Thursday 23 November 2023

சூத்திரன் வணங்க வேண்டிய தெய்வம் எது?


சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையிலே 230 ஆண்டுகளுக்கு முன் குருபாததாசர் என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும் சூத்திரர்களுக்கான அடிமைத்தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தெய்வம் கணவன் என்றும் சூத்திரர்களுக்கு (தாழ்ந்தவர்) தெய்வம் பார்ப்பனர் (மறையோர்) என்றும் 8வது பாடலில் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் 10வது பாடலில் மிலேச்சருக்கு (இழிந்தவர்)ஒழுக்கம் இல்லை; புலயருக்கு (கீழ் மக்கள்) இரக்கமில்லை. என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட படைப்புகளுக்கு காரணம் ஆரிய பார்ப்பன கலாச்சார உள்நுழைவே ஆகும். அதாவது சனாதன கோட்பாடே ஆகும்.
இப்படிப்பட்ட கலாச்சாரத்தை அழித்து ஒழிக்க புறப்பட்டதே திராவிட இயக்கமாகும்.

No comments:

Post a Comment