Thursday 18 May 2023

கொடுமைகள் திருத்தப்பட்ட வரலாறு

*உங்களுக்கு தெரியுமா?*

*தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை.

*சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது* என்று அவர் நடத்திய *மஞ்சரி* பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

*1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும்,சத்திரங்களிலும்தான் பல  பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.சேர்த்துக்கொண்ட சில பள்ளிகளும் அவர்களை தனி வரிசையில் உட்காரவைத்தன.

*சூத்திரர் மற்றும் பஞ்சமர்களின் நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது*என்பதால் வைக்கம் வீதிகளில் அவர்கள் நடக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.

*சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்* என்று சட்டம் இருந்தது.

*பிராமணர்கள் எந்த குற்றமிழைத்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடாது* என்று சட்டமிருந்தது.

*பெண்களை தேவதாசிகளாக கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும்* என்று சட்டமிருந்தது.

*நான்கு வருண கோட்பாட்டை கொண்டதுதான் இந்தியா.பிராமணர்களே பிறப்பால் உயர்ந்தவர்கள்.மற்ற வருணத்தார் பிராமணர்களை தெய்வமாக வணங்கி நடக்கவேண்டும்* என்று கோல்வால்கர் எழுதினார்.

*திருமணம் என்றால் என்ன என்று தெரியாத சிறுமிகளுக்கும் திருமணம் நடந்தது.பச்சிளம் வயதில் கணவனை இழந்த சிறுமிகளுக்கு மொட்டையடித்து முக்காடு போட்டு வீட்டின் மூலையில் முடக்கி வைத்தனர்*.

*சேரன்மாதேவியில் ஒரு குருகுலப் பள்ளி இருந்தது.அங்கு பிராமண மாணவர்களுக்கு செம்புக்குடத்திலும் சூத்திர மாணவர்களுக்கு மண் குடத்திலும் குடி தண்ணீர் வைக்கப்பட்டது.அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் மகனும் அந்த குருகுலத்தில் படித்தான். மண் குடத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்
தாகத்திற்காக  பிராமண மாணவர்களுக்கு வைத்திருந்த செப்பு குடத்திலிருந்த தண்ணீரை குடித்துவிட்டான்.
அதற்காக அவன் தண்டிக்கப்பட்டு,படிப்பும் பாதியில் நின்றுபோனது.

*சுதந்திரம் பெற்ற பின்பும் ரயில்வே கேண்டின்களில் பிராமணரகளுக்கு தனி அறை இருந்தது.

*1937-ல் நீடாமங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பந்தியில் சரிசமமாக சாப்பிட உட்கார்ந்த தாழ்த்தப்பட வகுப்பினரை மரத்தில் கட்டிவைத்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தினார்கள்*

*இதெல்லாம் எதற்கு?* என்று கேட்கிறீர்களா?

*இப்போது அந்த பழைய கொடுமைகளும்,
அநீதியும் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்*

இந்த  கொடுமைகளை ஒழித்து  நமக்கு  உரிமைகளை பெற்றுத்  தந்த  தலைவர்  தான் 
*தந்தைபெரியார்*
- கட்செவி பதிவிலிருந்து..

No comments:

Post a Comment