Monday 10 October 2016

நாளந்தா பல்கலைக் கழகம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு


புதுடில்லி, ஜூலை 16 யுனெஸ்கோ எனப்படும் அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக புராதன குழு கூட்டம் இஸ்தான்புல் நகரில் கூடியது.
சீனா, ஈரான், மைக்ரோநேசியா ஆகிய நாடுகளில் உள்ள பாரம்பரிய தளங்களோடு, இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகமும் உலகின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டது.
இது தொடர்பாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளந்தா பல்கலைக் கழகம் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் பழமையான தளமாகும். நாளந்தா அமைப்பானது 800 ஆண்டுகளுக்கு மேலாக அறிவை போதித்து வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மய்யப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. நாளந்தா பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக் கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197 இல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற் றாக அழிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறி ஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள் ளார்கள். கவுதம புத்தர் இவ்விடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 கிராமங்களும் வழங் கப்பட்டிருந்தன.
-விடுதலை,16.7.16

No comments:

Post a Comment