Friday, 4 September 2026

கருமையின் பெருமை! - செ.ர.பார்த்தசாரதி சென்னை -34



அறிவியல் பகுதி


கருமையின் பெருமை!


கருப்பு என்றாலே மக்களில் பெரும்பான்மையினருக்கு வெறுப்புதான் வரும். அப்படிப்பட்ட கருப்பு நிறத்தையுடைய சட்டையை. வெறுக்காமல் தன்னுடைய தன் இனத்தினுடைய இழிவு நீங்குவதற்காக ஒவ்வொரு திராவிடர் கழகத்துக்காரர்களும் பெருமையாக அணிந்து கொள்கின்றனர்.


நீதியின் சின்னம் கருப்பு


நீதி துறையைச் சார்ந்தவர்கள் அணிவதும் கருப்புச் சட்டை தான்! நீதிக்காக பாடுபடுபவர்கள் (திராவிடர் கழகத்தினர்) அணிவதும் கருப்புச் சட்டை தான்! நீதியின் சின்னம் கருப்பு என்றே சொல்லலாம்.


கருப்பு என்றால் என்ன?


பெருமை மிக்க கருப்பு நிறத்தை பற்றி சிறிது ஆராய்வோம்.


நிறங்களைப் பற்றி சொல்லும் போது கருப்பையும் ஒரு நிறமாக பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் உண்மையில் கருப்பு என்பது ஒரு நிறம் கிடையாது.


அனேகமாக வெள்ளை நிறத்தை தான், நிறமற்றதாக நினைக்கத் தோன்றும். எந்தப் பொருளையும் தூய்மை செய்தல், அதாவது வெண்மையாக்கினால் தான், நிறங்களை நீக்கி சுத்த மாக்கி விட்டதாக நினைக்கத்கத தோன்றும் ஏந்த  பொருளையும் தூய்மை செய்தல், அதாவது வெண்மையாக்கினால் தான். நிறங்களை நீக்கி சுத்த மாக்கிவிட்டதாக நினைக்கத் தோன்றும்.


உதாரணத்திற்கு வெள்ளை துணியிலோ, வெள்ளை காகி தத்திலோ தான் அனைத்து நிறங் களையும் அச்சிடுகின்றனர். அப் பொழுதுதான் பளிச்சென்று தெரிகின்றது. ஆகையினால் நிற மற்ற பொருள் வெள்ளை என்று நினைக்கிறோம். ஆனால் வெள்ளை என்பது ஏழு நிறங்களின் கூட்டு நிறமாகும். அதாவது ஏழு நிறங்கள் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறம் வரும்


ஒரு வட்ட வடிவ தகட்டில் ஏழு சம பாகமாக பிரித்து ஒவ்வொன்றிலும் வானவில்லின் ஏழு நிறங்களையும் தீட்டி, அந்த தகட்டை ஒரு அச்சில் பொருத்தி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழலவிட்டால் அந்த தகடு வெள்ளை நிறமாக தெரியும்.

                                                                  நியூட்டனின் வட்டு

காரணம் குறிப்பிட்ட வேகத்தில் சுற்றும் போது ஏழு நிறங்களும் எல்லா இடத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் வரும். அப்படி வரும்போது ஏழு நிறங்களும் கலக்கப்படுவதால் வெள்ளை நிறமாக தெரிகிறது. ஏழு நிறங்களையும் (பெயிண்ட்) சம அளவில் கலந்தால் வெள்ளை நிறமாகி விடும்.


சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருக்கின்றன. இவை ஒன்று சேர்ந்து இருப்பதால்தான் சூரியனியிருந்து சிறிது பழுப்பான வெள்ளை ஒளி வெளி வருகின்றன.


இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் முப்பட்டக கண்ணாடியின் மூலமாக சூரிய ஒளியைப் பிடித்தால், ஒளி தனித்தனியாகப் பிரிந்து ஏழு நிறங்களாகத் தெரியும்'



அடுத்து ஓர் உண்மை என்னவென்றால், எந்தப் பொருளுக்கும் நிறம் கிடையாது என்பதுதான். அதாவது எல்லா பொருளும் கருப்பு என்பதுதான்.


சூரியனிலிருந்து வரும் ஒளியினாலேயே, குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஒளியினாலேயே (எந்த ஒளியானாலும்) தான் பொருள்கள் பல நிறங்களாகத் தெரிகின்றன.


பொருள்கள் அனைத்தும் நிற ஒளிகளை எதிரொளிப்பவை யாகவும் எதிரொளிக்காதவையா கவும். நிற ஒளிகளை உமிழ்பவை களாகவும், உமிழாதவைகளாகவும் இருக்கின்றன.


கண்பார்வை


இடையில் கண்பார்வை பற்றி சிறிது பார்ப்போம். நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமானால் ஒளியை உமிழ்வதாகவோ அல்லது ஒளியை எதிரொளிப்பதாகவோ இருக்க வேண்டும்.


ஒளி பொருள் மீது பட்டு எதிரொளிக்கப்பட்டு நம் கண்ணை அடையும் போது, அந்த பொருள் இருப்பதை கண் உணர்கிறது. அந்தப் பொருள் தன் மீது படும் ஒளியை எதிரொளிக்கவில்லையானால் அந்தப் பொருளை கண் உணராது. இதனால் அந்த பொருள் கருப்பாகத் தெரியும். ஒளியே இல்லையானால் பொருள் மீது பட்டு ஒளி எதிரொளித்து நம் கண்ணை அடைய முடியாததால், அந்தப் பொருளை நாம் உணர முடியாது. இதனால்தான் இரவில் (இருட்டில்) எந்தப் பொருளையும் பார்க்க முடிவதில்லை.




ஏழு நிறங்களை கொண்ட ஒளி ஒரு பொருளின் மீது படும்போது அந்தப் பொருள் எந்த ஒளியை மட்டும் (மற்ற ஒளிகளை ஈர்த்துக் கொள்ளும்) எதிரொளிக்கிறதோ அந்தப் பொருள், அந்த நிறமாகத் தெரியும்.


உதாரணமாக எழு நிறம் கொண்ட ஒளி (சூரிய ஒளி) மாங்காய் மீது படும்போது, அந்த மாங்காய் மற்ற நிறங்களை எல்லாம் ஈர்த்துக் கொண்டு, பச்சை நிறத்தை மட்டும் வெளியே விட்டு விடும். அதாவது எதிரொளித்து விடும். வெளியேற்றப்பட்ட பச்சை நிற ஒளி நம் கண்களை அடையும் போது, மாங்காய் பச்சையாகத் தெரிகிறது.


மாங்காய் பச்சை நிறத்திற்குப் பதில் சிவப்பு நிறத்தை எதிரொளிக்குமானால் மாங்காய்

சிவப்பாகத் தெரியும். 


ஒளியிலிருக்கும் எந்த நிறத்தையும் ஒரு பொருள் எதிரொளிக்காமல் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளுமானால் அந்தப் பொருள் கருப்பாகத் தெரியும்.


கண்ணுக்குப் புலப்படாத விண்மீன்கள்



விண்வெளியில் எண்ணிக்கையிலடங்கா கோள்கள் (விண்மீன்கள்) இருக்கின்றன. அவற்றில் சில கோள்களை கண்களால் பார்க்க முடியாது. காரணம், அவை ஒளிகளை எதிரொலிக் காததும், ஒளிகளை உமிழாததும் தான் ஆகும்.


அந்த கோள்களின் மீது படும் ஒளிகளை எல்லாம் தடுத்துக் கொண்டு எந்த ஒலியையும் அது எதிரொளிப்பதில்லை. 

அதனால் அந்த கோள்கள் கருப்பாக தெரிகின்றன. கருப்பாகத் தெரிவதால், வானவெளியில் அந்த கோள்கள் இருப்பதே கண்களுக்கு புலப்படுவதில்லை. பார்ப்பதற்கு வெட்ட வெளியாக தான் தெரியும்.

கோள்கள் இருப்பதை மற்ற ஆதாரங்களை வைத்து தான் கண்டுபிடிக்கின்றனர். 


நாளுக்கு நாள் பொருள்கள் அழுத்தப்பட்டு கொண்டே செல்கின்றன, இப்படி அழுத்தப் பட்டுக் கொண்டே சென்றால் குறிப்பிட்ட காலத்தில் அழுத்தம்

அதிகரிப்பதால், அந்தப் பொருள்கள்,  ஒளியை உமிழ்வதையோ, எதிரொளிப்பதையோ நிறுத்தி விடும். இதேபோல் ஆனவைகள் தான் கருப்புக் கோள்கள்.


கருப்பு குடை குளிர்ச்சியா?


வெயில் காலங்களில் கருப் புக்குடையை வெப்ப தாக்கத்தி லிருந்து தப்பிக்க கையில் பிடித்துச் செல்கின்றனர். ஆனால் வெப்பம் அதிகமாகவே தெரியும். இதற்குக் காரணம், கருப்பு நிறம் அனைத்து ஒளியையும் ஈர்த்துக் கொண்டு எந்த ஒளியையும் எதிரொளிக்காததேயாகும். அனைத்து ஒளியையும் ஈர்த்துக் கொள்வதால் குடையின் கீழ் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் குடைபிடித்து செல்பவருக்கு வெப்பம் அதிகமாக தெரிகிறது.


அதே நேரத்தில் வெள்ளை நிற குடை பிடித்துச் சென்றால் வெப்பக் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம் காரணம் வெள்ளை நிற குடை, அதன் மீது படும் ஒளி எதனையும் ஈர்க்காமல், அப்படியே எதிரொளித்து விடுவதே ஆகும். இதனால் குடை பிடிப்பவருக்கு வெப்பம் தெரிவ தில்லை. சிவப்பு குடை பிடித்தால், சிவப்பு நிறத்தை மட்டும் எதிரொலித்து விடுவதால் சிறிதளவு வெப்பம் தெரியும். இதே போல்தான் மற்ற நிறங்களுக்கு மாகும்.


பெட்ரோல் (டேங்க்) தொட்டி, பெட்ரோல் வண்டிகளுக்கு வெள்ளை நிறமோ, அலுமினிய நிறமோ அடிப்பதற்கு காரணமும் இதுவே! வெள்ளை நிறத்தை அடிப்பதால் ஒளி அனைத்தும் எதிரொளிக்கப்படுகிறது. வெப்பமாக இருக்கும் ஒளி எதிரொளிக் கப்பட்டுவிடுவதால் தொட்டி சூடேறுவதில்லை, இதனால் பெட்ரோல் தீப்பற்றாது. அதே அந்த தொட்டி கருப்பு நிறமாக இருந்தால் ஒளி அனைத்தும் ஈர்க்கப்பட்டு தொட்டி சூடேறி பெட்ரோல் தீப்பற்றி எரிந்து விடும்.

சூரிய அடுப்பு இயங்கும் விதம்

சோலார் குக்கர் எனப்படும் சூரிய அடுப்பும் இதே தத்துவத்தில் தான் இயங்குகிறது. சூரிய அடுப்புக்குள் அனைத்துப் பகுதிகளிலும் கருப்பு நிறம் பூசப்பட்டிருக்கும். உணவுப் பொருள் வைக்கும் குப்பிக்கும் சேர்த்து. இதனால் சூரிய அடுப்பில் உள்ள கருப்பு நிறத்தின் மீது சூரிய ஒளி படும் போது; சூரிய ஒளி ஈர்க்கப்பட்டு குப்பிகள் சூடேறி அதிலுள்ள உணவுப் பொருள்கள் வேக வைக்கப்படுகிறது.


கருப்பை தாங்கும் பெரியார் படை

கருப்பு சட்டை காரர்களுக்கு வெயில் என்றால் ஒரே எரிச்சல்தான். கருப்புச்சட்டை வெப்பத்தை உடைய ஒளியை ஈர்த்து உடலை சூடாக்கும். ஆனால் இந்த வெப்பத்தை தாங்கிக் கொண்டு கருப்பு

சட்டை போடுவது மாத்திரமல்லாமல், கொளுத்தும் வெயிலில் கருப்புச் சட்டையுடன் எவ்வளவு உடல் வருத்தம் வந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு. சமுதாய இழிவை நீக்க, பல கிலோமீட்டர் தூரம் ஊர்வலமும் செல்லுகிறார்கள் என்றால் பெரியார் பெரும்படையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை! 


- செ.ர.பார்த்தசாரதி


சென்னை -34


குறிப்பு: இது தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன.


-  விடுதலை ஞாயிறு மலர்,10.11.91




Wednesday, 19 August 2026

இயேசுவின் விண்ணேற்றம் - செ.ர.பார்த்தசாரதி

 இயேசுவின் விண்ணேற்றம்


- செ.ர.பார்த்தசாரதி


ஏசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பின் கல்லறையில் வைக்கப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் பிறகு 40 ஆம் நாள் விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.


கடைசியாக விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இடம் இப்பொழுது முகமதியரிடம் இருக்கிறது. விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் நாளின் போது (இரண்டு நாள்கள்) மட்டும் கிறித்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் முஸ்லீம்களின் மசூதியாக இருக்கிறது.


'ஏசு சிலுவையில் அறையப்படவுமில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை. சிலுவையில் அறையப்படுவது போல் ஒரு தோற்றத்தை கடவுள் (அல்லா) ஏற்படுத்தினார் என திருக்குர்ஆனில் உள்ளது.(திருக்குர்ஆன் அன்-நிஸா (An-Nisa) 4ஆவது அத்தியாயத்தின் 157-வது வசனம்) 


முஸ்லீம்கள் (அகமதியா பிரிவு) ‘இயேசு யூதர்களிடமிருந்து தப்பித்து இமய மலைப் பகுதியில் வந்து வாழ்ந்து பிறகு இயற்கையாக மரணமுற்றார்’ என்றும் அவருடைய சமாதி காஷ்மீரில் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.


குர்ஆனுக்கு முந்தைய 'தவ்ராத்' வேதத்தில், ‘இயேசுவின் சமாதி, முகமது நபியின் சமாதியின் அருகில் வைக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதாக ‘அல்ஹதீஸ்' என்ற முஸ்லீம்களின் வேத நூலில் உள்ளது. (திர்மிதீ,வசனம் 3,617)


ஆகையினால்தான் இன்றளவும் முகமது நபியின் சமாதியின் அருகில் எதுவும் வைக்கப்படாத காலியான சமாதி ஒன்று இருப்பதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர்.


'இயேசு உயிர்த்தெழுந்து 40ஆம் நாள் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது உண்மையாயின் 'தவ்ராத்'தில் சொல்லப்பட்ட வசனம் பொய்யாகிவிடுகிறது.காலியாக உள்ள சமாதி . அடைக்கப்படாமலே 'தவ்ராத்' வேதம் பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும்.


முஸ்லீம்கள் சொல்வதுபோல் காஷ்மீரில் அவர் இருப்பினும், 'தவ்ராத்' வசனம் பொய்யாகிவிடுகிறது.


இவையெல்லாம் போகட்டும், ‘விவிலியம்' (பைபிள்) என்ன சொல்கிறது என பார்ப்போம்.


'பதினோரு சீடர்களும் இயேசு குறித் திருந்த கலிலேயாவிலே உள்ள ஒரு மலையில் இயேசுவை சந்தித்தனர். அங்கிருந்து அவர் மறைந்தார்" என மத்தேயு கூறுகிறார். (28:16)


மாற்குவும் ‘கலிலேயாவில் பதினொரு வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இயேசு வந்து அவர்களுடன் பேசிவிட்டு பரலோகம் சென்றார் என்றும் கூறுகிறார். (16:7,14,19)


ஆனால் லூக்காவோ 'எருசலேம் அருகிலுள்ள பெத்தானியாவில் சீடர்களை ஆசீர்வதித்துவிட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்' என்று கூறு கின்றார். (24:50,51)


யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையில் சீடர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயேசு வந்து, அவர்களை அழைத்து, பேசிக்கொண்டே சென்றார் (யோவா: 21)


அப்போஸ்தலரோ, ‘எருசலேமுக்கு பக்கத்தில் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு அவரை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது' என்கிறார். அப்போஸ்தலர் (1: 1,9,12)


இந்த அப்போஸ்தலர் (1: 3) மட்டும் தான் ‘இயேசு உயிர்த்தெழுந்து 40 ஆம் நாள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்’ என்று கூறுகிறார். மற்றவர்கள் நாள் கணக்கைச் சொல்லவில்லை.


பக்கம் -13


மத்தேயுவும், அப்போஸ்தலரும் கலிலேயாவில் உள்ள மலையில், இயேசு பரமேறிச் சென்றதாக கூறுகின்றனர்.


ஆனால் யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையிலிருந்து பரமேறிச் சென்றதாக கூறுகிறார்.


இதைவிட அதிசயம் என்னவென்றால் பழைய பாலஸ்தீன தேசத்தில், ஒரு கோடியில் கலிலேயோ இருக்கிறது. இதன் எதிர் கோடியில் எருசலேம் இருக்கிறது. இதன் அருகிலுள்ள பெத்தானியா விலிருந்து இயேசு பரமேறிச் சென்றதாக லூக்கா சொல்கிறார்.


ஏதோ பக்கத்து ஊர்களை சொன்னாலும் பரவாயில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறுகின்றனர்.


இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவர் அருகில் இரு கள்ளர்களையும் அறைந்திருந்தனராம். அவர்களில் ஒருவன் இயேசுவை திட்டினானாம், மற்றவன் வாழ்த்தினானாம்.. வாழ்த்தியவனைப் பார்த்து "இன்றே நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய்' என்று சொன்னாராம்.


இந்த வசனப்படி 'இயேசு 40ஆம் நாள் மேலே சென்றார்' என்பது பொய் யாகிறது. இயேசுவை அறையப்பட்ட அன்றே மேலுலகம் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது.


இதிலிருந்து பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றதனால், இயேசு பரமேறிச் சென்றதாகச்   சொல்லப்படுவது எல்லாம் பொய்யான கட்டுக்கதை என்பதை அறியலாம்.


- உண்மை இதழ், 15.09.1987, 
பக்கம்-13,14

குறிப்பு:- 'கலிலியோ'விலிருந்து 'எருசலேம்' செல்ல இரண்டு பழைய பாதைகள் இருந்தன.
1.'சமாரியா' வழியாக 90 மைல்கள்.
2.'யோர்தான்' ஆற்று வழியாக 120 மையில்கள்.











Saturday, 15 August 2026

பாரதி விழா (மணியம்மை)

 பாரதி விழா

(மணியம்மை)

என் அருமை திராவிட மக்களே நீங்கள் இம்மாதம் நடந்த பாரதி விழாவில் சிலர் கலந்து கொண்டீர்கள், சிலர் நீங்களே விழாக் கொண்டாட்டத்தை நடத்தினீர்கள்.


உங்களுக்கு பாரதி திராவிடரா! ஆரியரா என்பது தெரியவில்லை. பாரதி ஆரியப் பற்று உள்ளவரா திராவிடப் பற்று உள்ளவரா என்பதும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி,சமணர் கழுவேற்ற பட்ட உற்சவம் ஆகியவை போல் பாரதி விழாவும் கொண்டாடினீர்கள். 


பராதியின் திராவிடப் பற்றும், ஒப்ப நோக்கமும் கீழ்வரும் அவரது பாட்டு களில் காணப்படும் குறிப்புகளில் இருந்து உணர்ந்து பாருங்கள்.


பிறகும், "அப்படித்தான் செய்வோம் நீ யார் கேட்பது"

என்றால் உங்ககளுக்கு வேறு யார் தான் மான உணர்ச்சி அளிக்க முடியும். பராதியின் உள் நிலைமை தெரிய அவரது பாடல்களை சற்று கூர்ந்து பாருங்கள். 


பாரதியின் நாட்டுப்பற்று


"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"


பாதியின் இனப்பற்று


"முன்னையிலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்" "ஆரிய ராணியின் வில்" "ஆரிய ராணியின் சொல்" "ஆரிய தேவியின் தேர்"


பாரதியின் நாடு


''"வானாறு பேரிமய வெற்புமுதல் பெண்குமரி

ஈறாகும் ஆரியநா டென்றே அறி." 


பாதியின் மகிழ்ச்சி 


'ஆரியராட்சி பேராளர்நயன்ரோ'


பாரதியாரின் நாட்டுப் பெருமை


"ஆதிமறை தோன்றிய னாரிய நாடே"


பாரதியின் கடவுள் (இந்திரனை தேவர்கள் வேண்டுவது போலவே) துதி (கிருஷ்ணன்)


"ஆரியர் தம் தர்ம நிலை ஆதரிப்பான்"


"ஆரியர் பாழாகா தருமறையின்


உண்மை தந்த சீரியர்’’


"எங்களாரிய பூமியேனும் பயிர் மங்களம் பெற"


"ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே"


"ஆரிய! நீயும் நின் அறம் மறந்தாயோ?" 


"வெஞ்செயலரக்கரை வீட்டிடு வோனே"


"ஆரியர் கோனே"


பாரதியாரின் மொழிப்பற்று (ஆங்கிலம் பற்றி )


"ஆரியர் க்கிங்கருவருப்பாவதை"


பாரதி தமிழ்ப்பற்று


"ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்

வேதியன் கண்டு . .......

இலக்கணஞ் செய்து கொடுத்தான்"


"ஆன்ற மொழிகளிலுன்னே உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்"


பாரதியாரின் ஆசை


"ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள்"


என்றெல்லாம் வெளுத்து வாங்கி இருக்கிறார்.


நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள் பற்று ஆகிய வாவன பாரதி பாடல் நினைப்போர்களே பராதியாரின் B பாகத்தை நன்றாய் சுவையுங்கள்.


தமிழருக்கு மானமிருந்தான் தமிழ் நாடும், தமிழ் மொழியும் இவ்விழிமை யில் இருக்குமா? இங்கும் ஆரியர் ஆதிக்கம் இன்னவர் நிலையில் இருக்குமா?


- குடியரசு, 13.9.1914, புரட்டாசி


Friday, 14 August 2026

பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கிய சாகு மகராசரின் சமூகநீதிச் சாசனம்

 

பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு கோலாப்பூர் சமஸ்தான அரசிதழ் (கெஜட்) – 26.07.1902

கட்டுரை

கட்டுரை

தற்போது கோலாப்பூர் சமஸ் தானத்தில், அனைத்து வர்ணங் களைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வியை அளிப்பதற்கும், அவர்களைக் கல்வியை நோக்கி ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று அரசு வருந்துகிறது.

இவ் விசயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொது, உயர்கல்வியை முடித்த பின்னரும் போதுமான வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லை என்று அரசு கண்டறிந்துள்ளது.

இதற்கான தீர்வாகவும், சமஸ்தானத் தின் குடிமக்களில் பின்தங்கிய வகுப்புகளைச் (வர்ணங்களைச்) சேர்ந்தவர்கள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும், சமஸ்தானத்தின் வேலைவாய்ப்புகளில் ஒரு கணிசமான பகுதியை இவ்வகுப் பினருக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக, இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியி லிருந்து காலியாகும் அனைத்துப் பணியிடங்களிலும் 50 சதவீத இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப் பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் ஆணையிடுகிறார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள அனைத்து அலுவலகங்களிலும், இனிமேல் செய்யப்படும் அனைத் துப் பணி நியமனங்களும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆணை வெளியிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு துறைத் தலைவரும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நியமனங்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையை மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: பார்ப்பனர், பிரபு (பார்ப்பனர் அல்லாத ஓர் உயர்ஜாதி), ஷென்வி (சரஸ்வதி பார்ப்பனர்கள்), பார்சிகள் மற்றும் பிற முன்னேறிய வகுப்புகளைத் தவிர்த்த மற்ற அனைத்து வகுப்பினரும் ‘பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்’ என்று கருதப்பட வேண்டும்.

மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களின் ஆணையின்படி,

நாகேஷ் பாண்டுரங் பிடே,

தனிச் செயலாளர்

சான்று: ‘ராஜரிஷி சாகு கௌரவ கிரந்த்’ நூல் (பக்கம் 1077)

தமிழில்: சமா இளவரசன்

- விடுதலை நாளேடு, 26.7.26

Tuesday, 11 August 2026

விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

 விரும்பியபடியே குழந்தை பெறலாம்!

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி



பிறக்கப் போகும் குழந்தையை நம் விருப்பப்படியே ஆணாகவும், பெண்ணாகவும் உண்டாக்கலாம்.


ஆணின் விந்துவில் உள்ள 'உயிரணு'வும் (ஆணின் ஒரு துளி விந்துவில் பல இலட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன) பெண்ணின் 'அண்ட முட்டையும் (பெண்ணிற்கு மாதந்தோறும் அதாவது 28 நாள்களுக்கு ஒரு அண்ட முட்டை தான் உண்டாகும்) இணைந்து கருவாக மாறி வளர்ந்துதான் குழந்தையாக பிறக்கிறது.


ஆணின் விந்துவில் இரண்டு வகையான உயிரணுக்கள் உள்ளன. அவை 'X' பால் குரோமோசோமை கொண்ட உயிரணுக்களும், Y பால் குரோமோசோமை கொண்ட. உயிரணுக்களும் ஆகும்.


ஆனால் பெண்ணின் அண்ட முட்டைகள் ஒரே வகையை சேர்ந்ததாகும். அதாவது 'X' பால் குரோமோசோமை மட்டுமே கொண்ட உயிரணு (அண்ட முட்டை) வாகும்.


ஆண் விந்துவிலுள்ள ×' பால் குரோமோசோமை கொண்ட உயிரணு ஒன்றும்; பெண் அண்ட முட்டையான ' 'X' பால் குரோமோசோம் கொண்ட உயிரணுவும் இணைந்தால் 'XX' என்றாகி பெண் குழந்தையாக உண்டாகும்.


இதற்கு மாறாக ஆண் விந்து விலுள்ள குரோமோ Y' சோமை கொண்ட உயிரணு ஒன்றும் பெண் அண்ட முட்டையான 'X' பால் குரோமோசோம் கொண்ட உயிரணுவும் இணைந்தால் 'XY' என்றாகி ஆண் குழந்தையாக உண்டாகும்.


அதாவது ஆணின் உயிரணு தான் (சேர்வதைப் பொருத்து) ஆணா? பெண்ணா? என்பதை உறுதிப்படுத்துகின்றது.


ஆணின் விந்துவிலுள்ள இரண்டு வகையான உயிரணுக் களையும் தனித்தனியாக பிரித்து எடுத்து நமக்கு எந்த குழந்தை வேண்டுமோ அதற்கு தேவையான உயிரணுவை மட்டும் அண்ட முட்டையுடன் இணைய விட்டால் வெற்றிகரமாக தேவையான குழந்தையைப் பெறலாம்.

இதற்கான ஆராய்ச்சி பல ஆண்டுகாலமாக பல நாடுகளில் நடந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் 'ஜப்பானில்'  கால்நடைகளின் பால் 'குரோமோசோம்களை தனித்தனியாக பிரித்து வெற்றி கண்டனர்.


அதே போல் 1986-ல் ஜப்பானியர்கள் மனிதனின் உயிரனுக்களையும் பிரித்து வெற்றிகண்டனர்.


இம்முறையில் இணைத்து 40 பேருக்கு பரிசோதனை செய்ததில்; 24 பேர் பெண் குழந்தை கேட்டதில் 22 பேருக்கு பெண் குழந்தையும்: 18 பேர் ஆண் குழந்தை கேட்டதில்; அவர்கள் அனைவருக்கும் ஆண் குழந்தையும் பிறந்தது.


(செய்தி ஆதாரம்: 'தினந்தந்தி'

நானேடு 22.6.86)


8-ம் பக்கம் பார்க்க...


தொடர்ச்சி.....


தற்போது வெர்ஜீனியாவின் ஃபேர்பேக்ஸில் உள்ள ஜெனிடிக்ஸ் "AVF" பசுக்கள் போன்ற விலங்குகளிடத்தில் பரிசோதித்து விட்டு மனிதர்களுக்கும் சோதித்து வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் 'லேசர்' கருவிகள் மூலம் ஆணின் விந்துவிலுள்ள இரண்டு வகையான குரோ மோசோம்களைக் கொண்ட உயிரணுக்களுக்கு தனித்தனி வண்ணங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.


பிறகு இந்த வண்ண வேறு பாட்டை வைத்து (மைக்ரோ ஸ்கோப்) 'நுண்ணோக்கி' மூலம் அந்த ஆணின் விந்துவிலுள்ள 'X' 'Y' பால் குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களை தனித்தனியாக பிரித்திருக்கிறார்கள்.


இந்த முறையில் முதல் கட்ட மாக ஆய்வு செய்ய பதினான்கு பேர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த பதினான்கு பேரும் தங்களுக்கு பெண் குழந்தைதான் வேண்டுமென்று முழு மனதாக கூறினார்களாம்.


இவர்களில் பதிமூன்று பேருக்கு விரும்பியபடியே பெண் குழந்தை பிறந்ததாம். இது அறுபத்தைந்து விழுக்காடு வெற்றி என்று அந்த அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.


ஒரு வகையில் பார்க்கப்போனால் இந்த ஆராய்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் முதலில் நன்மைக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவை தீய விளைவுகளுக்குப் பயன்பட்டு விடுகின்றன.


முன்னாளில் பெண் குழந்தையை பெற்றவுடன் கொன்று விடும் பழக்கம் பல நாடுகளில் இருந்து வந்தது. தற்போது ஓரளவு குறைந்துள்ளது. குறைந்துள்ளதாக சொல்லப்படும் எண்ணிக்கையை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது.


கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்கும் கருவி வந்தவுடன் பல பெண் கருக்கள் கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை நீடித்ததால், இதை சட்டப்படி தடுக்க வேண்டியதாகிவிட்டது.


1981-க்கு முன் இந்தியாவில்' ஆண்கள் 972-ம் பெண் கள் 1000-மும் இருந்தனர். 1981-இல் தலைகீழ் மாற்றம் ஆண்கள் 1000-மும் பெண்கள் 935முமாக ஆகியுள்ளது. கேரளாவில் மட்டும் பழைய நிலை 1000 ஆண்கள், 1034 பெண்கள்.


குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர். ஒரிசா, பஞ்சாப். இராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகம்.


பம்பாய் நகரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 8000 கருச் சோதனைகள் நடத்தப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. (பத்தாண்டுக்கு முன்) இந்த 8000-த்தில் 7999 பெண் குழந்தைகள்.


ஆகையால் தற்போது பால்குரோமோசோம்களைப் பிரித்துள்ளதால் எல்லோரும் ஆண் குழந்தைகளையே கேட்டு பெற்றுக்கொள்வார்கள். இதனால் சமுதாயத்தில் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.


இவையெல்லாவற்றுக்கும் காரணம்; பெண் என்றாலே ஓர் இழிவான பொருளாகவும், போன பிறவியில் பாவம் செய்தவர்கள் என்றும்; மற்றும் தாழ்ந்தவர்களாகவும், அடிமைகளாகவும் கருதப்படுவதே ஆகும். இந்து மதம் பெண்களை ஆடு, மாடுகளைப் போல் ஓர் அஃறிணை பொருளாகத்தான் குறிப்பிடுகிறது. 


ஆணாகவும், பெண்ணாகவும் பிறப்பது ஆண்டவன் செயல் அன்று. 'XY' XX என பால் குரோமோசோம்கள்' (உயிர் அணுக்கள்) இணையும் விதத்தில்தான் உள்ளது.


ஆண் பிள்ளை பிறந்தாலென்ன? பெண் பிள்ளை பிறந்தாலென்ன? எந்த பிள்ளையும் உயர்ந்ததோ; தாழ்ந்ததோ கிடையாது. எந்த பிள்ளை பிறந்தாலும் அதைப் பேணி வளர்ப்பதுடன், கல்வியைக் கொடுப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.


- விடுதலை ஞாயிறு மலர்






Sunday, 9 August 2026

சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோழர் பார்த்தசாரதிக்கு மூலிகை மன்னன் பட்டம்)

எய்ட்சுக்குச் சித்த மருத்துவம்


'எய்ட்சு' நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.


'சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெர்மன் அரங்கத்தில் 10.2.97 அன்று நடைபெற்றது.


இந்தி எதிர்ப்பு போராட்ட  வீராங்கனை டாக்டர் தர்மாம்பாள் அவர்களின் மகன் 'சித்த மருத்துவச் செம்மல்’ டாக்டர் சிற்சபை அவர் களால் சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகுக்கு பறைசாற்ற துவக்கப்பட்டது இந்த 'சித்த மருத்துவம்* என்ற மாத இதழ்.

டாக்டர் சிற்சபை அவர்களின் மகனான டாக்டர் அம்பிகாபதி அவர்கள் இந்த இதழை தற்போது நடத்திக் கொண்டு வருகிறார்.


சித்த மருத்துவத்தின் பெருமையை மக்களுக்கு விளக்கும் முகமாக, ‘சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா என்ற பெயரில் சித்த மருத்துவ விழாவாக டாக்டர் அம்பிகாபதி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் அம்பிகாபதி அவர்கள், சித்த மருத்துவத்தை எளிய முறையில் அனைவருக்கும் கற்பிக்கும் நோக்கத்தோடு, சென்னையை அடுத்த நீலாங்கரை என்ற ஊரில் இருந்து நேர்முக பயிற்சியை உள்ளடக்கிய சித்த மருத்துவ அஞ்சல் வழிக் கல்லூரியை நிறுவியுள்ளார்.


அதன் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் இதனுடன் சேர்த்து நடத்தப்பட்டது. 


காலை 10 மணிக்கு சித்தர்களின் வழித்தோன்றலான 'தவத்திரு பழனி தங்கவேலு சுவாமிகள்' என்பவர் விழாவிற்கு தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார்.


டாக்டர் சிற்சபை அவர்களின் படத்தை முன்னாள் அமைச்சர் திரு. பொன்னையன் அவர்கள் திறந்து வைத்தார். 


சிந்தனைச் சிற்பி தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், சிந்தனையை கிளரும் வகையில் சில அரிய தகவல்களை கூறினார். டாக்டர் அம்பிகாபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


பிறகு மருத்துவர்கள் கருத்துரை மற்றும் சித்தர் நூல்களில் மிகுந்து காண்பது ஆன்மீகமா? - மருத்துவமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன.


'எய்ட்சு'க்குச் சித்த மருத்துவம்!


எய்ட்சு நோய்க்கு சித்த உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது. எய்ட்க நோய் நீங்கிவிட்டதா என்று கண்டறிய வெகுகாலம் பிடிப்பதால் இது சோதனை முறையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


அஞ்சல் வழிக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை நீதியரசர் மோகன் அவர்கள் வழங்கி உரையாற்றினார்.


அம்பிகாபதி அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் சான்றோர்களை பாராட்டும் முகமாக முதலாவதாக இந்த ஆண்டு இந்த விழாவில் இரண்டு தமிழ்ச் சான்றோர் களுக்கும், இரண்டு சித்த மருத்துவ சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.


கழகத் தோழர் பார்த்தசாரதிக்கு மூலிகை மன்னன் பட்டம்


பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தன் எம்.ஏ.அவர்களுக்கு "அருள்நெறி ஆசான்' என்ற விருதும், அருணை வடிவேலு அவர்களுக்கு "யோக நெறி காவலர்" என்ற விருதும், அதேபோல், சித்த மருத்துவ சான்றோர்களான பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் எல்.அய்.எம். அவர்களுக்கு சித்த மருத்துவத் தந்தை" என்ற விருதும்,


பேராசிரியர் டாக்டர் ஆனந்த குமார் ஜி.சி.அய்.எம். அவர்களுக்கு "சித்த மருத்துவச் சுடர்" என்ற விருதும் வழங்கப்பட்டது. இதேபோல், பிரபாகர் பத்ரி என்பவருக்கு இசை சித்தர் என்ற விருதும் வழங்கப்பட்டது.


விழாவில் அய்ந்து பேர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. இதில் தென் சென்னை திராவிடர் கழக இளைஞரணி பொருளாளர் செ.ர. பார்த்தசாரதி அவருக்கு "மூலிகை மன்னன்" என்ற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதே போல் சந்திரசேகரன் என்பவருக்கு

''மூலிகை முரசு" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.


மூலிகைக் கண்காட்சி


விழாவையொட்டி மூலிகை கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 கண்காட்சியை தவத்திரு பழனி தங்கவேலு சுவாமிகள் திறந்து வைத்தார்.


இக்கண்காட்சியில் 600 மூலிகைகள் இடம்பெற்றன. இதில் 150 மூலிகை தாவரங்கள் தொட்டியில் வளர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.


5-ம் பக்கம் பார்க்க

4-ம் பக்கத் தொடர்ச்சி


விழாவிற்கு விளம்பரங்கள் குறைவாக இருந்தும், மூலிகை கண்காட்சியை காண மக்கள் அலை அலையாக வந்து மூலிகைகளைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.


 விளக்கமளித்து கொண்டிருந்த செ.ர.பார்த்தசாரதி அவர்களிடம் சில முக்கியமான மூலிகைகளைப் பற்றி கேட்டபோது, அவர் சொன்ன தகவல் வருமாறு:-


1. அருகம்புல்


இதை தாவரவியல் பெயரில் 'சைனோடான் டாக்டைலான்' என்று கூறுவர். சங்க காலத்தில் 'அருகை' என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இதை அருகம்புல் என்று அழைக்கின்றனர்.


இந்த மூலிகையை 'சாகா மூலிகை ' என்று சொல்லலாம். இந்த புல்லிலுள்ள செல்களுக்கு சாவு கிடையாது. இதன் செல்லிலுள்ள ஆர்.என்.ஏ. (R.N.A.) மூலக்கூறுகளை சிதைய விடாமல் சில சுரப்பி நீர்கள் பார்த்துக் கொள்வதால் இந்த செல்கள் சாவதில்லை. (மனிதன் உட்பட மற்ற உயிர்களின் செல்களில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறு சிதைவதால் தான் மூப்படைந்து சாக நேரிடுகிறது.)

இதை ரஷ்ய விஞ்ஞானி மனிதனுக்கு ஆய்வு செய்து கொண்டு வருவதாக 'குப்ர விஷ்' என்பவர் கூறுகிறார். (ஆதாரம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு).


இந்த அருகம்புல் இரத்தத்திலுள்ள நஞ்சுகளை போக்கும்; இதயத்தை பலப்படுத்தும்; உடல் வலிகளை போக்கும்; சிறுநீர்தாரை எரிச்சலை நீக்கும்.


அருகம்புல்லை இடித்து சாறு எடுத்தோ அல்லது அப்படியே கொதிக்க வைத்தோ, வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் பாலும் சிறிது சர்க்கரையும் சேர்த்து அருந்த மேற்கண்ட நோய்கள் அகலும்.


2. பாம்பு களா


இதை வடமொழியில் 'சர்ப்பகந்தி' என்று அழைப்பர். இந்த செடிகளின் வேர் பகுதி பாம்புபோல் வளைந்து இருக்கும். இம்மூலிகை மலைச் சாரல்களில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும்.


இந்த மூலிகை ஆயுர்வேத மருத்துவத்தில் தான் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.


இதன் வேரை நம் நாட்டில் பாம்புக் கடி நஞ்சுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


இதன் வேரிலிருந்து இரத்த அழுத்தத்திற்கு மேலை நாட்டில் மருந்து கண்டுபிடித்துள்ளனர்.


வேரிலிருந்து எடுக்கப்படும் 'ரிசெர்பைன்' என்ற திரவத்தில் இருந்து இந்த மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. 


இதன் இலைகளை அவித்து அரை அவுன்சு சாறெடுத்து, நாலு அவுன்சு

பாலோடு கலந்து காலையில் மட்டும் நாலைந்து தினங்களுக்கு குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தூக்கமின்மை போகும், மன அமைதி ஏற்படும், நரம்பு பலப்படும். 


3. இம்பூரல்


'இம்பூரல் காணாதான் இருமி இருமி செத்தான்' என்பது பழமொழி!


இந்த மூலிகை தும்பை இலையை போல் சிறிய அளவில் இருக்கும். வெண்ணிற சிறிய பூ பூக்கும்.


இந்த மூலிகையின் வேரை எடுத்து காய்ச்சி நாலைந்து மிளகு தட்டி போட்டு உள்ளுக்குக் கொடுக்க இரத்த வாந்தி இருமல், காசம் குணமாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 4, 23.3.97