானதும் ஆன சமற்கிருதத்திற்கு ஆதிக்கவாதிகளின் ஆதரவு இருப்பதால், அதன் போலிப் பெருமை மிகுந்த விளம்பரத் தைத் தொடர்ந்து பெற்று வருகிறது. கடவுள், மதம், சடங்கு ஆகிய காரியங்களில் அதற்குப் புனிதத் தன்மை இருப்பதாக நம்பும் பாமரரின் மூடநம்பிக்கையின் காரணமாக, அதைத் தாய் மொழியாக அல்லது தெய்வீக மொழி யாகக் கொண்டாடும் பார்ப்பனர்கள், தங்க ளுடைய சலுகைகளையும் சமுதாயப் பண் பாட்டு ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ள  முடிகிறது. ஆயை£ற்றான் வேதியர் பொது மக்களின் மொழிகளை நீஷபாஷை அல்லது பைசாச பாஷை என எள்ளி நகையாடுவதை வாடிக்கையாகக் கொண் டுள்ளனர். பேராசிரியர் முனைவர் என். சுப்பிரமணியம் இவ்வாறு எழுதுகிறார்: “அவனுடைய தாய் மொழி தமிழாக நேர்ந்து விட்டதால், அவன் தமிழ்ப் பார்ப்பனன் என அழைக்கப்படுகிறான்; தெலுங்கு, மராத்தியம் முதலிய மொழிகளின் பார்ப்பனரிடமிருந்து வேறாக அறியப்படுகிறான். அவனுடைய தாய் மொழி தமிழ். மற்ற தமிழர்களைப் போன்றே பிறப்பில் இருந்து இறப்புவரை அதைப்பேசுகிறான். ஆனால் அவனுடைய வருணப் பற்று (வசுவாசம்) தேவ பாஷையான சமற்கிருதத்தின்பால் இருக்கிறது; அவனு டைய புனித நூல்கள் அனைத்தும் அதில்தான் எழுதப்பட்டுள்ளன; அவனுடைய சடங்கு மந்திரங்கள் அனைத்தும் அதில் முணு முணுக்கப்படுகின்றன... பார்ப்பனரில் மிகப் பெரும்பாலோர் தமது தாய்மொழியின்மீது ஒளிவு மறைவான வெறுப்பைப் பெற்றிருந் தமை ஓர் அரிய உளவியல் திகழ்வாகும். கிறித்துவனாயிருக்கும் ஆங்கிலேயன் தனது மொழியைவிட எபிரேய (ஹீப்ரு) மொழி முக்கியமானது எனக் கருதுவது இல்லை. பவுத்தனாக இருக்கும் சீனாக்காரன் சீன மொழியைப் பாலி மொழியைவிடத் தாழ்ந்த தாகக் கொள்வதில்லை. ஆனால், சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்வரை, தனது தாயின் மடியில் கற்றுக்கொண்ட மொழியின் மீது ஒரு பார்ப்பானுடைய, இப்பொழுதெல் லாம் வெளியில் தெரிவிக்கப்படாமலிருக்கும், வெறுப்பு ஒளிவு மறைவற்றிருந்தது.” ” (P.93; The Brahmin in the Tamil counry; Frst Edition - 1989)

பெரியார்

பார்ப்பனருக்குச் சமற்கிருதத்தினரிடம் உள்ள பற்றிற்கும், தமிழின் பாற்பட்ட வெறுப் பிற்கும் காரணம், அவ்வழியில் அவர்கள் தமது வருண ஒற்றுமையையும், அதன் சமூக உயர்வையும் நிலைப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே! தமிழர்கள் அம்மொழி யைத் தேவபாஷை என ஏற்றுப் புனிதத் தன்மை உடையதாய் மதித்துத் தமது தாய் மொழியை மனதளவில் மதியாததால், பிற துறைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கு அவர்களின் மனம் ஒப்புகிறது! இவற்றை மனதிற்கொண்டு  பெரியார் எழுதுகிறார்: “இன்று பார்ப்பனர்களுக்கு, அவர்கள் எந்த வகுப்பார்கள். ஆனாலும், சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்கள் ஆனாலும், சமஸ்கிருதம் (வடமொழி) என்கின்ற ஒரு மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத, கட்டுப்பாடான, இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார் கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை.” 

மேலும் இது தொடர்பாக அவர். தமிழ் இனத்திற்குக் கூறியுள்ள அறிவுரை மனங்கொள்ளத்தக்கது: “மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால் தானே முடியும் அன்றியும் சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால் தானே முடியும்?” 

(‘விடுதலை’ - 25.7.1972)

இன ஒற்றுமைக்கும் காப்பிற்கும் மொழிப்பற்றும் உரிமையும் அடிப்படை யாவது போன்றே, இனத்தின் முன்னேற்றத் திற்கு அதனுடைய மொழியின் வளர்ச்சி இன்றியமையாததாகும். ஆகையாற்றான், “ஒண்டமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற் றம் ஒவ்வொன்றும் உந்தன் முன்னேற்றம்” என்றார் புரட்சிப் பாவேந்தர்!!

Posted by parthasarathy r at 03:50 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: திணிப்பு, மொழி

இந்தி மொழியின் இலக்கணப் பிழையா? அல்லது இலக்கணமே இல்லையா?

 

   July 30, 2022 • Viduthalai

* இது நூல் ஆய்வுரையல்ல! அறிமுகவு ரையும் அல்ல! எனது அனுபவ உரை!

*  ஒன்றிய அரசுப் பணியில், அதுவும் ஆல் இண்டியா சர்வீஸ் பதவிகளில் சேர்ந்த என்னைப் போன்றோர்க்கு பணியை கையில் கொடுத்ததால், இந்தி மொழியை நமக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விடுவார்கள். பணியில் இருக்கும் வரை இந்தியோடுதான் வாழ்ந்து தீர வேண்டும்! இது ஒன்றிய அரசின் கட்டாய இந்தி மொழித் திருமணத் திட்டம்!

*  ஒன்றிய பொதுப் பணித்துறையில் 1977ஆம் ஆண்டு, இளநிலை பொறியாளராக டில்லியில் பணியில் சேர்ந்தேன். தலை நகரம் அல்லவா? எங்கு திரும்பினாலும் இந்தி! நம் முன்னுக்கும் பின்னுக்கும் முந்தி வந்து நிக்குது இந்தி! அந்த கால வேளையில் நமது தமிழகமெங்கும் - எஸ்.டி,  ஆர்.டி. பர்மன்களும், கிஷோர், லதா பாடல்களும் கொடிகட்டி பறந்த நேரம்.. அதனால் கொஞ்சம்... கொஞ்சம்.. இந்தி மாலும் ஹை!

*  டில்லியில் இந்தி கட்டாயம் என்பதை அரசும் உணர்த்தியது, அன்றாடமும் உணர்த்தியது. இந்தி தெரியாத அந்நிய மொழியினருக்கு உதவ - Central Hindi Directorate, அஞ்சல் மூலம் தமிழ் வழியில் இந்தி கற்பிக்கும் திட்டம் இருந்தது. அதில் சேர்ந்து ஓராண்டு கற்று, ஓரளவு இந்தியை எழுத, பேசக் கற்றுக் கொண்டேன்!

* இனி தான் அனுபவம் பேசுகிறது :

ஒரு தமிழன் இந்தி கற்றுக் கொள்ளும் போது இரண்டு பெரிய சிக்கல்களை கடக்க வேண்டியுள்ளது! அவைகள் இரண்டுமே தமிழில் இல்லாததும் யாரும் அதுவரை நமக்கு சொல்லாததும்!

* முதலாவது சிக்கல் :

தமிழில் நமக்கு உயிரெழுத்துக்கள், க, ச, ட, த, ப போன்றவைகள் ஒவ்வொன்றும்  ஒரே ஒரு எழுத்தாகவும் ஒரே ஒரு ஒலியாக வும் உள்ளன. ஆனால் இந்தியிலோ அவைகள் நான்கு க, நான்கு ச, நான்கு ட, நான்கு த, நான்கு ப என நான்கு எழுத்துக் களாகவும் நான்கு ஒலிகளை கொண்டதாக வும் உள்ளன! இந்த காரணத்தால், தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் உச்சரிப்பில் பெரும் சிரமம் அடைகின்றனர்!

ஏதோ ..அந்த இந்திவாலாக்களிடையே  வாழ வேண்டிய சூழல் கிடைத்ததால்,  இந்த உச்சரிப்பை கற்று,  நச்சரிப்பிலிருந்து தப்பித் தேன்!

*  இரண்டாவது சிக்கல் :

அந்த சிக்கலைப்பற்றி விளக்குவதே இந்த உரையின் நோக்கம்! தமிழில் நாம் உயிருள்ள பொருட்களை மட்டுமே ஆண் பால் - பெண்பால் என பிரிப்போம். உயிரற்ற எல்லா பொருட்களையும் அஃறிணை என்போம்! அதற்கு எந்த பால் வேறுபாடும் கிடையாது! 

*  இந்தி மொழியிலோ எல்லா உயிரற்ற பொருட்களுக்கும் பால் பிரிவினை உண்டு. அதை தெரிந்து கொண்டு தான் நாம் பேசவோ எழுதவோ முடியும்! அப்படி அதை தவறாக பயன்படுத்தினாலே அதை 'மதராஸியின் இந்தி ' என கண்டு கொள் வார்கள். இவைகளை உதாரணத்தோடு இங்கு விளக்குகிறேன்!

* தமிழில் நாம் இவ்வாறு பேசுகிறோம் / எழுதுகிறோம் :

1) நீளமான ரயில் வண்டி.

2) பெரிய வீடு.

3) நல்ல ரொட்டி.

இவைகளில் - ரயில், வீடு, ரொட்டி போன்ற உயிரற்றவைகளுக்குள் எந்த வேறுபாட்டையும் நாம் தரவில்லை.

* இவைகளையே இந்தியில் பேசுவது / எழுதுவது எவ்வாறு என்றால் :

1) லம்பி (நீளமான) ரயில் காடி.

இதில் ரயில் காடி பெண்பால் (பெ) என்பதால் ' லம்பி ' என எழுத வேண்டும். ஆண்பால் (ஆ) சொல் என்றால் ' லம்பா ' என எழுத வேண்டும். 

2) படா (பெரிய) கர். கர் அதாவது வீடு ஆண்பால். ஆகவே ' படா ' . பெண்பால் சொல்லுக்கு ' படி ' ..

3) அச்சி (நல்ல) ரோட்டி. ரோட்டி பெண்பால். எனவே ' அச்சி '. ஆண்பால் சொல்லுக்கு ' அச்சா '..

என்ன தலை சுற்றுகிறதா? அப்படித்தான் இருந்தது எனக்கும்!

*  கால ஓட்டத்தில், பத்தாண்டுகளுக்குப் பின் அரசு அலுவலர்கள் கட்டாயம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என நடைமுறை படுத்திய போது - 1989ம் ஆண்டு இந்தியை மீண்டும் முதலிலிருந்து கற்றுக் கொள்ள புது டில்லியின் ' ரயில் பவன் இந்தி வகுப்பில் ' சேர்ந்தேன். அதில் சேர்ந்ததிற்கு காரணமே இந்த இரண்டாவது சிக்கலின் அடிப்ப டையே அறிந்து கொள்ளத்தான்!

*  இந்தி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியை திருமதி. சுனிதா இந்தி மொழியை தாய் மொழியாகவும் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்ற அனுபவசாலி. அவரிடம் இந்த ஆண்பால் - பெண்பால் பிரித்தது எப்படி? எவ்வாறு உயிரற்றவைகளை பிரித் தீர்கள்? சிறிது - பெரிது என்ற அடிப்ப டையிலா? கடினம் - இலகு என்ற அடிப் படையிலா? புதியன - பழையன என்ற அடிப்படையிலா? உருவத்தினாலா அல் லது பருவத்தினாலா? ஒலி மாற்றத்தின் அடிப்படையிலா? வேறு மொழி சொற் களின் கலப்பினாலா? அழகு - அழகற்றது என்ற அடிப்படையா? என்று கேள்விகளால் துளைத்துப் பார்த்தேன்!

*  இந்தியை தாய் மொழியாக கொண்ட அந்த ஆசிரியையிடம் எந்த பதிலும் இல்லை! இந்தி மொழியில் அப்படித்தான் உள்ளது - என ஒரே ஒரு பதில்தான்.. எங் களுக்கு இது பற்றி சொல்லியே தரவில்லை. இந்த சொற்களை சிறு வயதிலிருந்தே இப் படித்தான் பேசி வருகிறோம்.. ஏன், இப்படி என யோசித்ததும் இல்லை, என்றார் அழாத குறையாக! 

*  இதை இந்தி இலக்கணத்தின் பிழை என்று சொல்லலாமா? என்று கூட கேட்டுப் பார்த்தேன்! இதை பிழையென்றோ, குறை யென்றோ வைத்துக் கொள்ளுங்கள்.. அந்த குறையோடுதான் நீங்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சமரசம் செய் தார்கள்! அதன் பின்பு வேறு வழியில்லாமல் நானும் வகுப்புகளில் தொந்தரவு செய்யா மல் கலந்து கொண்டு, படித்து முடித்தேன்!

*  இவற்றை மேலும் விரிவாக அறிய, இந்தியின் விநோதமான வாக்கிய அமைப்பு களை காரணங்களுடனும்,  உதாரணங்க ளுடன் தந்துள்ளேன் :

1)  குடி நீர் - இந்தியில் ' பாணி ' (ஆண்பால்). இந்த நீர் கரை புரண்டு ஓடுவதை நாம் ஆறு என்கிறோம் - இந்தியில் நதி (பெண்பால்). 

ஆகவே - 

அச்சா(நல்ல) பாணி (ஆ) | 

அச்சி (நல்ல) நதி (பெ) |

ஏன் இரண்டையும் அச்சா என்றே சொன்னாலென்ன? பதிலில்லை!

2)  காகிதம் - இந்தியில் ' காகஜ் ' (ஆ). நிறைய காகிதங்கள் கொண்டு உருவான புத்தகம் - இந்தியில் ' கிதாப் ' (பெ). 

ஆகவே -

படா (பெரிய) காகஜ்(ஆ) | 

படி (பெரிய) கிதாப் (பெ) |

ஏன் இரண்டுமே படா இல்லை?

3)  வீடு - இந்தியில் ' கர் ' (ஆ). அதுவே பெரிய கட்டிடம் என்றால் - இந்தியில் ' இமாரத் ' (பெ).

 ஆகவே -

புரானா (பழைய) கர் (ஆ) | 

புரானி (பழைய) இமாரத் (பெ) |

ஏன் இரண்டுமே புரானியாக இருக்க கூடாது?

4)  துணி - இந்தியில் ' கப்படா ' (ஆ). அந்த துணியில் தைத்த சட்டை - இந்தியில் ' கமீஜ் ' (பெ). 

ஆகவே -

நயா (புதிய) கப்படா (ஆ) | 

நயி (புதிய) கமீஜ் (பெ) |

ஏன் இரண்டுமே நயா என இருக்க கூடாது?

5)  கப்பல் - இந்தியில் ' ஜகாஜ் ' (ஆ). ஆனால் ரயில் வண்டியோ - இந்தியில் ' ரேல் காடி ' (பெ).  

ஆகவே -

லம்பா (நீளமான) ஜகாஜ் (ஆ) | லம்பி (நீளமான) ரேல் காடி (பெ) |

ஏன் லம்பி என்றே இரண்டையும் அழைக்க கூடாது?

6)  குருமா - இந்தியிலும் குருமா (ஆ) . அதற்கு தேவையானது ரொட்டி - இந்தியில் ' ரோட்டி ' (பெ). 

ஆகவே - 

அச்சா (நல்ல) குருமா (ஆ) | 

அச்சி (நல்ல) ரோட்டி (பெ) |

ஏன் இரண்டையும் அச்சாவென்றோ - அச்சியென்றோ அழைக்க கூடாது?

7)  மேகம் - இந்தியில் ' மேக் ' (ஆ) .மேகங்கள் மோதும் போது மின்னல் - இந்தியில் 'பிஜ்லி '(பெ). 

ஆகவே -

சோட்டா ( சிறிய) மேக் (ஆ) | சோட்டி (சிறிய) பிஜ்லி (பெ) |

ஏன் சோட்டா - சோட்டி?

8)  மலை - இந்தியில் ' பர்வத் ' (ஆ) . பல மலைகளை கொண்டது உலகம் - இந்தியில் ' துனியா ' (பெ). 

ஆகவே -

படா (பெரிய) பர்வத் (ஆ) | 

படி (பெரிய) துனியா (பெ) |

ஏன் இரண்டையும் ஒன்றாக கருதவில்லை?

9)  கோதுமை - இந்தியில் ' கேகூம் ' (ஆ). கோதுமையை உடைத்து தயாரித்த ரவை - இந்தியில் ' சூஜி' (பெ). 

ஆகவே - 

படா (பெரிய) கேகூம் (ஆ) | 

படி (பெரிய) சூஜி (பெ) | 

ஏன் ஆராயமல் வித்தியாசப் படுத்தினார்கள்?

10)  பாவாடை - இந்தியில் ' காக்ரா ' (ஆ). அதைவிட பெரிய துணி வேட்டி - இந்தியில் ' தோத்தி ' (பெ). 

ஆகவே - 

சோட்டா (சிறிய) காக்ரா (ஆ) | சோட்டி (சிறிய) தோத்தி (பெ) |

ஏன் அறிவுக்கு பொருத்தமில்லாமல்?

*  இவ்வாறு ஒவ்வொரு அஃறிணை பொருட்களையும் ஆண்பால் - பெண்பால் என எவ்வித அடிப்படையும் இல்லாமல் வகைப்படுத்தி, அறிவுக்கு விளக்கம் சொல்ல ஆதாரமில்லாமல், அதை சீர்திருத்த வேண்டுமென்ற சிந்தனையே இல்லாமல் வழக்கில் இருந்து வருகிறது - ஹமாரா இந்தி!

*  ஆகவேதான் தமிழை தாய் மொழியாக கொண்டு, சிறப்பான இலக்கணத்தை அடிப்படையாக கொண்ட தமிழை கற்றவனுக்கு - இந்தியின் இந்த வாக்கிய அமைப்பை - இலக்கண பிழை என்றே சொல்ல வைக்கிறது!

*  இந்த அடிப்படையிலும், கட்டாய இந்தி மொழித் திணிப்பை -  தமிழை தாய் மொழியாக கொண்டவன், இந்தியை கற்ற பின்னும் எதிர்ப்பானல்லவா?

இது அனுபவம் கற்று தந்த பாடம்!

(ஆதாரம் - ஹிந்தி தமிழ் அகராதி - தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா - முதல் பதிப்பு 1978 - சென்னை) 

- பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை. 27.07.2022.

Posted by parthasarathy r at 03:20 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: இந்தி, இலக்கணம்

Saturday, 18 March 2023

ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்! -சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

 

     January 12, 2023 • Viduthalai

அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை, ஜன.12 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (12.1.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேது சமுத்திரத் திட்டம் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து ஆற்றிய உரை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டு மென்ற தீர்மானத்தை இம்மாமன்றத்தில் முன்மொழி வதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன்.   

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கனவுத் திட்டம் அது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது.  பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப் பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேதுசமுத்திரத் திட்டம். 

பிரதமர் நேரு சொன்னதென்ன?

இந்தியாவினுடைய முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தலைமையில் 1963 ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட நான்காவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது.  1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், 'தம்பிக்கு' எழுதிய மடலில் இத்திட்டதை நிறைவேற் றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். 'சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறை வேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறை யும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள்.  இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்கள்.

முதலமைச்சர் கலைஞர் கூறியதென்ன?

1972 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வந்தபோது, அன்றைய முதல மைச்சர் கலைஞர் அவர்கள் இதனை வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வலியுறுத்திப் பேசினார்கள்.

1998 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் சேதுசமுத்திரத் திட்டத்துக் கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

பா.ஜ.க. போட்ட முட்டுக்கட்டை

2004 ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க.வை உள்ளடக் கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்கள் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார் என்பதையும் இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப் பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும்.

அந்நிய செலாவணி அதிகரிக்கும்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல, நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்; சிறுசிறு துறைமுகங் களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத் தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவ தால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும்.

மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன.  மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும்.  இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும்.   நாட்டின் கட லோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தி னால் மிக முக்கியமாக, அய்ம்பதாயிரத்துக்கும் மேற் பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம்தான் அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்ட மான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ''ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்" என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க. அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத் தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்!

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை நான் இப்பொழுது முன்மொழிகிறேன்.

தீர்மானம்

''தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்ட மாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

1860 ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955 இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963 இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964 இல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங், அய்.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு - ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப் பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

பிரதமர் வாஜ்பேயும் அனுமதித்தார்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார் கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் 2004 ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்கள்.

ஒன்றிய அரசின் கூற்று

திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.  எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப் பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது “இராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்”  என்று ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.

தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத் தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.’ 

- இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டு அமைகிறேன்.

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Posted by parthasarathy r at 10:35 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: சேது கால்வாய், தீர்மானம்

Thursday, 9 March 2023

‘சூத்திரன் ஏவலாளி மட்டுமே!' சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு பாடத்திட்டம் சொல்கிறது இதுதான் ஒன்றிய அரசின் புதியகல்விக் கொள்கையின் லட்சணம்


       September 24, 2022 • Viduthalai

சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு வரலாறு - சமூக அறிவியல் பாடத்தில் வர்ணாஸ்ரமம் குறித்த பாடம் சூத்திரர்கள் ஏவலாளிகள் மட்டுமே, அவர்களுக்கு கல்விகற்க (வேதங்கள்) அனுமதியில்லை என்றும். வர்ணாஸ்ர மத்திற்குள் வராதவர்கள் ஊருக்கு வெளியே வசித்து மலம் அள்ளவும், செத்த மாடுகளை எடுப்பதுமே அவர்கள் பணி என்று கூறப்பட்டு, மேலும் இவர்கள் தூய்மையில்லாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆண்டிமுத்து இராசா  எம்.பி., அவர்கள் மனுதர்மத்தினை தோலுரித்துக் காட்டியதும், ஒட்டுமொத்த பார்ப்பனர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சர்சூத்திரர்களும் பொங்கிக் கொண்டு எழுகின்றனர். இந்த விவகாரத்தை எப்படி திசைதிருப்பலாம் என்று பலவழிகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். 

பா.ஜ.க.வின் தமிழ்நாடு பார்ப்பனப் பிரமுகர்கள், ‘‘மனுவில் எழுதப்பட்டுள்ளது. எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் உள்ள நடைமுறைகள் இப்பொழுது எல்லாம் அவை இல்லை. திராவிட அமைப்புகள் தான் ஹிந்துக்களின் மீதான வெறுப்பிலும், ஆபிரகாமிய மதங்களிடம் வாங்கிய பணத்திற்கும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகின்றனர். 

இப்போது எல்லாம்  சரி சமமாகப் பார்க்கத் துவங்கி விட்டோம். ‘‘ஹிந்து மதம் என்பது சாத்வீகம், சாந்தம், அன்பு, சகிப்புத்தன்மை, வாழ்வியல் பயிற்சி'' என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.  ஆனால், இவர்கள் இப்படி முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே ஒன்றிய அரசு பாடத் திட்டத்தில் வரும் ஒரு பாடம்.   அதில் வர்ணாஸ்ரமம் குறித்து தெளிவாக படத்தோடு குறிப்பிட்டுள்ளனர்.  

முதலாம் இடத்தில் பார்ப்பனர்கள், படத்திலேயே நன்றாக தெரிகிறது - அனைத்து வசதிகளோடு குதுகலமாக இருப்பதுபோல் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு அடுத்து சத்திரியர்கள், பிறகு வைசியர்கள் - இன்று உள்ள மார்வாடி களை மனதில் வைத்துப் படம் போட்டுள்ளனர். 

ஆனால், சூத்திரர்களுக்கு கோவணம் மட்டுமே, வறண்ட தேகத்தோடு படம் வரைந்துள்ளனர். நல்ல வேளை கோவணம் கொஞ்சம் நீளமாகக் கொடுத்துள்ளனர்.    இதில் பெண்கள் படம் இல்லை, பெண்கள் பார்ப்பன குலத்தில் பிறந்திருந்தாலும் சூத்திரனுக்கும் கீழேதான்.   ஆனால், பஞ்சமனுக்கும் மேலே! சூத்திரனுக்காவது வேதங் களை கற்கத்தான் அனுமதியில்லையாம்.  பஞ்சமர்களை மனிதனாய்க் கருதவே இடமில்லையாம்.  காரணம், அவர்கள் அழுக்காக இருப்பார்களாம்! மாணவர்களுக்கு வரலாற்றை உள்ளபடி சொல்வதில் ஏதும் ஆட்சேபனை இல்லை. இன்று சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் என்று எவருமில்லை என்று அரசு குறிப்பே சொல்கிறது.

 பொருத்துக என்று கேட்டிருக்கிறார்கள்,   இத்தகைய அடுக்குகள் சரியா - உன் கருத்தை எழுது என்கிறார்கள்.  

இதற்கு ஒரு பார்ப்பன மாணவன் என்ன பதில் எழுது வான்?  அவனுடைய வீட்டில் என்ன சொல்லிக் கொடுப் பார்கள் ? குறைந்தபட்ச அறத்துடன் இது மிகத் தவறானது, கொடூரமானது, மனிதத்தன்மையற்றது என்று அந்தப் பாடத்தில்  எழுதியிருக்க வேண்டுமல்லவா? 

தமிழ்நாடு பாஜகவினரும், ஹிந்துத்துவ வன்முறைக் கூட்டங்களும் ஒன்றிய சிபிஎஸ்இ பாடத்தில் இதனைக் கொண்டுவந்தவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும். ஆனால், இவர்கள் தந்தி அனுப்பியவரை விட்டுவிட்டு தந்தியைப் படித்துக்காட்டியவரை எதிர்த்து வன்முறையில் இறங்குகின்றனர். 

மனுநீதி அடிப்படையிலான வர்ணாஸ்ரம கருத்துகளை கல்விக் கூடத்திலேயே பரப்புகிறது... படிக்கும் குழந்தை களின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறது.. சக குழந்தை களிடம், ‘‘நீ பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன்'' என்று சொன்னால் அக்குழந்தையின் மனது என்னாகும் என யோசியுங்கள். இதனால் தான் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை வேண்டாம் என்று நாம் கூறுகிறோம்.

Posted by parthasarathy r at 04:06 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: சிபிஎஸ்சி, சூத்திரன், புதியகல்வி

Wednesday, 8 March 2023

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு


வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்!
  March 08, 2023 • Viduthalai

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

நாகர்கோவில், மார்ச் 8- வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். 

தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் கடந்த 6.3.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைவர்கள் உரையாற்றினர்.  

பினராயி விஜயன் ஆற்றிய உரை வருமாறு: 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். மார்பு மறைக்கும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டமே தோள்  சீலை போராட்டம். அதன் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு  மார்பை  மறைக்கும் உரிமை  மறுக்கப்பட்டிருந்தது.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மன் இனி திருவிதாங்கூர் சனாதன தர்ம ராஷ்ட்டிரமாக இருக்கும் என்று அறிவித்தார். 

அதைத் தொடர்ந்தே சனாதன தர்மத்தை ஒட்டிய ஏராளமான கொடுமைகள் சமூகத்தில் நிகழ்த்தப்பட்டன. மனிதாபிமானமற்ற அத்தகைய நடவடிக்கைகள் மிகப்பெரிய மக்கள் பகுதியினர்மீது  திணிக்கப்பட்டன. அதன்படி மிகவும் மோசமான வரிகள் விதிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட் சட்டத்தின் படியே மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்டது. இத்தகைய மன்னராட்சியின் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன. அந்த முயற்சி களின் பகுதியே தோள்சீலை போராட்டமாக வெடித்தது.  

இந்தப்  போராட்டம் அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு விவரித்தார். நான் இங்கு நிற்கும்போது திருவள்ளுவர், மகாகவி சுப்ரமணிய பாரதி, பெரியார், அய்யா வைகுண்டர், இராமலிங்க அடிகளார், சிறீநாராயண குரு போன்றோரின் நினைவு கள் மனதை நிறைக்கின்றன. அவர்கள் எல்லாம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே நமது நாடு மனிதர்கள் வாழத்தக்கதாக மாறியிருக்கிறது.  அதன் பிறகு நாட்டில் எழுந்து  வந்த முற்போக்கு மறுமலர்ச்சி இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், சமுதாய அமைப் புகள் அந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. இத்தகைய ஒரு மறுமலர்ச்சி நிகழ்வு நடப்பது பாராட்டுக்குரியது

‘சனாதன இந்துத்துவம்’

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மன் செயல்படுத்திய வழிமுறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும், வகுப்புவாதத்தையும்  போற்றுவ தாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே இதன் நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவமாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும், மறுநிர்மாணம் அது எனவும், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கான வழி எனவும்  விவா தங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடையாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். ‘உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்'  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  

ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத் தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப்படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் "பசுவுக்கும், பிராமணனுக்கும் நலம் உண்டாகட்டும்" என்பதாகும். பசுவும் பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  

இது பசுவை  மய்யமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்று இருந்த சமூக (அ) நீதிகள் அனைத்தும் மறைந்துவிட்டதாக கருத முடியுமா? அவை பல்வேறு வகையில் இன்றும் நீடிக்கின்றன. அன்று இருந்த அரசியல் அதிகாரத்தின் மேலாதிக்கம்  இன்றும் உள்ளது. அதனால்தான் வடஇந்தியாவில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும், அச்சுறுத்தப்படுகிறார்கள். சட் டத்தின் முன்னாலும் கூட தப்பித்துச் செல்ல இந்த மேலாதிக்கம் அவர்களுக்கு உதவுகிறது. 

தோள்சீலை...  ஓர் அரசியல் போராட்டம்

தோள்சீலை போராட்டம் வெறும் ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமாக மட்டும் இருக்க வில்லை. அது ஒரு பெரிய அரசியல்  உள்ளடக்கமும் கொண்டுள்ளது. சவரண,  ஜென்மி, நாடுவாழி, காலனிய நடைமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் சாயல் அதில் உள்ளது. மன்னராட்சிக்கும் அதற்குத் தளம்  அமைத்த ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இருந்தது அது. அந்த வகையில் தோள் சீலை போராட்டம் ஓர் அரசியல் போராட்டமாகவும் இருந்தது. 

வகுப்புவாதம், பெரும்பான்மை, சிறுபான்மை எதுவானாலும் மனித குலத்துக்கு எதிரானதாகும். இந்தியாவில் ஆட்சி அதி காரத்துடன் வளர்ந்த பெரும்பான்மை வகுப்பு வாதம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையாள்வதுபோல் நாட்டை வகுப்புவாத அடிப்படையில்  சங்பரிவார் பிளவுபடுத்த வும் செய்கிறது.  மதச் சிறுபான்மையினரை அச்சத்தில் ஆழ்த்துவது அன்றாடம் நடந்து வரு கிறது. நமது நாட்டில் வகுப்புவாத மோதல்கள் இல்லாத சில மாநிலங்களே உள்ளன. அதில்  ஒன்று தமிழ்நாடு; மற்றொன்று கேரளமாகும்.  கேரளத்தில் தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் கோயில்களில் அர்ச்சகராவது சாத்தியமாகி உள்ளது.

தகர்க்க முடியாத சக்தி அல்ல!

‘தாங்கள் தகர்க்க முடியாத சக்தி' என்ற பாஜகவின் வாதம், தேசிய அரசியலில் தகர்வதை இன்று காண முடிகிறது. 

பாஜகவுக்கு எதிராக பீகாரில் நிதீஷ் கட்சி உள்ளது. இது பீகாரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜகவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக அரியானாவில் தேவிலாலின் நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சிகள் பேரணி  நடத்தின. 2024 இல் பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற முழக்கம் அதில் எழுந்தது.  சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே பாஜகவுடன் உள்ளது. மேற்கு வங்கம், மராட்டியம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் பாஜக வுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. 11 ஆண்டுகளாக ஆட்சியில்  இருந்த டில்லி மாநகராட்சி பாஜக-வின் கையை  விட்டுப் போனது. இதெல்லாம் நாட்டில் வளர்ந்து வரும் சரியான அரசியலின் அறிகுறிகள்.  பாஜகவால் ஏற்படும் துன்பத்தை மக்கள் அறிந்து  கொள்கிறார்கள்.

அவை மக்கள் மத்தியில் எதிரொலிக்காமல் இருக்க சங் பரிவார் பிரிவினை நிகழ்ச்சி நிரலை புகுத்துகிறது. காசியையும், மதுராவையும் அடுத்ததாகப் பிடித்து எடுக்கலாம் என கூறுகிறார்கள். பசியும் அதனால்  ஏற்படும் சமூக மாற்றங்களையும் கண்டு கொள்ளாமல் சங்பரிவார் உள்ளது. திரிபுராவில் பாஜக வென்றதாக நாம் நினைக்கிறோம். கடந்த முறை 50 சதவிகிதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு இப்போது 10 சதவிகிதம் ஓட்டு  குறைந்துள்ளது. திப்ராமோதா கட்சி ஓட்டுகளை  பிரிக்காமல் இருந்தால் அங்கு நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். 

ஒருமொழி, ஒருநாடு, ஒரு மதம் என்று இந்தியாவை மாற்றப் பார்க்கிறார்கள். தி.மு.க. மொழிப் பாதுகாப்பு போராட்டம் நடத்தியது. ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக  நடத்திய மொழிப்போராட்டம் நினைவு கூரத்தக்கது.  

எல்.அய்.சி.யின் 70 ஆயிரம் கோடியை ஒருவர் விழுங்கி உள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.அய். போன்ற ஏஜென்சிகளை அரசியலுக்காக பயன்படுத்து கிறார்கள். அமலாக்கத்துறை வழக்குகளும் வெறும் அரை சதவிகிதம் தண்டனையே பெற்றுத் தந்துள்ளன. சி.பி.அய்.யும் அப்படித்தான்.  மென்மையான இந் துத்துவா எதிர்ப்பின் மூலம் இந்து வகுப்புவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அது ஆபத்தை உண்டாக்கும்.   மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள்  வரை அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமைப் போராட்டங்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வைக்கம் போராட்டத்தின் 

நூற்றாண்டு

இங்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஓர் அழைப் பைக் கொடுக்க விரும்புகிறேன். வைக்கம் போராட் டத்தின் 100ஆம்  ஆண்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்த உள்ளோம். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களும் வரவேண்டும் என அழைக்கிறேன். 

‘சனாதன இந்துத்துவம்’பற்றி பினராயி விஜயன்

‘சனாதன தர்மத்தின் அரசியல்’ என்று கூறி மார்த்தாண்டவர்மன் செயல்படுத்திய வழிமுறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும் ‘சனாதன இந்துத்துவம்’. மன்னராட்சியையும், வகுப்புவாதத்தையும்  போற்றுவதாக்கும் இந்த  வார்த்தை. சனாதன இந்துத்துவம் என்கிற  பாதையின் ஊடாக பிராமணிய ஆதிக்கத்தை  நிறுவுவதே இதன் நோக்கம். ஜனநாயகம் இந்த கும்பலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

சனாதன இந்துத்துவம் என்பது அடிமைத்துவமாகும்.  சனாதனம் போற்றுதலுக்கு உரிய ஒன்று  எனவும், மறுநிர்மாணம் அது எனவும், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுக்கான வழி எனவும்  விவாதங்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.  இதன் முக்கிய அடையாளமாக அவர்கள் ‘லோகா சமஸ்தியா சுபந்தோ’ என்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். ‘உலகம் முழுமைக்கும் நலம் கிடைக்கட்டும்'  என்பதே இதன் பொருள். இது சாதாரண நிலையில் எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம் அல்லவே!  

ஆனால், உலகத்தில் இந்துத்துவம் மட்டுமே இத்தகைய சகோதரத்துவமான அடையாள வார்த்தையை முன்வைத்துள்ளது என்கிறார்கள். இதுதான் நமது நாட்டில் கூறப்படும் கருத்து. ஆனால் இதற்கு முன்புள்ள வரி, வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் பசுவுக்கும், ‘பிராமணனுக்கும் நலம் உண்டாகட்டும் என்பதாகும். பசுவும்‘ பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  

இது பசுவை  மய்யமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்குப் பொருந்துகிறது  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

-இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். 

-'தீக்கதிர்', 8.3.2023

Posted by parthasarathy r at 09:38 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: பினராயி விஜயன், வைக்கம்

Tuesday, 7 March 2023

‘‘அக்கப்போர் அண்ணாமலை''யின் இடைச்செருகல் - திருவிளையாடலா - பித்தலாட்டமா?


      September 29, 2022 • Viduthalai

‘அக்கப்போர் அண்ணாமலை' என்று நாம் எழுதியதை அன்றாடம் அவரே முன்வந்து ‘ஆமாம், ஆமாம்' என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

அத்தகைய அக்கப்போர்களை வாங்கிக் கொட்டிக் கொள்ளும் கழிவுக் குப்பைத் தொட்டியாக ‘இன மலரான' ‘தினமலர்' என்ற ஒன்று இருக்கிறது.

தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் திருவாளர் அண்ணாமலை கரூரில் பேசியதாக ‘தினமலர்' (28.9.2022, பக்கம் 5) ஒரு பெட்டிச் செய்தியைப் போட்டுள்ளது.

‘‘ஆ.ராஜா கூறிய அதே ஈ.வெ.ரா. இறுதி பேருரை புத்தகத்தின் 21 வது பக்கத்தில் நாதி இல்லையே... சொல்வதற்கு நாதி இல்லையே....! சிந்திக்க நாதி இல்லையே....! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான், பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான், ஓட்டு வாங்குவதற்கு; இதற்கு கவலையே பட மாட்டேன் என்கிறானே, யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக்காரன்தான்'' என்று ஈ.வெ.ரா. பேசியதாக உள்ளது.''

‘‘ஹிந்து மதம் பற்றி ஈ.வெ.ரா. பேசியதை கூறும் ஆ.ராஜா தி.மு.க.பற்றி ஈ.வெ.ரா. பேசியதையும் கூறத் தயாரா?'' இவ்வாறு அண்ணாமலை பேசியதாக ‘தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது.

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உண்மையில் என்ன இருக்கிறது?

‘‘நாதி இல்லையே, சொல்றதுக்கு ஆள் இல்லையே, சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே, ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேங்கிறானே, முன்னேற்றக் கழகத்துக்காரன். மற்றவன் எல்லாம் என்னை வைவான். ‘இவனுக்கு ஏன் இது எல்லாம் என்ன கேடு இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்'' என்று. 

- இதுதான் அக்கப் போர் அண்ணாமலை எடுத்துக்காட்டிய தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல் 21 ஆம் பக்கத்தில் உள்ளது.

இதில் எந்த இடத்தில் யாரது? என்ற சொல் இருக்கிறது? இந்தச் சொல்லை ‘அரோகரா' அண்ணா மலை இடைச்செருகல் செய்வானேன்? இது கடைந்தெடுத்த மோசடி அல்லவா?

‘‘ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண் டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறான்'' என்று ஓட்டு வாங்கும் எல்லோரையும்தான் பொது வாகக் குறிப்பிடுகிறார். அப்படித்தான் அந்த நூலிலும் இருக்கிறது.

நாட்டின் அரசியல், தேர்தல் தரம் எவ்வளவுக் கீழிறக்கத்துக்குப் போய்விட்டது என்ற கவலையோடு பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.

அந்தப் பொதுவாகச் சொன்ன வார்த்தைகளின் இடையில் எதோ தி.மு.க.வைப்பற்றி மட்டும் பெரியார் குறிப்பிட்டுப் பேசினார் என்பதுபோல் ‘‘யாரது'' என்ற சொல்லை இடையில் திணிப்பானேன்? யாரது - அந்த அக்கப் போர் அண்ணாமலைதான் இந்த மோசடியைச் செய்திருக்கிறார்.

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கூடி இருக்கிற மக்களைப் பார்த்துக்கூட தந்தை பெரியார் கேட்டிருக் கிறார். ‘நீ என்ன யோக்கியன்? நீ பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போடுகிறாய்?' என்று வாக்காளர்களைப் பார்த்தே நேரடியாகக் குற்றம் சாட்டியதுண்டே!

பெரியார் சொல்லுவது நியாயம்தானே என்று பொதுமக்கள் கைதட்டி வரவேற்கத்தான் செய்தார்கள்.

தந்தை பெரியார் சொல்லாத வார்த்தையை இடையில் சொருகுவது ஏன்?

போலீஸ்காரர் அல்லவா, வழக்கை ஜோடிக்க இதுபோல் இடைச்செருகல் செய்து பழக்கப்பட்டவர் போல் இருக்கிறது.

இந்த வேலையை கருப்புச் சட்டைக்காரனிடம் வைத்துக்கொள்ள வேண்டாம் - பழைய காக்கிச் சட்டையும், இன்றைய காவிச் சட்டையுமான அண்ணாமலைகாரு!

தந்தை பெரியாரின் அதே இறுதிப் பேச்சில், அக்கப்போர் அண்ணாமலைகாரு எடுத்துக்காட்டிய அதே நூல் 18 ஆம் பக்கத்தில் காணப்படுகிறதே!

‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழிந்தால் ஒழிச்சிட்டுப்போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக, மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான். பேசறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான்'' 

என்று பேசியிருக்கிறார் தந்தை பெரியார்.

அன்று அய்யா சொன்னது (1973 டிசம்பர் 19) 49 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பாருங்கள் - எவ்வளவு தொலைநோக்குப் பார்வை!

‘‘எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இருக்கிற  ஆட்சியை (தி.மு.க.) ஒழிக்கணும் என்கிறான். ஒழிச்சிட்டுப் போ - எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுற பேச்சை நாளைக்கு வெளிப் படையாகப் பேசுவான். பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான்'' என்று பேசியதில், பேசுகிற ஆள் என்கிற இடத்தில் அண்ணாமலை களையும், பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான் என்ற இடத்தில் ‘தினமலரை'யும் பொருத்திப் பாருங்கள்.

உண்மை நிலை தெளிவாகிவிடும். தந்தை பெரியாரின் தொலைநோக்குப் புரிந்துவிடும்.

திருவாளர் எல்.முருகன் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராக வந்தவுடன் ஒன்றைச் சொன்னார்.

‘யாரும் பெரியாரைப்பற்றி அவதூறாகப் பேச வேண்டாம்' என்று சொன்ன நிலையில், ‘துக்ளக்'கில் முதல் பக்கத்திலேயே ‘‘எச்சரிக்கை!'' என்ற தலைப்பில் பெரியாரை பா.ஜ.க. புகழக் கூடாது என்று திருவாளர் குருமூர்த்தி எழுதியதையும் அண்ணாமலைகள் நினைத்துப் பார்க்கட்டும் - இதற்குள்ளும் இனப் பிரச்சினை இருக்கிறது.

நாம் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்ற மனுதர்மம் (அத்தியாயம் 8; சுலோகம் 415, 417) கூறுவதைக் கண்டிக்கிறோம் என்றால், அண்ணா மலைகளின் சுயமரியாதைக்கும் சேர்த்துதான்.

‘தினமலர்' மனுவை தூக்கிப் பேசுகிறது என்றால், அதன் பார்ப்பன ஆதிக்கத் தன்மைதான். அண்ணாமலைகள் சுயமரியாதையோடு சிந்திக்கட்டும்!

‘‘பிராமண வேடத்தில்'' சிவனடியாராக வந்த சிவன் கேட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் சிவனடியார் (இயற்பகை நாயனார்) தன் மனைவியை அனுப்பி வைத்ததை எல்லாம் பயபக்தியோடு ஏற்றுக் கொள்வோர்  தேர்தலில் வாக்கு வங்கி முறையைக் கண்டிக்கும் வகையில் தந்தை பெரியார் சொன்னதை முடிச்சுப் போட்டு வில்லங்கம் செய்வதுதான் வேடிக்கை!

தளபதி மு.க.ஸ்டாலின் மிசாவில் சிறைக்குப் போனதுபற்றிக்கூட  தெரியாத பூஜ்ஜியங்கள், தந்தை பெரியார்பற்றியோ, தலைவர் வீரமணிபற்றியோ, ஆ.இராசாவைப்பற்றியோ எழுதுவதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

29.9.2022

Posted by parthasarathy r at 08:41 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: அண்ணாமலை, இறுதிப் பேருரை

மாஸ்கோவில் 'பெஸ்போழ்னிக்' தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்தும் பெரியார் (அரிய படம்)

Karthick RM  முகநூல் பதிவு

Here is Periyar at the editorial office of 'Bezbozhnik', an anti-religious paper, in Moscow. And another image of him giving a speech.

With many many thanks to Ole Birk Laursen for the precious find!

மாஸ்கோவில் மதவெறுப்பான 'பெஸ்போழ்னிக்' தலையங்க அலுவலகத்தில் பெரியார் இதோ. அவர் உரை நிகழ்த்தும் மற்றொரு உருவம்.

விலைமதிப்பற்ற கண்டுபிடிப்புக்கு ஓலே பிர்க் லார்சனுக்கு மிக்க நன்றி!

...
Posted by parthasarathy r at 05:37 No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: பெரியார், மாஸ்கோ
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments

Followers

Blog Archive

  • ▼  2023 (15)
    • ▼  March (11)
      • மொழிகளின் திணிப்பு வரலாறு
      • இந்தி மொழியின் இலக்கணப் பிழையா? அல்லது இலக்கணமே இல...
      • ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உ...
      • ‘சூத்திரன் ஏவலாளி மட்டுமே!' சிபிஎஸ்இ 6 ஆம் வகுப்பு...
      • வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நட...
      • ‘‘அக்கப்போர் அண்ணாமலை''யின் இடைச்செருகல் - திருவிள...
      • மாஸ்கோவில் 'பெஸ்போழ்னிக்' தலைமை அலுவலகத்தில் உரை...
      • பஞ்சாப் அரசின் பாராட்டத்தக்க செயல்! ஜாதிக் குறியீட...
      • பிரிட்டிஷ் ஆட்சி காலம் இந்தியாவின் பாரம்பரியப் பெர...
      • திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதா?
      • யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது யாரால்?
    • ►  February (3)
    • ►  January (1)
  • ►  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?
    பெல் ம. ஆறுமுகம் உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்....
  • நாடார்களுக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை - தீர்ப்பு
    Cites 1 docs Sankaralinga Nadan vs Raja Rajeswara Dorai on 1 July, 1908 Citedby 8 docs - [ View All ] Sri Venkataramana Devaruand ... vs The...
  • டாக்டர் சீர்காழி கோவிந்தராசன் மறைவு
    தமிழினத்தின் தன்னிகரற்ற இசை மாமன்னராக விளங்கிய, உலகின் அனைத்துப் பகுதியிலும் தமிழிசையினைப் பரப்பி, தமிழினத்தின் ஒளிமுத்தாய் விளங்கிய நம் அரு...
  • தோள்சீலை போராட்டம்
    #தோள்சீலைபுரட்சி; அல்லது #குப்பாயபுரட்சி. பார்ப்பன நம்பூதிரிகள் கேரளாவில் யாரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் போர் மறவர்களான நாயர்களை தரவாட...
  • கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!
    சென்னை, ஏப்.29 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் ...
  • பார்ப்பனர் பற்றி திருமூலர்
    -புலவர் கோ . இமயவரம்பன்  சைவ சமயத்தவர் தங்கள் மதத்திற்குப் பெரிய ஆதாரமாகத் தமிழில் உள்ள ஆகமங்களைத்தாம் காட்டுவர் இந்த ஆகமம் பன்னிரண்டு திரும...
  • கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை
    கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை கி.பி. 500க்குப் பிறகு வலிமையாக சமூகத்தில் இறுகியது! வேதங்களும், ஸ்மிருதிக...
  • கைபர் போலன் அடிமைகளின் கேள்விளுக்குப் பதில்கள்:
    பெரியார் பயிற்சிக் களம் குழுவில் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் முகநூல் பக்கம் பகுதியில் வெளி வந்தது... 20.08.21 "முடிந்தால் பதி...
  • கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..?
    கச்சத்தீவு... இலங்கைக்கு யார் தாரை வார்த்தது..? கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தததை எதிர்த்தத வாஜ்பாய் தான் இந்திய பிரதமராக இருந்த தனது ஆட்ச...
  • பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! (வரலாற்று சுவடு)
    (வரலாற்று சுவடு) பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்! பாகிஸ்தானில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! போலீசார் தடியடி நடத்தி ப...

Labels

  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்யா
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அற்றவர்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆணை
  • ஆணையம்
  • ஆதார்
  • ஆதிதிராவிடர்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரியர்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • இசுலாம்
  • இசை
  • இட ஒதுக்கீடு
  • இடுகாடு
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இராமதாசு
  • இராமன்
  • இராமாயணம்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உதவி
  • உத்தரவு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எபிகூரசு
  • எம்ஜிஆர் நகர்
  • எழுத்து
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலைஞர்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழிப்பறை
  • கற்பழிப்பு
  • காந்தி
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • குடும்ப அட்டை
  • குரான்
  • குலக்கல்வி
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கொடி
  • கொலை
  • கோடம்பாக்கம்
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • சங்கம்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சான்றிதழ்
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சூத்திரர்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைவம்
  • சொத்து
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தண்ணீர் தொட்டி
  • தமிழர் தலைவர்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் மொழி
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தேசபக்தி
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தோள்சீலை
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்னன்
  • நாடார்
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நேரம்
  • நோய்
  • பசு
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பணம்
  • பணிநிறைவு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பழமொழி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பன்முகம்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பான்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேரவை
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மருத்துவம்
  • மலம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வண்ணார்
  • வயது
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • விருது
  • விளக்கம்
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாதி
  • ஜெயலலிதா
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.