Monday 10 October 2016

‘‘முற்றிலும் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கிராமம்’’

திராவிடர் கழகக் கொள்கையை ஏற்ற பெரியார் கிராமமான திருவிளையாட்டத்திற்கு
‘‘முற்றிலும் தீண்டாமை  ஒழிக்கப்பட்ட கிராமம்’’ என்ற அரசு விருது!

சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஆ.சவுரி ராசனை நினைவு கூர்வோம்!
நாகை, ஜூலை 27 “தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராம மாக”திருவிளையாட்டம்,தமி ழக அரசால் அறிவிக்கப்பட்டி ருக்கிறது. அதன்படி 2013-2014 ஆம் ஆண்டிற்கான விருதையும், பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தையும் மாவட்ட ஆட்சியர் திருவிளையாட்டம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கி பாராட்டியுள்ளார்.

இது தந்தைபெரியார் கொள்கையை வரித்துக் கொண்ட பெரியார் கிராமம் என்று பெயர் பெற்ற, புகழ் பெற்ற கிராமம் ஆகும்.

எந்த வித ஜாதி சச்சரவு களுக்கும் இடம் தராமல் அனைத்து தரப்பினரும் சகோ தரத்துவத்துடன் பழகும் கிரா மமாக, பொதுச் சுடுகாடு, பொதுக் கிணறு, கோயில் என எந்தப் பாகுபாடுமின்றி எல்லோரும் புழங்கும் கிராம மாக திருவிளையாட்டம் இருந்து வருகிறது.

சுமார் முக்கால் நூற்றாண் டுக்கும் மேலாக, தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக விளங்கும் இந்த ஊர், நாகை மாவட்டத்தில் (பழைய தஞ்சை மாவட்டம்) தந்தை பெரியார் அவர்களின் பாடிவீடான மயிலாடுதுறைக்கு அருகிலே உள்ளது.

இதற்குமுன் 1996-1997 ஆம் ஆண்டிலும் தீண் டாமை கடைப்பிடிக்காதகிரா மமாக இந்தக் கிராமம் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெற்றுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
இந்தக் கிராமம் இப்படிச் சிறப்பாக காட்சி தருவதற்கு  மூலகாரணமாக இருந்தவர்  தந்தை பெரியாரின் தொண்ட ராக, அணுக்க சீடராக விளங் கிய திருவிளையாட்டம் ஆ.சவுரிராஜன் (பிள்ளை) அவர்கள்.  திராவிடர் கழகத்தின் தீவிர  உறுப்பினராக, மயிலாடு துறை வட்ட திராவிடர்கழக தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அந்த சீலரின் சிறப்பான தொண்டு.
திருவிளையாட்டம் ஊராட் சித் தலைவராக தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றிய திரு.ஆ.சவுரிராஜன் அவர் கள். சுமார் அறுபதுஆண்டு களுக்கு முன்னரே திருவிளை யாட்டத்தில் மய்யப்பகுதியில், ஜாதி இந்துக்கள் என்று சொல் லப்பட்டவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்த, பெரும் வருமானம் ஈட்டித்தந்த, தனக் குச் சொந்தமான பழத்தோப்பை அழித்து அங்கே  வீடுகள் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை குடியமர்த்தியவர் .

ஜாதிக்கு ஒரு சுடுகாடு எனும் நிலை இன்றைக் கும் முழுமையாக நீங்கிய பாடில்லை. ஆனால்அனைத்து ஜாதி மக்களும் ஒரே சுடு காட்டைப் பயன்படுத்தும் வழக்கத்தை அந்தக்காலத் திலேயே துணிந்து செயல் படுத்தி சாதித்துக் காட்டியவர். ஜாதிப்பாகுபாடு இல்லாமல் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் தனது வீட்டை ஆரம்பப் பாடசாலையாகமாற் றினார். பின்னாளில்தனக்கு சொந்தமான மற்றொரு இடத் தில் புதிய உயர்நிலைப் பள்ளி ஒன்றையும் உருவாக்கினார். தற்போது அப்பள்ளி மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் அவரது கல்விப் பணியைப் பாராட்டி அவரிடம் ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வும் உண்டு.
1940 ஆம் ஆண்டின் பிற் பகுதியில் மயிலாடுதுறையில் சில ஆண்டுகள் வசித்தார். அவரோடு பழகிய பெரியார் தொண்டர்கள் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் மறந்தும் பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளுக்கு செல்ல மாட்டார் என்றும் தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணமே செய்து வைத்தார் என்றும் கூறுவர்.

ஜாதி ஒழிப்பு - சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர்
1957 இல் ஜாதி ஒழிப்பிற் காக தந்தை பெரியார்அவர் கள் நடத்திய சட்ட எரிப் புப்போராட்டத்தில்திரு விளையாட்டத்தை உள்ளடக் கிய செம்பனார்கோவில் பகு தியிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்களுடன் கலந்து கொண்டு தானும் சிறை சென்றார்.

ஊராட்சி மன்றத்தேர்த லில் இப்போதுநடைபெறும் அரசியல் சித்து விளையாட்டு கள் அப்போதும் நடப்ப துண்டு. பிரபல அரசியல் கட்சிகளெல்லாம் தேர்தல் நேரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களை கடத்திமறை விடத்தில் இருத்தும் பட்சத்தில் அந்தப் பகுதியில் அப்படி கடத்தப்படாத,கிட்டேநெருங் கக்கூட முடியாத இரண்டு தலைவர்கள் உண்டென்று சொன்னால்,ஒருவர்திருவிளை யாட்டம்ஊராட்சிமன்றத் தலைவர்ஆ.சவுரி ராஜன் மற்றொருவர்திரு விளையாட்டத்தைஅடுத்த பரசலூர்ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.பி.கோதண்ட பாணி. அதற்குக்காரணம் அவர்கள் தங்கள் இயக்கத் திற்கும், கொள்கைக்கும் கட் டுப்பட்டவர்கள் என்பதே.  இருவருமேதிராவிடர்கழகத் தொண்டர்கள், பொறுப்பாளர் கள் ஆயிற்றே!

நினைவு மண்டபத்தைத் திறந்தார் தமிழர் தலைவர்

திரு.ஆ.சவுரிராஜன் அவர்கள் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் பிறந்து, தன் வாழ்நாளில் பெரும் தொண்டாற்றி, தனது 81 ஆம் வயதில் 18.3.1973 அன்று  இயற்கை எய்தினார். அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு  18.3.1974 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் அன்றையப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவிளையாட்டத்தில் அவரது நினைவு மண்டபத்தை திறந்து வைத்து அவரது பெரும் பணியைப் பாராட்டி சிறப்புரையாற்றினார்.

தந்தை பெரியாரைஅவ் வூருக்கு அழைத்து சவுரிராசனை அய்யாவுக்கு அருகில் அமர்த்தி ஊர்வலம் நடத்தினர் அவ்வூர் மக்கள்.

ஒப்பற்றப் பணி 


திருவிளையாட்டம் போன்ற கிராமங்கள் இன்ற ளவும் ஜாதிப் பாகுபாடின்றி தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட கிராமமாக ஒளிர்விட்டுக் கொண்டிருப்பது  திராவிடர் இயக்கத்தின் தன் னிகரில்லா தொண்டு, அய்யா சவுரிராஜன் போன்ற பெரியார் தொண்டர்களின் ஒப்பற்றப் பணி  ஆகியவற்றின் விளைச் சல் அல்லவா?

தகவல்:
விடுதலை செய்தியாளர் கி.தளபதிராஜ்
-விடுதலை,27.7.16

No comments:

Post a Comment