Friday, 14 August 2026

பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கிய சாகு மகராசரின் சமூகநீதிச் சாசனம்

 

பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு கோலாப்பூர் சமஸ்தான அரசிதழ் (கெஜட்) – 26.07.1902

கட்டுரை

கட்டுரை

தற்போது கோலாப்பூர் சமஸ் தானத்தில், அனைத்து வர்ணங் களைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வியை அளிப்பதற்கும், அவர்களைக் கல்வியை நோக்கி ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று அரசு வருந்துகிறது.

இவ் விசயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பொது, உயர்கல்வியை முடித்த பின்னரும் போதுமான வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லை என்று அரசு கண்டறிந்துள்ளது.

இதற்கான தீர்வாகவும், சமஸ்தானத் தின் குடிமக்களில் பின்தங்கிய வகுப்புகளைச் (வர்ணங்களைச்) சேர்ந்தவர்கள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும், சமஸ்தானத்தின் வேலைவாய்ப்புகளில் ஒரு கணிசமான பகுதியை இவ்வகுப் பினருக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக, இந்த அறிவிப்பு வெளியிடப்படும் தேதியி லிருந்து காலியாகும் அனைத்துப் பணியிடங்களிலும் 50 சதவீத இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப் பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் ஆணையிடுகிறார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள அனைத்து அலுவலகங்களிலும், இனிமேல் செய்யப்படும் அனைத் துப் பணி நியமனங்களும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆணை வெளியிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு துறைத் தலைவரும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நியமனங்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையை மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: பார்ப்பனர், பிரபு (பார்ப்பனர் அல்லாத ஓர் உயர்ஜாதி), ஷென்வி (சரஸ்வதி பார்ப்பனர்கள்), பார்சிகள் மற்றும் பிற முன்னேறிய வகுப்புகளைத் தவிர்த்த மற்ற அனைத்து வகுப்பினரும் ‘பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்’ என்று கருதப்பட வேண்டும்.

மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களின் ஆணையின்படி,

நாகேஷ் பாண்டுரங் பிடே,

தனிச் செயலாளர்

சான்று: ‘ராஜரிஷி சாகு கௌரவ கிரந்த்’ நூல் (பக்கம் 1077)

தமிழில்: சமா இளவரசன்

- விடுதலை நாளேடு, 26.7.26

Tuesday, 11 August 2026

விரும்பியபடியே குழந்தை பெறலாம்! மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

 விரும்பியபடியே குழந்தை பெறலாம்!

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி



பிறக்கப் போகும் குழந்தையை நம் விருப்பப்படியே ஆணாகவும், பெண்ணாகவும் உண்டாக்கலாம்.


ஆணின் விந்துவில் உள்ள 'உயிரணு'வும் (ஆணின் ஒரு துளி விந்துவில் பல இலட்சக்கணக்கான உயிரணுக்கள் உள்ளன) பெண்ணின் 'அண்ட முட்டையும் (பெண்ணிற்கு மாதந்தோறும் அதாவது 28 நாள்களுக்கு ஒரு அண்ட முட்டை தான் உண்டாகும்) இணைந்து கருவாக மாறி வளர்ந்துதான் குழந்தையாக பிறக்கிறது.


ஆணின் விந்துவில் இரண்டு வகையான உயிரணுக்கள் உள்ளன. அவை 'X' பால் குரோமோசோமை கொண்ட உயிரணுக்களும், Y பால் குரோமோசோமை கொண்ட. உயிரணுக்களும் ஆகும்.


ஆனால் பெண்ணின் அண்ட முட்டைகள் ஒரே வகையை சேர்ந்ததாகும். அதாவது 'X' பால் குரோமோசோமை மட்டுமே கொண்ட உயிரணு (அண்ட முட்டை) வாகும்.


ஆண் விந்துவிலுள்ள ×' பால் குரோமோசோமை கொண்ட உயிரணு ஒன்றும்; பெண் அண்ட முட்டையான ' 'X' பால் குரோமோசோம் கொண்ட உயிரணுவும் இணைந்தால் 'XX' என்றாகி பெண் குழந்தையாக உண்டாகும்.


இதற்கு மாறாக ஆண் விந்து விலுள்ள குரோமோ Y' சோமை கொண்ட உயிரணு ஒன்றும் பெண் அண்ட முட்டையான 'X' பால் குரோமோசோம் கொண்ட உயிரணுவும் இணைந்தால் 'XY' என்றாகி ஆண் குழந்தையாக உண்டாகும்.


அதாவது ஆணின் உயிரணு தான் (சேர்வதைப் பொருத்து) ஆணா? பெண்ணா? என்பதை உறுதிப்படுத்துகின்றது.


ஆணின் விந்துவிலுள்ள இரண்டு வகையான உயிரணுக் களையும் தனித்தனியாக பிரித்து எடுத்து நமக்கு எந்த குழந்தை வேண்டுமோ அதற்கு தேவையான உயிரணுவை மட்டும் அண்ட முட்டையுடன் இணைய விட்டால் வெற்றிகரமாக தேவையான குழந்தையைப் பெறலாம்.

இதற்கான ஆராய்ச்சி பல ஆண்டுகாலமாக பல நாடுகளில் நடந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் 'ஜப்பானில்'  கால்நடைகளின் பால் 'குரோமோசோம்களை தனித்தனியாக பிரித்து வெற்றி கண்டனர்.


அதே போல் 1986-ல் ஜப்பானியர்கள் மனிதனின் உயிரனுக்களையும் பிரித்து வெற்றிகண்டனர்.


இம்முறையில் இணைத்து 40 பேருக்கு பரிசோதனை செய்ததில்; 24 பேர் பெண் குழந்தை கேட்டதில் 22 பேருக்கு பெண் குழந்தையும்: 18 பேர் ஆண் குழந்தை கேட்டதில்; அவர்கள் அனைவருக்கும் ஆண் குழந்தையும் பிறந்தது.


(செய்தி ஆதாரம்: 'தினந்தந்தி'

நானேடு 22.6.86)


8-ம் பக்கம் பார்க்க...


தொடர்ச்சி.....


தற்போது வெர்ஜீனியாவின் ஃபேர்பேக்ஸில் உள்ள ஜெனிடிக்ஸ் "AVF" பசுக்கள் போன்ற விலங்குகளிடத்தில் பரிசோதித்து விட்டு மனிதர்களுக்கும் சோதித்து வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் 'லேசர்' கருவிகள் மூலம் ஆணின் விந்துவிலுள்ள இரண்டு வகையான குரோ மோசோம்களைக் கொண்ட உயிரணுக்களுக்கு தனித்தனி வண்ணங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.


பிறகு இந்த வண்ண வேறு பாட்டை வைத்து (மைக்ரோ ஸ்கோப்) 'நுண்ணோக்கி' மூலம் அந்த ஆணின் விந்துவிலுள்ள 'X' 'Y' பால் குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களை தனித்தனியாக பிரித்திருக்கிறார்கள்.


இந்த முறையில் முதல் கட்ட மாக ஆய்வு செய்ய பதினான்கு பேர்களை தேர்ந்தெடுத்தார்கள், அந்த பதினான்கு பேரும் தங்களுக்கு பெண் குழந்தைதான் வேண்டுமென்று முழு மனதாக கூறினார்களாம்.


இவர்களில் பதிமூன்று பேருக்கு விரும்பியபடியே பெண் குழந்தை பிறந்ததாம். இது அறுபத்தைந்து விழுக்காடு வெற்றி என்று அந்த அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.


ஒரு வகையில் பார்க்கப்போனால் இந்த ஆராய்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் முதலில் நன்மைக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவை தீய விளைவுகளுக்குப் பயன்பட்டு விடுகின்றன.


முன்னாளில் பெண் குழந்தையை பெற்றவுடன் கொன்று விடும் பழக்கம் பல நாடுகளில் இருந்து வந்தது. தற்போது ஓரளவு குறைந்துள்ளது. குறைந்துள்ளதாக சொல்லப்படும் எண்ணிக்கையை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது.


கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்கும் கருவி வந்தவுடன் பல பெண் கருக்கள் கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை நீடித்ததால், இதை சட்டப்படி தடுக்க வேண்டியதாகிவிட்டது.


1981-க்கு முன் இந்தியாவில்' ஆண்கள் 972-ம் பெண் கள் 1000-மும் இருந்தனர். 1981-இல் தலைகீழ் மாற்றம் ஆண்கள் 1000-மும் பெண்கள் 935முமாக ஆகியுள்ளது. கேரளாவில் மட்டும் பழைய நிலை 1000 ஆண்கள், 1034 பெண்கள்.


குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர். ஒரிசா, பஞ்சாப். இராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகம்.


பம்பாய் நகரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 8000 கருச் சோதனைகள் நடத்தப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. (பத்தாண்டுக்கு முன்) இந்த 8000-த்தில் 7999 பெண் குழந்தைகள்.


ஆகையால் தற்போது பால்குரோமோசோம்களைப் பிரித்துள்ளதால் எல்லோரும் ஆண் குழந்தைகளையே கேட்டு பெற்றுக்கொள்வார்கள். இதனால் சமுதாயத்தில் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.


இவையெல்லாவற்றுக்கும் காரணம்; பெண் என்றாலே ஓர் இழிவான பொருளாகவும், போன பிறவியில் பாவம் செய்தவர்கள் என்றும்; மற்றும் தாழ்ந்தவர்களாகவும், அடிமைகளாகவும் கருதப்படுவதே ஆகும். இந்து மதம் பெண்களை ஆடு, மாடுகளைப் போல் ஓர் அஃறிணை பொருளாகத்தான் குறிப்பிடுகிறது. 


ஆணாகவும், பெண்ணாகவும் பிறப்பது ஆண்டவன் செயல் அன்று. 'XY' XX என பால் குரோமோசோம்கள்' (உயிர் அணுக்கள்) இணையும் விதத்தில்தான் உள்ளது.


ஆண் பிள்ளை பிறந்தாலென்ன? பெண் பிள்ளை பிறந்தாலென்ன? எந்த பிள்ளையும் உயர்ந்ததோ; தாழ்ந்ததோ கிடையாது. எந்த பிள்ளை பிறந்தாலும் அதைப் பேணி வளர்ப்பதுடன், கல்வியைக் கொடுப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.


- விடுதலை ஞாயிறு மலர்






Sunday, 9 August 2026

சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா (தோழர் பார்த்தசாரதிக்கு மூலிகை மன்னன் பட்டம்)

எய்ட்சுக்குச் சித்த மருத்துவம்


'எய்ட்சு' நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.


'சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெர்மன் அரங்கத்தில் 10.2.97 அன்று நடைபெற்றது.


இந்தி எதிர்ப்பு போராட்ட  வீராங்கனை டாக்டர் தர்மாம்பாள் அவர்களின் மகன் 'சித்த மருத்துவச் செம்மல்’ டாக்டர் சிற்சபை அவர் களால் சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகுக்கு பறைசாற்ற துவக்கப்பட்டது இந்த 'சித்த மருத்துவம்* என்ற மாத இதழ்.

டாக்டர் சிற்சபை அவர்களின் மகனான டாக்டர் அம்பிகாபதி அவர்கள் இந்த இதழை தற்போது நடத்திக் கொண்டு வருகிறார்.


சித்த மருத்துவத்தின் பெருமையை மக்களுக்கு விளக்கும் முகமாக, ‘சித்த மருத்துவம்' மாத இதழின் 15-ஆம் ஆண்டு விழா என்ற பெயரில் சித்த மருத்துவ விழாவாக டாக்டர் அம்பிகாபதி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் அம்பிகாபதி அவர்கள், சித்த மருத்துவத்தை எளிய முறையில் அனைவருக்கும் கற்பிக்கும் நோக்கத்தோடு, சென்னையை அடுத்த நீலாங்கரை என்ற ஊரில் இருந்து நேர்முக பயிற்சியை உள்ளடக்கிய சித்த மருத்துவ அஞ்சல் வழிக் கல்லூரியை நிறுவியுள்ளார்.


அதன் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் இதனுடன் சேர்த்து நடத்தப்பட்டது. 


காலை 10 மணிக்கு சித்தர்களின் வழித்தோன்றலான 'தவத்திரு பழனி தங்கவேலு சுவாமிகள்' என்பவர் விழாவிற்கு தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார்.


டாக்டர் சிற்சபை அவர்களின் படத்தை முன்னாள் அமைச்சர் திரு. பொன்னையன் அவர்கள் திறந்து வைத்தார். 


சிந்தனைச் சிற்பி தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், சிந்தனையை கிளரும் வகையில் சில அரிய தகவல்களை கூறினார். டாக்டர் அம்பிகாபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


பிறகு மருத்துவர்கள் கருத்துரை மற்றும் சித்தர் நூல்களில் மிகுந்து காண்பது ஆன்மீகமா? - மருத்துவமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன.


'எய்ட்சு'க்குச் சித்த மருத்துவம்!


எய்ட்சு நோய்க்கு சித்த உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது. எய்ட்க நோய் நீங்கிவிட்டதா என்று கண்டறிய வெகுகாலம் பிடிப்பதால் இது சோதனை முறையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


அஞ்சல் வழிக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை நீதியரசர் மோகன் அவர்கள் வழங்கி உரையாற்றினார்.


அம்பிகாபதி அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் சான்றோர்களை பாராட்டும் முகமாக முதலாவதாக இந்த ஆண்டு இந்த விழாவில் இரண்டு தமிழ்ச் சான்றோர் களுக்கும், இரண்டு சித்த மருத்துவ சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.


கழகத் தோழர் பார்த்தசாரதிக்கு மூலிகை மன்னன் பட்டம்


பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தன் எம்.ஏ.அவர்களுக்கு "அருள்நெறி ஆசான்' என்ற விருதும், அருணை வடிவேலு அவர்களுக்கு "யோக நெறி காவலர்" என்ற விருதும், அதேபோல், சித்த மருத்துவ சான்றோர்களான பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் எல்.அய்.எம். அவர்களுக்கு சித்த மருத்துவத் தந்தை" என்ற விருதும்,


பேராசிரியர் டாக்டர் ஆனந்த குமார் ஜி.சி.அய்.எம். அவர்களுக்கு "சித்த மருத்துவச் சுடர்" என்ற விருதும் வழங்கப்பட்டது. இதேபோல், பிரபாகர் பத்ரி என்பவருக்கு இசை சித்தர் என்ற விருதும் வழங்கப்பட்டது.


விழாவில் அய்ந்து பேர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. இதில் தென் சென்னை திராவிடர் கழக இளைஞரணி பொருளாளர் செ.ர. பார்த்தசாரதி அவருக்கு "மூலிகை மன்னன்" என்ற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதே போல் சந்திரசேகரன் என்பவருக்கு

''மூலிகை முரசு" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.


மூலிகைக் கண்காட்சி


விழாவையொட்டி மூலிகை கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 கண்காட்சியை தவத்திரு பழனி தங்கவேலு சுவாமிகள் திறந்து வைத்தார்.


இக்கண்காட்சியில் 600 மூலிகைகள் இடம்பெற்றன. இதில் 150 மூலிகை தாவரங்கள் தொட்டியில் வளர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.


5-ம் பக்கம் பார்க்க

4-ம் பக்கத் தொடர்ச்சி


விழாவிற்கு விளம்பரங்கள் குறைவாக இருந்தும், மூலிகை கண்காட்சியை காண மக்கள் அலை அலையாக வந்து மூலிகைகளைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.


 விளக்கமளித்து கொண்டிருந்த செ.ர.பார்த்தசாரதி அவர்களிடம் சில முக்கியமான மூலிகைகளைப் பற்றி கேட்டபோது, அவர் சொன்ன தகவல் வருமாறு:-


1. அருகம்புல்


இதை தாவரவியல் பெயரில் 'சைனோடான் டாக்டைலான்' என்று கூறுவர். சங்க காலத்தில் 'அருகை' என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இதை அருகம்புல் என்று அழைக்கின்றனர்.


இந்த மூலிகையை 'சாகா மூலிகை ' என்று சொல்லலாம். இந்த புல்லிலுள்ள செல்களுக்கு சாவு கிடையாது. இதன் செல்லிலுள்ள ஆர்.என்.ஏ. (R.N.A.) மூலக்கூறுகளை சிதைய விடாமல் சில சுரப்பி நீர்கள் பார்த்துக் கொள்வதால் இந்த செல்கள் சாவதில்லை. (மனிதன் உட்பட மற்ற உயிர்களின் செல்களில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறு சிதைவதால் தான் மூப்படைந்து சாக நேரிடுகிறது.)

இதை ரஷ்ய விஞ்ஞானி மனிதனுக்கு ஆய்வு செய்து கொண்டு வருவதாக 'குப்ர விஷ்' என்பவர் கூறுகிறார். (ஆதாரம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு).


இந்த அருகம்புல் இரத்தத்திலுள்ள நஞ்சுகளை போக்கும்; இதயத்தை பலப்படுத்தும்; உடல் வலிகளை போக்கும்; சிறுநீர்தாரை எரிச்சலை நீக்கும்.


அருகம்புல்லை இடித்து சாறு எடுத்தோ அல்லது அப்படியே கொதிக்க வைத்தோ, வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனுடன் பாலும் சிறிது சர்க்கரையும் சேர்த்து அருந்த மேற்கண்ட நோய்கள் அகலும்.


2. பாம்பு களா


இதை வடமொழியில் 'சர்ப்பகந்தி' என்று அழைப்பர். இந்த செடிகளின் வேர் பகுதி பாம்புபோல் வளைந்து இருக்கும். இம்மூலிகை மலைச் சாரல்களில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும்.


இந்த மூலிகை ஆயுர்வேத மருத்துவத்தில் தான் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.


இதன் வேரை நம் நாட்டில் பாம்புக் கடி நஞ்சுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


இதன் வேரிலிருந்து இரத்த அழுத்தத்திற்கு மேலை நாட்டில் மருந்து கண்டுபிடித்துள்ளனர்.


வேரிலிருந்து எடுக்கப்படும் 'ரிசெர்பைன்' என்ற திரவத்தில் இருந்து இந்த மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. 


இதன் இலைகளை அவித்து அரை அவுன்சு சாறெடுத்து, நாலு அவுன்சு

பாலோடு கலந்து காலையில் மட்டும் நாலைந்து தினங்களுக்கு குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தூக்கமின்மை போகும், மன அமைதி ஏற்படும், நரம்பு பலப்படும். 


3. இம்பூரல்


'இம்பூரல் காணாதான் இருமி இருமி செத்தான்' என்பது பழமொழி!


இந்த மூலிகை தும்பை இலையை போல் சிறிய அளவில் இருக்கும். வெண்ணிற சிறிய பூ பூக்கும்.


இந்த மூலிகையின் வேரை எடுத்து காய்ச்சி நாலைந்து மிளகு தட்டி போட்டு உள்ளுக்குக் கொடுக்க இரத்த வாந்தி இருமல், காசம் குணமாகும்.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 4, 23.3.97


Saturday, 8 August 2026

முதலைக் கண்ணீர் வடிப்பதேன்? - செ.ர.பார்த்தசாரதி சென்னை-34

முதலைக் கண்ணீர் வடிப்பதேன்?


'முதலைக் கண்ணீர் வடிக்காதே!' என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வஞ்சக செயல் செய்துவிட்டு அதற்கு வருந்துவது போல் நடித்தால் இப்படி சொல்லு வார்கள். 


தற்போதைய 'இந்தியா டுடே (மே இதழ்) தமிழ் பதிப்பில் கூட 'வெட்டுத் தீர்மானம்' குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது ‘முதலைக் கண்ணீர்’ என்று தலைப்பிட்டுள்ளது. 


முதலை ஏதாவது உயிரினத்தைக் கொன்று தின்று விட்டால்;  'வருத்தப்பட்டு, கண்ணீர் வடிக்கும்’ என்று ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.


இது உண்மையாக இருக்குமா? ஒருபோதும் இருக்காது! காரணம் முதலை மனிதனைப் போல் சிந்திக்கும் திறனில் மேலோங்கியது கிடையாது. அதற்கு உணவே உயிரி உயிரினங்கள் தான். முதலை நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியது; உயிரைக் கொல்லுவதில் வருத்தப்படுவதாக விருந்தால் நிலத்தில் உள்ள தாவரங்களை ஒடித்து உண்ண வேண்டியது தானே!


பின் எதற்குத்தான் முதலை கண்ணீர் வடிக்கிறது?

நிலத்திலுள்ள மனிதன் உட்கொள்ளும் உப்பின் அளவு ஓரளவு குறைவானது. அந்த உப்புக்களை சிறுநீரகம் வடிகட்டி வெளியேற்றி விடுகிறது. ஆனால், கடலில் வசிக்கும் உயிரினங்களின் சிறுநீரகமோ வளர்ச்சி குன்றியது: இதனால் அவைகளின் உடலில் இருந்து உப்பை வெளியேற்ற முடியாது. அதோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உப்பின் அளவு அதிகம். உப்பு உடலில் அதிகமாக சேர்ந்தால் உயிருக்கே ஆபத்து. ஆகையால் உடலில் சேரும் உப்புக்களை வெளியேற்ற உடலில் தனியே ஒரு அமைப்பு கடல்வாழ் உயிரினங்களில் உள்ளது.


மீனுக்கு 'செதில்' பகுதி உப்பை வடித்து வெளியேற்றுகிறது. சில கடல் வாழ் பறவைகளுக்கு மூக்கினுள் இப்பகுதி அமைந்துள்ளது.


''ஆமை', 'முதலை' போன்ற கடல் வாழ் ஊர்வன வற்றின் கண்களின் ஓரத்தில் இச்சுரப்பி அமைந்துள்ளது.


முதலை தான் உண்ட உணவிலும், நீரிலும் உள்ள தேவைக்கு அதிகமான உப்பைக் கண்களின் ஓரத்தில் உள்ள உப்பு சுரப்பியின் மூலம் நீருடன் கலந்து துளித் துளியாக வெளியேற்றுகிறது.


இதை அறியாததால் தான் 'வருத்தப்பட்டு முதலை கண்ணீர் வடிப்பதாக' கூறுகிறார்கள்.


இதேபோல், பச்சை ஆமை யை பற்றியும் ஒரு கதை உண்டு.


பச்சை ஆமைகள் கடலிலேயே உயிர் வாழ்பவை. சில குறிப்பிட்ட காலத்தில் நிலத்திற்கு வந்து (கரையில்) மணலைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.


அப்படி செல்லும்போது மணலின் மீது கண்ணீரை விட்டு விட்டுச் செல்கின்றன.


இவை உறைந்து உப்பு உப்பாக இருக்கும். இதைப் பார்க்கும் மக்கள் ஆமை முட்டையை விட்டு விட்டுச் செல்வதால் அழுவதாக நம்புகிறார்கள்.


உண்மை அதுவல்ல; ஆமைக்கும் கண்ணின் ஓரத்தில் உப்பு நீர் சுரப்பி இருக்கிறது. அதன்மூலம் எப்போதும் உப்பு நீரை வெளியேற்றிக் கொண்டேயிருக்கும். கடலில் இருக்கும் போது நமக்கு இது தெரிய வாய்ப்பில்லை; நிலத்தில் வரும்போது இதைப் பார்ப்பதால் கண்ணீர் வடிப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. 


உண்மை ஆராயப்படும் போது தான் தெரிகிறது!


- செ.ர.பார்த்தசாரதி சென்னை-34


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம்-9, 25.6.1995

நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி.வீரமணி


ஆசிரியர் உரை, ஞாயிறு மலர்

பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று ‘குமுதம்’ ஏடு என்னைக் கேட்டது. “பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றாலும் இது ஒரு இனிய கற்பனைதான். இன்றைக்குப் பாரதியாரைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் முரணும், குழப்பமும் இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்துவதற்கு பாரதியைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன்.

நான் தந்தை பெரியாரின் தொண்டன். எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதோ, அல்லது எல்லோரும் நீச்சலடிக்கிறார்கள் என்பதற்காக அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்கிற அவசியமோ இல்லாதவன் நான். ஈரோட்டுக்குப் போனவர்கள் நன்றாக எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்பவர்கள் தான். எனவே, பாரதியாருக்கு நூற்றாண்டு விழா என்ற காரணத்தினால், அவரை ஒரு ‘தேசிய கவி’ என்று புகழ்பாடுகிற நேரத்தில், ஒரு மகாகவிக்கு அத்தகைய குழப்பங்கள் ஏன் இருக்க வேண்டும் என்பது புரியவில்லையே என்ற மற்றவர்களை கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அவரையே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமானால் நிச்சயமாக்க் கேட்கலாம் அல்லவா- என்னுடைய கருத்துப்படி, ஒருவரை தேசியக் கவி என்று அழைக்கும்போது, அவருக்குத் தெளிவான, தொடர்பான, குழப்பமில்லாத, முரண்பாடு இல்லாத கருத்துகள், கேள்விகள் இருக்க வேண்டும். சுதந்திரத்துக்காகப் பாடினார் என்பது மட்டுமே பாரதியாருக்கு உள் மாபெரும் தகுதியாக ஆகிவிட முடியாது.

பாரதி தேசியக் கவியா?

தேசிய கவி என்றால், தேசம் முழுவதையும் ஒட்டிய பார்வை, மக்கள் அனைவரையும் சமத்துவமாகக் கருதக்கூடிய பார்வை என்பது வரவேண்டும். ஆனால், பாரதியாரின் பாடல்களில் அத்தகைய பார்வைகள் இல்லை என்பதைச் சற்று விளக்குகிறேன்.

‘எங்கள் ஆரிய பூமி, எங்கள் ஆரிய நாடு’ என்று பல இடங்களில் உரைக்கின்றார். ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும், சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக! வீரியம் ஒழிந்து வெம்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்; பிச்சை வாழ்வதற்கு பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப் போன் ஆரியன் அல்லன்’ என்று பாரதியார் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் ‘பிராமண தேசம்’ ஆகிவிட வேண்டும் என்று அவர் இன்னொரு இடத்தில் சொல்லி யிருக்கிறார். ‘ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்’ என்று பாரதியார் பாடியிருக்கிறார். எனவே, மொழி என்று வரும்பொழுது ஆரிய மைந்தன் இலக்கணம் அமைத்தான் என்று கூறி, தேசம் என்று வரும்பொழுது ஆரிய வேதம் ஆரிய நாடு என்று கூறி, தன்னை ஓர் ஆரியன், வேதியன் என்றும் வேதியன் உயர்ந்தவன், ஆரியன் உயர்ந்தவன், இது ஆரியர்களுக்குரிய நாடு என்றும் அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பது அவருக்கு தேசியப் பார்வை இருக்கிறதா? ஆரியப் பார்வை உள்ளதா? என்று பாரதியை துணிச்சலோடு, நேர்மையோடு கேட்பேன்.

பாரதி ஜாதி ஒழிப்பாளரா?

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நீங்கள் பாடினீர்கள் என்று பெருமிதத்தோடு எல்லோரும் மேடையிலே சொல்ல இன்றைக்குக் கேட்கிறோம். ஆனால், உங்களோடு நெருங்கிப் பழகிய நண்பர் என்று கருதக்கூடிய ஒருவர் _ திரு.பத்மநாபன் அவர்கள் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்னால் ‘இந்து’ பத்திரிகையிலே ஒரு விமரிசனக் குறிப்பு எழுதியிருக்கிறார்.

“அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதியார் எழுதவில்லை. ஜாதி பேதம் இல்லையடி பாப்பா என்றுதான் எழுதினார். பிறகு பாடபேதமாக, ‘ஜாதிகள் இல்லையடி’ என்று வந்துவிட்டது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பத்மநாபன். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் ஜாதி ஒழிப்பிலே உள்ள நம்பிக்கை என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஸநாதன வகை தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும். சிலைகளும், சூரிய ஜோதியிலே காணப்படும். ஏழு வர்ணங்களைப் போலவே அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களே அல்லாமல் குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமக்கு அழிவுக்குக் கருவிகள் ஆகமாட்டா” என்று ஜாதியைப் பார்க்கக் கூடிய வெள்ளத்தை நீங்கள் அங்கே காட்டுகிறீர்கள். இன்னும் ஒரு செய்தி. ஜாதியைப் பற்றி உங்களுக்குத் தெளிவான திட்டவட்டமான கருத்துகள் இருக்குமேயானால் நீங்கள் இந்தப் பகுதியை உங்கள் கட்டுரையில் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள். நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் உங்களுக்காகப் பரிந்து கொண்டு சிலர் பதில் சொல்ல வருவார்கள். வருவார்கள். அது ஒரு ஒரு நல்ல  வாய்ப்பு தான். அதனால்தான் இவைகளை தெளிவாகக் கூற முன் வந்திருக்கிறேன்.

“கீழ் ஜாதியாரை நல்ல சமஸ்காரங்களால் பிராமணர்கள் ஆக்கிவிட முடியும் என்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங் களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் “பிராம்மண தேச’’மாகச் செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் பட்சணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணுல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துவிட வேண்டும். பிறகு அவன் பிராம்மணனாகவே கருதப்பட வேண்டும்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஜாதி ஒழிப்பாளர்கள் எல்லோரும் மனிதர்களாக வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, எல்லோரும் பிராம்மணர்களாக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். விரும்பக் கூடாது. பூணூல் போடப்பட்டு விடுவதாலேயே எல்லோரும் உயர்ஜாதிக்காரர்களாக ஆகிவிட முடியும் என்று சொன்னால் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே ராமானுஜர் வெற்றி பெற்றிருப்பாரே? ராமானுஜர் தோல்வி அடைந்த இடத்திலேதான் நீங்களும் நிற்கிறீர்கள். ஏன்? நீங்களேகூட புதுவையில் கனகலிங்கம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி நண்பருக்குப் பூணூல் போட்டு வைத்தீர்களே? கனகலிங்கம் பிராம்மண வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா? அது நீங்கள் அடைந்த தோல்வியே தவிர வெற்றியல்லவே!

அய்யர் வேதம் ஓதினால் மழை பெய்யும் என்று கருதுகிறீர்களே? இதற்கு விஞ்ஞானபூர்வமாக ஆதாரம் ஏதேனும் உண்டா? நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு இருக்கிற அந்த உயர்ந்த ஜாதிக் கருத்து என்பது பல நேரங்களிலே உங்களை ஈர்த்திருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை என்பதுதானே இதற்குப் பொருள்?

‘ஜாதிப் பிரிவுகளில் இருக்கும் குற்றங்களை யெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். நம்முடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களாலே நேர்ந்த அவமானம்தான் இது. இந்து மதம் அப்படி அல்ல. எல்லோரும் இதை வேதமாகக் கொள்ள வேண்டும். எல்லோரும் இந்துக்களாகிவிட வேண்டும். எல்லோரும் இந்த இடத்திலே இந்துக்கள் என்று சிறப்பாக நினைக்க வேண்டும்’’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். “எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளீர்.

ரஷ்யப் புரட்சி பராசக்தி கருணையில் வந்ததா?

உங்களுடைய சீடராகப் பெருமையோடு தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு காலத்தில் ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடியவர் தான். ஆனால், சுப்பிரமணியர் துதியமுது பாடிய ஆத்திக கனகசுப்புரத்தினம், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு,  ‘இல்லையென்போன் யாரடா தில்லை சென்று பாரடா’ என்று கேட்டவர்களுக்கு, ‘இல்லையென்போன் நானடா, அத்தில்லை கண்டுதானடா’ என்று உறுதியாகச் சொன்னார்.

எனவே, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய நிலையை எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் அவர் மாற்றமடைந் திருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும். அவர் போக்கில் பரிணாம வளர்ச்சியைக் காண முடியும். முரண்பாட்டைக் காண முடியாது. அதுபோல உங்களுடைய காலகட்டத்தில் ஏற்கெனவே உங்களுக்கு இருந்த கருத்து, பிற்காலத்தில் மாற்றப்பட்ட கருத்து.  பரிணாம வளர்ச்சிப் போக்கில் உள்ளனவா? தெளிவான வரையறையோடு இருக்கின்றனவா என்று நாங்கள் தேடிப் பார்க்கிறோம்.

ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதற்கு நீங்கள் பாராட்டுத் தெரிவித்தீர்கள் என்பதற்காகத்தான் நம்முடைய அருமைப் பொதுவுடைமை நண்பர்கள் எல்லாம், “பொதுவுடைமை இந்த உலகத்திலே கொள்கையாகக் கொள்வோம். புனிதமோடு அதை நாங்கள் காப்போம்’’ என்று சொன்ன புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைவிட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஓகோ என்று புகழ்கிறார்கள். ஆனால், ரஷ்யப் புரட்சியைப் பற்றி நீங்கள் கூறியது என்ன?

“மாகாளி, பராசக்தி, உருஷ்ய நாட்டில் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகாவென்று எழுந்தது பார்யுகப் புரட்சி’’ என்பதுதானே! இது ரஷ்யப் புரட்சிக்குப் பெருமை சேர்ப்பதா? அப்புரட்சியின் உண்மையைக் காட்டுவதா? கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கையாள நேருகிறது? அநியாயம் செய்வோரை அநியாயத்தால்தானே அடக்க நேரிடுகிறது என்று சிறீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘லெனினே பரம மூடர்’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பொதுவுடைமைக் கொள்கையை ஒரு பக்கத்தில் நீங்கள் பாராட்டிவிட்டு, மற்றபடி தானம் கொடுப்பதன் மூலமாக ஏழ்மைத் தனத்தை ஒழித்துவிட முடியும் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?

எந்த உண்மையான பொதுவுடைமை வாதியும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். தர்மகர்த்தா முறையாக வேண்டுமானால் இது கருதப்படலாம். அதே கட்டுரையில் நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள்: ‘லெனின் வழி சரியான வழி இல்லை. காரணம், என்ன என்று சொன்னால், நாம் இந்தியாவில் இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்திய, அசாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவில் உள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரோதமும் பூண்டோர் அல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டும் என்றால், நியாயம் ஆகாது. அதற்கு நம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள்’’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

இதைச் செய்யாமல் எப்படி இங்கே பொதுவுடைமை வரும்? இதை எந்த உண்மையான பொதுவுடைமைவாதியால் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தியாவிலே இருக்கிற நிலச்சுவான் அங்கேயிருக்கிற நிலச்சுவான்களைவிட நல்லவர்கள் என்று சொன்னால். நிலச்சுவான் முறை இருக்க வேண்டும் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள் என்றுதானே பொருள்?

ஒரு பக்கத்திலே ஜாதிமுறை நல்லது என்று வாதாடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே “எல்லோரும் இந்துக்களாக’’ வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். அதையும் சுட்டிக் காட்டினேன். இன்னொரு பக்கத்திலே இந்த தேசம் ஆரிய நாடு என்று சொல்லுகிறீர்கள். அதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்னொரு நேரத்தில் எல்லோருக்கும் ‘பிராமணர்’களைப் போல் பூணூல் போடப்பட்டு, காயத்திரி மந்திரம் சொல்லித் தரப்பட்டு இந்த தேசம் ‘பிராம்மண’ தேசமாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். இவைகளெல்லாம் முற்போக்கு என்பதற்கு நிச்சயமாக வழிகாட்டுகின்ற முறையாக இருக்க முடியாது.

ஒரு தேசியக்கவிஞன் பார்வையில் இத்துணை குழப்பங்கள் இருக்கக் கூடாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் அத்தகையவர் ஒரு தேசியக்கவியாக இருக்க முடியாது! இதற்கு உங்களுடைய நியாயமான பதில் என்ன? ஒரு வேளை நீங்கள் இந்தப் பழைமையான கருத்துகளில் ஊறித் திளைத்த காரணத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட சுற்றுச் சார்பு காரணமாக இந்த நிலை இருக்கிறது. உங்களுடைய உயர்ஜாதித்தனம் என்பது உங்களை அறியாமல் உங்களுடைய ரத்தத்திலே கலந்துவிட்ட காரணத்தினாலோ என்னவோ, உங்களுடைய புரட்சிக்குக்கூட ஒரு புதிய பார்வையையும், புதிய கோணத்தையும் கொடுத்திருக்கிறதே தவிர, உங்களுடைய தேசியப் பார்வையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. எனவே, உங்களை நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறேன்.

என்ன பதிலை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ, உங்கள் சீடர்கள் மூலமாகச் சொல்லுங்கள். எதிர்பார்க்கிறேன். மீண்டும் சில கேள்விகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று ‘குமுதம்’ வாயிலாகக் பாரதியைக் கேட்டேன்.

(குறிப்பு: பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1981ஆம் ஆண்டில், ‘குமுதம்’ ஏடு ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கேட்டு பெற்று வெளியிட்ட கட்டுரை இது)

தகவல்: செ.ர.பார்த்தசாரதி

Friday, 7 August 2026

சைவமா?-அசைவமா? மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி


சைவமா?-அசைவமா?


மூலிகை மன்னர் மருத்துவர் செ.ர.பார்த்தசாரதி                                    

"சைவ உணவு மட்டும் தான் நலன் பயக்கும் உணவு" என்று தவறான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


இறைச்சிகளில் தான் நமது உடல் எளிதாக செரிமானம் செய்து கொள்ளக் கூடிய முறையில் சத்துக்கள் உள்ளன.


எப்படி பென்றால், உயிரினங்கள் உண்டவுணவை கடினப்பட்டு செரிமானம் செய்து தனது உடலில் சேர்த்து வைக்கின்றன. அதை நாம் எளிதாக உண்டு விடுகிறோம்.


எளிதான முறையில் உள்ளதால் நமது உடல் செரிமானம் செய்து சேர்த்து வைத்துக் கொள்கிறது. நாம் மிகுதியாக சாப்பிடுவதால் மிகுதியாக சேர்த்து வைத்துக் கொள்கிறது, இதனால் நோய் வருகிறது.


ஆகையால் சரியான அளவில் உணவை உண்டால் நலமாக இருக்கலாம்.


சிலர் கடவுள் மனிதனை சைவ விலங்காகதான் படைத்தான், அதனால்தான் விலங்குகளுக்கு உள்ள குத்திக் கிழிக்கும் வளைந்த பற்களை மனிதனுக்கு கொடுக்க வில்லை என்கின்றனர்.


ஒருசிலர் 'மனிதன் 'சைவ' விலங்கு', அதனால் தான் இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு உள்ளது போல் வளைந்த குத்திக் கிழிக்கும் பற்கள் இல்லை. 'மனித இனத்தை சேர்ந்த குரங்கும் சைவ உணவையே உண்கிறது' என்று கூறுகின்றனர்.

[குத்திக் கிழிக்கும் பற்கள் உள்ள தாவர உண்ணியான நீர்யாணை]


கடவுள் பெயரால் சொல்லப்படும் காரணம் முழுக்க முழுக்க பொய்யே!


இப்பொழுதுதான் கட வுள்களுக்கு கெல்லாம் "சைவ வேடம்’ போடப்படுகிறது.


வேதங்களில் கடவுள்களுக்கு உயிரினங்களை வெட்டிப் படைப்பதை தான் முக்கியத் தொழிலாக சொல்லப்படுகிறது. வேதப் படி பார்ப்பனர்கள் அனைவரும் ஆடு, மாடு, கோழி, குதிரை என்று அனைத்தையும் வெட்டித்தான் உண்டிருக்கின்றனர்.


கவுதம புத்தரின் கொள்கை பரவுதல் காரணமாக தாக்குபிடிக்க முடியாமல் இடையில் பார்ப்பனர்கள் 'சைவ' வேடம் போட ஆரம்பித்துவிட்டனர்.


மனிதன் சைவ விலங்கா?


உயிரினங்களுக்கு அதனதன் பழக்கவழக்கங்களுக்கு உறுப்புகள் உள்ளன' என்பது உண்மைதான்.


அந்த அடிப்படையில்தான் பற்களும் அமைந்துள்ளன.


பற்கள் குத்திக்கிழிக கூடிய முறையில் இல்லாததால், இறைச்சிகளை சீரணிக்க முடியாமலா இருக்கிறான் மனிதன்.


அனைத்தையும் சீரணிக்கக் கூடிய வகையிலேதானே மனிதன் உள்ளான்.


விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவன் தோன்றுவதற்கு அடிப்படையான உயிரினங்கள் இறைச்சியை குத்திக் கிழித்து உண்ணும் உயிரினங்களாகத்தான் உள்ளன.


“எந்த ஒரு உறுப்பையும், எந்த ஒரு விலங்கும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அந்த உறுப்பு காலப்போக்கில் வளர்ச்சி குன்றி பிறகு மறைந்து கூட போய்விடும்" இது அறிவியல் உண்மை


"மனிதனுக்கு குத்திக்கிழிக்கும் அவசியம் இல்லாமல் போய்விட்டதால், மனிதனின் பற்களும் வடிவ மாற்றம் பெற்றுவிட்டன” என்பதுதான் உண்மை.


சைவ உணவால் கொழுப்பு சேராதா?


கொழுப்பு பொருள்கள் உடலில் மிகுதியாகச் சேர்வதால் உடலில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது 'மாரடைப்பு' நோய்’ ஆகும். இந் நோய்தான் பெரிய அளவில் அச்சுறுத்துகிறது.


'சைவம்' என்று சொல்லப்படும் பால், வெண்ணெய், நெய், எள், நிலக்கடலை, தேங்காய் மற்றும் பலவகை பருப்புகளில் கொழுப்பு நிறைந்துள்ளது. சில வகை காய்கறிகளில் மட்டுமே கொழுப்பு குறைவாக உள்ளது.


ஆகையால் 'சைவ உணவு சாப்பிட்டால் மட்டும் கொழுப்பு இதயக் குழாய்களை அடைக்காது' என்று சொல்வது தவறானதாகும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதை என்னால் காண்பிக்க முடியும்!


அதோடு, ‘புல்'லை மட்டுமே தின்னும் செம்மறி ஆட்டின் உடலில் எப்படி கொழுப்பு சேர்கிறது!

அதற்கும் சில அடிப்படைக் காரணம் உள்ளன.


60 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை கொழுப்பு சத்துக்கள். உடலில் உள்ள பல சுரப்பிகளின் மூலமாக குடலிலும் கல்லீரலிலும் தயாரிக்கப்படுகிறது. மீதிதான் உணவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொழுப்புச் சத்தை சாப்பிட்டால்தான் உடலில் கொழுப்பு சேரும் என்பதல்ல; எதைச் சாப்பிட்டாலும் உடலே கொழுப்பை உண்டாக்கிக் கொள்ளும் என்பதுதான் உண்மை.


அதனால்தான் புல்லை மட்டுமே தின்னும் ஆடும், மாடும் கொழுகொழுவென கொழுப்புடன் இருக்கின்றன.



கொழுப்பால் உடல் பாதிக்குமா?


கொழுப்பால் உடல் பாதிப்படையாது. கொழுப்பு உடலுக்கு தேவையே! அளவை மீறும் போது தான் கோளாறு வருகிறது.


கொழுப்பின் வகைகள்


கொழுப்பில் நான்கு வகை உண்டு. இதில் முக்கியமானது (1) குறைந்த அடர்த்தி கொழுப்பு, (2) மிகு அடர்த்தி கொழுப்பு என்பவையாகும்.


இதில் குறைந்த அடர்த்தி கொழுப்பு மற்ற கொழுப்பு சத்துக்களை உடல் முழுக்க எடுத்துச் சென்று அணுத் திசுக்களுக்கு ஊட்டுகின்றன. திசுக்களுக்குள் சென்ற குறைந்த அடர்த்தி கொழுப்பை மிகு அடர்த்தி கொழுப்பு ஈர்த்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று சிதைவடைய வைக்கிறது.


ஆனால், இரத்தத்தில் குறைவு அடர்த்தி கொழுப்பு 160 மி.லி. கிரா முக்கு மேல் இருந்தாலும் 'மிகு அடர்த்தி கொழுப்' பின் அளவு 35 மி.லி. கிராமுக்கு குறைவாக இருந்தாலும் திசுக்களிலேயே குறை அடர்த்தி கொழுப்புகள் தங்கி; இரத்த நாளங்களில் படிந்து அடைக்க ஆரம்பித்துவிடும்.


மிகு அடர்த்தி கொழுப்பைப்பற்றிய கவலையே தேவையில்லை. அது கல்லீரலில் சிதைவடைந்துவிடும். 


 இரண்டு வகை கொழுப்புமே உடலுக்குத் தேவை தான், ‘அளவு சரியாக இருக்க வேண்டும்’

என்பதுதான் முக்கியம். 


இறைச்சி வகைகளில் மிகுதியாக, குறைவு அடர்த்தி கொழுப்புகளே உள்ளன. ஆகையால் இறைச்சியை அளவோடு சாப்பிட வேண்டும்.


மற்ற இறைச்சி வகைகளை விட கோழி இறைச்சியில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. 


ஆகையால் கோழி இறைச்சியை மற்ற இறைச்சியைவிட தாராளமாகச் சாப்பிடலாம்.


உற்சாகமூட்டும் கோழி!

அதோடு கோழி இறைச்சியில் 'டைரோசின்' என்ற அமினோ அமிலம் இருப்பதால் மூளையில் டோபா மைன், நாராஃபிறெய்ரைன் என்ற வேதிப் பொருள்களின் அளவை மிகுதியாக்கும். இவை மனதிற்கு உற்சாகத்தையும் செயல்பாட்டில் வேகத்தையும் அளிக்கிறது. 


அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி முடிவு, ''டைரோசின் உடலுக்கு சக்தி தந்து பதற்றமான நிலைமைகளை சமாளிக்கும் திறனை தருகிறது" என்று கூறுகிறது.


புற்றுநோயைத் தடுக்கும் மீன்


மீன் உணவில் மிகுதியாக அடர்த்தி மிகுந்த கொழுப்பே இருக்கிறது. அடர்த்தி மிகுந்த கொழுப்பு: அடர்த்தி குறைந்த கொழுப்பை கரைக்கும்; இதனால், மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது. ஆதலால் மீனை மிகுதியாக உண்ணலாம்.


மீன் உணவு கொழுப்பை கரைப்பதோடு அல்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.


நிலத்திலுள்ள உணவு பொருள்களில் 'அயோடின்' சந்து மிகமிகக் குறைந்த அளவே உள்ளது. ஆனால், கடல்வாழ் உயிரினங்களில் 'அயோடின்' சத்து நிறைந்துள்ளது. ஆகையால் மீன் உணவை உண்பதால், அயோடின் குறைவால் ஏற்படும் 'தைராய்டு அழற்சி. நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.


மூளை வளர்ச்சிக்கு மீன்


'ஸ்பெயின் நாட்டு ஊட்டச்சத்து நிபுணர்கள், மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது' என்கின்றனர். ஆகையால் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மீன் கொடுத்துப் பழக்க வேண்டும். குறைந்தது வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். 


கருவுற்ற தாய்மார்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் மீன் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


உற்சாகமூட்டும் புரதம்


தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு 'கார்போ அய்ட்ரேட்' நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில், அவர்களுக்கு களைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு மாறாக புரதம் நிறைந்த உணவுப் பொருள்களை கொடுத்து சாப்பிட சொன்னதில் அவர்களுக்கு உற்சாக மேற்பட்டது; என்றும் சத்துணவு ஆராய்ச்சியாளர் 'போலி ஸ்ப்ரிங்' என்பவர் கூறுகிறார்.


'கார்போ அய்ட்ரேட்' எனப்படும் மந்தமாக்குகிற மாவுச்சத்து பொருள் தாவர வகை உணவுகளில் தான் நிறைந்துள்ளது.


ஆனால், உற்சாகமூட்ட கூடிய புரதப் பொருள் இறைச்சி வகைகளிலே தான் நிறைந்து உள்ளது.


இறைச்சியில் இரும்பு

இறைச்சியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இறைச்சியை புறக்கணித்தால் இரும்பு சத்து குறைவு ஏற்படும். உடலில் இரும்பு சத்து மிகுதியாக தினமும் 85 கிராம் இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


இறைச்சியை முழுமையாகத் தவிர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை. தீமையே மிகும்!


- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் 3, 12.4.1998