Sunday 10 May 2020

'தமிழ்வாணன் எழுதி வெளியிட்ட தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு


'பெரியார்' என்ற பெயரில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1965 ஆம் ஆண்டு 'தமிழ்வாணன்' அவர்கள் மணிமேகலைப் பிரசுரம் என்ற தமது பதிப்பகத்தின் மூலம் கேள்வி பதில் வடிவில் எழுதி வெளியிட்டார்.
இந்நூலில் 14 ஆம் பக்கத்தில் உள்ள கேள்வி பதில் நடையில் உள்ள பகுதி வருமாறு
கே: பெரியாரிடம் உள்ள சிக்கனத்தை நீங்கள் விரும்புகிறீர்களா?
ப: பெரியார் பெரும் செலவாளியாக இருந்திருப்பாரானால் , இன்று திருச்சியில் பெரியார் கல்லூரி என்று ஒன்று உருவாகியிருக்கிறதே . அதை கண்ணால் கண்டிருக்கவே முடியாது ! மற்ற தலைவர்களிடம் இந்த சிக்கன புத்தியில்லாததால் தான் தங்கள் சொந்தப் பொறுப்பில் , ஒரு தண்ணீர் பத்தல்கூட அமைக்கமுடியாத நிலையிலிருக் கிறார்கள் !
கே ; பெரியார் எப்போதாவது பணத்தைப் பணம் என் பாராமல் வழங்கியதுண்டா ?
ப : இவ்வளவு நீண்ட வரலாற்றில் , ஒரே ஒரு நிகழ்ச்சிதான் குறிப்பிட்டுச் சொல்ல இருக்கிறது கலைவாணர் என் . எஸ் கிருஸ் கிருஷ்ணன் சிறையிலிருந்த பொழுது வழக்கு நடத்த ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது . அப்போது , பெரியார் ஆயிரக்கணக்கில் பணம் கடனாகக் கொடுக்க முன்வந்தாரே!
இந்த வகையில் நூல் முழுக்க தந்தை பெரியாரை ஒரு சிறந்த தலைவராக வெளிக்காட்டியுள்ளார்.
பக்கங்கள் 68
1994ல் விலை ரூ 9.50

No comments:

Post a Comment